'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' வைர வரிகள் (ஞான ஒளி) என் (!) காவியத்தில் அல்லவா! 'உயர்ந்த மனிதன்' அல்லவே!
'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்' வைர வரிகள் (ஞான ஒளி) என் (!) காவியத்தில் அல்லவா! 'உயர்ந்த மனிதன்' அல்லவே!
அன்புச் சகோதரி வனஜா,
தாங்கள் சொல்ல வந்தது ஒரு பாடல் இணைத்தது வேறு பாடலா அல்லது இப் பாடலுக்கும் பொருந்தக் கூடிய வரிகள் என்ற அடிப்படையில் தந்துள்ளீர்களா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தங்கள் விருப்பம் நம் அனைவரின் விருப்பமும் கூட என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உள்ளங்கையில் அந்த ஊன்றுகோலை செங்குத்தாக வைத்துக் கொண்டு பாடிக் கொண்டு ஒயிலாக நடந்து கொண்டு கண்களில் அந்த எண்ண ஓட்டத்தைப் பிரதிபலித்துக் கொண்டு ... எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறதே... இத்தனையையும் செய்து காட்டிய மேதையை என்னென்பது ... நிச்சயம் காலத்தால் நெஞ்சை விட்டு நீங்காத பாடல்..
நன்றி
இன்றைய சூழ்நிலையில் நம் நெஞ்சில் இக்காட்சி நிழலாடுவதைத் தவிர்க்க முடியுமா?
http://youtu.be/ul9Xvjt83eI
டியர் வாசுதேவன் சார்,
வெள்ளை ரோஜா வெற்றி விவரம் சூப்பர்.. அதுவும் 100 வது நாள் விளம்பரம் அட்டகாசம். பாராட்டுக்களும் நன்றியும்
'என் விருப்பம்' (1)
படம்:உயர்ந்த மனிதன்
பாடல்: வெள்ளிக்கிண்ணம்தான்... தங்கக் கைகளில்...
சகோதரி வனஜா அவர்கள் தேர்ந்தெடுத்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் வரும் 'இந்த' காவியப் பாடல்தான் நடிகர் திலகம் பாடல்களில் என்னுடைய முதல் விருப்பமான பாடல். ஆம். காலம் அழிக்க முடியாத காவியப் பாடல்.
வெள்ளிக்கிண்ணம் தங்கக் கைகளில் ஏந்தி முத்துப் புன்னகையை அந்தக் கண்களில் தாங்கி வரும் வைரச்சிலை நாயகி பக்கத்தில் இருக்க எம் தங்க நாயகர் நளினமாக காதல் சரசம் செய்யும் பால்சுவைப் பாடல். இந்தப் பாடல்தான் என் முதல் விருப்பமான பாடல். TMS வரிகளை முடிக்க வரிகள் முடியுமுன்னரே ஆரம்பிக்கும் சுசீலாவின் சுந்தர ஹம்மிங்கிற்கு ஈடும் இல்லை இணையும் இல்லை. எம் தலைவர் நடந்து காட்டும் நடையழகும், பாடலின் முடிவில் நாயகியின் இடது கையை அழகாக வாங்கி அழைத்துச் செல்லும் பாங்கழகும் பார் புகழ்வதே!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F_6iBSY8yuw
அரசியல் சாராமல் இதுவரை இருந்து வந்த இந்த கமல் என்ற நல்ல கலைஞனை ஒரே நாளில் அரசியல் இப்படி வருந்தச் செய்து விட்டதே! இதுதான் அரசியல். இதற்குப் பெயர் தான் அரசியல். அவரின் அன்பு ரசிகர்கள் ஆசியினாலும், தன்னுடைய குலையாத அசாத்திய தன்னம்பிக்கையாலும் கமல் நிச்சயம் மீண்டு வருவார். விஸ்வரூபம் விஸ்வரூப வெற்றிபெற வாழ்த்தும்
வாசுதேவன்.
அமர தீபமாய் எங்கள் நெஞ்சில் ஒளி வீசும் எங்கள் குல தெய்வம் நடிகர் திலகம். (ராஜா ராணி)
http://sim.in.com/5088aa5c0824d88171...357d_ls_lt.jpghttp://img.youtube.com/vi/zz48wuiYr1M/0.jpg
டியர் வாசுதேவன் சார்,
வெள்ளிக்கிண்ணத்தில் ஏந்தி தங்கள் விருப்பத்தை விருந்தாய் பரிமாறி விட்டீர்கள். மிக்க நன்றி. என்ன ஸ்டைல் ... சூப்பர் பாட்டு ... மெல்லிசை மன்னருக்கும் வாலி, டி.எம்.எஸ்., சுசீலா, வாணிஸ்ரீ மற்றும் திரைக்குப் பின் கலைஞர்கள் என்று அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நடிகர் திலகம் என்ற தீர்க்க தரிசியின் ஆசியுடன் இச்சிக்கலில் இருந்து கமல் அவர்கள் வெளிவருவார் என்பது திண்ணம். எந்த அரசியல் நடிகர் திலகத்திற்கு இடையூறாக இருந்ததோ அதே நிலைமையே இப்போது கமலுக்கும். இந்த கஷ்டங்களிலிருந்து அவர் மீண்டு வந்து விஸ்வரூபம் படம் வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்.