A RARE PHOTO
http://i1234.photobucket.com/albums/...ps70dad396.jpg
Printable View
அந்தக் கால நினைவுகள் -
சென்னையில் தூர்தர்ஷன் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்த காலம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் " ஒளியும் ஒலியும் " என்ற பெயரில் தமிழ் சினிமா பாடல்களை ஒளிபரப்புவார்கள். எல்லோர் வீட்டிலும் டி.வீ.கிடையாது என்பதால் யார் வீட்டில் டீ.வி. உள்ளதோ அவர்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் கூடியிருப்பார்கள். பெரும்பாலும் பழைய பாடல்களையும் சில நேரங்களில் அப்பொழுது வெளியான படங்களின் பாடல்களையும் ஒளிபரப்புவார்கள். ஒரு வெள்ளிக்கிழமயன்று அதிசயமாக இன்னும் வெளிவராத ஒரு படத்தின் பாடலை முதன்முறையாக ஒளிபரப்பினார்கள்.
அந்தப் படம் - பாடல் - பாடலில் நடித்த நடிகர் ?
அந்த சிறப்பு நம் நடிகர்ததிலகம் படத்தைத் தவிர வேறு யாருக்கு இருக்கமுடியும் ? ஆம் அந்தப் படம் - தியாகம் - பாடல் -
நல்லவர்க்கெல்லாம் - பழைய - மூத்த சிவாஜி ரசிகர்களுக்கு இது ஜாபமிருக்கும் என்று நினைக்கிறேன். அன்று படம் வெளிவருவதற்கு முன்பே டீ.வி.யில் பார்த்த எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.
செய்திகள் / 13 Dec, 2013 /
சிவாஜி சிலை வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு;வேறு அமர்வுக்கு மாற்றம்!
சென்னை: சிவாஜி சிலையை அகற்றக்கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்ததால், அவ்வழக்கு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள சிவாஜியை சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அச்சிலையை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என தஞ்சையைச் சேர்ந்த தமிழ்ப்பித்தன், சிவாஜி பாபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி அகர்வால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த அவர், ஏற்கனவே, சிவாஜி சிலை தொடர்பாக 2 பொதுநல வழக்குகளை விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது'' என மறுப்பு தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி அகர்வால் அனுப்பி வைத்து, வழக்கின் விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
என் நினைவு சரி என்றால் இந்த போட்டோ தலைவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ரசிகர்கள் முன்பு பேசிய போது எடுத்தது ,சரியா திரு. Kc சார்.
The news of Sivaji Ganesan’s statue causing accidents, dragged me to post my views here. When I last visited Chennai few years ago, I observed chaos and craziness among drivers who have no respect for highway rules, if there are such things exist. Without the use of side mirrors or indicators, I wondered how one can reach home alive! Honking the horns alone does, I suppose. Almost every main road has a statue of some dead politician erected in the middle and the road users somehow drive around them and Sivaji statue is no exception. Having thought that, it is nothing but sheer politics, which is not a surprise. What disgusts me is the insensitiveness of some bloggers who unnecessarily associating the great actor’s personal life in to the issue. No matter what political views he had, he is an acting legend and there must respect for his talent itself. Why everything should be viewed on politics, is a mystery to me.
திரு சந்திரசேகர் சார்,உங்கள் முயற்சி வீண்போகாது ,கண்டிப்பாக வெற்றி நமதே
இந்த ஜெ.வுக்கு சொந்தப் புத்தியும் இல்லை; சொல்புத்தியைக் கேட்பதாகவும் தெரியவில்லை.
1) பி.ஆர் அன்ட் சன்ஸ்-இன் கடிகாரக் கூண்டை அங்கிருந்து அகற்றி விட்டால் இன்னும் கூடுதலாகப் போக்குவரத்துக்குப் பயன்படும்.
2) சிவாஜி சிலையை அகற்றுவது - தமிழ்க் கலைஞர்களின் /கலையின் மீதான எச்சில் துப்பும் மூடத்தனம்.
3) சோபன் பாபுவின் சிலை சாலையை ஆக்கிரமிக்கவில்லையா - மேத்தா நகரில் - இன்னும் கடும் சாலை நெருக்கடி உள்ள இடத்தில்?
சிவாஜி காங்கிரசில் இருந்து - 1988 வாக்கில் - இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் - ராஜீவை எதிர்த்து "என் தமிழ் என் மக்கள்' என்று கொலைகார காங்கிரசை விட்டு வெளிவந்த பச்சைத் தமிழன். அவர் பெருமை குலையச் செய்வது தமிழருக்கு அழகல்ல.
NTயின் சிலையும் இந்த திரியும்
சிலை
1 எவ்வளவோ புகழாரம் பெற்றபின் நிறுவப்பட்ட சிலை - தமிழகம் ஒரு மாபெரும் நடிகனுக்கு, தமிழை புரியவைத்த ஒரு தெய்வமகனுக்கு சிலையை நிறுவி , தன் கறைகளை கழுவிகொண்டது
இந்த திரி
இந்த திரியும் சாதாரணமாக உருவானது அல்ல - பல நல்ல உள்ளங்கள் , திரிக்கு உள்ளேயும் , வெளியேயும் உடம்பை வருத்திக்கொண்டு பாடுபட்டு 12வது இலக்கை அடைய வைத்துள்ளர்கள் - கறைகள் ஏற்படுத்தின பலரை , சாரதா, பம்மலார் , ராகவேந்திரா , கோபால் , முரளி ,வாசு ( 2) , KC சேகர் . கார்த்திக் , NT 360 இன்னும் பல பூஜிக்கப்பட்ட அஸ்திரங்களினால் புறமுதுகை காட்டி ஓட வாய்த்த பெருமை இந்த திரிக்கு என்றுமே உண்டு
சிலை
2 கோடான கோடி மக்களுக்கு , தேச பக்தியை , நக்கீரன் வளர்த்த தமிழை , அண்ணன் - தங்கை எப்படி இருக்கவேண்டும் என்று இது வரையில் யாருமே புரிந்துகொள்ளாத நபர்களை , கண்ணீருடன் புரிய வைத்தவனை என்றுமே மனதில் இருந்து நீங்காதவனை பாராட்டும் வண்ணம் மக்கள் மகிழ்ச்சியுடன் சந்திக்கும் மெரீனா பீச்சின் அருகில் சிலையின் உருவிலே உயிர் கொடுத்தனர்
இந்த திரி
புரிந்துகொள்ள முடியாதவனை , ஒரு ஒப்ற்ற மாமனிதனை , ஒரு கர்ணனாக வாழ்ந்தும் காட்டியவனை இந்த திரி உலகெங்கும் பல நல்ல பதிவுகளால் பறை சாற்றியது , பறை சாற்றும்
சிலை
3 சிலை பல பொறாமையர்களை சந்தித்தது - அரசியலாக அந்த சிலையை எடைபோட்டது - விலை மதிக்க முடியாதவனை , வெறும் சிலையாக பாவித்து இந்த அரசு.
இந்த திரி
இந்த திரியும் ஒரு விலக்கல்ல - பொறாமை கொண்டனர் பலர் , உண்மையை உண்மையாக உரைத்ததனால் - வேகத்தை தடுக்க பார்த்தனர் பலர் - தொய்வு கண்டாலும் , துவண்டு விடவில்லை- மீண்டும் மீண்டும் தக்க ஆதாரத்துடன் திரி தன்முதல் இடத்தை தங்க வைத்துக்கொள்கின்றது
சிலை
4 ஒரு சிலை மக்கள் அன்பினால் , கோடான கோடி ரசிகர்கள் பாசத்தால் உயிர்பெற்றது அங்கே !!
