http://s30.postimg.org/u8o0yl8jl/129...10686978_n.jpg
Courtesy : facebook
Printable View
http://s30.postimg.org/u8o0yl8jl/129...10686978_n.jpg
Courtesy : facebook
http://s11.postimg.org/k5zovu9ub/108...24763740_n.jpg
Thiru Chitra Laxman with our beloved god makkal thilagam
Courtesy : facebook
Congrats Kumar Sir on reaching the 1000th Milestone.
It is really a coincidence that you reached the Milestone exactly today sir! So you are also One in Thousand [Aayirathil Oruvan]
Congratulations Kumar sir for posting 1000+ postings
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
http://i61.tinypic.com/t5rk9k.jpg
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் வாழ்க;
அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.வாழ்க;
அன்புள்ள மக்கள் திலகம் பக்தர்கள் அனைவருக்கும் ஒரு அற்புதமான, ஆச்சரியமான, வியப்பூட்டும் மகிழ்ச்சி நிறைந்த என்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினை உங்களுக்கு பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம் மற்றும் பெருமையினை அடைகிறேன். சமிபத்தில் என்னுடைய மகளும், மாப்பிள்ளையும், எனது பேத்தியும் எனது அறுவை சிகிச்சைக்கு பின்னர் என்னை பார்க்க வந்திருந்தனர், இரு நாட்கள் தங்கி இருந்தனர். எனது பேத்திக்கு வயது ஆறு மட்டுமே ஆகிறது. மேலும் அவளுக்கு எம்.ஜி. ஆர். யார் என்றும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை, எம்.ஜி.ஆர். திரைப்பட நடிகர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, தமிழ் நாட்டின் முதல்வர் என்றோ அறிவதற்கு எந்த விதமான வாய்ப்பே இல்லை. அவரின் திரை படங்களும் பார்த்ததில்லை. இவ்வாறு இருக்கும் பட்சத்தில், வந்திருந்த பொழுது, நாங்கள் அனைவரும் எதோ ஒரு விதமான ஆலோசனை செய்து பேசி கொண்டு இருந்த பொழுது, திடிரென என் முன்னே வந்து தான் அணிதிருந்த கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு என்னை பார்த்து - தாத்தா, "நாந்தான் எம்.ஜி.யார்." என்று கூறியவுடன் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என் உடலில் உதிரம் உச்சி முதல் பாதம் வரை சென்று என்னை இன்ப கடலில் ஆழ்த்தியது, என்னுடைய மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமது மக்கள் திலகம் தன்னுடைய ஈர்ப்பு சக்தியை எவ்வாறு மனித குலத்தின் இதயத்தில் கொண்டு வருகிறார் என்பதும் இறைவன் உருவில் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்பதும் புலனாகிறது. அவருடைய அசைவுகள், அருள் மாட்சி நம்மிடையே உலவி கொண்டு இருக்கிறது என்பதை உங்களின் கவனத்திற்கும், ஆராய்ச்சிக்கும் சமர்ப்பணம் ஆக்கி இறைவன் எம்.ஜி.ஆர். அருள் எங்கும் பரவி இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக எவரும் அறிய முடியும் என்பதை உள்ளன்போடு பகிர்கிறேன். புராணங்களில் பக்த பிரஹலாதன் சொல்லும் வார்த்தை இறைவன் நாராயணன் எங்கும் இருக்கிறார் என்பது போல் நம் மக்கள் திலகம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிவிக்க விரும்பிகிறேன்.
மேலும் இன்னொரு நிகழ்ச்சியினை இங்கே பகிர்கிறேன். நேற்று நானும் என் மனைவியும் என் மகளை பார்பதற்கு சென்று இருந்தோம், பிறகு நாங்கள் அனைவரும் ECR உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து திரும்பி வரும் பொழுது, பகவத் கீதையின் சாராம்சம் அதனின் உட்கருத்து குறித்து என்னுடைய மருமகனுக்கு, மகளுக்கு, பகவத் கீதை கடமையை வலியுறுத்தும் நோக்கத்தையும், கடமை செய்த பின்னே தியாகம் செய்வது ஒன்றுதான் இறைவனை அடையும் மார்க்கம் என்பதை சொல்லி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதன் வழியிலே வாழ்ந்தார், புகழ் பெரும் போதும் அவர் மயங்க வில்லை, துன்பம் வரும் போதும் துவண்டு விழவில்லை, இகழ்ந்து சிலர் உரைத்த போதும் அவர் இடிந்து போக வில்லை, ஆகவே அவர்தான் உண்மையில் பகவத் கீதை கோட்பாட்டின் வழியே வாழ்ந்த உத்தமர் என்று அவர்களுக்கு எடுத்துரைத்து சொல்லி கொண்டு வரும் வேளையில் என்னுடைய பேத்தி எங்கள் அனைவரிடமும் வெற்றி சின்னம் போல் எங்கள் அனைவரிடமும் தன்னுடைய இரு விரல்களை நம் தலைவர் போல் காட்டியது மீண்டும் எனக்கு உள்ளத்தில், தேகத்தில் புல்லரிப்பாக ஆகியது. இந்த மாதிரி அனுபவம், இன்பம், மகிழ்ச்சி உண்மையில் எனக்கு கோடி பணம் வந்தாலும் இராது. எனக்கு உணர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை. நீங்களும் மக்கள் திலகத்தின் அருளை பெற எல்லாம் வல்ல இறைவன் மக்கள் திலகம் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி அவரை வணங்குகிறேன்.
