Deleted-
Printable View
Deleted-
கார்த்திக் சார்,
வாழ்த்துக்கள். எங்களுக்கு inspiration ஆக அமைந்த நீங்கள் இந்த மாதிரி ஏனோ தானோ என்றா லேண்ட்மார்க் பதிவை இடுவது? நம் திரியில் முத்திரை பதிவாகியிருக்க வேண்டாமா?
ஞான ஒளி(தொடர்ச்சி)
இந்த படம் வெளிவரும் போது நடிகர்திலகம் மாநகரம்,நகரம்,பேரூர்,சிற்றூர்,கிராமம்,குக்கிர ாமம் அனைத்திலும் முடிசூடா மன்னன். வசூல் சக்கர வர்த்தி. சூப்பர் ஸ்டார். அதனால் இரும்பு திரை, தெய்வ பிறவி காலம் போல doing justice to the role என்று சென்று விட முடியாது. ஒரு பாத்திரத்தை உள்வாங்கி,அதன் செயல்பாடுகள் தன்மைகளை நிர்ணயித்து ,வெளியீட்டு முறையில் பாத்திரத்தின் தன்மையும் வேறு படாமல் scene stealing ,scene capturing gestures ,ஸ்டைல்,எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சில antics எல்லாவற்றையும் கலந்து கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்து ஈர்த்தே ஆக வேண்டும்.படம் classic வகை என்றால் அந்த class maintain பண்ண பட்டே ஆக வேண்டும். இந்த ரசவாதம் ஞான ஒளியில் நிகழ்ந்தது.
இடைவேளைக்கு பிறகு திரைக்கதை cat -mouse cold war ,ரசிகர்களை கட்டி வைத்து,அந்த பாத்திர தன்மைகள் நீர்க்காமலும் பார்த்து கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது.
நடிகர்திலகம் அழகு, ஈர்ப்பு,ஆண்மை,கம்பீரம்,காந்த பார்வையுடன் கச்சிதமான உடலமைப்பு கொண்டு ரசிகர்களை கட்டி போட்ட காலகட்டம். இந்த படத்தில் இளைஞனாக half pant ,ஒரு கண்ணிழந்த நடுத்தர வயது, முதிய வயது கனவான் அனைத்து தோற்றங்களிலும் அவ்வளவு வசீகரம் இந்த திராவிட மன்மதனிடம். இப்போது கூட ராகவேந்தர் போட்ட படங்களை கிட்டத்தட்ட அரை மணி வைத்த கண் வாங்காமல் ரசித்தேன்.உலகிலேயே மிக சிறந்த ஆண்மகனாக ஒரு தமிழன் இருந்ததில் எனக்கு பெருமையே.
நடிகர்திலகத்தின் பிரத்யேக திறமைகளை கொண்டு வரும் படி அமைந்த படங்களுள் ஒன்று ஞான ஒளி. உதாரணம் மனைவி இறந்த செய்தி தெரியாமல் அவர் சவ பெட்டி செய்வதில் மும்முரமாக , பாதிரி படிப்படியாக ஏழு கேள்விகளில் முழு விஷயம் விளங்கும் படி செய்வார்.முதல் நிலை சந்தோசம் (குழந்தை பிறந்ததில்),இரண்டாவது குறை(தான் அருகில் இல்லாதது),மூன்றாவது மனைவியின் உடல் நிலை பற்றி சிறிய சந்தேகம், நான்காவது ஏதோ நடந்து விட்டதோ என்ற குழப்பம், ஐந்தாவதில் பாதிரி ஏதோ மறைக்கிறார் என்ற ஐயம் கலந்த வருத்தம், ஆறாவது நிலை நடந்ததை ஜீரணித்து உள்வாங்கும் பிரமையான நிலை, ஏழாவது துக்கத்தை உணர்ந்து கலங்கும் துடிக்கும் நிலை .இவையில் மற்ற நடிகர்களால் முதல், இறுதி ஆகியவற்றுக்குத்தான் முகபாவம் காட்டியிருக்க முடியுமே தவிர படி படியாக குறுகிய தொடர்ச்சியான கால நிலையில் ஏழு வித துரித மாற்ற பாவங்கள்!!!! குறித்து கொள்ளுங்கள்- கடவுள் தானே பூமிக்கு வந்து முயன்றாலும் முடியாது.
