படம் : இதயகமலம்
பாடல் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
http://i67.tinypic.com/2w5uef7.jpg
Printable View
படம் : இதயகமலம்
பாடல் : உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
http://i67.tinypic.com/2w5uef7.jpg
Superb Muthaiyan.
Saradha Madam.
நடிகர்திலகத்துடன் ரவிச்சந்திரன்.....
மற்ற எல்லா கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்த ரவிச்சந்திரனுக்கு , நடிக்க வந்த அடுத்த வருடமே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.
மோட்டார் சுந்தரம் பிள்ளை : 1964-ல் முதல் படம் வெளியான ரவிக்கு 1965-லேயே நடிகர்திலகத்துடன் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. (படம் வெளியானது 1966 ஜனவரி 26. நடிகர்திலகத்துக்கு பத்மஷ்ரீ அறிவிக்கப்பட்ட அதே நாள்). ஜெமினி வாசன் தயாரித்து, அவரது மகன் பாலசுப்ரமணியம் இயக்கிய இப்ப்டத்தில் நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக (மூன்றாவது மகளான ஜெயலலிதாவின் ஜோடியாக) ரவிச்சந்திரன் நடித்தார். வாலி எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' என்ற அருமையான டூயட் பாடல் இந்த ஜோடிக்கு. மைசூர் பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது. ஒன்றாக படத்தில் நடித்திருந்தபோதிலும் சிவாஜி-ரவி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அபூர்வம். என் நினைவு சரியென்றால், ரவியை அவர் அப்பாவான கல்லூரி பிரின்ஸிபாலிடம் அழைத்துச்சென்று, அவர்களின் காதல் பற்றி புகார் செய்யும் இடம்தான் என்று நினைக்கிறேன். இதை விட்டால் கிளைமாக்ஸில்தான் சந்திப்பார்கள்.
கவரிமான் : மோட்டார் சுந்தரம்பிள்ளை படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து 1979-ல் கவரிமான் படத்தில் ரவி சிவாஜியுடன் நடித்தார். இதிலும் அப்படித்தான். இருவரும் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது. அப்போது வந்த படங்களில் நடிகர்திலகத்துடன் துணைப்பாத்திரங்களில் மேஜர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர்தான் நடித்து வந்தனர், இப்படத்தில் ஏற்கெனவே மேஜர் அண்ணனாகவும், விஜயகுமார் தம்பியாகவும் வருகின்றனர். எனவே இந்த ரோலில் அநேகமாக ஜெய்கணேஷதான் நடிப்பார் என்பது பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாக அறிவித்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். நடிகர்திலகத்தின் 106-வது படத்தில் நடித்தவர், அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காத வேளையில் மீண்டும் 201-வது படத்தில் சேர்ந்தது வியப்பாக இருந்தது. கூடவே இன்னொரு குண்டாக நடிகர்திலகத்தின் ஜோடி பிரமீளா என்றும் எஸ்.பி.எம். அறிவித்தார்.
கவரிமான் படத்தில் ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். நடிகர்திலகத்துக்கு வில்லனாக, ஆனால் நேரடி வில்லன் அல்ல. கர்நாடக முதலமைச்சரின் முதன்மை செக்ரட்டியாக பணிபுரியும் நடிகர்திலகத்துக்கு வாய்த்த மனைவி பிரமீளா நாகரீக மோகம் பிடித்து சதா, கிளப், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருப்பவர். அப்போது கிளப்பில் ரவிச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து, அவரால் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறார். இந்நிலையில் முதல்வருடன் வெளிநாடு செல்வதாக சிவாஜி கிளம்பிப்போன பின், பிரமீளா, ரவியை வீட்டுக்கு அழைத்து, மதுவின் போதையில் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது, பயணம் ரத்தாகி வீடு திரும்பும் சிவாஜி இருவரையும் அலங்கோல நிலையில் பார்த்து விட்டுத் துடிக்க, சந்தடி சாக்கில் ரவி அங்கிருந்து நழுவி ஓடிவிட, கையில் கிடைத்த பாட்டிலால் மனைவி பிரமீளாவை சிவாஜி அடிக்க, பிரமீளா ரத்த வெள்ளத்தில் பிணமாக, அதை அவர்களின் நான்கு வயதுப் பெண்குழந்தை பார்த்துவிடுகிறது. படத்தில் சுமார் 20 நிமிடங்களே வரக்கூடிய ரோலாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அதை சிறப்பாக செய்திருந்தார்.
