பாடல்கள் அத்தனையும் தேன் குடங்கள் இல்லை சார்
அத்தனையும் மது குடங்கள் சார் மது குடங்கள்
Printable View
பாடல்கள் அத்தனையும் தேன் குடங்கள் இல்லை சார்
அத்தனையும் மது குடங்கள் சார் மது குடங்கள்
இன்னைக்கு நம்ம திரி செத்தது சார்
இந்த செத்தது ங்கிற வார்த்தை திருநெல்வேலியில் நன்றாக ஜீரணம் ஆகிவிட்டது என்பத்ருகு சொல்லும் வார்த்தை
ராஜா பட டைட்டில்கே கொடுத்த காசு செத்தது என்பார்கள்
வேலியுள்ள முல்லை (பார்கவி ஏற்கனவே கல்யானமனவள்)
வேலி எனக்கில்லை (இந்த கேள்விக்கு நான் எப்பவுமே இல்லைனு தான் பதில் சொல்றது என்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை)
பாட்டுக்கு நடுவில் அடிக்கும் அந்த ஜப்பான் பையனின்
கொட்டம்,ஹலம் அந்த பையனின் காதை திருகுவது
விச்சுவின் flute ,சாக்ஸ்,தபேல,violin பீஸ் எதை சொல்ல எதை விட
ஜெயப்ரதா, ஜெயவிஜயா, ஒய்.விஜயா, வினோதினி, ரீனா
நம்ம மாதவி ஹேமா சௌத்ரியை (Mrs பிலிப்ஸ் போன வாரம் Mrs murphy ) விட்டீர்களே
முருக சரணம் முடிந்தால் வரவும்
அப்பறும் (வினோதினி,ரீன) இருவருமே ஒருவர்தான்
நீங்கள் சொல்ல வந்தது சுனந்தனி (கிளாப் கிளாப் )என்று நினெகிரன்
தயுவு செய்து குறையாக நினைத்து விடாதீர்கள்
அப்படியே படம் கண் முன்னாடி ஓடுது சார்
வாசு சார்
மலை ஏத்துங்க சார்
இன்னும் 3 பாட்டு இருக்கே அவ்வளுவு சீக்கிரம் ஏறாது சார்
பூஜையறை பார்வை ஆசை தரக்கூடும்
பூஜையறை பார்க்க ஆசை வரக்கூடும்
மன்மத லீலை... மயக்குது ஆளை....'
தொடர்ச்சியாக
மந்திரம் போல சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்க உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள் நினைத்து கொண்டு தொடர்பவர் உண்டு
மன்மதலீலை படத்தில் ஒரு காட்சியில் கமல் தன்னுடன் பணி புரியும் மேனேஜர் வீட்டிற்கு சென்றஅவருடைய மகளை சந்திக்க முடியாமல் போகும் போது '' எம்ஜிஆர் என் காரில்தான் உள்ளார் என்றுசொன்னவுடன் மறைந்திருந்த அந்த பெண் எம்ஜிஆரா ? என்று ஆச்சரியத்துடன் எங்கே என்று கேட்டு கொண்டு வெளியில் வரும் காட்சி சூப்பர்.
சிரிக்கின்ற பெண்களை பார்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்த துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
இந்த சீன் படத்திலே பாருங்க
கமல் பென்சிலே கீழ போடுவார் எதிர்த்த சீட்ல செச்றேடரி
நல்ல விஷயங்களை ஜாலியாக பேசும் போது,குறுக்கே வந்து குறுக்கு புத்தியை காட்டி.... இடத்தை அலம்பி விடுங்கள்.
அந்த இடம் சூப்பராம் ...ரசனை பூஜ்யம் என்றாலும்,நாலு தெரிந்தவர்கள் பேசும் போது மூடி கொண்டாவது இருக்கலாம் இல்லை.எல்லாத்திலேயும் மூக்கை நீட்டி.....
உமக்கு பிடிக்கவில்லை என்றால்
உம்முடைய பதில் உமக்கே
கோபால்
உமக்கு கல்கத்தா ஆசான் தான் சரி .உமது ஆணவத்தை அடக்க அவரால் மட்டுமே முடியும் .
நாகரீகம் தேவை .பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கு . அநாகரீகமாக எழதி உன் தரத்தை
கெடுத்து கொள்ளாதே . இதுவே கடைசியாக இருக்கட்டும் .
அவர்கள் 1977
பாலச்சந்தரின் முக்கோண காதல் கதை அல்லது நான்கு கோண காதல் கதை ( வெரி rare outline )
முக்கோண காதல் கதையின் பிதாமகர் ஸ்ரீதர் படம் என்றால்
ஒரு பெண் அவள் வாழ்கையில் குறுக்கிடும் இரு ஆண்கள்
(கல்யாண பரிசு,நெஞ்சில் ஒரு ஆலயம்)
அல்லது
ஒரு ஆண் அவன் வாழ்கையில் குறிக்கிடும் இரு பெண்கள்
(அவளுக்கு என்று ஒரு மனம் (முத்துராமநை எதில் சேர்கிறது ) ,
இளமை ஊஞ்சல் ஆடுகிறது (இங்கு ரஜினி additional ))
என்று தான் இருக்கும் .
