http://i61.tinypic.com/9kavy9.jpg
Printable View
Ck - "நான் அப்படித்தான் " மேலும் உயர வைப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை --- நீங்கள் வனவாசம் அடிக்கடி போவது , நாங்கள் காட்டுக்குள் வந்து உங்களை தேடும் படி ஆகி விடுகின்றது ---:smokesmile:
இனிய நண்பர் திரு ரவி சார்
வித்தியசமான சிந்தனையில் பாடலை வழங்கிய உங்களுக்கு ஒரு அன்பு பரிசு . ஏற்று கொள்ளவும் .
http://i62.tinypic.com/xefxck.jpg
vasu: Here is the Tamil equivalent from Ulagam
un kaadhalaal........
http://www.youtube.com/watch?v=WhzrnxKwOUI
ஹை.. ரவி…நான் அப்படித் தான்.. நல்ல டைட்டில் பாட்டு எழுதி ப் பார்க்கட்டா..
அப்படித்தான் இருப்பேன் என்றே
..அன்னையிடம் அன்று சொல்லி
குப்பெனவே முகத்தில் கோபம்
…கொண்டதுவோ அந்தக் காலம்
தப்பெனவே பிள்ளை இன்று
…தயங்காமல் செய்தல் கண்டு
இப்படியாய்க் கூடா தென்றே
.இறைஞ்சுதலோ இந்தக் காலம்..
பிடிவாதம் பலசெய்து இருந்த போதில்
…பேதமையைப் பார்த்துமனம் பித்துக் கொண்டே
அடிக்காமல் அழகாக அன்னை சொன்ன
…அறிவுரைகள் காதினிலே மோது தய்யா
நடிப்புதான் என்றாலும் நன்றாய்க் கையை
…நயமாக ஓங்கியேதான் சொன்னாள் அன்று
படிப்பினைகள் வாழ்க்கையில்நாம் கற்ற பாடம்
…பார்த்தாலித் தலைமுறைகள் கற்ப தில்லை
பட்டுத் தெரிந்துகொண்ட பாங்குடனே கூறியவை
தொட்டுத் தொடர்ந்திடும் தான்..
மக்கள் திலகம் பாகம் 12 ஐத் துவக்கி வைத்த அன்பு நண்பர், திறமையாளர், திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களோடு கூடிய அரிதான அன்புப் பரிசு.
மிக அரிதான 1966 'பேசும் படம்' பிப்ரவரி மாத இதழிலிருந்து 'நான் ஆணையிட்டால்' படத்தில் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பாடும் 'தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை' பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்த சிறப்புக் கட்டுரை.
அனைத்து எம்.ஜி.ஆர் திரி நண்பர்களுக்கும், நம் 'மதுர கானம்' அன்பர்களுக்கும் சேர்த்துத்தான்.
http://i1087.photobucket.com/albums/...IMG_0002-9.jpg
http://i1087.photobucket.com/albums/...0-2/IMG-17.jpg
http://i1087.photobucket.com/albums/...IMG_0003-6.jpg
http://i1087.photobucket.com/albums/...IMG_0004-5.jpg
காலை வணக்கம்
வணக்கம் ராஜேஷ்ஜி !
நேத்து நைட் செம ஜாலியா இருந்துச்சு. ஆனா தூக்கம் வந்து கெடுத்துடுச்சே. ஒத்தயடிப் பாதையிலே பார்த்தீர்களா?
நேற்று ,"அந்த காலம் " என்ற மாயையில் நம்மை போல வாழ்ந்து வரும் ஒருவரை சந்திக்க நேரிட்டது - அவர் கூறிய வார்த்தைகளின் ஆழம் என்னை மிகவும் கவர்ந்தது ..
நான் அவரிடம் கேட்ட கேள்வி இதுதான் :
ஏன் இந்த காலத்தில் , வளரும் நடிகர்கள் அதிக வசனங்கள் பேசும்போது ஒரே மாதிரியான முக பாவத்துடன் நடிக்கிண்டார்கள் - "சும்மா நடிங்க பாஸ் " என்று அவர்களை யாருமே சொல்வதில்லையா ? - சில சமயம் அவர்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் , நாம் தற்கொலை செய்துகொள்ள தூண்டுகிறதே -----
அவர் இந்த கேள்விக்கு CK வழியில்:) சொல்லாமல் மிகவும் தெளிவாக பதில் சொன்னார் --
உண்மையில் சிறந்த நடிகருக்கு விருதுகள் கொடுக்க வேண்டுமென்றால் - அவர்கள் படங்களில் அதிகமாக உபயோகிக்கும் கத்திகளுக்கும் , துப்பாக்கிகளுக்கும் , கிராபிக்ஸ் க்கும் தான் பரிசுகளும் , விருதுகளும் அளிக்க பட வேண்டும் - அவர்களுக்கு அல்ல -- அவர்கள் பேசும் வசனங்களில் , சிறந்த தமிழ் இல்லாததை விட்டு விடுங்கள் , வார்த்தைகளில் உயிரே இல்லை - செய்தி வாசிப்பவர்கள் போல் தான் வசனங்கள் வெளி வருகின்றன --- ஒரு செய்தி வாசிப்பாளர் , டிவி யில் செய்தி வாசித்துகொண்டிருந்தார் - அவருக்கு கொடுக்கப்பட்ட ட்ரைனிங் - முக மலர்ச்சியுடன் செய்தி சொல்ல வேண்டும் என்பது - ஒரு இடத்தில் தொழில் அதிபர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை , முக மலர்ச்சியுடன் ( சற்று அதிகமாகவே) வாசித்தார் . சிபிஐ- கொலைக்கும் அவருக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கும் என்று suspect பண்ணி அவரை arrest செய்தது - பேசும் போது இடத்திற்கு தகுந்த மாதிரி , subject க்கு ஏற்ற மாதிரி வசனங்கள் , சிறந்த தமிழில் இப்பொழுது யார் சார் பேசுகிறார்கள்? - அப்படியே பேச நேர்ந்தாலும் , கேட்க்கும் பொறுமை யாருக்கு இப்பொழுது இருக்கின்றது ??
உண்மை - உறங்கி கொண்டிருக்கும் உண்மை .....:smokesmile:
ராஜேஷ்ஜி
பி.எம்.அனுப்ச்சியிருக்கேன்.