ஆயிரத்தில் ஒருவன் பொன்விழா
படத்தின் சிறப்பு
புரட்சி கதை
புரட்சித் தலைவரிவன் நடிப்பு
அழகானஂஉடை
பஞ்சு வசனங்கள்
அழகானஂபாடல்
மனம் மகிழஂபின்னணி இசை
வாள் வீச்சின் புதுமை
அழகானஂஒளிபதிவு
நம்பியாரின் ஆர்பாட்டஂநடிப்பு
அதோ அந்தஂபறவை போல் வாழஂ
என்ற பாடலை எம் ஜி ஆர் ரை தவிரஂ
எவராலும் அந்த அழகு வீரம் உணர்வு
கம்பீரம் மாகஂநடித்திருக்கமுடியாது
http://s27.postimg.org/7ethsnz8j/106...05775856_n.jpg
Courtesy : FB
http://siamoilsociale.it/wp-content/...1000-festa.jpg
குமார் சார்
குறுகிய காலத்தில் 1000 பதிவுகள் கடந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
congratulations cs kumar sir for completing 1000 posts
பெரியோர்களே... தாய்மார்களே !
பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வராமல் போயிருந்தால் பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றிருப்பார். கருணாநிதிக்கு ஆரூர்தாஸுக்கு முந்தைய இடம் தமிழ்த் திரையுலகில் கதை வசனத்தில் கிடைத்திருக்கும். ராஜாஜி, சேலத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்து பேர் சொல்லும் ஜூனியர்களை வளர்த்திருப்பார். காமராஜருக்கு விருதுநகர் வர்த்தகம் கைகொடுத்து இருக்கும்.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஜெமினி கணேசன் மாதிரி இறுதிக் காலம் வரை நடிப்பாக இருந்திருக்கும். சரோஜாதேவி மாதிரி ஜெயலலிதா, ஆண்டுக்கு ஒருமுறை பெங்களூரில் இருந்து வந்து இங்கு பொங்கல் நேரத்தில் சிறப்புப் பேட்டி கொடுத்துவிட்டு போயிருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் டீக்கு பெரியகுளம் வட்டாரத்தில் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு இணையான பிரான்ட்வேல்யூ கிடைத்திருக்கும்.
அண்ணாதுரையை, கருணாநிதியை, ராஜகோபாலனை, சின்னச்சாமியை, எம்.ஜி.ராம்சந்தரை, ஜெயலலிதாவை, பன்னீர்செல்வத்தை உச்சிக்குக் கொண்டுபோய் உட்கார வைத்ததற்குப் பெயர் தேர்தல்!
அண்ணா இறந்துபோனபோது கூடியகூட்டம் கின்னஸில் இடம்பெற்றது. ஆனால், அவர் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தோற்றுப் போனார். நேருவுக்குப் பிறகு யார் பிரதமர் என்ற கேள்விக்குறி எழுந்தபோது லால்பகதூர் சாஸ்திரியைச் சொன்ன காமராஜர்... சாஸ்திரி மறைவுக்குப்பிறகு இந்திராவை அழைத்து வந்த காமராஜர்... சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரிப்பருவம் தாண்டாத பெ.சீனிவாசனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘தென்னகத்தில் மார்லன் பிராண்டோ’ என்று கொண்டாடப்பட்ட சிம்மக்குரலோன் சிவாஜி கணேசனை சொந்த மண்ணான திருவையாறு வெற்றிபெற வைக்கவில்லை. ‘மிஸ்டர் ராஜீவ் காந்தி.. எங்கே ஓடுகிறீர்கள்?’ என்று நாடாளுமன்றத்தை நடுக்கக் கேட்ட வைகோவை, விருதுநகர் அரவணைக்கவில்லை. ஊரார் மெச்சிய பிள்ளைகளை சொந்தவீட்டில் அன்னியம் ஆக்கியதற்குப் பெயரும் தேர்தல்!
