Dear RKS,
தங்களுடைய சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!
Printable View
Dear RKS,
தங்களுடைய சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்!
TWO SONGS - SAME SITUATION - TWO DIFFERENT PERFORMANCES
http://www.youtube.com/watch?v=YKo4y7B1iWI
http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc
எப்பேர்பட்ட விருப்பு வெறுப்பு பார்க்காமல் இந்த பாடலை பாருங்கள். நம்முடைய மனதை ஒரு சில வினாடிகள் பிசையும் இந்த பாடல் முடிவதற்குள்....
நடிகர் திலகத்தின் நடிப்பு என்பது அதுதான் ! அவர் தான் நடிகர் !
http://www.youtube.com/watch?v=ZMUfKlNYulM
Re-Cap of our Pammalar from Part-7.
1963-ம் ஆண்டு "குங்குமம்" திரைப்படம் வெளியான சமயத்தில் ["குங்குமம்" வெளியான தேதி : 2.8.1963], திராவிட முன்னேற்றக் கழக இதழ் ஒன்றின் கேள்வி-பதில் பகுதியில், கழகக் கண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி:
"குங்குமம்" படம் பார்த்தீர்களா?
கேள்விக்கு பதிலளித்தவர் அப்படத்தைப் பற்றி தனது மனதில் பட்ட கருத்தையோ அல்லது நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிததோ அல்லது அப்படத்தில் இடம்பெற்ற மற்ற கலைஞர்களின் பங்களிப்பு பற்றியோ எழுதியிருக்கலாம். அது ஜனநாயக முறை. ஆனால் அவர் என்ன பதில் கொடுத்தார் தெரியுமா?! அதை அறிந்தால் அனைவருக்குமே அதிர்ச்சியாயிருக்கும் ! ஆம், அவர் இந்தக் கேள்விக்கு அளித்த பதில்:
"இந்தப் படத்துடன் சிவாஜி காலி" என்பது தான்.
நமது நடிகர் திலகம் இன்றும் வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார். பதிலளித்தவர் தான் காலியாகியிருப்பார்.
அவருடைய காலத்தில், அவர் வாழ வேண்டும் என அவரை நேசித்த ஒரு பெரிய கூட்டமும், அவர் வீழ வேண்டும் என அவரைக் கண்டு அஞ்சிய ஒரு கூட்டமும் முழக்கமிட்டு கொண்டிருந்ததது மறுக்க முடியாத உண்மை. அவரைப் பிடிக்காத கூட்டததையும் இரு வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று - அவரது சினிமாக் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு ஒரு முகாமுக்கு அச்சம்
மற்றொன்று - அவரது அரசியல் கூட்டத்தை, செல்வாக்கைக் கண்டு இன்னொரு முகாமுக்கு பயம்.
இவை தவிர, கூட இருந்தே குழிப்பறிக்கும் துரோகிகளும் இருந்தனர். எண்ணிலடங்கா எதிர்ப்புகளையும், துரோகங்களையும் சமாளித்து ஜெயக்கொடி நாட்ட அவர் போட்ட எதிர்நீச்சல் இருக்கிறதே, அப்பப்பா.....அது அவரால் மட்டுமே முடியும். ஆரம்பமுதற்கொண்டே கலையுலகிலும் சரி, அரசியலிலும்
சரி, நடிகர் திலகம் எதிர்நீச்சல் போட்டேதான் சாதித்துக் காட்டினார். எந்த நிலையிலும், எந்த சமயத்திலும், எந்தவொரு காலகட்டத்திலும் அவர் தன்னை எதிர்த்தவர்களையோ, துரோகம் செய்தவர்களையோ பழி வாங்கியதில்லை. பழிவாங்கும் எண்ணம் கூட அவருக்கு கிடையாது. அப்பேர்ப்பட்ட ஒரு தெய்வப்பிறவி அவர்.