வாலிப விருந்து-1968
எனது favourite pairs ரவி-பாரதி மற்றும் T .M .S -எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கிய ஜாலி படம்.
பாவம் வங்காள பாணியில் மறக்க முடியாமல் அடி பட்ட மாறன், மீள தேர்ந்தெடுத்த சுவாரஸ்ய வழி ,happening hero and safe bet . நன்றாகவே வெற்றி பெற்றார்.
ரவியும் ராதாவும் தற்செயலாய் teasing ஆரம்பித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். மூர்த்தி என்ற allround கேட்டவன், தன சிங்கப்பூர் மாமா பெண் ராதாவை (சொத்தையும் )அடைய தன் மாமா உருவம் கொண்ட தனது சமையல் காரனை வைத்து ஆள்மாறாட்டம் செய்ய ,அதை ரவி தன் நண்பன் பாபுவுடன் சேர்ந்து முறியடிக்கும் குட்டி கதை.
உற்சாகம் வாலிப விருந்து பாடலில் தொடங்கி ,அவன் காதலித்தான் என விரிந்து ,மணமகள் தேவை என மனு போட்டு ,எங்கே எங்கே என் மனது என்று தேடி சுபமாய் சென்னபட்டினம் போய் முடியும். ரெண்டு teasing song ,ஒரு அருமையான டூயட் ,பாரதி தனியாக ஒரு பாடல் ,சந்திரபாபு பெண் வேட பாடல் என்று A ,B ,C என்று அத்தைனையும் குதூகலிக்கும். சுதர்சன் A .V .M விட்டு வேதனை பிரிவில் , பூம்புகார், வாலிப விருந்து ரெண்டு படங்களிலும் (வெவ்வேறு Genre ) அசத்தி பட்டை கிளப்பினார். இதில் வாசுவை மகிழ்விக்க என்றே அனைத்தும் ஈஸ்வரிக்கே.
ரவி -பாரதி இணையில் வந்த best இதுதான். ரெண்டு பெரும் திருஷ்டி சுத்தி போடலாம் போல அவ்வளவு அழகு ,பொருத்தம்.ரெண்டு பெரும் இளமை,உற்சாகம் பொங்கி வழிய முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை தூள் கிளப்பியிருப்பார்கள்.பாலையா ,சந்திரபாபு ,அசோகன் அனைவருமே காட்சிகளுக்கு மெருகூட்டி சுவாரஸ்ய படுத்துவார்கள்.
படம் எந்த வித சிக்கல், செண்டிமெண்ட் இல்லாமல் முழுவதும் action ,romance ,situational comedy என்று போகும்.
கிளைமாக்ஸ் சண்டை ஜாலி. ஜூடோ ரத்னம் சண்டை, சின்னி-சம்பத் நடனங்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கும். மாறன் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக விருந்தாக்கி, வெற்றி கண்டார்.
நிஜ வாலிப விருந்துதான். (அத்தனையும் எனக்கு பிடித்த chat item கள் .)
From RPRajanayahem Blog on Ravi chandran
அவர் காலத்தில் வந்த மற்ற நடிகர்கள் மிகுந்த சிரமப்பட்டுத்தான் சினிமாவில் கதாநாயகனாக ஆக முடிந்தது.ஆனால் ரவிச்சந்திரன் மட்டும் முழுக்க அதிர்ஷ்டம் காரணமாக காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அறிமுகமானார்.
காதலிக்க நேரமில்லையை அடுத்து இதயக்கமலம்(1965)அதேகண்கள்(1967), நான்(1967), மூன்றெழுத்து(1968) போன்ற கலர்ப்படங்களில் நடித்து கலர் கதாநாயகன் என்று கிராமத்தார் மத்தியில் பிரபலம்.
நடிகை காஞ்சனா ரசிகர்களால் கலர் காஞ்சனா என்றே அழைக்கப்பட்டார்.
ரவிச்சந்திரன் -ஜெய்சங்கர்-இரண்டு பேரும் அன்றைக்கு இருமை எதிர்வுகள்!
ஜெய்சங்கருக்கு நடிக்க வந்து இரண்டு வருடத்தில் ஒரே ஒரு படம் ‘பட்டணத்தில் பூதம்’(1967) தான் அப்போது கலர் படம்.
