-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பாக*உள்ள விவரங்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சன் டிவி.-----------------
05/05/20* செவ்வாய் - இரவு 9.30 மணி* -ரிக்ஷாக் காரன்*
07/05/20 - வியாழன் -இரவு 9.30 மணி - குடியிருந்த கோயில்*
சன் லைப்*-
-----------------
-04/05/20 -திங்கள்* காலை 11 மணி - நாளை நமதே*
06/05/20-புதன்* - காலை 11 மணி* *- வேட்டைக்காரன்*
08/05/20 -வெள்ளி -காலை 11 மணி -ஆனந்த ஜோதி*
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்*-
----------------------------------
-05/05/20-செவ்வாய் - பிற்பகல் 1.30 மணி -ரகசிய போலீஸ் 115
6/05/20-புதன்* * - பிற்பகல் 1.30 மணி -குடியிருந்த கோயில்*
07/05/20* * -வியாழன் -பிற்பகல் 1.30மணி -தேடி வந்த மாப்பிள்ளை*
08/05/20 -வெள்ளி* - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*
-
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!..... Thanks...
-
எம்ஜிஆர் என்ற விந்தை மனிதர்.....
************
அவரிடம் ஒரு அரிதான குணம் இருந்தது. அதாவது ஆங்கிலத்தில் எம்பதி என்று சொல்வார்கள்.
அடுத்தவர்களின் தேவைகளை நாமே புரிந்துகொண்டு அதற்கேற்ப உதவிசெய்வது...
உதாரணத்திற்கு, ஒருவர் எம்ஜிஆரை சந்தித்து உதவிகேட்பார்..என்ன ஆச்சர்யம்..!
அடுத்த நிமிடமே அவருக்க போதுமான பணமோ, தேவையான பொருளோ எம்ஜிஆரிடமிருந்து கிடைத்துவிடும்...
அது காலேஜ் சீட்டாக இருக்கலாம்,, பணம் கட்டி கல்யாண மண்டபம் புக் பண்ணியதற்கான ரசீதாக இருக்கலாம்..நகையாக இருக்கலாம்..
இதெல்லாம் மாயஜாலமா என்றுகூட பலரும் வியந்ததுண்டு...
ஆனால் உண்மை என்ன தெரியுமா? எம்ஜிஆர் என்ற மாமனிதன் சக மனிதர்களை நேசித்த விதத்திற்கான வியப்பூட்டும் மார்க்கம் அது..
எம்ஜிஆரை சந்திக்க ஒருவர் நேரம் கேட்கிறார் என்றாலே, அவர் எதற்காக சந்திக்க விரும்புகிறார், அவரின் உண்மையான தேவை என்ன என்பது போன்ற விவரங்கள் அடுத்தடுத்து ரகசியமாக திரட்டப்பட்டுவிடும்...
சம்மந்தப்பட்டவரிடமோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடமோ எதுவுமே காட்டிக்கொள்ளாமல் ஜாடைமாடையாக பேசி எம்ஜிஆரின் உதவியாளர்கள் வட்டாரம், விஷயத்தை திறமையாக கறந்துவிடும்.
அந்த தகவல்கள் அப்படியே எம்ஜிஆரின் காதுகளுக்கு போகும்.. இதன் பிறகு உதவி கேட்டு வருபவருக்கு தேவையான விஷயம் ரெடியாக ஆரம்பிக்கும்.
விஷயம் கைக்கு கிடைத்ததும், சந்திக்க விரும்பியவரை வரச்சொல்வார் எம்ஜிஆர்..
உதவி வேண்டும் என்று உதடுகள் ஆரம்பிக்கும் முன்பே அந்த மனிதரிடம் அவருக்கு தேவையான விஷயத்தை கைமேல் வைத்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துவிடுவார் மக்கள் திலகம்...
அதனால்தான், வீட்டில் உலைவைத்து விட்டு நம்பிக்கையோடு எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றால் கண்டிப்பாக அரிசியோடு திரும்பலாம் என்று பெருமையோடு சொல்வார்கள்....... Thanks...
-
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
================================================== ======
#"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!
அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.
ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"
"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!
புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!..... Thanks...
-
" ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''
மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன். அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறார் . சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்....... Thanks...
-
எம்.ஜி.ஆரே பாரத் பட்டத்தை திருப்பியளித்து, அப்போதைய மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சருக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும் விளக்குகிறது.
திரு. ஐ.கே.குஜ்ரால், மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர், புதுடில்லி, 21.03.1973.
மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 1972-ஆம் ஆண்டுக்கான “பாரத்” விருதைப் பெற்றவன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் பெருவிழிப்பை நீங்கள் அறிவீர்கள் என்றும், இந்த உணர்ச்சி வெள்ளத்தின் நீரோட்டத்திற்கு ஆட்பட்டுவிட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றும் நம்புகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், ஆளும் தி.மு.க.கழகத்திற்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் மாநிலகல்வி அமைச்சரான திரு நெடுஞ்செழியன் பின்கண்ட பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.