அந்தோணியின் rawness அந்த காதல் காட்சிகளிலேயே பளிச்சிடும். முதலிரவில் explicit ஆக திரும்பி நிற்க சொல்லி ரசிப்பது அந்த பாத்திரத்தின் ஆதார குணங்களுடன் இணைந்த காம வெளியீடு.சிறு சிறு வெளியீடுகளில் பின்னுவார். ராணியை திட்டி கொண்டே தொடர்ந்து வரும் போது,சர்ச்சுக்கு வருபவர் ஒருவருக்கு மிகையான சால்ஜாப்பு சலாம் போடுவதை சொல்லலாம்.
நான் பார்த்த உக்கிர ஆக்ரோஷ காட்சிகளில் காவல் தெய்வத்திற்கு அடுத்து இந்த படம்தான். கட்டு படுத்த படும் போது எட்றா என்று பாய யத்தனிப்புடன், கடைசியில் எதையும் ஏற்க முடியாத இயலாமையில் வாழைகளை வெட்டி சாய்க்கும் உக்கிரத்திற்கு இணையானதை இந்திய திரை கண்டதில்லை.
பாதிரி இறந்து கிடக்கும் வேளையிலும் , தப்பி போக முயலும் தன்னிடம் நண்பன் துப்பாக்கி நீட்டும் போது, நான்தான் குண்டை எடுத்துட்டேனே என்று குதூகல மனநிலையில் பேசும் கட்டம் இந்த பாத்திரத்தின் idiosynchrasy மனநிலையும் காட்டி ரசிகர்களையும் வசீகரிக்க முடியும் என்பதற்கு உதாரணம். தன்னிடம் இவ்வளவு உரிமையும் அக்கறையும் மிகுந்த நண்பனுக்கு ,தான் தப்பி சென்று இழைத்த துரோகத்தை பற்றிய சிறு மனசாட்சி தொந்தரவு கூட இன்றி, தன்னை திரும்ப பிடிக்க அலைவதில்,இறந்து விட்டதை நினைத்த மகளை உயிரோடு கண்டும் பேச முடியாத நிலைக்கு தன்னிரக்கம் கொண்டு, முடிந்தால் பிடித்து பார் என்ற சவாலை விட்டு சிறு சிறு தற்காலிக வெற்றிகளையும் explicit ஆகவே மகிழ்ந்து ரசிப்பார்.
இந்த மனநிலை நான் முன்னர் குறிப்பிட்ட mixed maturity கொண்ட idiosynchrasy வகை பட்டது.நடிகர்திலகம் நண்பனின் சந்திப்பு காட்சிகளில் ரசிகர்களை குதிக்க வைப்பார். சாத்துக்குடி பிழியும் காட்சியில் ,திடீரென்று எதிர்பாராமல் கண்ணாடியை உருவுவதில்,கணநேர கோபம் கலந்த ஆச்சர்யத்தை மீறி ,ஒரு விளையாட்டு தனத்துடன் தனது பார்வை திறனை வெளிபடுத்துவதாகட்டும்,ரேகைக்காக டம்ளர் மறைக்கும் நண்பனுடன் அதை குத்தி கையுறையை கழற்றும் காட்சிகள் பாத்திர தன்மை கெடாமல் சுவாரஸ்யம் கூட்டுவதற்கு உதாரணங்கள். லாரென்ஸ் தன்னை வெளியேற விடாமல் trap பண்ணி விட அவர் பேசும் monologue ஒரு வேதனை கூடிய விரக்தி,மிஞ்சி நிற்கும் சவடால் தன்மை, ஒரு uneasy sensation (நம்பிக்கை குலைவு), அத்தனையும் வெளிப்படும் உரத்து. ஆனால் அதனிடையிலும் அந்த பாத்திரம் அத்தனை தீவிரத்தின் நடுவிலும் சொல்லும் நல்ல வேளை பாதர் நீங்க இப்ப உயிரோட இல்லை .....
மகள் தேடி வந்த பரபரப்பில் மேரி என்று excite ஆகி தன்னிலை உணர்ந்து சாதாரணமாய் மேரி என்று மாற்றும் தன்மை,தன் மகளிடம் அடைந்த ஏமாற்றத்தை சொல்லி,அவளை குத்தி விட்டோமோ என்று ஆறுதல் படுத்தும் இடம், அவசர அவசரமாய் இருப்பதையெல்லாம் அள்ளி எடுத்து fridge கதவை உதைத்து சாத்தும் இன்ப அலைவு,தன்னுடைய பேத்திககாவது எல்லாம் சிறப்பாக செய்ய விழையும் தொண்டை அடைக்க கமரும் வசன வெளிப்பாடு,வேண்டாம்மா வயசாயிடுச்சு என்ற இனியும் ஓடி அலைய முடியாத விரக்தி வெளிப்பாடு என்று மகளை சந்திக்கும் கட்டத்தில் நடிகர்திலகம் விஸ்வரூபம் எடுப்பார்.