அன்று வண்ணப்படம் என்பது கொஞ்சம் அபூர்வம்!
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம் படங்களுக்குப் பிறகு இவரை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஒரு குழப்பம் இயக்குனர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.ராமண்ணாவின் படம் குமரிப்பெண்(1966) ரிலீஸ். ராணி பத்திரிக்கை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு ”ரவிச்சந்திரனா? ராமச்சந்திரனா?” என்று எம்.ஜி.ஆர் படம் பார்த்த பரவசம் ஏற்பட்டதாக எழுதி விட்டது!
அப்புறம் என்ன?
காதலிக்க நேரமில்லை, இதயக்கமலம், அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எப்போது பார்த்தாலும் சலிக்காதவை.
இதயக்கமலம் சீரியஸ் படம் தான்.
ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸின்
“ நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ”
தோள் கண்டேன், தோளே கண்டேன்”
பி.சுசிலாவின் மோகன ராக “ மலர்கள் நனைந்தன பனியாலே” போன்ற அற்புதமான பாடல்கள். எல்.வி.பிரசாத் இயக்கம். கே.ஆர்.விஜயா தான் நடித்த படங்களில் பிடித்த படமாக இதயக்கமலத்தை தான் சொல்வது வழக்கம்.
மதராஸ் டூ பாண்டிச்சேரி(1966),நினைவில் நின்றவள்(1967), உத்தரவின்றி உள்ளே வா (1971)முழு நீள நகைச்சுவைப் படங்கள்.
1971 வருடம் தான் ஜெய்சங்கருக்கு இரண்டாவது வண்ணப்படம் ரவிச்சந்திரனுடன் நடித்த ’நான்கு சுவர்கள்’, மூன்றாவது வண்ணப்படம் ’வீட்டுக்கு ஒரு பிள்ளை’!
வில்லனாக ரவிச்சந்திரன் ஊமை விழிகளில் நடித்ததை மறக்கமுடியாது.அதே படத்தில் ஜெய்சங்கருக்கு குணச்சித்திர வேடம்- பி.பி.எஸ் பாடல் “தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா?”
காதலிக்க நேரமில்லை படத்தை 100 தடவை சித்ராலயா கோபுவும்,ரவிச்சந்திரனும் பார்த்தார்களாம்.
முத்துராமன்,ஏ.வி.எம்.ராஜன் போல கடுமையாய் போராடாமல், ஜெய்சங்கர் போல சிரமப்படாமல் ஒவர் நைட் ஹீரோ வான பிரமிப்பு ரவிச்சந்திரனை விட்டு கடைசி வரை நீங்கவில்லை.
சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை,கவரிமான்
ஜெமினி கணேசனுடன் காவியத்தலைவி,மாலதி,சினேகிதி, ரங்கராட்டினம்,
ஏ.வி.எம் ராஜனுடன் ’ஏன்’ ’ஜீவநாடி’, ’புகுந்த வீடு’.
நடன அசைவுகள் ரவிச்சந்திரன் நன்றாகச் செய்வார்.
’கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா’
‘பூவைப்போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா.....
ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ’
டப்பாங்குத்து,குத்தாட்டம்
’கண்ணுக்கு தெரியாதா நெஞ்சுக்குப் புரியாதா’
’பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பாத்து பயந்தாளாம்.’
’ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி’
சண்டைக் காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு அடித்தே விடுவார் என்று ஸ்டண்ட் நடிகர்கள் சொல்வார்கள்.
ரவிச்சந்திரன் நடித்த படங்கள் இந்தியில் ரீமேக் ஆகியிருக்கின்றன்.
காதலிக்க நேரமில்லை இந்தியில்’ப்யார் கி ஜா’ -சசிகபூர், (முத்துராமன் ரோலில் கிஷோர்குமார்)
’நான்’ இந்தியில் ’வாரிஸ்’-ஜிதேந்திரா,
மதராஸ் டூ பாண்டிச்சேரி இந்தியில் ’பாம்பே டூ கோவா’-அமிதாப் பச்சன்!
