vr,
I couldn't wtch the episode on march 10th. Can u please write a jist (atleast a line or two?) on that?
Printable View
vr,
I couldn't wtch the episode on march 10th. Can u please write a jist (atleast a line or two?) on that?
Quote:
Originally Posted by Shakthiprabha
:ty:
http://www.cinechipz.com/tv/2009/03/...nge-brahmanan/Quote:
Originally Posted by Shakthiprabha
நாதன் மிக ஆவேசத்துடன் கல்லூரிக்கு போய் கல்லூரி நிர்வாகியிடம் நியாயம் கேட்டு கொதிக்கின்றார்.
ஆனால் நிர்வாகி அசோக்கை மற்ற மாணவர்களின் கேலிக்கு ஒவ்வொரு நாளும் இரையாகுகின்றான் என்றும்
அவனைக் காப்பாற்றுவதற்க்காகவே
கல்லூரியிலிருந்து நீக்கியதாகும் கூறுகின்றார்.
சோ வின் - ஒரு ராஜாவின் கதை - ஜடபரதன் கதை.
அசோக்கை --
ஒரு கல்லூரிக்கும் அனுப்ப வேண்டாமெனவும்
அவன் ஒரு தெய்வக் குழந்தை எனவும் கூறி அனுப்பி வைக்கிறார்.
நல்லதோர் வீணை செய்து ...
:oops: I'm terribly sorry akka... Poor memory.. :shaking:
Appaadi... Thanks to aana... :ty:
Sorry'ka :oops: :cry:
:ty: aana, your link didnot work for me.
The foll link works.
http://tamiltv4u.com/enge-brahmanan/...ated-10032009/
Anyone interested in watching any episode can just try for the particular day's video clip.
ஸ்திதப்ரக்ஞன் பற்றி முன்பே ஒரு அத்தியாயத்தில் பார்த்திருந்தோம். அதாவது இரட்டைகள் அற்ற நிலை. நானோ நீங்களோ பேசிய பிறகு எழுதிய பிறகு, இதையெல்லாம் பற்றிப் படித்த பிறகு, உண்மை அறிவு நிலை என்ன என்று எழுத்தளவில் அறிந்த பிறகு, மீண்டும் ஆசைகள், ஏமாற்றங்கள்,Quote:
Originally Posted by Shakthiprabha
புகழ்ச்சி, இகழ்ச்சி, பெருமை, சிறுமை we enter into the dual syndrome. பற்பல பிறவிகளில் சேகரித்த ஆசைகள், நிராசைகளை, ஒட்டுமொத்தமாய் தொலைத்துவிட, அழித்துவிட முடிவதில்லை. படிப்படியாய் உயர வேண்டிய பாதை. அதனால் தான் மனத்தை முதல் படியாக ஒருநிலைப் படுத்த, பஜனை, தியானம், ஸ்லோகங்கள் என பல பாலப்படிகள். இதையெல்லாம் பாராயணம் செய்யவும் இன்றளவில் நேரமும், விருப்பமும் இல்லாமல் போய்விடுகிறது. க்ஷண நேரத்தில் மனம் மீண்டும் ரஜோ குணத்தால் பீடிக்கப்பட்டு..... முடிவில்லா சக்கரம்.
அசோக் போன்ற வெகு சொற்ப மனிதர்கள், இறைத்தன்மைக்கு சிறிது (relatively) அருகாமையில் இருப்பதால், அவர்களால், சட்டென்று ஒரே படியில் தாவ முடிகிறது. அவர்களை அவமானம் மானம் போன்ற இரட்டைகள் பாதிப்பதில்லை. Their existence is said to be in a different plane (probably higher) அதனால், அவர்களைத் துன்புறுத்தினால், reaction இல்லாமல் போனாலும், துன்புறுத்தியவனை மன்னிக்கும் பக்குவம் இருந்து, அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் மன்னித்தாலும், equal opposite reaction என்ற விதிப்படி, பாதிப்பு துன்புறுத்தியவனை தாக்கும். இங்கு சாமான்ய மனிதன் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய கட்டாயம். அந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில், இப்படிப்பட்டவர்களின் வாக்கு, சொல், செயல், சிந்தனை எல்லாமே நம்மை விட பன்மடங்கு அதிக பலம் வாய்ந்தது. Intensity can be higher.
