அதே 'காட்டு ராணி'யில் பாலாஜியும், விஜயாவும் அடிக்கும் கூத்து. பாலாஜி வேட்டைக்காரன் எம்ஜிஆர் மாதிரி இருக்கார்.
'ஒத்தயடிப் பாதையிலே'
பாடகர் திலகமும், சுசீலா அம்மாவும் பாடும் பாடல்.
https://www.youtube.com/watch?featur...&v=7QijFQYc5u8
Printable View
அதே 'காட்டு ராணி'யில் பாலாஜியும், விஜயாவும் அடிக்கும் கூத்து. பாலாஜி வேட்டைக்காரன் எம்ஜிஆர் மாதிரி இருக்கார்.
'ஒத்தயடிப் பாதையிலே'
பாடகர் திலகமும், சுசீலா அம்மாவும் பாடும் பாடல்.
https://www.youtube.com/watch?featur...&v=7QijFQYc5u8
ரவி சார்,
வேணாம். அப்புறம் அழுதுடுவேன் தலைவரை நினைச்சி. நெஞ்சிருக்கும் வரை கண்ணீர் இருக்கும். குட் நைட்.
குட் நைட் ராஜேஷ்ஜி. நாளை சந்திப்போம்.
எல்லோருக்கும் காலை வணக்கங்கள் , பூம்புனல் புயலாக கிள்ளம்பும்முன் - இந்த பதிவை போட்டு விடுகிறேன் - மீண்டும் நடிநிசியில் ராஜேஷ் உடன் ஒரு உலா வர ஆசை ( நேற்று போல் )
சமீபத்தில் வேறு மொழி படம் ஒன்றை பார்க்கும் ஒரு துர்பாக்கியம் கிடைத்து - நடிப்பு minus degree யில் உள்ளது , பாடல்கள் பூகம்பம் - பூம்புனல்கள் அல்ல ------
ஒரு பாடலும் கேட்க்க தகுதியானவை அல்ல - உடனே ENT specialist செல்ல உதவும் பாடல்கள் - பிறகு தான் தெரிந்தது இந்த படம் தமிழிலும் வந்துள்ளது என்று ---- இன்று முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர் நடித்துள்ள படம் என்று - அதிலாவது கதை , நடிப்பு , பூம்புனலாக பாடல்கள் இருக்குமா என்ற ஒரு பேராசையுடன் அங்கும் சற்றே எட்டிப்பார்த்தேன் - என்ன ஒரு ஏமாற்றம்!! - தமிழ் படம் , ஒரிஜினல் யை விட படு மட்டம் - அந்த காலத்தில் எந்த படத்திலும் இவ்வளவு ammunition , எந்த ஹீரோ வும் பார்த்து கூட இருக்க மாட்டார்கள் - இந்த படத்தில் இருந்து பல உண்மைகள் எனக்கு தெரிய வந்தன :
1. அந்த காலம் என்பது ஒரு மாயை
2. நடிப்பு 2001 இல் இறந்துபோனது - அதற்க்கு பிறகு இன்னும் மறு பிறவி எடுக்கவே இல்லை
3. இந்த கால பாடல்கள்களை கேட்க்கும் பொழுதே நம் உயிர் பிரிய வாய்ப்பு உள்ளது - அந்த அளவிற்கு கொலை வெறி உள்ளவை
4, நகைச்சுவைகள் கண்ணீரை வரவழிக்கும் சக்தி வாய்ந்தவைகள்
"யாரடா மனிதன் இங்கே " என்ற பாடலை இந்த கால படங்களுக்கு ஒத்து வரும் பாடலாக மாற்றி எழுதிள்ளேன் - உங்கள் ரசனைக்கு
Original :
ஒரு அருமையான எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய பாடல்
ஒரிஜினல்
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
மனிதரில் நாய்கள் உண்டு , மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு , பழக்கத்தில் பாம்பும் உண்டு
நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் வாழும் பூமியிலே
மானம் , பண்பு ,ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
சிரிப்பினில் மனிதன் இல்லை , அழுகையில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை - உறக்கத்துள் மனிதன் உண்டு
வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் , நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
இந்த பாடலை சற்றே மாற்றி எழுதியுள்ளேன் - எப்படி பொருந்துகின்றது என்று பாருங்களேன் !
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
நடிப்பினில் மேதை ஒன்று , மனதினில் நிலைத்தது உண்டு
தமிழகம் மறந்த ஒன்று , தமிழினை கொன்றதும் உண்டு .