இந்த திரி
ஒரு உயிர் ஓவியமான இந்த திரி இப்பொழுது ஒரு வெறும் சிலையாக மாறிக்கொண்டு வருகின்றதே!!! - பல நல்ல பதிவுகளுக்கு உரியவர்கள் சிலையாக மாறியது / மாறுவது ஏன்???
சிலை
5 சிலைக்கு கண்டிப்பாக வெற்றி கிடக்கும் - அதை அகற்ற ஒரு சக்தி பிறக்கவில்லை இன்னும் - அப்படி ஒரு சக்தி இருந்தாலும் , சமூகநலபேரவை என்ற பராசக்திக்கு முன் அதன் வீர்யம் எடுபடாது
இந்த திரி
பொறாமை , வீண் பிடிவாதம், கடினமான வார்த்தைகள் , மற்ற நல்ல பதிவுகளை உடனே பாராட்டும் தன்மை இல்லாமை - இப்படிப்பட்ட விரோதிகளை அண்ட விடாமல் ஒரு சமூகநலபேரவை இங்கும் உருவாகினால் , இந்த திரியை இனி யார் வெல்ல கூடும் ?
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
well said ravi sir what you pointed in 100% true
Respected Chandrasekaran your efforts will success by the grace of our gad Nadigarthilagam grace.Goahead we will be with you
பல உள்ளங்கள் இணைய போகும்,இருவர் உள்ளத்தை வரவேற்கும் ஆவலில் ,மனம் பீ.எஸ்.பள்ளியில்.இன்று மாலை சிந்திப்போம்.
கவிதாஞ்சலி -1
உன்னை வெறும் சிலை என்கின்றனர் சிலர் - நீ சிலையா ? -
இந்த தமிழகத்தை 50 வருடங்களாக நடிப்பு சக்ரவர்த்தியாக அரசாண்டாய் -
உனக்கு முன்னாலும் இப்படி ஒரு தெய்வ பிறவியை இந்த தமிழகம் சந்தித்தது இல்லை
இனியும் சந்திக்க போவதுமில்லை -
நாங்கள் அல்லவோ நடமாடும் சிலைகள -
மணிமண்டபம் கட்ட தெரியாமல் சிலையாக உள்ளோம் - பாரத ரத்னா உனக்கு இன்னும் கிடைக்க விடாமல் தடுக்கின்றோம் -
உன் சிலைமீது பறவைகள் எச்சமிடுகின்றனவாம் - ஒன்னும் செய்யாமல் சிலையாக இருக்கும் இந்த தமிழகத்தின் மீது இந்த உலகமே எச்சமிடுகின்றனவே -
அதுவல்லவோ கேவலம் --
நீ போக்குவரத்திற்கு தடையாக நிற்கின்றாயாம் - கண்ணீரில் பல நாட்கள் வாசம் செய்த சிரிப்பு ஒன்று வெளி வருகின்றது -
உன் படங்களின் Re- releaseகளால் , போக்குவரத்துக்கு தடைபட்டது என்பது உண்மைதான் - ஆனால் மெரினா பீச்சிற்கே நீ வந்த பிறகுதான் ஒரு கலை வந்தது , ஒரு அழகு வந்தது -
மக்கள் ஒழுங்காக செல்ல ஆரம்பித்தனர் - இந்த உண்மையை யாரால் மறுக்க முடியும் ? -
சிலையை அகற்றவேண்டுமானால் , முதலில் எங்களை அகற்ற வேண்டும் - நாங்கள் தானே உண்மையான சிலைகள் - ஒன்று பட்டுருக்கின்றோம்- எங்களை அகற்றுவது
கடினம் - தெரிந்தே ஏன் தோல்வியை தழுவுகிறீர்கள் ????
ரவி
:???::smokesmile:
கவிதாஞ்சலி -2
ஒன்றானவன் - உருவில் பலரானவன்
உருவான செந்தமிழில் உயிரானவன்
நன்காய் இருந்த தமிழகத்தில் நாடாண்டவன்
நாற்பதுகோடி மக்களின் மூச்சானவன்
அஞ்சாதவன் எதற்கும் அஞ்சாதவன்
அருமையான நெஞ்சங்களில் என்றும் நிலையானவன்
இன்று சிலையானவன் , பலரை சிலையாக்கினவன் - சிலையான பின்னும் மலையானவன் -
முன்னுக்கும் பின்னுக்கும் உதாரணம் காட்ட முடியாதவன் --
நேற்றாகி , இன்றாகி , என்றைக்கும் நிலையாகி ஊற்றாகி உயிரானவன் - காலத்தால் அழிக்க முடியாதவன் --------
(தொடரும்)
ரவி
:):smokesmile:
கவிதாஞ்சலி - 3
எங்கிருந்தோ வந்தாய் - பாரசக்தியின் அருளினால்
என்ன தவம் செய்தோம் உன்னை அடைய - அந்த யசோதா கூட எங்களை பொறுத்த வரையில் , கொஞ்சமாகதான் தவம் செய்திருக்க வேண்டும் !
கர்ணனாக வாழ்ந்து காட்டினாய் - உன் கொடையால் தமிழகம் வளர்த்தது - தன்னை வளர்த்துகொண்டது - இன்று U too Brutus என்று சொல்ல வைத்துள்ளது
ரஹீமாக உருவானாய் - அல்லாவின் கருணையால்
இஸ்லாமிய மதமே பெருமைகொண்டது
அன்பை காட்ட கற்றுகொண்டோம் - இன்றோ அதை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம்
அந்தோனியாக உரு மாறினாய் - ஏசுவின் அன்பால்
அமைதி கிடைத்தது எங்கள் எல்லோருக்கும் - கிடைத்த அமைதியை அருமையாக தொலைத்துவிட்டோம்
இன்று சிலையாக மாறினாய் - உன்னை அகற்றுவதில் தீவிரமாக உள்ளோம் - ஏன் தெரியுமா? - தமிழகத்திற்கு ஏன் இன்னும் பெருமை வேண்டும் என்றே !
இந்த நாட்டின் தலைவர்களை எங்கே மதிக்கிறோம் - சிலைகளை மதிபதற்க்கு - உன்னை மதிக்கிறோம் - மறக்க முடியவில்லை
உன் சிலை வெறும் பிறந்த நாளுக்கும் , மறைந்த நாளுக்கும் கட்டப்பட்டதில்லை - இந்த தமிழை வாழ வைத்ததற்காக , தேச பக்தியை ஊட்டி எங்களை வளர்ததிற்காக - எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்து நிற்பதற்காக !!
எங்கள் உள்ளமல்லாம் நிறைந்த உனக்கு , சிலை தேவை இல்லைதான் - ஆனால் நாங்கள் நிரந்தரம் அல்லவே - எதிர்காலம் உன்னை நினைக்க வேண்டாமா ? நினைத்து போற்றவேன்டமா - இந்த தமிழகம் நாளை திருந்த வாய்ப்பு உள்ளதே !!
Ravi
:):smokesmile:
கவிதையில் ஒரு நன்றி
இது முரளிக்காக
இங்கு போதனைகள் சொல்ல பலர் உண்டு - அதை செய் , இதை செய்யாதே என்று சொல்பவர்கள் மத்தியில் நீர் வேற மாதிரி - ஆணித்தரமாக சொல்ல நீர் ஒருவர் தானே இங்கு உண்டு -
எங்களுக்கு நீர் ஒரு பிரம்மாஸ்திரம் - அனால் துரதிஷ்ட வசமாக , பலதடவை உங்களை பிரயோகம் செய்ய வேண்டி உள்ளது - நாகாஸ்திரம் போல எங்களிடமே வந்து சேர்த்து விடுகிறீர்கள் - அதனால் எங்களக்கு கிடைப்பது மன நிம்மதி.