“பாரத் விருதை வேறொரு நடிகருக்கு வழங்க தேர்வுக்குழு முடிவு செய்தது. இதை அறிந்த நமது முதல்வர் கலைஞர், திரு ஏ. எல். சீனிவாசனை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு இந்த விருது கிடைக்க முயற்சி செய்யுமாறு கூறினார். இதற்காக திரு ஏ.எல். சீனிவாசன் கடும் முயற்சிகள் மேற்கொண்டார். சாதகமான கருத்து கூறுவதற்காக பலரை தன்பக்கம் மாற்றினார். ஆனால், தேர்வுக்குழு தலைவரான திரு. வி.கே. நாராயணமேனன் எளிதில் இணங்கவில்லை. நமது முதல்வரான கலைஞர், இதனை அடைய வைக்க பல வழிகளைக் கையாண்டார். இந்த முயற்சிகள் எல்லாம் எதற்காக? மற்ற நடிகருக்கு கிடைப்பதற்கு முன் எம்.ஜி.ஆருக்கு விருது கிட்டவேண்டும் என்பதற்காகதானே? அந்த இன்னொரு நடிகர் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை”
இந்த அறிவிப்பு 8.02.1973 தேதியிட்ட ஒரு வார ஏட்டில் வெளிவந்தது. மிக அதிகமாக விற்பனை ஆகும் தமிழ் வார ஏடு அது. இந்த செய்தி, அந்த இதழின் வாசகர் ஒருவரின் கிண்டலான விமர்சனத்திற்கு இரையானது. அந்த வாசகரின் கடிதம் 15.2.73 தேதியிட்ட இதழில் பிரிக்கப்பட்டிருந்தது. அதை இங்கு மீண்டும் தருகிறேன்.
“எம்.ஜி.ஆருக்கு பாரத் விருது பெற்றுத் தருவதற்காக தேர்வுக்குழு தலைவரான திரு நாராயண மேனன் விஷயத்தில் பலவழிகளை முதல்வர் கலைஞர் கையாண்டதாக நெடுஞ்செழியன் கூறியுள்ளார். இந்த செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது, இந்த காரியத்திற்காக ஒருவரை இணங்க வைப்பது குற்றமல்லவா? அதுவும் ஒரு முதலமைச்சர் இப்படியெல்லாம் செய்யலாமா?
இந்த.... அதை ஒரு மாநில அமைச்சர் பெருமையாக கூறிக்கொள்வது வேடிக்கையாக இல்லையா?”- இவ்வாறு அந்த வாசகனின் கடிதம் இருந்தது.
இத்தகைய கருத்துக்கள் வெளிவந்த பின்னரும் முதல்வரிடமிருந்தோ, தேர்வுக்குழு அதிகாரிகளி டமிருந்தோ இதனை மறுத்து மறுப்புரை வரவில்லை. முதல்வர் ஓர் கூர்மையான அரசியல்வாதி என்பதால் அவர் மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தேர்வுக்குழு அதிகாரிகளின் மவுனம் எனக்கு வியப்பைவிட கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
தேசிய அளவில் நுண்கலைத்திறனை தேர்வு செய்வதற்காக அமர்த்திடும் குழுவின் நடுநிலைத் தன்மையின் மீது எனக்கு மெத்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதியின் அடிப்படையிலும், பேதமற்ற நிலையிலும்தான் அந்தக்குழு செயல்படுகிறது என்பதே எனது நிச்சயமான அபிப்பிராயமாகும்.
இப்போது அந்தக் குழுவின் மீதும் அதன் தலைவர் மீதும் சுமத்தப்பட்டிருக்கிற உள்நோக்கம், முறைகேடான நடைமுறைகள் இவற்றை மென்மையாகக் குறிப்பிடவேண்டுமானால், 'நான் அதிர்ச்சியடைந்தேன்' என்றுதான் கூறுவேன். எனது உண்மையான உழைப்பின் காரணமாக இந்த விருது பெறும் தகுதி எனக்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த கவுரவம் என்றும் நான் மதிக்கிறேன். ஆனால், நடுநிலை தவறாத தீர்ப்புக் காரணமாக இந்த விருது கிடைத்தால் மட்டுமே நான் பெருமிதம் கொள்ளமுடியும். தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியும் ஊழல் அற்றதாக விளங்கவேண்டும் என்று நான் கூறி வருகின்ற காரணத்தால், தமிழக அரசியலில் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றேன்.
ஆனால், முறையற்ற வழிகளால் எனக்கு ஒரு கவுரவம் கிடைத்தது என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவும் இயலவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.
இந்த விருதின் தன்மைகள் பாதிக்காத வகையில், தகுதியை தீர்மானிக்க கையாளப்பட்ட வழி முறைகளைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு பார்க்கும்போது இனியும் இந்த விருது என்வசம் வைத்திருப்பது நியாயமில்லை என்று நான் கருதுகிறேன்.