நமது நடிகர் திலகம் தி.மு.க.வை விட்டு வெளியே வந்தது மார்கழி 1954 [அதாவது 16.12.1954 - 13.1.1955] காலகட்டம். "பராசக்தி" [17.10.1952] வெளியான பிறகு சிவாஜி அவர்கள் சற்றேறக்குறைய இரண்டே கால் வருடங்களே கழகத்தில் இருந்திருக்கிறார். "பராசக்தி" முதல் "தூக்கு தூக்கி" [26.8.1954] வரை அவரது எல்லா பட விளம்பரங்களும், செய்திகளும் கழக ஆதரவு ஏடுகளில் வந்திருக்கிறது. அதன் பின்னர் அத்திபூத்தாற் போலத்தான் அவரது செய்திகளும், பட விளம்பரங்களும். கழகத்தை விட்டு அவர் கிளம்புவதற்கு முன்பு வெளியான படம் "எதிர்பாராதது" [9.12.1954]. எதிர்பாராத விதமாக அவர் திருமலை திருப்பதிக்கு திடீரென புனிதயாத்திரை செல்ல அதன் பின்னர் எதிர்பார்த்தது, அந்தப் பெருமாள் நினைத்தது நல்லபடியே நடந்தது. மொத்தத்தில் திரையுலகிற்கு அவர் வரக் காரணமும் பெருமாள், திரையுலகில் அவருக்கு சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததும் பெருமாள். கழகத்துக்குள்ளே குடத்துக்குள் நீராய் இருந்து வந்த அவர், புதுவெள்ளமாய்ப் பொங்கி "காவேரி"யாய்ப் பெருக்கெடுத்தார். ஆம், கழகத்தை விட்டு வெளிவந்த பின், வெளிவந்த படம் "காவேரி" [13.1.1955]. "காவேரி" 100 நாள் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. முந்தைய படமான "எதிர்பாராதது"வும் 100 நாள் வெற்றிப்படம். மேலும், 1955-ல் "மங்கையர் திலக"மும்[100 நாள்], "கள்வனின் காதலி"யும் சிறந்த வெற்றிப்படங்களாக வலம் வந்தன. "முதல் தேதி", "உலகம் பல விதம்", "கோடீஸ்வரன்" ஆகியவை Average ரகத்தில் ஓடியவை.
1956-ல், "அமரதீபம்", "பெண்ணின் பெருமை" இரண்டும் 100 நாள் பெருவெற்றிப்படங்கள். "நான் பெற்ற செல்வம்" நேரடியாக 100 நாள் ஓடவில்லை என்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. பல ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது. பகைமை பாராட்டாமல், ஏற்கனவே கழகத்தில் இருந்த போதே, ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்த படங்களான "ராஜா ராணி", "ரங்கோன் ராதா" ஆகிய படங்களை பிரச்னை ஏதுமின்றி முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். "ரங்கோன் ராதா" வெற்றி பெற்றது. தி.மு.கழக முக்கியப் பிரமுகரான ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் கதை-வசனத்தில் "வாழ்விலே ஒரு நாள்" படத்தில் நடித்தார்.
1957-ல், "வணங்காமுடி" 100 நாள் பெருவெற்றிக்காவியம். அதற்கு அடுத்த நிலையில், "மக்களைப் பெற்ற மகராசி", "தங்கமலை ரகசியம்", "பாக்கியவதி" ஆகியவை அமோக வெற்றியைப் பெற்றன. "புதையல்" நல்லதொரு வெற்றிப்படம். "அம்பிகாபதி" ஓட்டத்தில் OK.
1958-ம் ஆண்டு குறித்து முரளி சாரும், 1959 பற்றி சகோதரி சாரதாவும் கூறி விட்டார்கள். அதற்கு பின்னர் அவர் சாதித்த விண்ணளந்த சாதனைகள் அனைவரும் அறிந்ததே.
அவர் மண்ணை விட்டு மறைந்து பத்து ஆண்டுகள் ஆகப் போகிற நிலையிலும் என்றென்றும் வான்புகழ் கொண்டு,
அவர் வாழ்கிறார் ! வாழ்கிறார் !! வாழ்ந்து கொண்டேயிருக்கிறார் !!!
அன்புடன்,
பம்மலார்.
செந்தில் சார்,
இதுவரை நீங்கள் நாகரிகத்தின் எல்லை மீறி ஒரு பதிவு கூட இட்டதில்லை. இப்போதும் அந்த ஒரு பதிவு கூட மற்றொரு நபர் உங்கள் மேல் தொடுத்த வார்த்தை தாக்குதலினால் வந்த எதிர் வினையே என்பதையும் புரிந்துக் கொள்கிறேன். ஆயினும் நமது திரியை பொறுத்தவரை அனைவரும் நடிகர் திலகம் என்ற ஒரு மனிதனின் மேல் வைத்த அன்பின் காரணமாகவே ஒரு குடையின் கீழ் கூடியிருக்கிறோம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை. சம கல்வியறிவு படைத்தவர்கள்தான் இந்த திரியில் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று சொன்னால் நானே உங்கள் முன் தேற மாட்டேன். காரணம் நீங்கள் முனைவர். நான் வெறும் பட்டதாரி மட்டுமே. எனவே இது போன்ற சிறிய அளவிலேனும் சிலர் மனதில் பேதம் தோன்றக் கூடிய வாக்கியங்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
கோபால்,
உங்களின் ஒன்றரை பக்க நாளேடு ரசனையாக் இருந்தது. என் எழுத்து நடையும் களப் பின்னணியும் அழகாய் வடிவமைத்திருந்தீர்கள். அது போன்றே கார்த்திக் மற்றும் சாரதியின் நகல் பதிவுகளும். சாரதா நகல் மட்டும் சற்று முழுமையடையாதது போல தோன்றியது.