ஒரு மணிநேரத்துக்கு 10 லட்சம் கட்டணம் வாங்கும் வக்கீல்கள்கூட ‘மை லார்ட்டு’ என்று கூப்பிடும் இடத்தில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசாமி... சிவகாசி வெயிலில் அலைந்ததும், கையில் செங்கோலுடன் ஒருவர் முன்னே நடக்க... காற்றுகூட குறுக்கிடாத பாதுகாப்புடன்... ஏராளமானவர்களின் வணக்கத்தை வாங்கியபடியே பின்னே நடந்த உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை விழுப்புரம் வீதிகளில் பார்க்கிறவர்கள் அனைவரையும் வணங்கிப் போனதும், இந்திய அளவில் புகழ்பெற்ற பல் மருத்துவரான பி.பி.ராஜன் நெல்லைத் தொகுதி வேட்பாளரான பிறகு அடையாளம் தெரியாதவர்களை எல்லாம் பார்த்துச் சிரித்ததும்... எதனால்? தேர்தலால்!
‘அயோக்கியனின் கடைசிப் புகலிடம் அரசியல் என்று வெளிநாட்டவர் எவரோ சொன்னாராம். அவருக்கு அதைப் பற்றி தெரியவில்லை. நான் சொல்கிறேன்: அயோக்கியனின் முதல் புகலிடமே அரசியல்தான்’ என்று சொன்ன கண்ணதாசனும் அரசியல்வாதியாக இருந்தார். ‘அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது’ என்று சொன்ன ஜெயகாந்தனும் அதில் பங்கேற்றார். ‘திராவிட மொழிஞாயிறு’ தேவநேயப்பாவாணரை தலைமேல் தூக்கித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ்க்குடிமகனையும் அது விடவில்லை. அதிகார வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக இருந்த ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்காவும் அதில் மூழ்கினார். தேர்தல் மோகம் யாருக்கு வராது?
கோடீஸ்வர ஏ.சி.சண்முகம் சோடா உடைப்பவரிடம் தோற்றுப் போனதும், சிறந்த பார்லிமென்டேரியன் என்று பாராட்டப்பட்ட இரா.செழியனை வைஜெயந்தி மாலா வென்றதும், நல்லகண்ணு தேர்தலில் நின்றாரா என்பது கோவை தொகுதிவாசிகளுக்கே தெரியாமல் போனதும், ராமராஜன் அதிக வாக்குகளில் வென்றதும் தேர்தல் விநோதமா?
பால்காரனுக்குக்கூட வீட்டுக்கதவைத் திறக்காத சிலர், ஐந்து தடவைக்குமேல் எம்.பி தேர்தலில் வெல்வதும், மக்கள் பிரச்னைக்காக எப்போதும் பேருந்து நிலைய வாசல்களில் முழக்கம் போட்டு நிற்பவருக்கு 100 ஓட்டுகள்கூடத் தாண்டாததும், நடிகர்களை தியாகிகளாகப் பார்க்கக் கூடுவதும், தியாகிகளை காமெடியன்களாக நோக்குவதும் ஜனநாயக விநோதமா?
தனது தேகத்தைத் தேய்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம், எலும்புருக்கி நோய் தாக்கியபிறகும் சவம் எழப்பேசிய சுப்பிரமணிய சிவா, ரத்தத்தை உறையவைக்கும் கவிதை இயற்றிய பாரதி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த பெரியார், இவர்கள் யாரும் தேர்தலில் நின்றது இல்லை. ஈரோட்டில் மக்கள் பிரச்னைக்காக நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடம், ‘என் பேச்சைக் கேட்கத்தான் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். நான் தேர்தலில் நின்றால் உங்களில் யாரும் ஓட்டுப் போடமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்?’ என்று பெரியார் சொன்னார். நின்றிருந்தால் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சோகம் பெரியாருக்கும் வந்திருக்கும்! உண்மைதானே?
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று போற்றப்பட்டவரின் மனைவி ஜானகியை தாய் என்று போற்றிய அவரது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள், எம்.ஜி.ஆர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவரைத் தோற்கடித்த நாடு இது. சிவாஜி படம் பார்க்காதவர் உண்டா? அவரது நடிப்பைப் புகழாதவர் உண்டா? அவர் பாட்டை இன்றும் கேட்டு கண் கலங்காதவர் உண்டா? இந்த மொத்தக் கூட்டமும் அவர் கட்சியில் சேர்ந்திருந்தால் சூரக்கோட்டைக்காரருக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை சாத்தியமாகி இருக்கும். என்ன யோசித்தார்கள் எம்.ஜி.ஆரின் ரத்தங்கள், சிவாஜி மன்றத்துப் பிள்ளைகள்?
ஸ்டாலின், விஜயகாந்த், வைகோ, அன்புமணி, ஜி.கே.வாசன் என எல்லோர்க்கும் உண்டு முதலமைச்சர் கனவு. அந்தக் கனவுக்கு முன்னோட்டம்கூட இன்று வரை சாத்தியம் ஆகவில்லை. ஆனால், இப்படி யோசித்தாலே 107 டிகிரி காய்ச்சல் வரக்கூடிய கட்சியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஒருமுறை அல்ல... இரண்டு முறை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். செந்தில் பாலாஜி, ராஜேந்திர பாலாஜி என்று பெருமாள் பெயர் கொண்டவர்கள் தங்களுக்கும் அது சாத்தியம் என்று நினைத்தார்கள். அந்த அளவுக்கு அது எளிமையான பொருளா?
இந்தியாவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த தியாக வியர்வை காய்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்த தமிழகம் - கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியைத் தள்ளி வைத்திருக்க என்ன காரணம்? எவ்வளவு அதிகாரம் பொருந்தியவர்களாக ராஜீவ் காந்தியும் நரேந்திர மோடியும் மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் தனியாக நிற்க, தண்ணீர் குடிக்க வேண்டி வந்த கள யதார்த்ததுக்கு என்ன காரணம்?
எல்லா ஜனநாயக நெறிமுறைகளையும் பேசிய ராஜாஜி - முதலமைச்சர் பதவிக்கு வந்த இரண்டு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர் இல்லை. ஆனால், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் சர்வ அதிகாரம் பொருந்தியவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட பலபேர், மக்களால் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் என்றால் மக்களுக்கு இந்த வகை மனிதர்களைத்தான் பிடிக்கிறதா?
அன்று சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இருந்த நிழல் யுத்தம் இன்று இளங்கோவனுக்கும் சிதம்பரத்துக்கும் நடக்கிறது. அன்று அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இருந்த ஈகோ யுத்தம் இன்று கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிறது. ராஜாஜி, சாதி பார்த்திருந்தால் சத்தியமூர்த்திக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம். கருணாநிதி, ரத்தம் பார்த்திருந்தால் ஸ்டாலினுக்கு விட்டுத்தர முன்வந்திருக்கலாம்.
ஆனால் பதவி, இவை எல்லாவற்றையும்விட உயர்ந்ததா? வெற்றி பெற்ற கட்சிக்குத் தலைவராக இருப்பவரே முதலமைச்சர் ஆவார் என்று காத்திருக்க, வெள்ளையனே வியக்கவைக்கும் அளவுக்குப் பதவியை மறுத்த தியாகராயர் -நான் பதவி விலக சம்மதிக்கிறேன், ஆனால் என்னைவிட யோக்கியன் இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று சொன்ன ஓமந்தூரார் -எனக்கு உடல்நலமில்லை, முதலமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம் என்று மறுத்த பி.எஸ்.குமாரசாமி ராஜா -ஒன்பதாண்டுகால முதலமைச்சர் பதவியை தூசியைப்போல தட்டிவிட்டு வெளியேறிய காமராஜர் -முதலமைச்சர் ஆவதற்கு எம்.எல்.ஏ பதவி வேண்டும் என்பதையே உணராமல் எம்.பி-க்கு போட்டியிட்ட அண்ணா - வாழ்ந்த மண் என்பதற்கு அடையாளமே இல்லாமல் இப்போது அசிங்கமாகிப் போனதே தமிழ்நாடு. என்ன காரணம்?
வாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவர்க்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!
Courtesy vikatan
பல பதிவுகள் வாடிக்கையாக உள்ளது:
ஒரு உதாரணம் "எந்த திட்டம் ஆளும் கட்சி நிறைவேற்றினாலும் அதற்க்கு நான் மற்றும் எனது காட்சி தான் காரணம்". அப்படி திட்டம் நிறைவேறவில்லை என்றல் அது எனது மற்றும் எங்களது காட்சின் திட்டம் அதனால் தான்". கொலையும் கொள்ளையும் ஒரு வகை கலையே என்று வெரி சொல்லுவர். இப்படியும் ஒரு பிறவி.