இயேசு, தன்னை துன்புறுத்தியவர்களின் பால் மிகுந்த கருணை மேலிட "இவர்கள் செய்யும் பாவத்தை இவர்கள் அறிய மாட்டார்கள், எனவே பிதாவே இவர்களை மன்னியுங்கள்" என்று மன்னித்தருளினார். அவர் கருணைக் கொண்டு மன்னித்திராவிட்டால், விளைவுகள் அதிகமாக இருந்திருக்கும். Universal love என்று இதைச் சொல்வதுண்டு. தன்னைத் தவிர பிற ஒன்றை காணாது, எங்கும் தன்னையே கண்டுவிட்டதால்,
இரட்டைகள் அற்ற நிலை. Compasson and love hence flows towards one and all.
தானே எல்லாமாகி இருக்கிறோம் என்று அறிவு முழுமை பெறும்போது, அவமானம் மானம், துன்புறுத்துபவன், துன்புறுத்தபடுபவன் என்ற வேற்றுமை கடந்து நிற்கும் பக்குவம் வரப் பெற்றுவிடும். அது அவ்வளவு சாமான்யமானதல்ல.
ஜடபரதரின் கதை அதற்கு சான்று. ஜட பரதர் முற்பிறவியில் துஷ்யந்த மஹாராஜாவின் மகனாய் பிறந்தார். ராஜபோகத்தைத் துறந்து தேர்ந்த ஞானியாக விளங்கினார். ஆன்மநிலையை எட்டப்பெற்ற பின்னும் வீழ்ந்தார். எப்படி? தன்னை அண்டி வந்த மானின் மேல் அன்பு பாராட்டினார். மெல்ல மெல்ல மான் அவர் மனம் முழுவது ஆக்ரமிக்கத் துவங்கியது (like how a camel creeps into the tent). பாசம், அன்பு வேறூன்ற ஆரம்பித்த
அவரின் மனதில், இறைவனைத் தாண்டி மானின் நினைப்பு மட்டுமே மிஞ்சியது. மான் ஒரு நாள் இறந்துவிட்ட போது அந்த துயரம் தாங்காமல், பாசத்தால் பீடிக்கப்பட்டார். துடித்தார். இந்த பாசத்தை அறுக்க, மீண்டும் ஞானப்படிகள் ஏற அவருக்கு மேலும் இரண்டு பிறப்பு தேவைப்பட்டதாம். அவரின் கடைசி பிறவி 'ஜட பரதர்' என கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் தவத்தின் நிலையிலிருந்து வீழ்ந்துவிட்டதை உணர்ந்திருந்த அவர், மேற்பட்ட பிறவிகளில் உணர்வுகளுக்கு இடம் கொடாத 'ஜடமாய்' இருந்து, இறுதி நிலையை எய்வேன் என்ற உறுதிபூண்டதாக சொல்லபடுகிறது.
நாதனிடம் வசுமதி கேட்கிறாள்:
"அப்போ காலேஜ் படிப்புக்கு அவன் லாயக்கு இல்லையா?"
பட்டென்று நமக்குத் தோன்றும் பதில்.
"காலேஜ் படிப்பு இவனுக்கு லாயக்கு இல்லை" .
பாரதியார் எவ்வளவு அருமையாய் ஒரே சொல்லில் அடக்கிவிட்டார்! For all those whose existence is beyond worldly affairs...
சொல்லடி சிவஷக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்!
வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே! (such ppl find it diff to gel)
I missed yesterday's episode akka.... pls post it :oops:
March 16th
_________
வையாபுரி, சிங்காரத்தை காப்பாற்றுவதற்கு தேர்ந்தெடுத்த ஒரே வழி, அஷோக்கின் சரீரத்தை ஹிம்சிக்காத வழி. அத்தெருவில் உள்ளோரிடம் "அசோக் மனநிலை சரியில்லாதவன்" என்று கையெழுத்து வாங்குகிறார். நாதனும் மனம் வெம்பியபடி கையெழுத்திடுகிறார். ஒவ்வொரு தந்தைக்கும் மகன்/மகளின் செய்கைக்கு தார்மீகப் பொறுப்பு (responsibility / accountability) உள்ளது என சாஸ்திரங்கள் கூறுவதாய் எடுத்துரைக்கிறார் சோ. அவர்கள் செய்யும் பாபங்களுக்கு இவர்கள் பொறுப்பாவார்கள். மகன் தந்தை வழியில், பிரஜைகளின் பாபங்களுக்கு அரசனும், சிஷ்யனின் செய்கைகளுக்கு குருவும், மனைவியின் பாபங்களுக்கு கணவனும் பொறுப்பாவான் என்பது முன்னோர்களின் கூற்று. ஆகவே உயர்ந்த பதவி (not to be taken literally) வகிப்பவர்கள் தம் நடத்தையால், செய்கையால், வார்த்தைகளால் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்த வேண்டிய கடமைக்கு உட்பட்டவர்கள்.
