கார்த்திக் ஜி. அருமை அருமை..
Printable View
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடம்ன்றோ என்ற வரியை கேட்டுவிட்டு வாலி மீது எம்.ஜி.ஆர் கோபம் கொண்டாராம் என்னய்யா மூன்று தமிழ் அவரிடம் தான் தோன்றியதோ அதற்கு வாலி சொன்னாராம், புது பையன் முதல் பாடல் அதனால் தான் அப்படி என்று , உடனே எம்.ஜி.ஆர் ஹ்ம்ம்ம் சரி சரி தமாஷுக்கு சொன்னேன் பையன் நல்லா வரட்டும் என்று சொன்னாராம்..
பதிவு எண் # 1649
மெய் சிலிர்க்கிறது கிருஷ்ணா ஜி. அருமை அருமை. உங்கள் அனுமதியுடன் இதை உங்கள் பெயரிலேயே முகனூலில் இசையரசியின் குழுமத்தில் பதிக்கலமா?
மான் கண்ட சொர்க்கங்கள் எனக்கும் பிடித்த பாட்டுத்தான்??/ இதற்கு போய் கண்ணீர்,உணர்ச்சி என்று அந்த கால பத்மினி ரேஞ்சிற்க்கு சிலர் உணர்ச்சி வச படுவது கொஞ்சம் ஓவர். ஒரே ஒரு பாட்டு!!!!ஹூம் ,காலத்தின் கோலத்தை பாருங்கள்.ஒரே ஒரு situation Song .(படத்தின் கருத்தை ஒட்டியே).பெரிய புதுமையும் இல்லை. சகாவோடு, ஐந்து வருடத்தில் எத்தனை முத்துக்கள். தேடி தேடி பாராட்டி அலைய வேண்டிய எழுபதுகள்!!!
இசையை கண்டு பிடித்ததே எழுபத்தாறுக்கு பிறகுதான் என்று சொல்வோருக்கு ,பதிலளித்தே வருகிறோம்.ஆனால் எழுபதுகளை,
அறுபதுகளோடு,எண்பதுகளோடு ஒப்பிட்ட ஒரு அபத்த பதிவை, எவன் என்ன எழுதினாலும் ,சங்கீதம் தெரிந்த ஒருவர் ,இங்கு வந்து பதிப்பிப்பிப்பது, நகைப்புக்குரியதே. எப்படி இளைய ராஜாதான் எல்லாம் சாதித்தார் என்பது நகைப்புக்குரியதோ, அதை விட நகைப்புக்குரியது ,அவமான பட வேண்டிய எழுபதுகளை கொண்டாடுவது. மதுர கானங்கள் என்று பெயரிட்டு ,மன சாட்சியை துறக்க வேண்டாம் கிருஷ்ணா.
இளையராஜாவின் சங்கீத புத்துயிர்ப்பு, நிச்சயம் கொண்டாட படத்தான் வேண்டும்.
//இளையராஜாவின் சங்கீத புத்துயிர்ப்பு, நிச்சயம் கொண்டாட படத்தான் வேண்டும்// அண்ணா.. நீங்க நல்லவரா கெட்டவரா (எஸ்ஸ்கேப்) :)
கோபால் ஜி, கிருஷ்ணாஜியின் பதிவு 70’களில் தான் இசையின் ராஜாங்கமே தொடங்கியது என்றும் அது ராஜாவினுடையது மட்டுமே என்று சொல்பவர்களுக்காக எழுதிய பதிவு அது. எப்படி இருந்தாலும் 50’கள்/60’களின் பாட்லகளே பொற்காலம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
70 களில் கேட்கும் படியான பாடல்கள் சில வந்தாலும் ,அவை ரெகார்ட் செய்ய பட்ட விதம் ,interludes படு மோசம்.அன்பு நடமாடும், அழகான பாடல்.அதில் டி.எம்.எஸ் pitching படு மோசமாக இருக்கும். இதை கூடவா ஒரு இசையமைப்பாளர் கவனிக்க முடியாது?
நிச்சயமாக இசையின் பொற்காலம் 1960 கள் ,1980 கள் ,1990 கள் .காரணகர்த்தாக்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி,கே.வீ.மகாதேவன்,இளையராஜா,ரகுமான்.ம ற்ற இசையமைப்பாளர்களில் குமாரை சிறிதேயும்,வித்யாசாகரை சிறிதேயும் குறிப்பிட முடியும்.
கிட்டத்தட்ட 71 இலிருந்து 75 வரை நேரடி படங்கள் 350 வந்ததாக கொண்டாலும்,குறிப்பிட கூடியவை 25 க்கும் மேல் தேறாது இசையில்.
இதை பற்றி முழு ஆய்வு எழுதவும் நான் ரெடி.எவனோ ஞான சூனியம் சொன்னதை வேலை மென கேட்டு குறிப்பிட்டு ,இதற்கு ஒப்பாரி வேறு.
ஒரு உண்மையான இசை ரசிகனாக,அன்றிருந்த விடலைகளில் ஒருவனாக,இதயத்தில் கை வைத்து சொல்கிறேன். 70 களில் செத்து கொண்டிருந்த திரை இசையை உயிர்ப்பித்தவர் ,இளைய ராஜா,இளைய ராஜா,இளைய ராஜாவே.