நாயும் , நரியும் புலியும் ,பாம்பும் நடிக்கும் திரையினிலே
நடிப்பு , பண்பு ,ஞானம் கொண்டநடிகனை காணவில்லை
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
சிரிப்பினில் நடிகன் இல்லை , அழுகையில் நடிகன் இல்லை
உள்ளத்தில் தமிழும் இல்லை - உறக்கத்துள் நடிப்பு உண்டு
வாழும் திரைஉலகம் தூங்கும் நடிப்பு , நடுவே நடிகனடா
எங்கோ திலகம் ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா
யாரடா நடிகன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் கொலைவெறி தான் மீதி இங்கே
ravi
ரவி சார்...Quote:
சமீபத்தில் வேறு மொழி படம் ஒன்றை பார்க்கும் ஒரு துர்பாக்கியம் கிடைத்து - நடிப்பு minus degree யில் உள்ளது , பாடல்கள் பூகம்பம் - பூம்புனல்கள் அல்ல ------
ஒரு பாடலும் கேட்க்க தகுதியானவை அல்ல - உடனே ENT specialist செல்ல உதவும் பாடல்கள் -
...
3. இந்த கால பாடல்கள்களை கேட்க்கும் பொழுதே நம் உயிர் பிரிய வாய்ப்பு உள்ளது - அந்த அளவிற்கு கொலை வெறி உள்ளவை
4, நகைச்சுவைகள் கண்ணீரை வரவழிக்கும் சக்தி வாய்ந்தவைகள்
தங்களுடைய பதிவில் மேலே மேற்கோள் காட்டப் பட்டிருக்கும் வாசகங்கள், மேலோட்டமாகப் பார்க்கும் போது நகைச்சுவையாகத் தெரிந்தாலும் அதனுள் பொதிந்திருக்கும் சமூக அக்கறை, மன வேதனை எல்லாம் தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.
ரவி சார்,
கலக்குகிறீர்கள். வித்தியாச சிந்தனை. நன் புதுப் பாடல்களை கேட்பதே இல்லை.
யாரடா மனிதன் இங்கே - கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
பாடல் உங்கள் பார்வையில் மிக அருமையாக மாறி உண்மையை பட்டவர்த்தனமாக எடுத்துரைக்கிறது. தங்கள் சிந்தனையே தனி. வாழ்த்துக்கள்.
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ஹோப் எவ்ரிபடி இஸ் ஃபைன் இன் மை ஆப்சென்ஸ்..! (அதான் வந்துட்டியே என முணுமுணு கேக்குது..)
பல பக்கங்கள் போனதால் வேகமாக ஒரு புரட் புரட்டியதில்…
அன்பு ரோஜா… லத்து முத்து… பாத்து..பாட்டு.. நைஸ்.. தாங்க்ஸ் ராஜேஷ் ஜி..
ராகவேந்தர் சார் நீரோட்டம் விஜயகாந்த்தின் முதல்படம்.. மதுரை ஸ்ரீதேவியில் மூன்று நாட்கள் ஓடிய நினைவு..இரண்டாம் நாள் நான் பார்த்தேன்(காலக் கொடுமை).. ஒல்லி ஒல்லி விஜயகாந்த் ப்ரவீணா..நீங்கள் போட்டவுடன் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது..
சிட் குருவி, பாடல்கள் பிடிக்கும் படம் இன்னும் பார்த்ததில்லை வாசு சார்.. பைரவி – அகெய்ன் ஸ்ரீ தேவி .தியேட்டர்… நண்டூறுது நரியூறுது பாடலை விட ஏற்றமிட்டு இறைக்கும் பாடல் பிடிக்க்கும்.. நன்றி வாசு சார்..ஆஆனா..ல்ல்ல் நீங்களும் சரி ரவி சாரும் சரி.. அதில் தங்கையாக அறிமுகமான கீத்து வைப் பற்றிச் சொல்லாதது வருத்தமே.. ( ரொம்ப அழகாய் + யங்க் ஆக வந்து பின் நம்ம ஊரு சிங்காரியில் வந்தவர்)
ரவி யார்டா நடிகன் அங்கே எனப் புலம்பி என்ன பிரயோஜன.ம்.. ஆமாம் அப்படி என்ன படம் பார்த்தீர்கள்..ஜெனரலாக உங்கள் எழுத்துக்களில் ஒரு உற்சாகம் உத்வேகம் தெரிகிறது..அதை உயர வைக்கவும்..(புரியவில்லைஎனில் வாசு சாரைக் கேட்கவும்) (சரி குழம்ப வேண்டாம் கீப் இட் அப் ற்கு தமிழ்)
ராஜ்ராஜ் சாரின் ஜூகல் பந்தி வழக்கம் போல அருமை..கொஞ்சம் அவ்வப்போது ஒரு டீஸ்பூன் நாஸ்டால்ஜியாவை அவர் கொடுக்கும் அழகே அழகு..
கிருஷ்ணா ஜியின் பதிவுகள் வழக்கம் போல சுவாரஸ்யம்..
குதிரை நாயகர்களில் ஓஹோ ஹோஹோ மனிதர்களே, அச்சம் என்பது மடமையடா எனக்கு நினைவுக்கு வந்தது..
எனில் அப்புறம் உருப்படியாய் எழுதிக் கொண்டு வரட்டா..