எனக்கு தெரிந்து ஒரு பெண்னின் வாழ்கையில் குறிக்கிடும்
3 ஆண்கள் என்ற வகையில் எடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மயமான முதல் காதல் காவியம் "அவர்கள்" என்றால் அது மிகையாகாது
இவ்வளுவுக்கும் இந்த படத்தில் பாலச்சந்தரின் வழக்கமான நகைச்சுவை கூட இருக்காது . (கமலின் சில வசனங்கள்
நகைச்சுவை ஆக இருந்தும் ) இந்த படத்தில் யாரவது நகைச்சுவை நடிகர்கள் என்று யாரவது உண்டா என்று நினைவில் இல்லை
ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸ்
ஆனால் பாலச்சந்தரின் புத்திசாலித்தனமான கதை சொல்லும் பாங்கை பாடல்கள் மற்றும் இசை மூலமாக கொண்டு சென்று இருப்பார்
சுஜாதா,
கமல் வித் வென்ட்ரிலொகுஇச பொம்மை (சதன்) இரு மலர்களில் நம்ம NT அறிமுகபடிதியது .பார்தீங்கள சிவாஜி இல்லாமல் தமிழ் சினிமா இல்லை ) ,
ரஜினி,
ரவிக்குமார்,
ரஜினியின் அம்மா லீலாவதி
இவ்வளுவு தான் மெயின் characters
குமரி பத்மினி,குட்டி பத்மினி ஒன்னு இரண்டு சீன் நினவு ,சுஜாதாவின் அபபா (கோகுல்நாதா அல்லது ramanamoorthyaa என்று நினவு இல்லை )
அதிலும் குட்டி பத்மினியின் "கல்யாணம் என்றால் நிறைய பேர் கூட பண்ணிக்கணும் கிரிக்கெட்க்கு கவாஸ்கர் நடிப்புக்கு சிவாஜி ..." famous வசனம் எப்போதும் நினைவில் உண்டு
அனு (சுஜாதா) சென்னையில் இருக்கும் போது பரணி(ரவிக்குமார்) யை லவ் செய்வர் . தீடீர் என்று அவர் தந்தைக்கு மும்பைக்கு மாறுதல் வருவதால் இவரும் சென்று விடுவார். அங்கிருந்து பரணிக்கு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதுவார் ஆனால் எதற்கும் பதில் வராது. இந்த நிலையில் அவர் தந்தையின் அலுவலக உடன் பணியாளர் ராமநாதனை (ரஜினி) திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் .
திருமணத்திற்கு பிறகு அனு தன கணவர் ராமநாதனிடம் தன்னுடைய முதல் காதலை பற்றி சொல்லி விடுவார்.அப்போது தான் ராமநாதனின் இன்னொரு முகம் அனுவிற்கு தெரிய வரும். அவர் ஒரு சட்டிஸ்ட்.
அன்றில்ருந்து அவருக்கு துன்பம் ஆரம்பமாகும் . இதற்கு நடுவில் குழந்தையும் பிறந்து கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி கொண்டு
சென்னைக்கு திரும்பி விடுவார் .அங்கு வந்த பிறகு தான் தெரியும் தான் எழுதிய கடிதங்கள் எதுவும் தன முன்னாள் காதலன் கைகு கிடைக்க வில்லை. இதற்கு நடுவில் சென்னையில் அவரது அலுவலகத்தில் உடன் பணி புரியும் வெள்ளை மனம் கொண்ட ஜானி என்ற ஜனர்தனை சந்திப்பாள். அவரும் அனுவை விரும்புவார் . ஆனால் அவரால் தெரியமாக வெளியே சொல்ல முடியாது. இந்த நேரத்தில் முன்னாள் கணவர் ராமநாதனும் சென்னைக்கு அனு வேலை செய்யும் அலுவலகத்திற்கே அதிகாரியாக வந்து தான் திருந்தி விட்டதாகவும் தன்னை மீண்டும் எற்றுகொள்ளும்படியும் வேண்டுவார்.
அனுவின் மாமியார் (ராமநாதனின் தாயார்) ரும் அனுவின் வீட்டில் வந்து அனுவிற்கு உதவி ஆக (மாமியார் என்று சொல்லாமலே) தங்கி இருப்பார்
செம ட்விஸ்ட்
முடிவை வெள்ளி திரையில் காண்க
மன்னிக்கணும் சார் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் (
உ சு வ அசோகன் மாதிரி ) கதையை சுருக்கமாக சொல்ல முடியவில்லை
இந்த படம் rerelease ஆனதாகவும் நினவு இல்லை
இனி பாடலை பாப்போம்
இந்த பாட்டு பார்தீங்கன்ன சுஜாதாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது 3 பேரும் சேர்ந்து ஹெல்ப் பண்ண வருவார்கள்
முன்னாள் காதலன் ரவிக்குமார், முன்னாள் கணவன் ரஜினி
இப்போதைய வடிகால் நண்பன் கமல் .