ரவிச்சந்திரன்முதல் மனைவி விமலாவுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
ஷீலா இரண்டாவது மனைவியான பின் ’மஞ்சள் குங்குமம்’(1973) ரவிச்சந்திரன் அவர் டைரக்*ஷனில் நடித்தார். எஸ்.பி.பி யின் ‘என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ சொல்ல நாணம் வந்ததோ சொல்லாமல் மறைத்தாளோராதா ராதா ராதா’ பாடல் இந்தப்படத்தில்.
ஷீலாவுக்கு ஒரு மகன்.ஜார்ஜ்.இந்த உறவு நீடிக்கவில்லை.
ஷீலாவின் உறவு காரணமாக ரவிச்சந்திரன் அன்று சில மலையாளப்படங்களில் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. முத்துராமனுக்கோ,ஜெய்சங்கருக்கோ,ஏவிஎம் ராஜனுக்கோ மலையாளப்பட கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததில்லை.
ரவிச்சந்திரனின் வாரிசுகள் ஜார்ஜும்,ஹம்ஸவர்த்தனும் சினிமாவில் முயற்சி செய்தும் நிலைத்து நிற்க முடியவில்லை.
ஹம்ஸவர்த்தனை திரையில் நிறுத்த பெரு முயற்சி ரவிச்சந்திரன் செய்தார். இவரே மகனுக்காக படம் தயாரித்தது சரி.ஆனால் இவரே அந்தப்படத்தை பிடிவாதமாக இயக்கியது தான் மிகப்பெரிய தவறு.
Saradha Madam write on puguntha veedu ,a mega hit Family Drama and the highlight is that Nadigarthilagam presided the 100th Day Function.
தாய்க்குலத்தின் அமோக ஆதரவு பெற்ற குடும்பச்சித்திரம்
'புகுந்த வீடு'
ஒரு ஏழைப்பாடகன் பாடுவதற்கான வாய்ப்புக்களைத்தேடி அலைகிறான். குடும்பத்திலோ வறுமை விரட்டுகிறது. காப்பாற்றப்பட வேண்டிய அம்மா மற்றும் தங்கை. இந்நிலையில் ஒரு பணக்காரப் பெண் இவன் பாடலில் மயங்கி இவன் மேல் மையல் கொள்ள, காதல் அரும்புகிறது. ஆனால் அவன் தன் கடமையை மறக்கவில்லை. பணக்காரப்பெண்ணின் அண்ணனுக்கும் பாடகனின் தங்கை மீது ஈர்ப்பு. பெண்கொடுத்துப் பெண் எடுக்கப்படுகிறது. பிரச்சினை முளைக்கிறது. பாடகனின் மேல் அவளுக்கிருந்த மையல் குறைகிறது. வாழ்க்கைக்கு வெறும் மனமயக்கம் மட்டும் போதாது, வாழ்க்கை என்பது அதற்கு மேலே என்று உணர்கிறாள். இரண்டு குடும்பமும் பிரிகிறது. பிறந்த வீட்டில் குழந்தைபெற்ற தன் தங்கையையும் அவள் குழந்தையையும் கூட கணவன் வந்து பார்க்க பாட்டுக்காரன் தடை போடுகிறான். பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு குடும்பங்கள் ஒன்று சேர முடிவு சுபம்.
இப்படத்தில் பாடகனாக ரவிச்சந்திரன், தங்கையாக சந்திரகலா, பணக்காரப்பெண்ணாக லட்சுமி, அவளது அண்ணனாக (சந்திரகலா ஜோடியாக) ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரனின் அம்மாவாக நடிகையர்திலகம் சாவித்திரி நடித்திருந்தனர். ஏழையாக இருந்தாலும் முறைப்பான பாடகனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார் என்றால் அதற்கு நேர்மாறாக பணக்காரனாக இருந்தாலும் பண்பு குறையாத அமைதியான இளைஞனாக ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் அசத்தினார். லட்சுமிக்கு வழக்கம்போல வெடுக்கென்ற துடிப்பான நடிப்பு, சந்திரகலா குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு. சாவித்திரியின் அமைதியான, அப்பாவித்தனமான நடிப்பு நம் நெஞ்சை நெகிழ வைக்கும்.