நீர் இருக்க பயம் ஏன் ? நாங்கள் எல்லோரும் நன்றாக உறங்குகையில், உண்மையை உறங்க விடாமல் பார்த்துகொள்ளும் பண்பு யாருக்கு வரும் ??
நீர் வாழ்க எல்லா வளமும் பெற்று !!
அன்புடன் ரவி :
smile2::smokesmile:
கவிதையில் ஒரு நன்றி - 2
இது நெய்வேலி வாசுவிர்காக
நக்கீரன் தமிழ் வளர்த்தான் என்று சொல்லுவார்கள் - கேட்டதுண்டு - இன்று பார்க்கிறோம் - உங்கள் நடையில்
கோவிலுக்கு சென்றால் ஆண்டவன் அருள் கிடைக்கும் - சொல்ல கேட்டதுண்டு - நடைமுறையில் உங்கள் பக்தியின் மூலம் உணர்கின்றோம்
உழைத்தால் தான் நிம்மதி கிடைக்கும் - சொல்ல புரிந்துகொண்டுள்ளோம் - உங்கள் பதிவுகள் மூலம் கிடைக்கின்ற நிம்மதியும், சந்தோஷமும் வேறு எங்கு கிடைக்கும் ?
சிலையை சிலையாக பார்க்கும் இந்த தமிழகத்தில் , பாராட்டுகளக்கும் பஞ்சம்தான் - நீங்கள் இந்த திரிக்கு திரும்பி வரும் அந்த நல்ல நாள் தான் - NT சிலையை அகற்ற வேண்டாம் என்று தீர்ப்பு வரும் நாளாக இருக்குமோ ?
எங்களுக்கும் அன்று தான் "Happy new year"
அன்புடன் ரவி :
smile2:
கவிதையில் ஒரு நன்றி - 3
இது ராகவேந்திரா சாருக்காக
உங்கள் பதிவுகளில் - பாசமலரை பார்த்தோம் - பரவசபட்டோம்
உங்கள் உழைப்பில் அந்த நடிப்பு உலக இறைவனை பார்த்தோம் - சிலையாக வியர்ந்து நிற்கின்றோம்
இந்த திரி கர்ணனின் தேர் மாதிரி நிலத்தில் சிக்கிக்கொண்டு விட்டது - எப்பவோ செய்த தர்மத்தினால் , உயிர் மட்டும் உடம்பில் ஒட்டி கொண்டுள்ளது - இந்த திரியின் வேகம் ஆமை , நத்தை இவைகளின் வேகத்தை கூட இழந்து விட்டது - நீங்கள் மீண்டும் வந்தால் , மிஞ்சிய உயிரை தானம் கேட்க மாட்டீர்கள் - இந்த திரிக்கு உயிர் ஊட்டுவீர்கள் என்பது நிச்சயம் - வரவேண்டும் என்பதே எங்கள் ப்ராத்தனை
" பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச - பஜதாம் கல்பவிக்க்ஷாய
நமதாம் காமதேனுவாய நம க :"
அன்புடன் ரவி :
smile2
கவிதையில் ஒரு நன்றி - 3
இது "கோபால்" க்காக :
கண்ணனின் வேணுகானம் உண்டு உம் பதிவிலே - அந்த நாளும் வந்திடாதோ - Brindavanathil கண்ணன் வளர்த்த அந்த நாளும் வந்திடாதோ என்று எங்களை பாட வைக்கும் !!
அந்தோணியின் அழகும் உண்டு உம் எழுத்தில் - அதிலே அந்தோணியின் கோபம் மட்டுமே தலை உயர்ந்து நிற்கும் --- [ தவிர்க்கத்தான் மன்றாடுகின்றோம்
நம் இறைவனை இது வரை யாரும் அணு அணுவாக அலசியதில்லை - உம்மால் மட்டுமே முடிந்த கலை இது
உம் வழி தனி வழி தான் ( road less traveled) ஆனாலும் அன்பு நிறைந்த , பக்தி நிறைந்த , பாசம் நிறைந்த வழி - " கோபால்" minus "கோபம்" - மிஞ்சுவது "பால் " அதன் நிறத்தை மனமாக கொண்டவர் நீர் - திரியின் வேகம் - உங்கள் விவேகத்தில் மீண்டும் வேகமாக முன்னேறும் என்பதில் எள்ளு அளவும் சந்தேகமில்லை
அன்புடன் ரவி :
smile2
கவிதையில் ஒரு நன்றி - 5
இது நம் பம்மளார் க்காக
ஆவண திலகமாக இந்த திரியில் வந்தீர் - எங்களையெல்லாம் ஆட்கொண்டீர்
ஆணியை எப்படி அடிப்பது எண்டு சொல்லைகொடுத்தீர் - அதனால் மாற்றுமுகாம் இருந்த இடம் தெரியாமல் போனது
நம்மை திட்டுபவர்களுக்கும் நல்லது செய்தீர் - பதிவுகள் உங்கள் உயர்வை போற்றின
இப்பொழுது எடுத்துக்கொண்ட முயற்சி ஒரு புனிதமானது - நாங்கள் அணிலாகத்தான் உங்களுக்கு உதவி பண்ண முடியும் - அந்த உழைப்பு இல்லை எங்களிடம்
ஒரு கலங்கரை விளக்கம் இந்த திரியில் ஒளி தராவிட்டால் , விட்டில் பூச்சிகளான எங்களால் என்ன ஒளியை தந்துவிட முடியும் ???
உங்கள் புதிய முயற்சிக்கு என்றும் எங்கள் துணையும் , வாழ்த்தும் என்றும் உண்டு ----
அன்புடன் ரவி :
:smile2::smokesmile:
கவிதையில் ஒரு நன்றி - 6
இந்த காணிக்கை KC சேகர் சாருக்கு
ஒரு காலத்தில் தலைவருடன் பணி புரிந்த நன்றிக்காகவே கர்ணன் மாதிரி உழைக்கும் ஒரு நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் சொன்ன வார்த்தைகள்
உழைப்புக்கு ஒரு பாடம் எடுத்தால் , உங்கள் பயணம் தான் உதாரனமாக எடுத்துசொல்ல முடியும் - தலை நிமிர்கிறோம் ஆணவத்தால் அல்ல - உங்களை பெற்றதனால் ------ உழைப்புக்கு ஒருவனான உங்கள் சக்தி வெற்றிக்கு ஒருவனான நம் NT யை லக்ஷ்மணன் கிழித்த கோடுபோல் என்றும் வலம் வரும் , உண்மை வெல்லும்.
அந்த பராசக்தியின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
அன்புடன் ரவி
:):smokesmile:
கவிதையில் ஒரு நன்றி - 7
இது இந்த திரியின் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் காணிக்கை
ஒரு கை தட்ட ஓசை வருவதில்லை
ஒருவர் இழுக்க தேர் ஓடுவதில்லை
ஒருவர் படைப்பால் காவியம் பிறப்பதில்லை
ஒருவர் உழைப்பினால் வாழ்கை சிறப்பதில்லை
சிலையாக நிற்கின்றோம் - சிலைக்கு வந்த சோதனையால்
சோதனைகள் நமக்கும் , NTக்கும் புதியது அல்லவே - துவண்டு விடாமல் இந்த திரிக்கு முதலில் உயிர் கொடுப்போம் - அந்த சக்தியில் சிலையும் மகிழ்ந்து அங்கேயே நிலைத்துவிடும்
அன்புடன் ரவி
:):smokesmile:
சிவாஜியே கட்டக் கடேசீல "என் தமிழ் என் மக்கள்"-னு வந்து அரசியலை முடித்துக் கொண்டார். இங்கே பழைய காங்கிரசு பெருங்காயங்கள் வந்து தேசம் பக்தி என்று ஒப்பாரி வைப்பது வீண் வேலை. கப்பலோட்டிய தமிழனையே பிச்சைக்காரனாக ஆக்கி சாக விட்டதுதான் காங்கிரசின் தேசியம்.