இதில் யாரை தேர்ந்து எடுப்பது யாருடன் தன வாழ்கையை தொடர்வது
1.அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
முதல் சரணம்
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கதை எழுதி பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை
(அங்கும்)
இரண்டாவது சரணம்
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று கூறி
பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதகளை விதி புகுந்தே திருத்துத்ம்மா
(அங்கும் )
சொந்த்ம் ஒன்று பந்தம் ஒன்று வெள்ளையுள்ள கிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையா பழங்கதையா விடுகதையா
எது இன்று
(அங்கும்)
காட்சி அமைப்பு வெரி சிம்பிள் சார்
ஒரு வீடு கட்டில் சுஜாதா உடம்பு சரி இல்லாமல் படுத்து இருப்பாங்க
அசரீரி பாடல் ஆக ஒலிக்கும்
அனுபவ கவிஞரின் எளிமையான எல்லோருக்கும் புரியும் படியான
தன்னை என்றும் புத்திசாலி என்று காட்டி கொள்ளாத கவிதை நடை
அதை விட அடக்கி வாசிக்கும் மெல்லிசை மன்னர்
பாலாவின் மென்மையான குரல்
மீண்டும் வாராதோ அந்த நாட்கள்
டியர் கோபால் சார்/எஸ்வி சார்
தாழ்மையான வேண்டுகோள்
நாம் எல்லோரும் நண்பர்களே
நமக்குள் எதற்கு பேதம்
திரி சூடு பிடித்துகொண்டு உள்ளது
இந்த நேரத்தில் இந்த சூடு வேண்டாமே ப்ளீஸ்
மன்மத லீலை தேரிழுக்க வடம்பிடிக்கும் வாசு, கோபால், கிருஷ்ணா, வினோத் அனைவருக்கும் நன்றி.
மன்மத லீலை (3)
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'
பழைய பழமொழியொன்றையே (பழமொழியா சொல்வழக்கா) பாடலின் முதல் வரியாக்கிவிட்டார் கவிஞர். நேயர் விருப்பம் புகழ் மாதவியை (ஹேமா சௌத்ரி) தேடி வீட்டுக்குப்போன பின்புதான் மதுவுக்கு அவளது சோக வாழ்க்கையின் அவலம் தெரிகிறது. எம்.ஏ.படித்த மாதவிக்கு, ஹைஸ்கூலையே பார்த்திராத குடிகாரக்கணவன் வாய்த்திருக்கிறான் என்பது ஒன்று போதாதா அவளை மடக்கி வலையில் போட..?.
ரேடியோவிலேயே நேயர் விருப்பம் கேட்டு மகிழ்ந்து, அது மட்டுமே ஆறுதலாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாதவி, மதுவிடம் நேரில் நேயர் விருப்பம் கேட்க, மதுவிடமிருந்து வெளிப்படும் பாடல் இது... பாடலின் இடையில் விரும்பிகேட்ட நேயர்கள் பெயர்களை கமல் பட்டியலிடுவது கே.பி.டச். இருந்தாலும் அது அழகான இடையிசைக்கு இடைஞ்சல். அது சரி, கணவன் சரியில்லாத பெண்ணிடம் 'கணவன் அமைவதெல்லாம்' என்றுதானே பாட வேண்டும்?. மதுவுக்கு அருமையான மனைவியிருக்க, பாடல் அவனுடைய சொந்தக்கதை சோகக்கதை என்றும் சொல்ல முடியாது.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
இந்தக்கட்டத்தில் மனைவி ரேகாவுக்கு போன்செய்து, தான் வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு, 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற பல்லவியைப் பாடி போனை வைக்க, அது தனக்காக பாடிய வரிகளென ரேகா தப்பாக நினைத்து மகிழ......, கே.பி.சார், கலாட்டா மன்னன்யா நீர்.
அடுத்த சரணத்தைத் துவங்குமுன், குடிகாரக்கனவனை ஒருவர் தூக்கிவந்து போட, மாதவியின் நிலை மதுவுக்கு நிதர்சனமாக தெரிகிறது. அதன் வெளிப்பாடான அடுத்த சரணம்....
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு நாசூக்காக சொல்லிவிட்டார் கவியரசர். காமனை வெல்ல கணவன் துணையில்லாவிட்டாவிட்டால் அவள் நாடுவது இரண்டுவழி. ஒன்று அடுத்தவன் துணையை நாடுவது (ஓடுவது), அல்லது நள்ளிரவில் குடம் குடமாக குளிர்ந்த நீரை தலையில் கொட்டிக்கொள்வது...
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
ஜேசுதாஸின் மாஸ்ட்டர் பீஸ் பாடல்களில் ஒன்று, இப்பாடல். சரி சேட்டனின் வாழ்க்கையில் எப்படி ஒருமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது அவர் சொன்னது. ஒருமுறை அவர் மகளிர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்திராக சென்றிருந்தபோது, அவர் டீ குடித்துவிட்டு வைத்த பிளாஸ்டிக் கப்பை ஒரு மாணவி நைசாக லபக்கி, டீக்கறையைக்கூட கழுவாமல் வைத்திருந்தாராம். ஜேசு மீது அவ்வளவு அட்டாச்மெண்ட். சரி அப்புறம் என்ன நடந்தது?. நல்லதுதான் நடந்தது. அந்த மாணவிதான் பிற்பாடு பாடகர் விஜய்ஜேசுதாஸின் அம்மா. நமக்கெல்லாம் மரியாதைக்குரிய அண்ணி. இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு தாசண்ணா பாடிய வரிகள் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று தொடங்கி நாலு வரிகள்.