"அம்மா, அன்னைக்கு நான் ரேடியோவில் பாடினேனே, அதற்கு...." மகன் முடிக்கும் முன்பே சாவித்திரி "என்னப்பா, பணம் வந்திருக்கா?" என்று ஆர்வத்துடன் கேட்க, "இல்லேம்மா, நிறைய பாராட்டுக்கடிதங்கள் வந்திருக்கு" என்று மகன் சொன்னதும் சோர்ந்து போய் "அப்போ பணம் எதுவும் வராதாப்பா?" என்று அப்பாவியாய் கேட்குமிடம் மனதைத்தொடுவதோடு, குடும்ப சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டும். அதுபோல் உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் காலில் தலைவைத்து ரவிச்சந்திரன் தூங்கும் இடமும், "சாவு என்ற நிரந்தர தூக்கத்துக்கு ஒத்திகைதானேப்பா இந்த தூக்கம் எல்லாம்" என்று சாவித்திரி சொல்லும் இடமும் நம் மனதை சற்று இடம்பெயரச்செய்யும் காட்சிகள்.
படத்தை 'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் இயக்கியிருந்தார். படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் படத்தில் வரும் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் இடையிடையே ஏற்படும் மனப்போராட்டங்களே பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை அழுத்தமாகச்சொல்லியிருந்தார். படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் 'இன்னிசை இரட்டையர்கள்' சங்கர் கணேஷ். பாடல்கள் அத்தனையும் மணி மணியாக அமைந்தன.
ரவிச்சந்திரன் ரேடியோவில் பாடிய பாடலை, தன் தோழிகளோடு சேர்ந்து லட்சுமி பாடும்...
'நான் உன்னைத்தேடுகிறேன்.. நாள்தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்.. நிழலாக ஓடுகிறேன்'
என்ன ஒரு மெலோடி...!. இப்போதெல்லாம் இப்பாடல்கள் காணக்கிடைக்கவில்லையே.
குழந்தை பெற்ற தன்னைப்பார்க்க வந்த கணவனை, பார்க்கவிடாமல் தடுத்து நிற்கும் அண்ணனை குறித்து சந்திரகலா பாடும்...
'கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே' பாடல் பெண்களைக்கவர்ந்தது என்றால்...
மேடைப்பாடகனாக உயர்ந்ததும், சங்கர் கணேஷை அறிமுகப்படுத்தி ரவி பாடும்
"மாடி வீட்டுப்பொண்ணு மீனா" பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுபட்டது.
ஐம்பதுகளிலும், அறுபதுகளின் துவக்கத்திலும் திரையிசையில் கொடிகட்டிப்பறந்த ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி, இந்த ஆண்டின் SUPER HIT பாடல்களில் ஒன்றை இப்படத்துக்காகப் பாடியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் இதற்கு முந்தைய ஆண்டில் வெளியான ரங்கராட்டினம் படத்தில் 'முத்தாரமே.. உன் மோகம் என்னவோ' பாடலைப்பாடி மறு என்ட்ரி கொடுத்த ராஜா, புகுந்த வீடு படத்தில் ராஜன் - சந்திரகலா முதலிரவுப்பாடலான..
'செந்தாமரையே செந்தேனிதழே
பொன்னோவியமே, கண்ணே வருக'
பாடலை ஜிக்கியுடன் சேர்ந்து கலக்கலாகப்பாடி அசத்தியிருந்தார்.
(தொடர்ந்து தாய்க்கொரு பிள்ளை படத்தில் 'சின்னக்கண்ணனே' பாடலையும், வீட்டு மாப்பிள்ளை படத்தில் 'ராசி.. நல்ல ராசி' பாடலையும் பாடிய ஏ.எம்.ராஜா, இன்னொரு வெற்றி வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மீண்டும் மறைந்து போனார்).
1972-ம் ஆண்டின் அருமையான குடும்பச்சித்திரமாக அமைந்த 'புகுந்த வீடு' திரைப்படம், தாய்க்குலத்தின் அமோக ஆதரவோடு, 100 நாட்களைக்கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
நான்கு சுவர்கள்(By Saradha Madam)
‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் இணைந்து நடித்திருந்த படங்களில் இதுவும் ஒன்று. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதற்கு கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.
நாடக மேடையிலிருந்து திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு, குடும்பக்கதைகளையே (அவற்றில் சீரியஸும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) இயக்கி வந்த கே.பி., முதன்முறையாக ஒரு ஆக்ஷன் படமாக இதை இயக்கினார். அதுமட்டுமல்லாது, அதுவரை கருப்புவெள்ளைப் படங்களிலேயே வெற்றிகளைக்குவித்து வந்த அவர் இயக்கிய முதல் வண்ணப்படமும் இதுதான். ஆனால் முழுக்க ஆக்ஷன் படமாக இல்லாது, அதில் செண்டிமெண்ட்டையும் புகுத்தியதால் படம் ஒருவித சொதப்பலாகப்போனது.
வழக்கம்போல ஸ்டுடியோ செட்களிலேயே அதுவரை முழம்போட்டு வந்த கே.பி., கிட்டத்தட்ட முக்கால்வாசிப்படத்தை வெளிப்புறங்களிலேயே எடுத்ததும் இப்படத்தில்தான். ஆக, இப்படம் பலவிதங்களில் கே.பி.க்கு பரீட்சாத்த முயற்சியாக ஆகிப்போனது.
இருவரது கைகளும் இணைத்து விலங்கிடப்பட்ட கைதிகளாக வரும் ரவிச்சந்திரன்,ஜெய்சங்கர் இருவரும் கோவாவில் இணைந்தே சுற்றுவதும், விலங்கிடப்பட்ட நிலையிலேயே தங்கள் காதலிகளோடு டூயட் பாடுவதுமாக கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்திருந்தனர். ஆனால் படத்தில் சௌகார் ஜானகி ஏற்றிருந்த கதாபாத்திரம் தான் ஓவர் செண்டிமெண்ட்டாக அமைந்து பார்ப்போர் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.
1970-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 71 துவக்கத்தில் வெளியான படம் இது. 1969-ல் 'இருகோடுகள்' படத்தின் பெருவெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட எதிரொலி, நவக்கிரகம், காவியத்தலைவி, நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு ஆகிய ஐந்து படங்களை ஒருசேர ஒப்புக்கொண்டு இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். அதனால் எல்லாவற்றிலுமே அவருக்கே உரித்தான முத்திரைக் காட்சிகள் ப்ஞ்சமாகிப்போகத் துவங்கின.
இதுபோக நவக்கிரகம், நான்கு சுவர்கள் இவ்விரண்டு படங்களையும் எப்படி உருவாக்கி வருகிறார் என்ற விவரங்களையும் குமுதம் வாரப்பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார். அதனால் இவ்விரண்டு படங்களைப்பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிப்போனது. குறிப்பாக நான்கு சுவர்கள் படத்தில், எண்ணெய் ஊற்றோ ஏதோவொன்று எப்படிப்பொங்கி வருகிறது என்பதைப்படமாக்கிய விதம் பற்றி அவர் சொல்லியிருந்த விதம் மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. எதிரொலி சரியாகப்போகாத நிலையில், ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'நவக்கிரகம்' தோல்வியைத் தழுவியது. அதோடு வெளியான ராமன் எத்தனை ராமனடி, திருமலை தென்குமரி ஆகியன வெற்றியடைந்தன. தேடிவந்த மாப்பிள்ளை சுமாராக ஓடியது.
அடுத்து தீபாவளிக்கு 'காவியத்தலைவி' ரிலீஸாகி வெற்றியடைந்தது. உடன் வெளியான சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், சற்று முந்தி வெளியான எங்கள் தங்கம் என எல்லாமும் வெற்றியடைந்தன. மூன்று படங்கள் குறைந்துவிட்ட நிலையில் நான்கு சுவர்களை 71 பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தில், பிப்ரவரி 6 அன்று வெளியானது. 'கே.பி.யின் முதல் வண்ணப்படம், வித்தியாசமான கதை, கே.பி.இயக்கத்தில் முதல் ஆக்ஷன் படம், ‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன் கோவாவில் வெளிப்புறப்படப்பிடிப்பு' என்றெல்லாம் ஓவர் எக்ஸ்பெக்டேஷனில் வந்ததால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் அமையாமல் போகவே படம் தோல்வியடைந்தது.
தனது வழி எதுவென்று 'நான்கு சுவர்கள்' தெளிவாகக்காட்டிவிட்டதால் மீண்டும் பழைய பாதையிலேயே புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா, அரங்கேற்றம் என பயணிக்கத்துவங்கினார் இயக்குனர் சிகரம். (தான் இயக்கிய படங்களிலேயே தனக்குப்பிடிக்காத படங்களாக நான்கு சுவர்கள், பத்தாம் பசலி இரண்டையும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பாலச்சந்தர்)
நான்கு சுவர்கள் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் டூயட் பாடலான 'ஓ... மைனா... ஓ.. மைனா' பாடல் நன்கு பிரபலமடைந்தது. ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி. பாடியிருந்தார். கதாநாயகியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். ரவி ரொம்ப ஸ்மார்ட்டாக நடித்திருந்த இப்படம், இப்போது பார்த்தால் விரும்பக்கூடிய படமாக அமையக்கூடும்.