தமிழ்க் கலையின் தலைமகன் சிவாஜியை தமிழ்த்தேசியம் கைவிடாது.
ரவி,
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். என்னை பாராட்டியதால் மட்டும் இல்லை. உள்ளத்தின் அடித்தட்டிலிருந்து எழுதியிருக்கிறீர்கள் என்பது படிக்கும் போதே தெரிகிறது. வாழ்த்துகள். தொடருங்கள்.
திரியின் பங்களிப்பாளார்கள் அனைவரும் மீண்டும் வந்து திரிக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆகவே கவலை விடுத்து நம் பணியில் கவனம் செலுத்துவோம்.
அன்புடன்
ஒரு அற்புதமான மாலை நேரம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் அனைவரும் லயித்து ரசித்து ஆர்ப்பரித்து கைதட்டி ஓசை எழுப்பி மனமகிழ்ந்த காட்சியை பார்க்க முடிந்தது. இன்றைய திரையிடலை தவற விட்டவர்கள் உண்மையிலே வருத்தப்பட வேண்டும். மூன்று மணி நேரம் செல்வம் மற்றும் சாந்தாவோடு வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு. இப்போதும் அந்த தாக்கம் இருக்கிறது. இதுவரை திரையரங்குகளில் மட்டுமே ரசிகர்கள் once more கேட்பதை பார்த்திருக்கிறோம். இங்கே நமது NT FAnS அமைப்பில் நடத்தப்பட்ட திரையிடலிலும் இன்று இது நடந்து பறவைகள் பலவிதம் பாடல் காட்சி மீண்டும் திரையிடப்பட்டது. இதைப் பற்றிய எண்ண அலைகளை தொடரும்.
அன்புடன்
நான் சுவாசிக்கும் சிவாஜி! (11) - ஒய்.ஜி. மகேந்திரன்
http://img.dinamalar.com/data/uploads/E_1386924576.jpeg
பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013,00:00 IST
புகழ் பெற்ற, பரத நாட்டிய கலைஞர் தனஞ்செயன் பற்றி, அவருடைய சிஷ்யர்கள், ஒரு வீடியோ படம் எடுத்திருக்கின்றனர். அதைப் பார்க்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. தனக்கு, 'இன்ஸ்பிரேஷ'னாக இருந்த தன் குருமார்கள் குறித்து பேசும் போது, 'பரத நாட்டியத்தில், முக்கியமான அபிநயத்திற்கு, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சிவாஜி...' என்று, பெருமையோடு குறிப்பிட்டார் தனஞ்செயன்.
என் மகள் மதுவந்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு, சிவாஜியை அழைக்க, என் மகளுடன், அவர் வீட்டிற்கு சென்றிருந் தேன்.
அப்போது, 'எனக்கு பால சரஸ்வதி நடனம் தான் பிடிக்கும்...' என்றார் சிவாஜி.
'அவங்ககிட்ட போய் கத்துக்க முடியாது. (பால சரஸ்வதி முன்பே காலமாகி விட்டார். மதுவந்தி, பத்மா சுப்ரமணியத்திடம் தான், பரதநாட்டியப் பயிற்சி எடுத்திருக்கிறாள்...' என்றேன் கிண்டலாக.
'டேய், சரியாக சொல்ல வேண்டுமானால், பாலாவுக்கு அடுத்து, பத்மா சுப்ரமணியத்தின் நடனம் தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்; கண்டிப்பாக வரேன்...' என்று கூறியதோடு, பாலம்மாவின் நடன சிறப்பை புகழ்ந்து பேசினார்.
இன்று, இசையில் அசத்திக் கொண்டிருக்கும், அருணா சாய்ராமின் தாயார் ராஜம்மா, சிவாஜியின் ரசிகை. சிவாஜி படத்தை, ரிலீசாகும் முதல் நாள், முதல் காட்சியில் பார்த்து ரசிப்பவர்.
ராஜம்மாவிற்கும், பாலசரஸ்வதிக்கும் நெருங்கிய நட்பு உண்டு. பால சரஸ்வதி, பம்பாய்க்கு போனால், ராஜம்மா வீட்டில் தான் தங்குவார். அவர்களும், சென்னைக்கு வரும் போதெல்லாம், பாலசரஸ்வதியை சந்திப்பர்.
ராஜம்மா, ஒருமுறை சென்னை வந்திருந்த போது, சிவாஜி நடித்த படம் ஒன்று, சன் தியேட்டரில் ரிலீசாகியிருந்தது, ராஜம்மாவுக்கு சிவாஜி படத்தை பார்க்க ஆசை. அதே சமயம், பாலாவையும் பார்க்க போக வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து, கடைசியில், பாலாவை, தொலைபேசியில் அழைத்து, நிலைமையை விளக்கினார். 'எனக்கும் அதே பிரச்னைதான். நானும், அதை தான் சொல்ல நினைத்தேன். தம்பி சிவாஜியின் படத்தை பார்க்க ஆசை...' என்றிருக்கிறார் பாலா.
பாலா, ராஜம்மா, சிறுமி அருணா சாய்ராம் மூவரும் சன் தியேட்டருக்கு போயுள்ளனர். படத்திற்கு, டிக்கெட் கிடைக்கவில்லை. ஹவுஸ் புல் ஆகிவிட்டது. வந்திருப்பது, பெரிய பரத நாட்டிய கலைஞர் என்று அறிந்த தியேட்டர் மானேஜர், அவர்களை திருப்பி அனுப்ப விரும்பாமல், தியேட்டர் முதலாளிக்கு இருக்கும், பிரத்யேக பாக்சில், அவர்களை உட்கார வைத்து, படம் பார்க்க வைத்தார்.
இச்சம்பவத்தை அருணா சாய்ராம் நினைவு கூர்கிறார்:
படத்தைப் பார்த்தேன். கூடவே, பாலா அம்மாவையும் ரசித்தேன்; படத்தில், சிவாஜி பாடினால், இவங்களும் பாடறாங்க, அவர் சிரித்தால், இவங்களும் சிரிக்கிறாங்க, அவர் அழுதால், அழறாங்க, நடனம் ஆடினால், பாலா அம்மாவும் தன் கால்களை, ஆட்டறாங்க... ஒவ்வொரு பிரேமிலும், சிவாஜியை முழுமையாக ரசித்தார் பாலா அம்மா, என்றார்.
பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியம், சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். பத்மாவும், சிவாஜி நடிப்பை ரசித்து, நிறைய பேசுவார். ஒருமுறை, பத்மா, என்னிடம் பகிர்ந்து கொண்ட, சுவையான தகவல் இது:
நாட்டிய சாஸ்திரத்தை, உருவாக்கியவர் பரதமுனி. அவர், நாட்டிய கலைஞரின் முகம் குறித்த சாமுத்ரிகா லட்சணங்களை விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு நாட்டிய கலைஞருக்கு, 'பர்பெக்ட்' முகம் என்றால், அது எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த இலக்கணப்படி, சிவாஜியின் முகத்தை அளந்து பார்த்தால், பரதமுனி சொன்ன அத்தனை லட்சணங்களும், சிவாஜியிடம் இருக்கின்றன, என்றார். பத்மாவிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, நாட்டிய சாஸ்திரமும், நடிகர் திலகமும் என்ற பெயரில், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய, ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கும்படி கேட்டேன். பத்மாவும், மகிழ்ச்சியோடு, ஒப்புக் கொண்டு, அதை தயாரித்தார்.