வேம்புவின் சம்பந்தத்தை வெகு சந்தோஷமாய், பெருமையாய் ஜகன்னாதன் (ஜட்ஜ்) ஏற்றுக்கொள்கிறார். அவர் மனைவிக்கு சற்றே மனம் சுருங்குகிறது. எனினும் சினிமா வில்லியைப் போல் இல்லாமல், இயல்பாய் இன்முகத்துடனேயே தன் விருப்பமின்மையை நாசூக்காக கூறுகிறார். அவர் மகளின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுக்கவும் செய்கிறார். வைதீகம் செய்து வைப்போர்களின் நிலைமையை நன்கு கையாண்டிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திலும் வேத வழி சென்று வேத மந்திரங்கள் ஓதும் அவர்களை, அதன் சாரம்சத்தை கட்டிக்காக்கும் அவர்களை நாம் சரிசமமாய் நடத்துவதில்லை எனும் உண்மை சுடுகிறது.
வேத மந்திரங்கள் ஒலிக்கும் வீட்டில் என் மகள் மன நிறைவுடன் இருப்பாள் எனக் கூறுகிறார் ஜகன்னாதன். Postive effects of mantras was subtly hinted.
உறவுகளின் பேச்சு அடிபடும் போது, துன்பம் விளைவிப்பவன் உறவினன் என்பது கண்கூடாய் தெரிவதாக அபிப்ராயம் சொல்லப்பட்டது. நிதர்சனத்தில் தனியொரு மனிதனின் வீழ்ச்சியும், உயர்வும், நண்பன் ஒருவனுக்கு வருத்தத்தையும் சந்தோஷத்தையும் தரும் அளவு உறவினனுக்கு உள்ளன்பு பொங்குவதில்லை. இதை இராவணனும், இராமனும் கூட முன்மொழிந்ததாய் கூறப்படுகிறது.
விபீஷனனைப் பற்றி எடுத்துரைக்கும் இராமன், "அவன் நீதிக்கு தலைவணங்குபவன், நியாயத்தின் பக்கம் நிற்பவன்" என்று சொல்வதோடு நிற்காமல், "மேலும் அவனுக்கு இராஜ்ஜியத்தில் ஆசை வந்துவிட்டது" என்றும் கூறுவதாய் இராமாயணத்தில் இடம்பெற்றிருக்கிறது. உறவினனே உலைவைப்பவன் ஆகிறான்.
(வளரும்)
(நேற்றைய தொடரில் லௌகீகப்பேச்சுக்கள் மட்டுமே இருந்தன)
after thoughts: இக்கருத்து பொதுப்படையாய் கூறப்படுகிறது. ஒப்புக்கொள்ள இயலாதது. பொறாமை, அசூயை, போன்ற குணங்கள் பொதுவானவை, அவை உறவினன் மட்டுமே இன்னொரு உறவினனுடன் பாராட்டுவான் என்று சொல்வது generalisation. யாருக்கும் எப்படிப்பட்ட குணமும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்.
விபீஷனனை விட கும்பர்கணன் சிலரால் புகழப்பெறுகிறான். தமையனுக்காக உயிர்த்தியாகம் செய்தவன் என்று பாராட்டபடுகிறான். இராஜ்ஜிய பரிபாலனத்தை ஏற்றிருக்காவிடின் விபீஷனன் இன்னும் உயர்ந்து நின்றிருக்கலாம். அவன் மனம் வெதும்பி வேண்டாம் என்று மறுத்ததாகவும், இராமன், உயர்ந்த ஞானத்தை எடுத்துரைத்து மக்கள் நலன் கருதி, இராஜ பரிபாலனத்தை ஏற்று நடத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கதை உண்டு.
http://tamiltv4u.com/enge-brahmanan/...rial-16032009/
(நேற்றைய பகுதியைக் காண மேலே சுட்டுங்கள் )
:ty: Akka...
லௌகீகப்பேச்சுக்கள் - :confused2: appadina enna ka? :oops:
Talks on worldy life and matters. 99 % of all what we talk. Viyavahhaarik nnu sollalaam.
லௌகீகம் = லோகம் (உலகம், உலகம் சார்ந்த ஒட்டொழுகல்) சம்பந்தபட்ட பேச்சுக்கள்.
anythign that is NOT pertaining to supreme knowledge or god :| :oops: