-
உள்ளக்கிடக்கைகள் ஒன்றா இரண்டா
ஓராயிரம் உண்டு மாறுபட்ட மனனங்கள்
மழையோ இல்லை மக்களவை தேர்தலோ
சாதியோ இல்லை சமய சண்டையோ
சாகா காதலோ இல்லை செத்துப் போதலோ
வேண்டும் இல்லை இல்லை வேண்டாம் என்று
வெறி கொண்டு அலையும் மாந்தர்- இவர் தம்
வேண்டுதல் கண்டு வெட்கியே இறையும்
முரண்பட்ட வேண்டுதலை மொத்தமாய்
மூடமனிதர் என மறுத்தானோ ?
காற்றாய் கரைந்து மறைந்தானோ இல்லை
கல்லாய் அவனியில் உறைந்தானோ?
https://encrypted-tbn0.gstatic.com/i...RJTLR5ZX5wcL1A
-
உறைந்தானும் அவனே
உயிர்தானும் அவனே
வெறுப்பும் அவனே
விருப்பும் அவனே
அவனின் ஒரு துகல்
நாமெனில் இதை
உரைப்பானும் அவனே.
-
கிறுக்கன்.
-
அவனே தொலைத்தான் தன் நிம்மதியை
அறியாது கலைத்தான் குழவிக்கூட்டை
சும்மா இராமல் குறை சொன்னான் அவளை
சம்சாரிக்கு புத்தியில் ஏன் உறைக்கவில்லை
ஒரு தொப்பியை இரு தலை சுமப்பதில்லை
விளைவெண்ணாது தாண்டலாமோ எல்லை
-
எல்லை இல்லா உறவில் என்றும்
நிம்மதி என்பது இல்லை.
-
கிறுக்கன்.
-
இல்லை இல்லவேயில்லை
வாய் நிறைய பொய்கள்
மண் தின்ற கண்ணன்கள்
காட்டுவர் ஈரேழு நரகங்கள்
-
நரகங்கள் எனநினைத்தால் அஃதே என்று
... நாலிரண்டு திசையிலுள்ள தேவி சொல்வர்
சுரங்கூட்டி நல்லனவை நெஞ்சில் ஓட்ட
...சுழ்ந்துவிடும் சொர்க்கமுந்தான் உன்னை என்று
கரகரத்த குரலினிலே பாட்டி அன்று
...கனிவாகச் சொன்னவிதம் மனதி னுள்ளே
சுகமாக நிற்கிறதே இந்த நாளில்
..சொர்க்கங்கள் காண்கிறதே எந்தன் சிந்தை..
-
சிந்தை மூளையாம் இரவல் சிந்தனையில் திளைக்க பல்லாசிரியர்கள்
நிந்தை செய்தே நிறைய சூத்திரங்கள் தேர்வுக்கு வாயிலெடுக்க
தந்தை தன்னுழைப்பை தந்து ஈந்த செல்வமனைத்தும் எடுத்த
வாந்திக்கான மதிப்பெண்ணாய் அப்பனுக்கு அப்பனுக்கு அப்பனுக்கு
கந்தை கசக்கியவனின் பிள்ளைக்கு பிள்ளைக்கு பிள்ளை சவாலாய்
விந்தை கூற்றோடு உன்னுடைய நூறு எந்தன் முப்பதுக்கு சமன்
சந்தையை திறந்தாயிற்று உலகுக்கு எந்தை தவறுக்கு எனக்கு தண்டனை
சொந்தங்களின் சொகுசுக்கு சோக வாழ்வு இன்றெனக்கு குற்றமென செய்தேன்
தொந்தரவு ஏன் ஒதுக்கல் முறையில் பலன் அவனுக்கு ஒதுக்கல் தீண்டாமை
முந்தி போனாலும் நிந்தை செய்வார் நானே போடாத அடையாள சாதி அரசின் தயவில்
பந்தியில் பாகுபடுத்திய பழங்கால கதைக்காய் வேந்தர்கள் இன்றென்னை தண்டிப்பது
சந்தியில் விடுவது சகட்டு மேனிக்கு சவட்டி செல்வம் கண்ட மேன்மக்கள் பிள்ளைக்கு
தந்தாரே தாழ்த்த பட்ட பட்டயம் ராசாக்களின் பிள்ளைகளுக்கு பலகோடி கண்ட
சந்ததிக்கு சந்ததி வாழையடி வாழையாய் சலுகை ஏணிகாண வறுமையின் கோட்டில் நான்
செந்நீர் குருதி சிந்த கல்வியுடன் தந்த ஒழுக்கமும் பிறர் செல்வம் வேண்டா உஞ்சவிருத்தி
கண்ணீர் மட்டுமே கண்ட எந்தன் நிலையை எங்குரைப்பேன் கேளா அமைச்சுக்கா
வெந்நீரூற்றி வேரறுக்க விரையும் பாவனை கண்டதென்னவோ சாதிவாரி கணக்கெடுப்பு
தந்தார் கையில் சாதியுடன் கூடிய அடையாள அட்டை ஏற்க மறுப்பு சொன்னால்
விந்தை கூற்று மேல்சாதி சதிகாரன் மீண்டும் தாழ்த்த வருகிறான் என்று ஆட்டு
மந்தைகளாய் களபலிக்கு நாங்கள் சாதி பேர் சொல்லி நிந்தித்தாலும் இல்லை ஒருநீதி
ஏந்தினேன் கையை இன்னொரு நாட்டின் கருணைக்காய் வருகை அழைப்புக்காய்
முந்தினேன் முச்சந்தி கானா தப்பிப்புக்காய் இன்றென் அடையாளம் வாழா (வெட்டி)இந்தியன்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய தமிழ் மண்ணில் தவழ மண்ணின் மைந்தனுக்கு
செந்தமிழ் பேச செம்மையும் காண சந்ததிக்கு கொடுத்து வைக்கா அமெரிக்க அயல்வாழ்வு
-
அயல்வாழ்வு
வற்றாத ஜீவநதியின் அக்கரை போல
உறவுச்சங்கிலியின் பிணைப்பினை
உறுதிசெய்வது இருகரைகளும்தான்
இரண்டும் ஒரேநதியின் இருபக்கங்கள் என்றாலும்
இரண்டுமே வெவ்வேறுவித வாழ்க்கைப் போக்கு
ஒவ்வொரு கரையும்
தனக்கென ஒரு நாகரிகம்
தனக்கென ஒரு தொழில்முறை
தனக்கென ஒரு கலாச்சாரம்
ஆற்றை நீந்திச்செல்கையில் தான் புலப்படும்
விட்டுச்செல்லும் கரையின் மீதான பற்றினை
-
பற்றினை விட்டது காய்ந்த சருகு
பக்குவம் வாய்த்தது வயதோடு
கழன்று விழுந்தது கிளையிலிருந்து
காற்றோடு சென்றது பாரமிழந்து
-
பாரமிழந்து பயணிக்க பற்றினை விடு
ஆசை கொள் ஆண்டவனில் மட்டும் -ஆஸ்திகர்
அத்தனைக்கும் ஆசைப்படு அவனை விடு
ஆண்டவனே இல்லை அறிவாய் நீ -நாஸ்திகர்
விடிய விடிய வாக்கு வாதம்
விடிந்த பின் வென்றது யார்
பற்றினை விட்டார் நாஸ்திகர் !
பரமனை விட்டார் ஆஸ்திகர் !