நாட்டிய சாஸ்திரத்தை, சிவாஜி எப்படியெல்லாம் கையாண்டிருக்கிறார் என்பதை, பல திரைப்படங்களின், 'க்ளிப்'பிங்களுடன் விளக்குவதாக, அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருந்தது.
எங்கள், 'பாரத் கலாச்சார்' அமைப்பின் ஆதரவில், அதை திரையிட்ட போது, அமோக வரவேற்பு கிடைத்தது. கமலா அம்மாவும், அவரது குடும்பத்தினரும் மெய் மறந்து ரசித்தனர். என் மகள் மதுவந்தியும், நானும் அதற்கான, 'எடிட்டிங்' பணியை செய்திருந்தோம்.
ஒருமுறையாவது, சிவாஜியை, இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்க ஆசை. நீண்ட வற்புறுத்தலுக்கு பின், நிகழ்ச்சிக்கு வர ஒப்புக் கொண்டார். 'பாரத் கலாச்சார்' சார்பில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு, நடிகை லட்சுமியை தலைமை வகிக்க செய்தோம். அன்று மாலை, பலத்த மழை பெய்தும் கூட நிகழ்ச்சி, 'ஹவுஸ் புல்!'
பார்வையாளார்கள் அனைவரும் திரையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, நான் மட்டும் சிவாஜியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மாபெரும் நடிகன் என்றாலும், தான் பாராட்டப்படும் போது, ஒரு வித கூச்சமும், மகிழ்ச்சியும் அவருடைய முகத்தில் பிரதிபலிப் பதை கண்டேன்..
சிவாஜியின் நடிப்பில் உள்ள எல்லா சிறந்த அம்சங்களைப் பற்றியும் பேசினார் நடிகை லட்சுமி. 'என்னை பேசச் சொல்லாதே...' என்று சிவாஜி, என்னிடம் சொல்லியிருந்தும், அந்த சிறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினால், அனைவரும் ரசிப்பர் என்று கருதி, கடைசியில், அவரையும் பேச அழைத்தேன். பொதுவாக, எந்த மேடையிலும், கையில், சிறு குறிப்பு கூட வைத்துக் கொள்ளாமல், நீண்ட நேரம் தங்கு தடையின்றி பேசும் சிவாஜி, அன்று, சற்று தயங்கி தயங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சொல்லப்பட்டதெல்லாம், சரி என்றால், அது, ஆணவமாக கருதப்படலாம். இல்லை என்றும் சொல்லி விட முடியாது. அது தான், அவரது தயக்கத்திற்கு காரணம்.
'இவங்க எல்லாரும், என் நலம் விரும்பிகள். என்னைப் பற்றி, என்னவோ செய்திருக்காங்க. நவரசம் என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால், எனக்கு பிடித்தது மிளகு ரசம் தான். நீங்க எல்லாம் பாராட்டும் போது, நானும் ஏதோ செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது...' என்றார். அவர் கண்கள் பனித்ததோ என்னவோ, பார்வையாளர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர்.
மிருதங்க சக்கர வர்த்தி'படத்தில் நடிப்பதற்கு முன், பிரபல மிருதங்க வித்வான், உமையாள்புரம் சிவராமனை, தனக்காக, தனியாக மிருதங்கம் வாசிக்க சொல்லி, அதை கவனித்து, மிருதங்க வாசிப்பின் நுணுக்கங்களை புரிந்து, அதை, படத்தில் செய்தார்.
-- தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்
dinamalar
இருவர் உள்ளம்- 1963
நடிகர்திலகத்தின் நடிப்பின் பாணி stylised method acting ஆக விளங்கிய 60 களில் மீண்டும் அவருடைய தெய்வ பிறவி,இரும்புத்திரை பாணி,இயல்பு நடிப்பில் அடக்கி வாசித்த படம் இருவர் உள்ளம். சிவாஜியின் குரு எல்.வீ.பிரசாத் இயக்கி தயாரித்து, கருணாநிதி மீண்டும் நடிகர்திலகத்துடன் இணைந்தார் குறவஞ்சிக்கு பிறகு மூன்று வருட இடை வெளியில். எழுத்தாளர் லட்சுமியின் புகழ் பெற்ற பெண் மனம் (ஆனந்த விகடனில் வெளியான தொடர்) என்ற நெடுங்கதையை தழுவி ,கருணாநிதி அவர்களால் திரைக்கதை அமைக்க பெற்றது.மூல கதையில் இருந்த பிராமண குடும்ப கதையை(ஜகன்னாதன்-சந்திரா) பிராமணம் அல்லாததாக (செல்வம்-சாந்தா) செய்து, அருமையாய் திரைக்கதை அமைத்திருந்தார்.
சிவாஜி ,எப்பவுமே, கதாநாயகியை மையமாய் கொண்ட கதா பாத்திரங்களிலும் நடிக்க தயங்காதவர்.(ஆனாலும் முதல் பரிசை தட்டி சென்று விடுவார்)
மங்கையர் திலகம்,பெண்ணின் பெருமை ,கை கொடுத்த தெய்வம், நீல வானம்,சிவகாமியின் செல்வன்,வாணி-ராணி உதாரணங்கள். இந்த வரிசையில் நாயகியை மைய படுத்தினாலும்,கதையின் நாயகனுக்கும் நிறைய scope கொடுத்த மிக சிறந்த படம் இருவர் உள்ளம்.
இருவர் உள்ளத்தின் கதை-
மிக பெரிய செல்வந்தர் வீட்டு இளைய மகன் செல்வம் டாக்டருக்கு படிக்கிறேன் என்ற பெயரில் பெண்களுடனும்,தவறான நண்பர்களுடனும் சீரழிந்து கொண்டிருப்பவன். செல்வத்தின் தந்தை பெரிய வக்கீல். மூத்த அண்ணன் ,வக்கீலுக்கு படித்திருந்தாலும்,தொழிலில் திறமையின்றி ,நிறைய பிள்ளை குட்டிகளோடு, கூட்டு குடும்ப நிழலில் வாழ்பவன்.செல்வத்திற்கு ஒரு தங்கை.செல்வத்தின் நடவடிக்கை பிடிக்காமல் ,படிப்பை பாதியில் நிறுத்தி ஊருக்கே வர வழித்து விடுகிறார் தந்தை. செல்வம் ஊரில் வந்தும் திருந்தாமல்,இஷ்டப்படி வாழ்கிறான்.
ஒரு நாள், காரில் தன பெண் நண்பி ஒருத்தியுடன் திமிராக சென்று, சாந்தா என்ற ஏழை டீச்சர் பெண்ணை, இடிப்பது போல் நிறுத்தி tease செய்கிறான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ,அவள் மேல் காதலில் விழுந்து அவளை பின் தொடர்கிறான். சாந்தா காதலுக்கு பச்சை கொடி காட்ட மறுக்கிறாள்.அவளை அடையும் ஆசையில் செல்வம் ஒரு முறை, அவளை யாருமில்லா நேரம் ,தன வீட்டுக்கு தந்திரமாக வர வழைத்து அவள் காதலை வேண்டுகிறான். ஆனால் சாந்தா மறுத்து விட்டு செல்லும் போது,தவறுதலாய் பார்த்தவர்கள் ,ஊரில் தவறாக பேச,ஏழை சாந்தா விருப்பமின்றி ,செல்வத்தை மணமுடிக்கிறாள்.