தாஸண்ணாவுக்கும் எனக்கும் என்ன அட்டாச்மெண்ட்?. கல்லூரியில் பாட்டுப்போட்டியில் தாஸண்ணாவின் பாடலைப்பாடி முதல் பரிசு பெற்றேன். பாடல் 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு'. என்னைப்பாராட்டிய விழாத்தலைவர் 'பையன் நல்லா பாடினான்' என்பதோடு நிறுத்தியிருக்கலாம். 'அப்படியே ஜேசுதாஸ் போலவே பாடினான்' என்று சொல்லித்தொலைத்தார். ஜேசுதாஸ் அவர்களுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.
சரி, இந்தப்பாடலின் முடிவு என்ன?. முதலில் மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.
மாதவிக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல பொக்கேயுடன் வரும் மது சர்ப்ரைஸாக அறையில் ஒளிந்துகொள்ள, அதே அறையில் வந்து மாதவி உடைமாற்ற, மது மாதவியை "முழுசாக" பார்த்துவிட தியேட்டரே அல்லோலகல்லோலம்தான்.
'காமாந்தகா, உன்னை இந்த உயரமான மாடியிலிருந்து கீழே தள்ளினால் என்ன' - ஈஸ்வர ஐயர் குரல்.
யாரை யார் ஒதுங்க சொல்வது? எங்களுடன் பங்கு பெற உங்கள் hidden agenda மூட்டை கட்டி விட்டு வாருங்கள். நாங்கள் இங்கு வந்து யார் பெயரையும் பிரசாரம் செய்யவில்லை. சங்கீதம் பற்றி ,பிடித்த விஷயங்கள் பற்றி எழுதி கொண்டிருக்கிறோம் .நண்பர்கள் வருத்த பட்டார்கள் ,எங்கு வந்தாலும் ஒரே விஷயத்தை எழுத உங்களுக்கே அலுக்கவில்லையா? நாங்கள் நாகரிகம் காக்கிறோம் என்றால் தொடர்ந்து இதையே செய்வீர்களா?வாசு சொல்லி கூட ,நீங்கள் மாறவில்லை என்பது வருத்தமே.யார் எழுதினால் உபயோகம் என்பது நண்பர்களுக்கு தெரியும்.
sorry karthik sir
உங்கள் ப்ளாக் ஐ எதிர்பார்கவில்லை. என் உடையதை லோட செய்து விட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன்
கார்த்திக் சார்,
அவ வ்லாவிலே ,நாலாவது எலும்புக்கு கீழே பெரிய மச்சம்....
நேக்கு ரொம்ப அவசியம்?//
மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.
karthi sir
marvellous
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
இந்த சரணத்தில் தபெலவை விச்சு உருட்டுவார் தெரியுமா
MY FAVORITE SONG IN MANMADHA LEELAI
http://youtu.be/9d5Ifa1O9S8
கணவன் படிக்காத மேதையா இருந்தா பரவயில்லை
ஆனால் படிக்காத போதையா இருந்தால்
மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் அல்லவா இந்த mischevious மன்மதன்
கார்த்திக் ,
அன்னுடைய favourite தொங்கலில் விட்டாயிற்றா? நான் எழுதி விடுவேன். சீக்கிரம்.... சுகந்தானா சொல்லு கண்ணே?
அந்த குடிகார கணவன் மனசாட்சி நடராஜன் தானே சார்
"மாதவி கண்ணகி அருந்ததி பார்கவி "
ஏன்னா சதா சர்வகாலமும் பகவன் நமாவையே சொல்லிண்டுறுப்பெளே
ஒரே பொம்பனட்டி பேரானா சொல்றேள்
வேனும்ன வாத்யார் கூப்பிட்டு மந்திருசு விபூதி போட சொல்லட்டா
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் "
"நினகறது உண்டா "
"எதை"
"என்னை பற்றி "
"டேபிள் உள்ள பிளாஸ்டிக் லெட்டர்ஸ் ஐ பாரு
ரேகா ரேகா ரேகா"
"மனமானது எந்தன் உள்ளம் தாயானது "
தமிழ் திரையுலகை ஆண்ட இசை திலகம். ஐம்பதுகளின் நால்வர் அணி சுப்பராமன்-ஜி.ராமநாதன்-கே.வீ.மகாதேவன்-ஏ.எம்.ராஜா தமிழ் இசைக்கு புது பாதை போட்ட trend setters .இவர்களை முன்னோடியாக கொண்டே ரெட்டையர் பல புது வித சோதனை முயற்சிகளில் ஈடு பட்டு அற்புத பாடல்களை தந்தனர். திரை இசை திலகம் கே.வீ.மகாதேவன் ,folk -classic இணைவில் புது பாதை போட்டவர்.(ஆரபியின் ஏரி கரை)
கே.வீ.மகாதேவன் அவர்களின் நினைவு நாள்.