Thanks Mr.Ragavendhar.
இணையத்தில் முதன் முறையாக...
புகுந்த வீடு திரைப்படத்தின் நூறாவது நாள் விழா காட்சிகள், பேசும் பட இதழிலிருந்து.
இரு பக்கங்களாக இடம் பெற்ற நிழற்படங்கள்..
1. முழுமையாக
http://i1146.photobucket.com/albums/...ps4a5ceabe.jpg
2. இரு பக்கங்களும் தனித்தனியாக
http://i1146.photobucket.com/albums/...psc4b368e4.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2ffc6546.jpg
நவநீதா பிலிம்ஸ் புகுந்த வீடு திரைப்படம் தமிழகமெங்கும் சிறப்பான வெற்றி பெற்றது. நூறு நாட்கள் ஓடிய இத்திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவப் படுத்தினார். அதனுடைய காட்சியைத் தான் மேலே பார்க்கிறீர்கள்.
நாலும் தெரிந்தவன் -1968
http://www.mayyam.com/talk/showthrea...HANDRAN/page16
'நாலும் தெரிந்தவன்' (1968)
படம் வெளி வந்த ஆண்டு: 1968
நடிகர், நடிகைகள்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலி தேவி, மனோகர், மனோரமா, வி.கே.ராமசாமி
இயக்கம்: ஜம்பு
ஒளிப்பதிவு: கர்ணன்
இசை: சுப்பையா நாயுடு
பாடல்கள்: கண்ணதாசன்
பக்கம் 16 இல் இதில் சம்பந்த பட்டவர்கள் விவரம் கதை சுருக்கம் எல்லாமே உள்ளது.
பாரதிக்கு அடுத்து ரவிக்கு ideal pair என்றால் காஞ்சனாதான். அதே கண்களுக்கு பிறகு இதில் கலக்கினார்கள். ஷம்மி கபூர் படங்களான professor ,பிரம்மச்சாரி எல்லாமே ஹிந்தியில் பார்க்கும் போது ஜாலியாக தோன்றினாலும் அவை என்ன genre என்று சிண்டை பிய்த்து கொள்ள வைக்கும். சிறிது காமெடி, சிறிது செண்டிமெண்ட், சிறிது என்டர்டெய்ன்மென்ட் ,அருமையான பாடல்கள், crazy டான்ஸ் என்று கலவையாக ,ஆனால் யோசித்தால் எதுவுமே பிரமாதமாக இருக்காது. ஆனால் நன்றாக ஓடி நற்பெயர் எடுத்து விடும்.அவற்றை remake செய்யும் போது ,யார் நடித்தாலும் பல்லிளித்து விடும்.
இந்த வகையில் ஒரு அருமையான காமெடி கருவை சுமாராகவே கையாண்டிருப்பார்கள். saving grace ரவியின் அருமையான நடிப்பு. நிறைய கோணங்களில் சிவாஜியை நினைவு படுத்துவார். வயதான ரோல் நடிக்கும் போது காதலிக்க நேரமில்லை முத்துராமன் பாணியில் underplay செய்து அசத்துவார்.
இந்த படத்தில் சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள் வழக்கமான ரவி பாணியில் பிரமாதமாக வந்திருக்கும்.கரும் புள்ளி SMS இசை. படு சுமார். கண்ணுக்குள் சிக்கி கொண்ட, பூவாய் பூவாய்,செல்ல மாமா,நிலவுக்கே, நரி ஒன்று என்று வானொலியில் கேட்டிருந்தாலும் படத்தின் இளமைக்கு தகுதியில்லாதவை.