மணமுடித்த நாளில் இருந்து, செல்வத்தை வெறுக்கும் சாந்தா தாம்பத்ய உறவில் விருப்பமின்றி இனங்குவதால்,செல்வம் , அவள் தன்னை விரும்பி ஏற்கும் வரை,கணவன் என்ற உரிமையை எடுக்க மாட்டேன் என்று சத்யம் செய்கிறான். குடும்பத்தினர் அனைவருமே,செல்வம் திருந்தி வாழ நினைப்பதை அறியாமல், செல்வத்தையே குற்றம் சொல்கின்றனர். ஒரு சமயம் ,நெருங்கி வரும் சந்தர்ப்பத்தில்,செல்வத்தில் பழைய பெண் நண்பியின் குறுக்கீட்டால் திரும்ப பிளவு அதிகமாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்ய,செல்வம் ,சாந்தா நெருங்கவே முடியாமல் இருக்கும் தருணம்,சாந்தா செல்வம் திருந்தி விட்டதை உணர்ந்து அவனிடம் தன்னை ஒப்படைக்க முயலும் தருணத்தில், செல்வத்தின் பழைய நண்பியை கொன்ற பழி(செய்தது அவளின் புது நண்பன்) விழ, தந்தை செல்வத்திற்கு எதிராகவும்,அண்ணன் செல்வத்திற்காகவும் வாதாடி, செல்வம் விடுதலையாகி ,சாந்தாவுடன் சேர்கிறான்.
முதல் காட்சியிலேயே களை கட்டி விடும் இருவர் உள்ளம். நடிகர் திலகம் அழகென்றால் அவ்வளவு அழகாக ,ஸ்டைல் ஆக தொப்பியுடன் ,காரில் பறவைகள் பலவிதம் பாட ஆரம்பிப்பார். பல பெண்களுடன் ,நடிகர்திலகத்தின் அத்தனை பாடல்,நடன காட்சிகளும் பிரமாதமாய் வந்திருக்கும்.(யாரடி நீ மோகினி,பறவைகள் பலவிதம்,காதல் மலர் கூட்டம் ஒன்று,ஏன் ஏன் ஏன்,ராஜா யுவ ராஜா,கண்ணா லீலாவிநோதம்,என் ராஜாத்தி வாருங்கடி).கே.வீ.எம்.மாமாவின் பாடலுடன் ,மன்மதனின் ஆடல் (ஜெயந்தி முதல் பத்மினி பிரியதர்ஷினி வரை இந்த பாட்டில்) கேட்க வேண்டுமா குதூகலத்தை?
அடுத்தடுத்த காட்சிகளில் காமெடியில் தூள் பரத்துவார். பல பெண்கள் ஒன்றாக வந்து விட ஒருத்திக்கு தெரியாமல் இன்னொருத்தியை சமாளிக்கும் அழகு. தன்னை நோட்டம் பார்க்க வந்த மாமாவிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டு முழிப்பது,மாட்டுவது, முதல் காட்சியிலேயே சரோஜா தேவியை டீஸ் பண்ணி விட்டு பிறகு இம்ப்ரெஸ் ஆவது, பிறகு தங்கைக்காக சாந்தா டீச்சரை சிபாரிசு செய்து மாட்ட பார்ப்பது,டீச்சர் தங்கைக்கு டியூஷன் எடுக்கும் போது வழிவது, கீசகன் கதையை சொல்லும் சாக்கில் தன்னை கன்னா பின்னாவென்று திட்டும் சரோஜாதேவியுடன் இனிமே எதுவும் சொல்ல தேவையில்லை அவன் போறான் என்று வாபஸ் வாங்குவது, திருட்டு தனமாக டிரைவர் வேடத்தில் சரோஜா தேவியை வீட்டுக்கு வர வழைத்து விளையாட்டாய் முதலில் பேசி பிறகு தன் காதலை வெளியிட்டு கெஞ்சுவது, தன்னை புரிந்து கொள்ளாத மனைவியிடம் முதலிரவில் விட்டு கொடுப்பது, இதய வீணை பாட்டில் சரோஜா தேவி தன் துயரத்தை அப்படியே வெளியிட,நண்பர்களின் கேலி கண்டு, கூனி குறுகி, நாணி குமுறுவது,குடும்பத்தினரும் தன்னை புரிந்து கொள்ளாதது கண்டு மௌனமாய் உருகுவது , ஒவ்வொரு முறையும் மனைவியுடன் நெருங்கும் சந்தர்ப்பத்திலும் பழைய நண்பர்களாலும்,நண்பிகளாலும் கெடும் போது பதைத்து, பதறுவது, மனைவியிடம் தன் நிலையை சொல்லி வருந்துவது என்று நடிகர்திலகம் ஒவ்வொரு பிரேமிலும் பிரமாத படுத்துவார்.
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பே நடிகர்திலகத்துடன் இணையும் போதுதான்.(பாக பிரிவினை,பாலும் பழமும்,புதிய பறவை,தேனும் பாலும்)என்னும் போது தோதாக இப்படி ஒரு பாத்திரம். விடுவாரா? ஆரம்ப காட்சியில் தன்னை சீண்டிய பெரிய இடத்து வாலிபனிடம் வெறுப்பை உமிழ்வதில் துவங்கி,அவனின் காதலை சொல்லும் அனைத்து முயற்சிகளையும் முறித்து போடுவது, அவமான படுத்த பட்டு கல்யாணத்திற்கு கட்டாய படுத்த படுவது, கணவனுடன் ஒட்டாத வாழ்க்கை,நெருங்க விரும்பும் நேரத்தில் கணவனின் பழைய வாழ்க்கையின் நிழல் துரத்தி அவமான பட நேரும் தருணங்கள்,பிறகு அவனின் நல்ல மனத்தை அறிந்து சேர வரும் போது,மிக பெரிய பிரச்சினையை எதிர் கொள்ள நேருவது என்ற தருணங்களில் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுப்பார்.
ரங்கா ராவ், எம்.ஆர்.ராதா,சந்தியா, ராமா ராவ்,கருணாநிதி,முத்து லட்சுமி,பத்மினி பிரிய தர்சினி,ராமச்சந்திரன் அனைவருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருப்பார்.
சிவாஜி-கருணாநிதி இணைவில் வந்த அத்தனை சமூக படங்களுமே magic தான். பராசக்தி,திரும்பிப்பார்,ராஜாராணி,புதையல்,இருவ ர் உள்ளம் எல்லாமே அருமை. (மனோஹரா ஒரு சரித்திர பட சாதனை அதிசயம்) திரைக்கதை அமைப்பில் மு.க ஒரு மேதை. மூலக்கதை சிதையாமல்,பாத்திர வார்ப்பு கெடாமல், படிக்கும் கதை வேறு பார்க்கும் படம் வேறு என்பதை தெளிந்து திரைக்கதை அமைத்த இரண்டே மேதைகள் மு.கவும்,ஏ.பீ.என். மட்டுமே. மு.க தன திரைக்கதையால் படத்தை மிக மிக சுவாரஸ்யமாக்கி பாத்திரங்களுடன் ஒன்ற வைப்பார்.வசனங்களும் அவ்வளவு அருமையாய்,காலத்தை ஒட்டியதாய் அமைத்து படத்தை மெருகேற்றும். காமெடி, பஞ்ச் வசனங்கள் என்று கலக்கியிருப்பார்.(குடுக்கும் போது வாட்ச் பண்றதாலேதான் வாட்ச்னு பெயர் வச்சாங்களா)
பிரசாத் என்ற அற்புதமான இயக்குனர் ,தயாரிப்பாளராகவும் அமைந்து விட்டால்? கேட்கவா வேண்டும்? எல்லா technical அம்சங்களும் நன்கு கவனிப்பு பெற்றிருக்கும்.(கேமரா,எடிட்டிங்) சிவாஜியும் இவரை தன் குருவாக மதித்ததால் ,இவர் சொன்னதை உள்வாங்கி மிதமாய் நடித்ததை சிவாஜியே குறிப்பிட்டுள்ளார்.அற்புதமான இயக்கம்.