திரை இசை திலகம் கே. வீ. மகாதேவன்-
தமிழ்,தெலுங்கு இரண்டு film industries கொண்டாடும் நபர்.
folk (மக்களை பெற்ற மகராசி ,குமுதம்) ,குத்து (வண்ணக்கிளி),classical based folk (முதலாளி), light classical (பாவை விளக்கு) ,ghazal(தொழிலாளி) ,classical (திருவிளையாடல்,சங்கராபரணம்) எல்லாவற்றிற்கும் trend -setter (50 களில் இருந்து).இவரை தன் குரு என்று சொல்லி கொண்டாடினார் மெல்லிசை மன்னர்(அவர் குரு என்று அழைதத மற்றையோர் ராம மூர்த்தி, சுப்பையா நாயுடு,நவஷாத்).
இவருடன் நடிகர் திலகம் பயணம் கூண்டு கிளி(1954 )யில் தொடங்கி, சிம்ம சொப்பனத்தில் (1984)முடிவுற்றது. இவர் மக்களை பெற்ற மகராசி, படிக்காத மேதை,பாவை விளக்கு,எல்லாம் உனக்காக,வளர்பிறை,வடிவுக்கு வளைகாப்பு,இருவர் உள்ளம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்த திலகம,அன்னை இல்லம்,நவராத்திரி(100 வது NT படம்),செல்வம்,பேசும் தெய்வம்,பாலாடை,தில்லானா மோகனாம்பாள்,விளையாட்டு பிள்ளை,வியட்நாம் வீடு,எதிரொலி,அருணோதயம்,குலமா குணமா,வசந்த மாளிகை,எங்கள் தங்க ராஜா,சத்தியம்,உத்தமன்,சிம்ம சொப்பனம் என்ற சமூக படங்களுக்கும் , சம்பூர்ண ராமாயணம்,திருவிளையாடல்,மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,கந்தன் கருணை,திருவருட்செல்வர்,திருமால் பெருமை,ஹரி சந்திரா என்ற புராண படங்களுக்கும் நடிகர் திலகத்துக்காக கொடுத்துள்ளார்.
1963 , 1966 இரண்டு ஆண்டுகளில் NT க்காக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.
கே.வீ.மகாதேவன் சாரிடம் உள்ள சிறப்பம்சங்கள்-
1) 95 % பாடல்களில், இந்திய பாரம்பரிய இசை கருவிகளை மட்டுமே உபயோக படுத்தி உள்ளார்.
2)90 % பாடல்கள் பாட்டு எழுதி இசை அமைக்க பெற்றவை. கண்ணதாசன் வார்த்தைகளில், ஒரு கட்டுரை எழுதி கொடுத்தாலும் இசை அமைக்கும் வல்லமை கொண்டவர்.
3) எடுத்து கொண்ட படத்துக்கு உரிய இசையை கொடுப்பார். இவரா அவரா என்றெல்லாம் பார்த்து இசையமைக்கும் வழக்கம் அறவே இல்லை.
4) improvised மியூசிக் கொடுத்திருக்கிறாரே தவிர , assembled arrangements பாணியில் பண்ணியதே இல்லை.சில ஹிந்தி பாடல்களை உபயோக படுத்தி இருந்தாலும்,பெரும்பாலும் அசலானவை. ஸ்பானிஷில் கொஞ்சம்,arabian இல் கொஞ்சம் என்று உருவியதே கிடையாது.
5) இவர் ஸ்டைல், இந்திய -வெஸ்டேர்ன் பாணி action படங்களுக்கு ஒத்து வராது. மற்ற படி எல்லா படங்களுக்கும் பொருந்துவார்.
6) இவர் 69 இல் இருந்து 80 வரை தெலுங்கில் பிஸி ஆக இருந்ததால் தமிழில் ஆர்வம் காட்டவில்லை.