இந்த படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ எழுத கைகள் துடித்து கொண்டே உள்ளது. பிறகு ஒரு நாள் ஒவ்வொரு கணம்,காட்சியையும் விளக்கி எழுதுவேன் என்று உறுதி தந்து இப்போது விடை பெறுகிறேன்.
அருமை மிக மிக அருமையான விவரிப்பு மீண்டும் ஞானஒளி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல். நன்றி கோபால் சார். எப்படித்தான் நுணுக்கமாக அலச முடிகிறதோ? வியப்பில் இருக்கிறேன்.
கார்த்திக் சார்
2000 பதிவுகள் கடந்த தங்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மென்மேலும் பல சாதனைகளை இது போல் தாங்கள் புரிய வேண்டும்.
http://i1146.photobucket.com/albums/...ps82e1ca2e.jpg
கோபால்,
ஞான ஒளி அந்தோனி அருண் கதாப்பாத்திரங்கள் பற்றிய ஒரு அலசலை மனோதத்துவ பின்புலத்தில் அமைத்து தொடக்கம் முதல் இறுதி வரை அது எப்படி manifest ஆகிறது என்பதை நீங்கள் விவரித்த விதம் மிக அற்புதமாகவே அமைந்திருகிறது. இந்த திரியின் வலிமையான பதிவாளராக உருவெடுத்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். வாசு மிக மிக ஆனந்தம் அடைந்திருப்பார் என நினைக்கிறேன்.
அடுத்து ராஜநீதி படைக்கப் போகும் மூக்கையாவை வரவேற்க காத்திருக்கிறோம்.
அன்புடன்
2000 ஆவது பதிவைக் கடந்திருக்கும் திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கார்த்திக் சார்,
முன்னூறு பதிவை தாண்ட விட மாட்டேன்கிறார்கள். 2000 கண்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
எனது 2000 பதிவுக்கு வாழ்த்துக்களை அள்ளி வழங்கிய அன்புச்சகோதரர்கள் கோபால் சார், ராகவேந்தர் சார், வினோத் சார், ராமஜெயம் சார், சந்திரசேகர் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
அருமையான டிசைன் வடிவமைத்த ராகவேந்தர் சார், வினோத் சார் ஆகியோருக்கு மிக்க நன்றி. உண்மையில் வினோத் அவர்களின் வாழ்த்துக்களை காணும்வரை இது என் நினைவுக்கே வரவில்லை. அதனால்தான் சிறப்புப்பதிவு எதையும் இடவில்லை. (அப்படியே இட்டிருந்தாலும், அது கோபால் சாரின் 'ஞான ஒளி' சுனாமியில் அடித்துச்செல்லப் பட்டிருக்கும். மனிதர் என்னமாய் எழுதுகிறார்...!!!!!!!!!!!) .
எல்லோரும் மிகக்குறுகிய காலத்தில் பல ஆயிரம் பதிவுகளை சர்வ சாதாரணமாக கடந்து செல்லும்போது, 2005-ல் திரியில் நுழைந்த நான் இப்போதுதான் 2000-த்தை தொட்டிருப்பது எந்த சிறப்பும் இல்லாத ஒன்று என்றே கருதுகிறேன்.
இந்த தருணத்தில் திரு. சிலோன் மனோகர் தெரிவித்த கருத்துதான் என் நினைவுக்கு வருகிறது. ஒருமுறை மேடையொன்றில், நிகழ்ச்சித்தொகுப்பாளர் ஒருவர் சிலோன் மனோகரிடம் அவருக்கு புகழைத்தந்த 'சுராங்கனி', 'சின்னமாமியே' பாடல்களை பாடுமாறு கேட்டபோது, மனோகர் "எல்லா பாடகர்களும் 40 ஆயிரம், 50 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்க, நீ 40 ஆண்டுகளாக நாலே பாடல்களை வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிராயே என்று கேட்பது போலுள்ளது" என்று பதிலளித்தார். என் நிலையும் இப்போது அதுதான்.
வாழ்த்திய இதயங்களுக்கு நன்றி....