எனவே இந்த விருதினை திருப்பி அனுப்புகிற நேரத்தில் எனது செயலை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவின் பின்னால் உள்ள உணர்வை பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிரதான பாத்திரம் வகிக்கும் ஒரு நியாயமற்ற சர்ச்சையிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள அனுமதிக்குமாறு வேண்டுகிறேன். தேர்வுக்குழு போன்ற உயர் இலக்கிய மதிப்பு வாய்ந்த நிறுவனங்களை அரசியல் தலைவர்களின் தந்திரோபாயங்களுக்கு ஆட்படவிடாமல் காத்து வருவதுடன், நீதி வழுவாமுறையில் கலைஞர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படவும், உரியமுறையில் அவர்கள் உற்சாகம் பெறவும் வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்பன்
எம்.ஜி.ராமச்சந்திரன்........ ( இத்தகைய மதிப்பு, மரியாதை மிகுந்த ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய விருதை, இது போன்ற ஒரு விமர்சனம் செய்ய பட்டது என்ற ஒரு காரணத்திற்காக விருதை திரும்பி உங்களிடமே அனுப்பி விடுகிறேன் என கூறிய சம்பவம் உலகளாவிய தேசங்களில் எங்காவது நடைபெற்றிருக்கிறதா?! அப்பப்பா... எம்.ஜி.ஆர்., அவர்களுக்கு தான் என்னவொரு தில்?!) ....Thanks.........
-
அன்று மட்டுமல்ல ஏன்றென்றும் பாரத் விருதுக்கு தகுதி பெற்ற ஒரே நடிகர் தலைவர் புரட்சித்தலைவர் மட்டுமே. அவருக்கு வழங்கியது முற்றிலும் நியாயமானதே.
இதில் கருணாநிதி சிபாரிசால் தலைவருக்கு கிடைத்தது என்பதை கண்டிப்பாக ஏற்கமுடியாது. கருணாநிதி அந்தளவிற்கு தலைவருக்கு உதவி செய்யும் மனிதர் அல்ல. அவர் தன் மகன் மு.க.முத்துவிற்காக வேண்டுமானால் சிபாரிசு செய்திருப்பாரே ஒழிய கண்டிப்பாக எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு கிடைக்க செய்திருக்க மாட்டார். அவருக்கு கிடைத்த விருது தன்னால்தான் என்று பொய் பிரச்சாரம் செய்திருப்பார்கள். அது திமு.க.வின் வழக்கம்.
இவர்களுக்காக இந்திய அரசாங்கம் கொடுத்த பாரத் பட்டத்தை திருப்பி அளித்தது வருத்தத்திற்குறிய செயல்.......சத்யகாந்த்..... Thanks...
-
நோபல் பரிசு அளிக்க தகுதி படைத்த எம். ஜி .ஆரூ.க்கு இது ஒரு ஜுஜுபி... ஆறுமுகம்.... Thanks...
-
"குலேபகாவலி" காவியம்; மூன்று திரைக்கதை அமைப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வெற்றியை திரைப்படம் ...குலேபகாவலி எம்ஜிஆர் இளமை துள்ளல் காணக்கிடைக்காத காட்சி இந்த திரைப்படத்தின் புலியுடன் மோதும் காட்சியில் பெரிய பள்ளத்தை வெட்டி எம்ஜிஆர் இறங்கிவிட்டார்கள் எப்போதும் எம்ஜிஆர் தற்பாதுகாப்பு துப்பாக்கி வைத்திருப்பார்முதலில் சண்டைக்காட்சி ஆரம்பித்தவுடன் புலி கொஞ்சம் மிரள ஆரம்பித்தது எம்ஜிஆரின் கொஞ்சம் துரத்த ஆரம்பித்தது தலைவர் உடனே சமாளித்துக் கொண்டு தன் கையில் இருந்த துப்பாக்கி எடுத்து மேல் நோக்கி சுட்டு விட்டு மேலே வந்து விட்டார்பிறகு புலி யை பழகி வைத்திருக்கும் மனிதனின் மீண்டும் புலி யை நன்றாக பழகி விட்டு பிறகு இரண்டாவது சாட்எடுக்கப்பட்டது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது இந்த திரைப்படம் குறிப்பாக தங்கவேலு எம் ஜி ஆர் ஈ பி சரோஜா சந்திரபாபு இவர்கள் இணைந்து கலக்கும் காமெடி எப்போதும் காண முடியாது... எந் த சோகத்தில் இருந்தாலும் அந்த நிகழ்வை பார்த்தால் மனது சந்தோஷமாகி விடும்.... Thanks...
-
#வாத்தியார் #படம்...!
வீட்ல ஏதும் வேலைகளிருந்தா சீக்கரம் முடிங்க...
இன்று காலை 10:30 மணிக்கு ராஜ்டிவியில்....!
ராஜ்டிவி நிர்வாகத்திற்கு...
தயவு செய்து காட்சிகளை கட் பண்ணாதீங்க...எப்போதும் போல்...
விளம்பரங்களைக்கூட பொறுத்துக்கொள்கிறோம்...
#உலகம் #சுற்றும் #வாலிபன்.......... Thanks...