என்னை கவர்ந்த பாடல்கள்-
சமூக படங்களில்-
சிட்டு குருவி சிட்டு குருவி, மணப்பாறை, போறவளே, ஆகா நம் ஆசை,ஏரி கரையின் மேலே , சீவி முடிச்சு,ஒரே ஒரு ஊரிலே,படித்ததினால்,ஆயிரம் கண் போதாது, வண்ண தமிழ்,காவியமா,ஆத்திலே தண்ணி வர,மாட்டுகார வேலா,வண்டி உருண்டோட,சித்தாடை கட்டிக்கிட்டு, மாமா மாமா மாமா,கல்யாணம்,கல்லிலே,என்னை விட்டு, மியாவ் மியாவ்,ஒருத்தி ஒருவனை,மெல்ல மெல்ல அருகில்,தட்டு தடுமாறி,கண்ணுக்குள்ளே,சிரித்து சிரித்து, ஹலோ ஹலோ,காட்டு ராணி, காட்டுக்குள்ளே,கட்டான,மலரும் கொடியும்,கங்கை கரை,கடவுள் மனிதனாக, யாரடி வந்தார்,காலம் என்னும் நதியினிலே, ராதே, இரவுக்கு ஆயிரம்,பகலிலே, உன்னை சொல்லி, கள்ள மலர், மயக்கம் எனது, தூங்காத கண்ணென்று(நிறைய பேர் லிஸ்டில் தமிழின் நம்பர் one ),பூந்தோட்ட, சின்னஞ்சிறிய,குங்குமம்,பறவைகள்,கண்ணெதிரே, இதய வீணை,கண்ணே கண்ணே, புத்தி சிகாமணி,நதிஎங்கே,அழகு சிரிக்கின்றது,ஏனழுதாய், பசுமை நிறைந்த, புத்தன் வந்த,தாழம் பூவே,பனி படர்ந்த,வாடை காற்றம்மா,மடி மீது,நடையா,எண்ணிரண்டு,மஞ்சள் முகமே,உன்னையறிந்தால்,சீட்டுக்கட்டு,வெள்ளிநிலா ,ஆண்ட வன், என்ன கொடுப்பாய்,கன்னத்தில் என்னடி, ஒரே முறைதான், நவராத்திரி, இரவினில், சொல்லவா,போட்டது,
ராஜாதி ராஜ மகா,அவளா சொன்னால்,என்னடி,ஒன்றா இரண்டா,எனக்காகவா,பட்டாடை,எங்கே ஆஹா எங்கே,அழகு தெய்வம்,நான் அனுப்புவது,இதய ஊஞ்சல்,பத்து மாதம்,பிள்ளை செல்வமே,நலம்தானா,மறைந்திருந்து,பாண்டியன் நானிருக்க,மழை முத்து ,கேளம்மா,உனக்கும் எனக்கும்,என்றும்,நல்ல நல்ல,எவரிடத்தும்,காதல் எந்தன் ,என்னம்மா,எலந்த பயம், அலேக்,மெல்ல,,மாறியது,சந்திப்போமா,காலமிது,சிரி ப்பேன ்,ஒரு பக்கம்,பூ வைத்த,நெஞ்சம் உண்டு,கடவுள் ஏன்,நீல நிறம்,ஆசையிருக்கு,பாலக்காட்டு,உன்கண்ணில்,தொட் டால், டிக் டிக்,பதினாறு வயதினிலே,ஏன் ஏன் ஏன் ,குடிமகனே,மயக்கம் என்ன,இரண்டு மனம,யாருக்காக,கல்யாண ஆசை,இரவுக்கும் பகலுக்கும்.
புராண,சரித்திர, படங்கள்-
நான் சொல்லியா தெரிய வேண்டும்? திருவிளையாடல் முதல் ஆதி பராசக்தி வரை.
Birth name Krishnankoil Venkatachalam Mahadevan
Also known as Mama
Born March 14, 1918
Nagercoil, Krishnancoil, Kanyakumari, Travancore
Origin Chennai, Tamil Nadu, India
Died 21 June 2001 (aged 82)
Chennai, Tamil Nadu, India
Genres Film score, Theatre
Occupations Music Director
Years active 1942–1992
National Film Award for Best Music Direction (1967) for Kandan Karunai (first recipient of the award)
Tamil Nadu State Film Award for Best Music Director (1969) for Adimai Penn
National Film Award for Best Music Direction (1980) for Sankarabharanam
Filmfare Best Music Director Award (Telugu) (1992) for Swathi Kiranam
2001-2010 என்னை கவர்ந்த படங்கள்.
ஆளவந்தான், டும் டும் டும், 12 b ,தில்,தினா,பாண்டவர் பூமி,பூவெல்லாம் உன் வாசம்,மின்னலே,மிடில் கிளாஸ் மாதவன்,கன்னத்தில் முத்தமிட்டால் ,சொல்ல மறந்த கதை,பஞ்ச தந்திரம்,பம்மல் கே சம்பந்தம்,ரமணா,இயற்கை,காக்க காக்க,காதல் கொண்டேன்,தூள்,பிதா மகன்,அழகிய தீயே,புது பேட்டை,7 ஜி ரெயின் போ காலனி,ரஜினி,பாரதி,பெரியார்,பாய்ஸ்,அந்நியன்,சிவாஜி, வரலாறு,கில்லி,சுப்ரமணிய புரம்,அறிந்தும் அறியாமலும்,எம்டன் மகன்,கஜினி,இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி,காதல்,வெய்யில்,பொல்லாதவன்,அன்பே சிவம்,விருமாண்டி,மொழி,ஒன்பது ரூபாய் நோட்டு,பள்ளி கூடம்,அஞ்சாதே,கனா கண்டேன்,பார்த்திபன் கனவு,பிரிவோம் சிந்திப்போம்,ரன்,சண்டை கோழி,உள்ளம் கேட்குமே,சாமி ,வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ்.,கண்ட நாள் முதல்,சந்தோஷ் சுப்ரமணியம்,பொம்மலாட்டம்,பொய் சொல்ல போறோம்,அபியும் நானும்,பருத்தி வீரன்,அயன்,ஈ , வாரணம் ஆயிரம்,நாடோடிகள்,திரு திரு துரு துரு,உன்னை போல் ஒருவன்,ஆயிரத்தில் ஓருவன்,பேராண்மை ,பசங்க,வெண்ணிலா கபடி குழு,தமிழ் படம்,இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,சென்னை-28,சரோஜா,அங்காடி தெரு,விண்ணை தாண்டி வருவாயா,நான் கடவுள்.