ஒருவரின் நடையைப் போலவே எழுதுவது என்பது கடினமான வேலை. அதை வெகு இலகுவாக கையாளும் உங்களை பார்க்கும் போது மீண்டும் அதே கேள்விதான் மனதில் எழுகிறது. இது போன்ற மற்றும் திருவிளையாடல் அலசல் போன்ற பதிவுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் எத்தனை ஆக்கபூர்வமாக இருக்கும்? இனி மேலாவது இதை மட்டும் செய்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
ஆமாம், ராகவேந்தர் சார், வாசு மற்றும் சின்னக் கண்ணன் இவர்களை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்?
dear Murali Sir. Grateful to you for your rational way of understanding my pains. When we go up by educational qualifications naturally we get refined and maturity of mind too goes up to become an unbiased human being showing no aggressiveness or differences among our fellow beings. This I had always followed and practiced in my life and I never wanted to exhibit my qualifications ever since I entered this thread. When Hyderabad Ravi Sir came to know about my academic credentials he started addressing me"Dr." but I politely requested him not to do so since it may create differences and we may not freely move with to deliberate on the common platform of NT's glory. Even I had expressed due respects to Mr.Gopal and Mr. Ramdoss, who are much younger to me, if my earlier postings are referred to. However it was unfortunate that my self respect was put to an acid test when some filthy and derogatory remarks, like illiterates, about my write-ups were openly instigated in this thread instead of a decent way of expressing through a PM to me. If one, who is really unbiased and rational goes through my entries right from the beginning, and their inteludes too, he can understand that I never made any 'politics' or 'self proclamation as leader' like that! I only rised up to the occasion to persuade our friends to keep the thread moving instead of sagging at the end of the earlier thread at the call of RKS Sir to all fellow hubbers. My intention was not to become a competitor for anybody who is virtually unknown to me and insignificant as well, but only to contribute my share for the glory of NT, which I did in my original ways of articulated expressions, that's all! Point blank attack with vested interest to degrade me... kindly tell me sir, is it right?. Murali Sir, as the respected moderator could also take note at the initial stage itself... I was helpless with no other fellow hubbers coming to my support! Hence out of my anguish, I admit I slipped to exhibit my status only to inform that gentleman to correct his approach before mudslinging on a person who never did any harm to him, without knowing about him!Quote:
செந்தில் சார்,
இதுவரை நீங்கள் நாகரிகத்தின் எல்லை மீறி ஒரு பதிவு கூட இட்டதில்லை. இப்போதும் அந்த ஒரு பதிவு கூட மற்றொரு நபர் உங்கள் மேல் தொடுத்த வார்த்தை தாக்குதலினால் வந்த எதிர் வினையே என்பதையும் புரிந்துக் கொள்கிறேன்.எனவே இது போன்ற சிறிய அளவிலேனும் சிலர் மனதில் பேதம் தோன்றக் கூடிய வாக்கியங்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். by Murali Sir
I do not have ill feelings on any one of this thread and I regret for whatever has happened from my part to have hurt anybody's feelings. But what about the person or persons who opted to degrade me!?will they also regret for the harsh words used on me? I can prove my prowess in write-ups in a better way...but there is no need for me! I just want to keep off this thread having understood the way it is being taken up lest a feel of 'monopoly'.
No more hastles from my side Sir. From my point of view, as the person unnecessarily got a beat...I reiterate that my reaction was just a response to an impulse! Let this not happen to anybody else in future...Good luck! My fellow hubbers... leave this issue at this stage to your conscience as I am totally out of this thread now but will continue to do the service to NT in my way outside. I thank my friends who expressed their soft words of heal personally.Happy if those gentlemen have a feel of winning and me lost. Regretted again, from my part.
தமிழில் ஒரு பழ மொழி ஞாபகத்துக்கு வருது.
சரக்கு முறுக்கா ,செட்டியார் முறுக்கா என்று.
சோதிப்புக்கு ஆட்படாத வரை எல்லோரும் புத்தர்களே.ஆட்பட்ட பிறகுதான் சாயம் எத்தனை முறை வெளுத்து கந்தையாவது ?"முனை"ந்தாலும் முனிவர் போல பேசும் முனைவரால் சினம் காக்க முடியவில்லையே ,கந்தையா ,காப்பாற்று.
எனக்கும்தான்...... உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. அதன்கொடுப்பினை வாழ்நாள் முழுவதும் புழுங்கியே பொசுங்கவேண்டியதுதான்!!
Mr. Gopal. Whoever you are... Kindly dont try to drag this issue as I have already expressed my regrets in a polite way in response to our respected moderator's posting.
Dear Moderator. / dear RKS sir. I am not a stumbling block for the movement of this thread, as I had volunteered to keep away, and now kindly realise the situation with such type of intentional dragging!! If he continues, I will also see to it to the end! then don't blame me, as I have gone out to keep this thread run for the cause of NT's glory rather than personal projections!
அடுத்தவர் பதிவில் குதிரையேறும் 'தரக்கட்டுப்பாடு' மே(பே)தையால் தராதரம் தர இயலவில்லையே! ஒளிக்கடவுளே!
திரி தரம் திரிந்துவிடாமால் காப்பாற்று!