கோபால் ஜி, இப்படி வேண்டுமானால் சொல்லலாம் ஹிந்தி ஆதிக்கமாக இருந்த நேரத்தில் தமிழிசையை மீண்டும் திரும்பி பார்க்க செய்தவர் என்று வேண்டுமானால சொல்லலாம் ஆனால் எத்தனை எத்தனை டியூன் மற்றவருடையது (ஜி.கே.வி, டி.வி.ஜி என எல்ல குருக்களின் டியூன் தான் இவர இசையானது)
இளையராஜா செய்தவற்றை இப்படியெல்லாம் புறம் தள்ளி விட முடியாது.அவர் classical ,western எல்லாவற்றுக்கும் குருக்கள் இருக்கலாம்.ஆனால் சரியான அளவில் பிறவி திறனும்,பலவித அனுபவங்களும்,எல்லாவற்றையும் கற்கும் மனமும் கொண்டு, இசையில் புதுமைகள் செய்து ,பாமரர்,படித்தவர் அனைத்து தரப்பினரையும் உடனடியாக ஈர்த்தார்.
பலருக்கு கிரெடிட் கொடுக்கும் பண்பு அவருக்கு இருந்ததில்லை என்பது உண்மையே. உதாரணம் ,அன்னக்கிளி உன்னை தேடுதே,மச்சானை,ராமன் ஆண்டாலும் போன்றவை பத்மா சுப்ரமணியம், அண்ணி ஷ்யாமளா ஆகியோரிடமிருந்து பெற்று ,பாவலர் பேரை சொல்லி ஜல்லி அடித்ததாய் அப்போது பல பத்திரிகைகளில் வந்தது. ஆனாலும் நரசிம்மன் பேரை, டி.வீ.ஜி பேரை சொல்லியே வந்துள்ளார்.
அவர் சாதனையோடு நுழைந்தார்.ஈர்க்கும் இசை தந்தார். தமிழ் நாட்டை தன் வசம் திருப்பினார். இசையில் ,அவரளவு நுண்ணிய மன உணர்வுகளை கூட இழை இழையாக தந்தவர்கள் உலகில் வெகு சிலரே. இசையில் அவர் ஒருங்கமைக்கும் விதம்,நோட்ஸ் எழுதும் திறன்,recording perfection ,technological upgradation , interlude fineness ,என்று பக்கம் பக்கமாக விவரிக்கலாம்.
பொதுவாக ,நடிகர்களை சார்ந்து இயங்கி பம்மி அவர்களுக்காக,இசையமைத்து, சில குறிப்பிட்ட பாடகர்களை மட்டுமே உபயோக படுத்திய நிலை மாறி, நடிகர்கள் இசையமைப்பாளரை தொழும் status cult உருவாக்கிய அவரின் constructive arrogance என்னை கவர்ந்த ஒன்று. எத்தனை அசுர உழைப்பு!!!
வருடத்தில் 30 படங்களுக்கு இசையமைத்து, அதிலும் அவர் தந்த தரமான இசை ,அவருடைய தேர்ச்சியை , குறுகிய காலத்தில் செயல் பட்ட creative திறனை ,உலகுக்கு பறை சாற்றும்.
இசை ரசிகனாக அவர் மேல் விமரிசனம் வைக்கலாம்.அவர் இசையை மீறி போகும் போது இசைவற்றதை குத்தலாம். இஷ்டத்துக்கு பண்ண படும் துதிகளை மீறி ,தர படுத்தலாம். ஆனால் அவர் இசை மேதைமையை ,ஆளுமையை புறம் தள்ளுதல் ,தேர்ந்த இசை ரசிகர்களுக்கு அழகல்ல.
நிச்சயமாக தமிழ் பாடல்களின் தரத்தை மட்டுமல்ல, இந்திய பாடல்களின்,படங்களின் தரத்தையே தன் இசையால் உயர வைத்தவரே.
அவரிடம் நான் கண்ட சில குறைகள்... ஒரு சொன்னது நீதானா போலவோ, மன்றத்தில் ஓடி வரும் போலவோ, அதிசயத்தை அவரால் தரவே முடிந்ததில்லை. சில ராகங்களையே சுற்றி சுற்றி வந்து ,கேட்கும் படி, ஆனால் பெரிய கற்பனை திறனற்ற பாடல்கள், ஏராளம் செய்தார்.
சில அபூர்வ ராகங்களை தொட்டாலும் பெயரளவே அது இருந்தது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,ரகுமான் போன்றவர்களின் மேதமை கூறு அவர் பாடல்களில் நான் ஸ்பரிசித்ததில்லை. ராகங்களை வெகு சுலபமாகவே இனம் காணும் அளவிலேயே ,நேரடியானவை .ஒரு கர்ணன்,ஒரு சங்கராபரணத்துடன், காதல் ஓவியம்(வைர முத்து மின்னினாலும்) ஒப்பிட படவே முடியாது.அதனாலேயே அவர் பாடல்களை அந்த தராசிலே ஆய்வேன்.
பின்னணி இசை, interludes ,experimentation ,என்றெல்லாம் எடுத்தால் naushad உடன் ஒப்பிடும் அளவு தேர்ந்தவர் இளையராஜா.அப்பப்பா பீ.ஜி.எம் என்பது படத்திற்கே ஜீவன் தர முடியும் என்று நிரூபித்த மேதை.இவர் உயரம் தொட இன்னொருவர் பிறந்து வர முடியுமா என்பதே கேள்வி குறி. இவரளவு மண்ணின் நுகர்வு,அனுபவ கூறுகள் ,அழகுணர்ச்சி,இலக்கிய பரிச்சயம்,இசையறிவை தேடும் தன் முனைவு இன்னொருவருக்கு வாய்ப்பது இயலவே இயலாது. நான் திரை படம் எடுத்திருந்தால் இளைய ராஜாவையே உபயோக படுத்தி இருப்பேன் என்று அடித்து கூறுவேன்.