முதல் பத்து (2001-2010)
1)நான் கடவுள்
2)அஞ்சாதே
3)புது பேட்டை.
4)அன்பே சிவம்.
5)பொல்லாதவன்
6)பாய்ஸ்
7)காக்க காக்க
8)மொழி
9)காதல்.
10)வெய்யில்.
கோபால் சார். மனதை மயக்கும் மதுர கானங்களில் உங்களது சொற்சிலம்பங்களை ரசிக்க அழைத்தமைக்கு நன்றிகள். திரை இசைத்திலகத்தின் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்வான தருணமே.
மோகனம்.
பெயரிலேயே மோகனம் சுமந்து நிற்கும் இந்த ராகம் நிஜத்திலேயே வசீகர மோகனம் கொண்டது. மனதை இதமாய் வருடி ,காற்றில் மிதக்க விடும் உணர்வை தரும் இதமான மெலடி சுமந்த சுலப மெல்லிசை ராகம்.
அல்லிரானியாய் நிற்கும் ஒரு முசுட்டு பெண்ணை(நண்பனின் தங்கை) டீசிங் செய்யும் துரு துரு இளைஞன், வீட்டின் எதிரில் மொட்டை மாடியில் பாடுவதாக (அதுவன் கம்பன் கண்ட சீதை படிக்கும் நாயகியை குறி வைத்து) வரும் பாடல் என்னை டீன்களில் பித்தாக்கிய ஒன்று. மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிந்தது என்று கொக்கரித்தவர்கள் வாயை fevicol போட்டு ஒட்டிய பாடல்."கம்பன் ஏமாந்தான் ".
அதிர்ஷ்டமில்லாத ஒரு அருமையான இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா.இவரை மாதிரி ஒரு திறமைசாலி ,தமிழ் திரையுலகில் ஒதுங்கிய காரணம் சமரசமற்ற போக்கு.முன்கோபம்,திலகங்களின் ராஜ்யத்தில் டி.எம்.எஸ் ஐ ஒதுக்கியது (வயசான டி.எம்.எஸ் இன்னொரு இளையவரால் ஒழிக்க பட்டார்.),இவை அவரை அந்நிய படுத்தி விட்டது.நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இவரை ஒதுக்கி, எம்.எஸ்.வீ - டி.கே.ஆர் அணுக பட்ட போது ,பெருந்தன்மையாக அனுமதி பெற வந்த எம்.எஸ்.வீ (உண்மையாகவே நல்ல குணம்)யுடன் இவர் சொன்னது. நான் தூக்கி போட்டதை யார் எடுத்தால் என்ன?இவரை அந்த குணம் தூக்கி போட்டு விட்டது. கல்யாண பரிசு,தேன் நிலவு, ஆடி பெருக்கு போதுமே. இவர் பெயரை இன்னும் 5000 ஆண்டுகள் சொல்ல? கர்நாடகம்,ஹிந்துஸ்தானி,வெஸ்டெர்ன் என்று இவர் தொட்டு சீராட்டிய பாணிகள் ,மற்றோருக்கு ராஜ பாட்டை போட்டன.தேன் நிலவில் "நிலவும் மலரும் பாடுது" நம்மையும் நிலவொளி -ஓடம் போக வைக்காதா?
கேமரா மேதை பிரசாத் எனக்கு உவப்பான ஒருவர். புதிய பறவை போதுமே? ரவி ,கே.ஆர்.விஜயா இணைவில் சூப்பர்-ஹிட் படமான இதய கமலத்தில்"மலர்கள் நனைத்தன பனியாலே" ,பிரசாத் அதிசய பட பிடிப்பில் பனியை துல்லியமாக காட்டுவது போல ,நம் மனதில் பனியின் குளுமையை கொடுக்கும் திரை இசை திலகத்தின் அதிசயமல்லவா?
எனக்கு பிடித்த பிற பாடல்கள் (மோகனம்)
அமுதை பொழியும் நிலவே- தங்க மலை ரகசியம்.
என்னை முதல் முதலாக பார்த்த போது -பூம்புகார்.
என்ன பார்வை உந்தன் பார்வை-காதலிக்க நேரமில்லை.
சங்கே முழங்கு- கலங்கரை விளக்கம்.
குழந்தையும் தெய்வமும்- குழந்தையும் தெய்வமும்.
தேன் மல்லி பூவே- தியாகம்.
நின்னுகோரி வர்ணம் வர்ணம்-அக்கினி நட்சத்திரம்.
ஷிப்ட் முடிச்சிட்டு வந்து பார்த்தா யாரையும் காணோமே.
