http://i1087.photobucket.com/albums/...rt%20-2/a7.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a28.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a33.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a26.jpg
Printable View
''என்ன பாவம் செய்தார் எங்கள் சிம்மக் குரலோன்?'' - junior vikatan
மணிமண்டப ஏக்கத்தில் சிவாஜி ரசிகர்கள்
'பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டம் எழுப்பப்படவில்லை. அவரைப் பற்றி எந்த ஆட்சியாளர்களுக்கும் அக்கறை இல்லை’ என்று கொதிக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அக்டோபர் 1-ம் தேதி சிவாஜியின் பிறந்தநாள். அதை ஒட்டி இந்தக் கோரிக்கை மீண்டும் பரபரப்பாக எழுந்துள்ளது!
விவகாரத்துக்குள் போகும் முன் சின்ன ஃபிளாஷ்பேக்..!
2001-ல் சிவாஜி மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் 'சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தாருங்கள்...’ என்று கோரிக்கை வைத்தது நடிகர் சங்கம். சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் ஆந்திரா மகிளா சபா அருகில் சுமார் 12 கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கத்துக்கு 2002-ல் ஒதுக்கி அரசாணை போட்டார் ஜெயலலிதா. 'அரசு இலவசமாக ஒதுக்கிய இடத்தில் நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தது நடிகர் சங்கம். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பேச்சு மூச்சே இல்லை. இந்த சமயத்தில் 'மணிமண்டபம் எழுப்புவதில் ஏன் தாமதம்?’ என்று அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த நடிகர் நெப்போலியன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். 'மணிமண்டபம் கட்டும் இடத்துக்குக் குறுக்கே செல்லும் சாலைக்கு மாற்று சாலை அமைப்பதற்கு 4.20 லட்சம் செலவாகிறது. அதில் 2 லட்சத்தை மட்டுமே நடிகர் சங்கம் செலுத்தியிருக்கிறது. அதனால்தான் தாமதம்’ என்று சொன்னது அரசு. உடனே மீதித் தொகையை நடிகர் சங்கம் செலுத்தியது. அதோடு 22.4.2005-ல் மணிமண்டபம் கட்டுவதற்கு நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் பூமி பூஜை போட்டார்கள். அதன் பிறகும் கிணற்றில் விழுந்த கல்லாகவே இருக்கிறது இந்தப் பிரச்னை.
மணிமண்டபத்துக்காகத் தொடர்ந்து போராடி வரும் 'சிவாஜி சமூகநலப் பேரவை’ தலைவர் சந்திரசேகரனிடம் பேசினோம். ''ஜெயலலிதா இடம் கொடுத்தும் அதை நடிகர் சங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. பூமிபூஜை போட்டதோடு சரி. அந்த ஏரியாப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை நடிகர் சங்கம். இதற்காக நடிகர் சங்கத்துக்கு கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை. அதன் பிறகு தலைவரான சரத்குமாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்து 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. 'சிவாஜிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது. நெருங்கிய நண்பரான சிவாஜிக்கு கடற்கரையில் சிலை எழுப்பித் திறந்து வைத்தார் கலைஞர். சிவாஜிக்கு சிலை வைத்த கலைஞரே நிச்சயம் மணிமண்டபத்தையும் கட்டித் தருவார் என்று காத்திருந்தோம். 2008-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினை சந்தித்து மணிமண்டபம் தொடர்பாகக் கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் ஜெயலலிதாவால்தான் மணிமண்டபம் அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். ஜீவா, சிங்காரவேலர் போன்றவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டபையில் கடந்த வாரம்தான் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். அதனால் சிவாஜிக்கும் நிச்சயம் மணிமண்டபம் எழுப்புவார். இதுதொடர்பாக அவரை சந்தித்து மனு கொடுப்போம்...'' என்றார் சந்திரசேகரன்.
நடிகர் சங்கத்துக்கு அரசு கொடுத்த நிலம் என்ன ஆனது என்பது பற்றி விசாரித்தோம். இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சந்திரசேகரன் அரசிடம் கேட்டபோது 'அந்த நிலம் நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. பொதுப்பணித்துறையிடமே உள்ளது’ என்று சொல்லப்பட்டது. நடிகர் சங்கம் பூமி பூஜை போட்டபோது ''மணிமண்டபம் கட்ட வரைபடம் தயாரிக்க நிதி திரட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம். இதற்காக இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம்...'' என்று அப்போது விஜயகாந்த் சொன்னார். ஆனால், அதன் பிறகு அதை நடிகர் சங்கம் கண்டுகொள்ளவே இல்லை. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளிநாட்டில் இருப்பதால் அவரிடம் பேச முடியவில்லை. நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் கேட்டபோது, ''சாலை அமைப்பதற்காக மட்டும் நடிகர் சங்கம் 2 லட்சம் அரசுக்கு கொடுத்தது. அந்தப் பணத்தையும் திரும்ப வாங்க முயற்சி செய்து வருகிறோம். சிவாஜிக்கு கடந்த ஆட்சியில் சிலை வைத்துவிட்டதால் மணிமண்டபம் தேவையில்லை என்று அரசு நினைத்திருக்கலாம். மணிமண்டம் கட்டுவதாக நடிகர் சங்கம் சொல்லவே இல்லை...'' என்றார். ''பூமி பூஜை போட்டது ஏன்?'' என்றோம். ''நிலம் தருவதாக அரசு சொன்னதால் பூஜை போட்டோம். இப்போது நிலம் அரசிடமே இருப்பதால் கட்டவில்லை!'' என்றார்.
அரசு என்ன சொல்கிறது? செய்தித் துறை அமைச்சர் செந்தமிழனிடம் பேசினோம். ''உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இப்போது எதுவும் செய்ய முடியாது. தேர்தல் முடிந்ததும் இதுபற்றி அம்மாவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்போம்!'' என்றார்.
சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை இந்த முறையாவது ஜெயலலிதா நிறைவேற்றுவாரா?
- எம். பரக்கத் அலி
சிறப்பு நிழற்படம்
ANR, NADIGAR THILAGAM, RAMANAIDU AND SRIKANTH DURING VASANTHA MALIGAI SHOOTING
http://i1087.photobucket.com/albums/...n31355/a23.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Please click the link to view the news published in Chennai livenews.com
http://www.chennailivenews.com/Enter...i-Ganesan.aspx
Thanks Mr.RC for your Junior Vikatan News post :
Please Click the links below to view the complete coverage done by JUNIOR VIKATAN:
http://4.bp.blogspot.com/-l_x0tJn8TC...10-2011Pg1.jpg
http://1.bp.blogspot.com/-QLeKdpHqw1...10-2011Pg2.jpg