கே.வீ.மகாதேவன் ,சிவாஜியுடன் இணைந்ததில் மறக்க முடியாத சமூக படங்களில் ஒன்று.(மற்றவை- பாவை விளக்கு,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,செல்வம்,பேசும் தெய்வம்,வியட்நாம் வீடு,வசந்த மாளிகை).பறவைகள் பலவிதம், புத்தி சிகாமணி, கண்ணெதிரே தோன்றினால், இதய வீணை தூங்கும் போது, நதி எங்கே போகிறது, ஏனழுதாய், கண்ணே கண்ணே உறங்காதே, அழகு சிரிக்கிறது போன்ற படத்தோடு ஒட்டிய சூப்பர்-ஹிட் பாடல்கள் கே.வீ.எம்-கண்ணதாசன் இணைப்பில். இந்த படத்தின் மிக மிக சிறப்பான அம்சங்களில் ஒன்று ரி-ரெகார்டிங் எனப்படும் பின்னணி இசை சேர்ப்பு. பின்னாளில் பெரிதாக பேச பட்ட கேரக்டர் based மூட் மியூசிக் ,எனக்கு தெரிந்து இந்த படத்தில்தான் அறிமுகமானது.(சிவாஜி,சரோஜாதேவியை பின் தொடரும் இடங்கள்).இதைதான் இளைய ராஜா தன் பதினாறு வயதினிலே,முள்ளும் மலரும் போன்ற படங்களில் தொடர்ந்து பெயரெடுத்தார்.
பெண்ணின் மனதை விலை கொடுத்து வாங்க முடியாது, அப்படி வாங்கினாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது, மனதை அடையும் ஒரே வழி தூய நல்லிதயத்தின் அன்பு ஒன்றுதான் என்ற கான்செப்ட் ,அனைவரின் கூட்டு முயற்சியால் ,பிரம்மாண்ட வெற்றி படமாகி, இன்றளவும் ரசிகர்களை மட்டற்ற குதூகலத்தில் ஆழ்த்தும் அற்புத படமாகவே,காலத்தை கடந்து ஒளி வீசி கொண்டிருக்கிறது.
நடிகர்திலகத்தின் மாய வலையில் பக்தர்கள். நான்காம் முறையாக நான் ntf இல். பார்த்தால் பசி தீரும், ஆலயமணி ,பார் மகளே பார்....இருவர் உள்ளம். சில புது முகங்கள். நல்ல அரட்டை. ராகவேந்திரா சாரிடம் செல்லமான ஒரண்டை. பம்மலார்,முரளியிடம் ஜாலி கலாய்ப்பு.
நல்ல மாலை. நன்றி நண்பர்களே.
இது வாசுவின் அருமையான கவிதாஞ்சலி - இப்படிப்பட்ட ஒருவர் இந்த திரியில் இல்லாதது சிலைய அகற்ற சொல்வதற்கு ஒப்பான கொடுமை !!!
இதோ! என்னுள்ளும் விழுந்த க(விதை)
விலையில்லா நடிப்பால்
கலையுள்ளங்களில் நிறைந்தவனே!
நீ இல்லாத திரையுலகம்
அலையில்லாக் கடல் போல் களையிழந்து கிடக்கிறது
நிலையில்லாத இவ்வுலகில் நீங்காத புகழ் பெற்றவனே! உன்
சிலையில்லாத மெரினா சிறகில்லாத சிட்டாகிவிடுமே
மனமில்லா மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனத்தால்
தலையில்லா தருக்கர்களின் தன்னிச்சை செயல்களால்
நிலவில்லா வானமாகி விடக் கூடாது நித்ய சென்னை
அளவில்லா கனவுகளை சுமந்து ஆசையுடன் எழுதுகின்றேன்
களங்கமில்லா கண்ணியச் சிலை கடற்கரையிலேயே இருக்கட்டும்.
மீறினால்
காலமெல்லாம் களங்கம் கண்ணியத் தமிழ் நாட்டிற்கே!
:thumbsup:
டியர் ரவி சார்,
சிலை - திரி comparison மற்றும் தங்கள் கவிதைகள் அருமை. நன்றி.
கோபால் - இருவர் உள்ளத்தை இங்கு வெளிபடுதினதர்க்கு மிகவும் நன்றி- இந்த திரியும் அப்படிதான் - எழுதுபவர்கள் எண்ணங்கள் பலவிதம் - ஒவ்வன்றும் ஒருவிதம் - எல்லாமே NTஒருவருக்காகவே - இதில் மட்டம் , தாழ்வு, உயர்வு என்ற பிரிவுகளுக்கு இடமேயில்லை - பாராட்டுவோம் எல்லோரையும் - இதுதான் நான் தனிப்பட்ட முறையில் உங்கள் எல்லோருமிடமிருந்தும் கற்றுகொண்ட பாடம் -
நம்மில் ஒத்துமை ஒன்றுதான் நம் எதிரிகளை வீழ்த்தும் பிரமாஸ்திரம் - உங்கள் நல்ல பதிவுகளுக்காக ஏங்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாக பாவித்து பதிவிடுகிறார்கள் என்பது புரியவில்லை. இப்போது ஒருவரை ஒருவர் பாராட்டாமல் இருப்பதாலா அனைவரும் மௌனம் காக்கின்றனர்?. மறைந்த பின்னும் நடிகர்திலகத்துக்கு அதிகார வர்க்கத்தால் இழைக்கப்படும் அவமதிப்பை எண்ணி இப்போதுதான் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திரி புறக்கணிப்பு.
இலங்கையில் துயரப் படுபவர்களுக்காக இங்கிருப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்வதில்லையா?. எங்கோ நடக்கும் பிரச்சினைக்காக இங்கிருப்போர் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லையா?. அப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த திரி அமைதி. "நடிகர்திலகத்தின் சிலை அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அதனால் அமைதி காக்கிறோம்" என்ற உணர்வின் வெளிப்பாடு.
சகோதரர் சந்திரசேகர் போன்ற களப்பணியாளர்கள் செயல்பாடுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் வேளையில், அப்படி இயலாதவர்கள் இப்படி புறக்கணிப்பின் மூலம் துயரத்தை, மனதின் வலியை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு "பதிவுகளைப் பாராட்டவில்லை" என்பது போன்ற வேறு வர்ணம் பூசாதீர்கள்.
டியர் ஆதிராம் சார் - வணக்கம் - உங்களுடன் பேசியதில்லை - உரையாடினது இல்லை - உங்கள் இந்த பதிவு மூலம் - உங்களுடன் ஒரு ஆரோக்கியமான உரையாடல் செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததிற்கு மிகவும் நன்றி - முதலில் பதிவிட வேண்டாம் , அது அனாவசியமான பிரச்சனைக்கு வித்திடும் என்று நினைத்தேன் - பிறகு உங்களக்கு தெரியாததில்லை - இருப்பினும் சில விளக்கங்களை தரலாமே என்று யோசித்தேன் - அதன் முடிவுதான் இந்த சின்ன பதிவு - உங்களக்கு தமிழ் வரவில்லை என்று பதிவு செய்திருந்தீர்கள் - சில நாட்களுக்குள் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் .
உங்கள் முதல் வினா :
இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாக பாவித்து பதிவிடுகிறார்கள் என்பது புரியவில்லை.