'மன்மத லீலை' முடிச்சுட்டு எல்லோரும் சீக்கிரம் தூங்கப் போயிட்டாங்க போலிருக்கு.:)
மன்மத லீலை பற்றி எல்லாரும் அலசி விட்டார்கள் இருப்பினும்..
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா! ஸ்வாமி!
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
பாகவதரின் குரல்..ஆஹா..என்ன ஒரு கணீர்க்குரல ரொம்பப் பிடிக்கும்..ஓ தப்போ.. கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்
*
மன்மத லீலை சினிப்ப்ரியா மினிப்ரியா என ரிலீஸாகி நல்ல ஓட்ட ம் ஓடி விமர்சனம் படித்து தூரம் என்பதால் போகாமல் பெருமூச்சு விட்டு இருந்த போழ்தில் அஹா.. ஒரு வெள்ளி அன்று சாந்தி தியேட்டரில் அல்லது தேவியா நினைவில்ல்லை ரிலீஸாக சனி மாலை போய்ப் பார்த்து சிரித்து வந்தது புகையாக நினைவில்..
9
இருந்தாலும் முதன் மு’றை பார்க்கும் போது என்னவோ கொஞ்சம் விட்டு விட்டு காட்சிகள் வருவது மாதிரி பிரமை..இப்பவும் உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விகள்.. நாதமெனும் கோவிலினிலே க்ளாப் க்ளாப் சொல்லும் யுவதியும் கண் தெரியாத மேஜரின்ன் மனைவியாக வருபவரும் சாயலில் ஒன்றாய் இருப்பது போன்ற பிரமை (,முருகா சரணம்)
*
ஆலம் இருந்தது சற்றே புதுமையாக இருந்தது..ஆனால் அந்தக் கட்டைக் குரல்..என்னங்க..என்னங்க நான் மோசம் போயிட்டேன் என்று சுகம் தானா சொல்லு கண்ணே முடிந்ததும் அழுகின்ற குரலின் கனம்…தாள முடியவிலலை..
*
பிஎம் அலையஸ் பெட்டிஷன் மாமா ஒய்.ஜி. மகேந்திரன்(இப்ப சோப்பு போடு), அவரது ரியல் லைஃப் அப்பா ஒய்.ஜி.பி (ரெண்டு தும்மல் ஒரு தும்மல்) ஓகே..
*
ஜெயப்ரதா புதுமுகம்..இளமை ஒல்லி ஆனால் பளீர் ரின் போட்ட சிரிப்பு.. எனக் கவர்ந்தார்..படக் படக் வசனங்கள் மனதைக் கவரும்..
*
அந்த ஹரிஹர சுப்ரமண்யன் அய்யர் ரோலில் வருபவர்.. அக்னி சாட்சியில் நடித்ததாக நினைவு..(அதுவும் கே.பி படம் தான்) பின் சிந்துபைரவி தர்பார் ராகம்..
*
மனைவியை ஏமாற்றிப் பல பெண்களுடன் இருப்பது தவறு எனச் சொல்லும் படத்தில் அதே எவ்வளவு தவறு செய்த கணவனையும் ஏற்று நடக்க வேண்டும் என்பது போல் க்ளைமாக்ஸ் அமைத்தது அப்போது இருந்த இளைஞனை (ஹி ஹி நான் தான்) உறுத்தியது நிஜம்..இப்போ.. ஹி ஹி..
*
கார்த்திக் சார், கிருஷ்ணா சார், கோபால், சின்னக்கண்ணன் சார் என்று 'மன்மத லீலை'யை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணி விட்டாரகள்.
கார்த்திக் சாரின் நடை கலக்கல். வெகு ஜனரஞ்சகம். சுவாரஸ்யமான சுவாரஸ்யம். இந்தப் பக்கம் கிருஷ்ணா சாரோ ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து வைத்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நம்மை ரசிக்க வைக்கிறார்.
கோபாலின் மகாதேவா மனமகிழல் செமையாக இருந்தது. மாமா செய்த மகோன்னதங்களை ஒன்றுகூட விட வில்லை. மாமா பிறந்தநாளில் இப்படி எவரும் அவரை நினைவு கூறவே முடியாது. யாரும் இவ்வளவு டைப் செய்யவும் முடியாது. அருமையான நினைவாஞ்சலி. உண்மையானதும் கூட. (சேமிப்புக் கிடங்கில் சேமித்து விட்டேன்)
நிஜமாகவே பாராட்டுக்கள்.
கிருஷ்ணா சார்!
இவ்வளவு அழகாக படத்தை கதையுடன் விமர்சனம் செய்து லீலைகள் புரிந்து தூள் பரத்துகிரீர்களே! நடிகர் திலகம் திரியில் நீங்கள் ஏன் அவரது படங்களை இப்படி அலசவில்லை (முன்பும் சரி! இப்பவும் சரி!) என்ற கேள்விதான் இப்போது என்னுள் முதன்மையாக நிற்கிறது. எவ்வளவு இழப்பு தெரியுமா எங்களுக்கு! இனிமே இந்தத் தப்பெல்லாம் பண்ணப் படாது. சரியா! (செல்லக் கடி)