உண்மை அவர் திருட்டு ரயில் ஏறி சென்னை வரவில்லை என்றல் அந்த கட்சி [ சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க ]இன்று இல்லை. He was the main reason behind the EXIT of many including Thalaivar, EVKS, Kavingar, SSR, Vaiko, TR, Radharavi, SS Chandran, Thyagu......... endless. Even CNA was unhappy with him and had warned him that he the only root cause for all problems in the Party. That Individual would have never become CM without the Support of Thalaivar. He took one Good Human/Actor to his side in the mid 1970's and tried to show him as the party Propoganda Actor. But the world knows what happened. சுயநலவாதி என்பதை மீண்டும் உலகிற்கு காண்பித்தார்.
எஸ்.எம்.உமர் எழுதிய, 'கலை உலக சக்ரவர்த்திகள்' நூலிலிருந்து:
சக்ரவர்த்தி திருமகள் படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆருக்கு வயது, 40; 'தமிழ் சினிமா' பத்திரிகை ஆசிரியர் கரீம், தன் பத்திரிகையில், எம்.ஜி.ஆரை, 'கிழட்டு நடிகன்' என்று குறிப்பிட்டார்.
அதைப் படித்த எம்.ஜி.ஆர்., கோபப்படவில்லை. மாறாக, 'கரீம் எழுதியதில் உண்மையுள்ளது. 'மனோகரன்' நாடகத்தில், மனோகரனாக, பம்மல் சம்பந்த முலியார் நடிப்பார். அந்த நாடகத்தில், நானும் சிறிய வேடத்தில் நடிப்பேன். ஒரு காட்சியில், 'அம்மா... இந்த, 16 வயது பாலகனைப் போருக்கு அனுப்புங்கள்; வென்று வருகிறேன்...' என்பார். அப்போது அவருக்கு வயது, 40. 'துணிந்து பொய் சொல்கிறாரே...' என்று நினைப்பேன். அதை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதனால், கரீம் கவலைப்பட வேண்டாம்...' என்றார்.
Courtesy dinamalar thinnai edition
இந்த நாளில் அன்று (10.07.1982) நூறு கோடி செலவில் சத்துணவுத் திட்டம் - சாத்தியமாகுமா? கருணாநிதி சந்தேகம்
நூறு கோடி ரூபாயில் நிறைவேற்றப்படவிருக்கும் சத்துணவுத் திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார்.
சத்துணவுத் திட்டம் பற்றி பத்திரிகைகளில் வந்த செய்திகளைத் தாம் படித்ததாகவும், நிதி அமைச்சர் அடுத்த பட்ஜெட்டை சமர்ப்பித்த பின்னர்தான் இந்தத் திட்டம் பற்றிய செலவினங்கள் தமக்குத் தெரிய வரும் என்றும் அவர் சொன்னார்.
தமிழ்நாடு மின்சார வாரியம், சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷன், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் உதவித் தொகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. அப்படியிருக்கையில் சத்துணவு திட்டத்துக்கும் நூறு கோடி செலவிடுவது என்பது சாத்தியமாகுமா என்பது பற்றி எதிர்காலம்தான் பதில் சொல்லும் என்று அவர் கூறினார்.
1985-ம் ஆண்டுக்கு முன்பாகவே தமிழக சட்டமன்றத்துக்கான அடுத்த பொதுத் தேர்தல்கள் வர வேண்டும் என்று தாம் விரும்பவில்லை என்றும், அப்படி வந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன் என்றும் அவர் கூறினார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல்கள் நடைபெறுவது என்பது ஒரு ஜனநாயகக் கணக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்
our thread senior members please tell ur comments for the above subject .
Courtesy dinamani kalasuvadugal
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பொன்விழா காணும் நேரத்தில் ஆயிரத்து ஒன்று
பதிவுகள் அற்புதமாக பதித்து மிக குறுகிய காலத்தில் சிகரம் கண்ட அன்பு நண்பர் திரு. சி.எஸ். குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
http://i61.tinypic.com/214ttsi.jpg
ஆர். லோகநாதன்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ":ஆயிரத்தில் ஒருவன் " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி
பற்றிய புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i61.tinypic.com/ncl5ww.jpg
மேடையில் அமைக்கப்பட்டிருந்த பேனர்.
http://i60.tinypic.com/293yaux.jpg
முன்னாள் சுகாதார அமைச்சர் திரு. எச். வி. ஹண்டே அவர்களை வரவேற்கிறார்
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு.
http://i61.tinypic.com/20z8mfm.jpg