முதலில் என் பதிவுக்கும் இந்த சிலை விவகாரத்திற்கும் சம்பதம் இல்லை - எவ்வளவு நாட்கள் நாம் திரியை புறங்கனிக்க போகிறோம் ? - ஒரு வாதத்திற்கு என்று வைத்துக்கொள்வோம்- தீர்ப்பு இன்னும் 6 மாதங்கள் இழுத்துசெல்கின்றது என்று வைத்துக்கொள்வோம் - இந்த திரியை மூடி விட போகிறோமா ? இல்லை நம் புறங்கனிப்பை தொடரவேண்டுமா ? இல்லை வேறு இடத்தில , அவர் புகழை பாடாமல் இருக்க போகிறோமா ? இல்லையே !! என் கேள்வி இதுதான் - தீர்ப்பு நல்லபடியாகவே வரும் .நம் எல்லோர் பிராத்தனைகளும் வீண் போகாது . KC சாரின் முயற்சியும் தோல்வி அடையாது . திரியை புறங்கனிப்பது கோர்ட்டில் நம் வாதத்திற்கு உதவியாக இருந்தால் , கண்டிப்பாக நீங்கள் சொல்லவதில் சத்தியம் இருக்கின்றது. தீர்ப்பு வரும் முன் ஏன் இந்த திரி சோர்த்து இருக்கவேண்டும் ? - ஒரு பக்கத்தை நிரப்ப , ஒரு மாதம் ஆகின்றதே !!! -
சற்றே உங்களக்கு நேரம் கிடைத்தால் , பழைய பதிவுகளை பாருங்கள் - ஆரோக்கியமான பதிவுகள் - அருமையான உழைப்புகள் , NT யின் வாரா வாரம் டிவி யில் படங்களின் அறிவிப்பு , பிறந்த நாள் வாழ்த்துக்கள் , NT பற்றிய புதிய நடையில் சிறந்த அலசல்கள் - ஜெட் வேகத்தில் பறந்தோம் - பல புதியவர்கள் வந்து பங்களித்தனர் -அன்றும் பிரச்சன்னைகள் இருந்தன . இன்று , சிலை விவகாரம் என்று சொல்லி , நம்மை நாமே தண்டித்துகொண்டு இருக்கிறோம்
Quote :
இலங்கையில் துயரப் படுபவர்களுக்காக இங்கிருப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்வதில்லையா?. எங்கோ நடக்கும் பிரச்சினைக்காக இங்கிருப்போர் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லையா?. அப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த திரி அமைதி. "நடிகர்திலகத்தின் சிலை அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அதனால் அமைதி காக்கிறோம்" என்ற உணர்வின் வெளிப்பாடு.
Unquote :
இதற்க்கு பதில் சொல்லிவிட்டேன் - எவ்வளவு நாட்கள் இந்த திரி அமைதியாக இருக்க வேண்டும் ? - இப்பொழுது சற்றே மாறுதலாக , கோபால் இருவர் உள்ளம் மீண்டும் பதிவு செய்தார் - திரியின் அமைதி போய்விட்டது என்றே சொல்லலாமா ? திரியின் சோக கானத்தை சற்றே மாற்றியதற்காக அவரை பாராட்டுவதில் தவறரில்லையே
Quote:
சகோதரர் சந்திரசேகர் போன்ற களப்பணியாளர்கள் செயல்பாடுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் வேளையில், அப்படி இயலாதவர்கள் இப்படி புறக்கணிப்பின் மூலம் துயரத்தை, மனதின் வலியை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு "பதிவுகளைப் பாராட்டவில்லை" என்பது போன்ற வேறு வர்ணம் பூசாதீர்கள்.
Unquote:
எந்த பதிவை நாம் மனமார பாராட்டுகிறோம்? உண்மையில் இந்த மரபு நம்மிடையே குறைந்துகொண்டே வருகின்றது - இன்று நல்ல பதிவாளர்களை இந்த திரி இழந்துகொண்டிருகின்றது என்பதுதான் உண்மை- எனக்கு வர்ணம் பூசும் கலை உண்மையிலேயே தெரியாது சார் - மயான அமைதி வேண்டாமே என்று தானே சொல்கிறேன் - எதிர்ப்பை கண்டிப்பாக தெரிவிப்போம் - அதே சமயத்தில் , எழுத விரும்புவர்கள் எழுதட்டும் - அது வேறு , இது வேறு - முன்பும் பிரச்சனைகளை சந்தித்து உள்ளோம் , இபோழுதும் சந்தித்து கொண்டு இருக்கிறோம் - நாளையும் சந்திப்போம் - ஆணால் நம் NT பக்தி என்றுமே நிலையானது - அது நமக்கு எல்லா வெற்றியும் தரக்கூடியது
உங்களை மறுக்கவேண்டும் என்று இந்த பதிவை போடவில்லை - உங்கள் வார்த்தைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது என்றும் சொல்லவில்லை - பதிவுகளை பாராட்டுகிறோம் / வர்ணம் புசுகிரீர்கள் என்று சொல்லிருபதினால் , பதில் சொல்ல கடமை பட்டவணாகுகிறேன்.
உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தற்கு , மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
டியர் ரவி சார்,
தங்களின் மனம் திறந்த பதிவுக்கு முதல் நன்றி.
என் தமிழ்ப் பதிவு பற்றி....... 'தமிழில் டைப் செய்வது எப்படியென்று கற்றுக்கொடுங்கள்' என்று ஒரு நண்பரிடம் வேறொரு தளத்தில் கேட்டபோது மிகச்சுலபமாக டைப் செய்யும் முறையை சொல்லித்தந்தார். என்றாலும் சாதாரணமாக நீங்கள் டைப் செய்யும் நேரத்தைப்போல மூன்று மடங்கு நேரம் ஆகிறது. எழுத்து நடையில் முரளிசார், வாசுசார், கார்த்திக்சார், கோபால்சார் இவர்களையே பின்பற்றுகிறேன்.
அடுத்து முக்கிய பிரச்சினை......, நான் யாரையும் இங்கு பதிவிட வேண்டாம் என்று தடுக்கவில்லை. இங்குள்ள முக்கிய பதிவர்களே அவர்களாக ஒரு முடிவுடன் பதிவிடாமல் மவுனம் காத்து வருகின்றனர். ஒரு தவம் போல அதை தொடர்ந்து வருகின்றனர். அதை வரவேற்கிறேன்.
அடுத்து பதிவுகளுக்கு பாராட்டு......., முந்திய பாகங்களை சென்று பார்க்கும்படி சொல்லியிருந்தீர்கள். நீங்களும் பார்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் ஒவ்வொருவரின் பதிவுகளையும் மற்ற அனைவரும் எவ்வளவு மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்கள் என்பதை காணலாம். புதிய பதிவர்களின் மூன்று நான்கு வரி பதிவுகளைக்கூட சீனியர் பதிவர்கள் மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். எனவே பதிவர்கள் மவுனம் காப்பதற்கு, 'பதிவுகளைப் பாராட்டாததே காரணம்' என்று தவறாக பொருள்கொள்ள தேவை இல்லை என்ற கருத்தில்தான் சொல்லியிருந்தேன்.
இதன் பின்னரும் தங்களுக்கு திருப்திப்படாவிட்டால் சொல்லுங்கள். என்னுடைய இந்தப் பதிவையும் இதற்கு முந்திய பதிவையும் நீக்கி விடுகிறேன்.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றபோது கர்ணன் திரையிடப்பட்டது. சென்ற வருட விழாவைப் பற்றியும் அதில் கர்ணன் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் தி ஹிந்து தமிழ் பதிப்பில் ஒரு இளம் வயது கட்டுரையாளரின் பதிவு
http://tamil.thehindu.com/cinema/cin...cle5455358.ece
இத்தகவலை தெரிவித்த கிருஷ்ணாஜி அவர்களுக்கு நன்றி!
அன்புடன்