இந்த படத்தில் நாகேஷ் பயங்கர உறுத்தல்.(இவர் குட்டிச்சுவர் பண்ணியது கொஞ்ச நஞ்சமா)காமெடி,கலகலப்பு காட்சிகள் படு சுமார். கதை சம்பத்த பட்ட காட்சிகள் நன்கு வந்திருந்தாலும் ,படத்தின் tone ,mood உற்சாகம் தர வேண்டிய படத்தில் இவை highlight ஆகவே தோன்றாது. இந்த அருமையான கருவை வைத்து சுமார் படத்தை கொடுத்து சுமார் வெற்றி படம் ஆக்கினார் நம்நாடு புகழ் ஜம்பு.
இதையே படு சுவாரஸ்யமான திரைகதை ,அற்புதமான காமெடி, இவற்றை வைத்து நடிகன் என்று பிரமாத படுத்தினார் வாசு.
ரவிச்சந்திரன் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படம் பின்னாளில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் 'பொல்லாதவன்' படமாக மீண்டும் ரீமேக் ஆகி வெற்றியடைந்தது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ரவிச்சந்திரனின் படங்கள் தமிழில் பின்னாட்களில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விஷயமல்லவா!
இந்த படத்தில் ரவியின் நடிப்பும், காஞ்சனாவின் அழகும் தூக்கி நிறுத்தியது. ரவியின் வித்யாசமான சுமார் படங்களில் ஒன்று.
அன்று கண்ட முகம்-1968
கதையை விட்டு சற்றும் அங்கே இங்கே நகராத (True to the story line ) ரக திரைக் கதை,காட்சியமைப்பு.. contemporary appeal நிறைந்த period போர்வையில் வந்த படம். கல்கி மூலக்கதை சற்றே தேவனின் வாசனை கொண்டது. கல்கி செக்ஸ் கதை எழுதினாலும் அதில் காந்தியம் ,மறியல், கதர் இல்லாமல் போகாதே. ராமகிருஷ்ணன் இயக்கி தயாரித்த ஐந்து லட்சம்,சிநேகிதி எல்லாமே சுவாரஸ்மான சுமார் வெற்றி படங்களே.
ஆத்மநாதன் என்கிற வக்கீல் தனது ஜூனியர் ஆக சேரும் காஞ்சனாவை நேசிக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தன் பணக்கார கட்சிகாரர் அழைப்பை ஏற்று ஊட்டி செல்லும் போது காஞ்சனாவையும் அழைத்து சென்று தன் ஆசையை வெளியிட, காஞ்சனா ஏற்று கொள்ளாமல் ,சிறிது அவகாசம் கோருகிறாள். ஒரு முறை வெளியில் செல்லும் போது ஒரு வாலிபன் கைதி உடையில் மயக்கமாய் இருப்பதை பார்த்து ,வீட்டுக்கு எடுத்து வந்து சிகிச்சையளிக்கிறாள். ராஜேந்தர் என்ற வாலிபன் கண் விழித்ததும் ஆத்மநாதன் கண்டு அதிர்ச்சியாகி ,தன்னையும் தன் அன்னையையும் தவிக்க விட்டு ஓடிய மூத்த அண்ணனே என்றும், ஒரு வெள்ளை அதிகாரி கொலை வழக்கில் தான் தண்டனையடைய காரணமானவனும் அவனே என கூறுகிறான்.தான் சிறையிலிருந்து தப்பித்தது அன்று கண்ட பெண்ணின் முகத்துக்காக என கூறும் போது ,அந்த முகமான காஞ்சனாவும், ராஜும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். போலீஸ் உடன் சில தனி நபர்களும் ராஜ் பின்னால் அலைய ,சிலர் அவனை கொல்லவும் முயல, பின்னர் உண்மை கொலையாளி ராஜின் நண்பனே என்றும், அந்த நண்பனை காக்க அவன் தந்தைதான் ராஜ் போலீசில் மாட்ட அல்லது தீர்த்து கட்ட அலைகிறார் என்று தெரிந்து பிரச்சினை தீர வேண்டிய சந்தர்ப்பத்தில் நண்பன் விபத்தில் மரணமடைய ,ஆத்ம நாதன் தம்பிக்கு தான் இழைத்த கொடுமைக்கு தற்கொலை செய்து கொள்கிறார். காஞ்சனா கோர்ட் டில் வாதாடி காதலனை மீட்டு சுபமாக்குகிறாள் முடிவை.
இதில் எனக்கு பிடித்தவை ரவியின் அருமையான நாலு சண்டை காட்சிகள் (ரவியின் சுறுசுறுப்பு கலந்த ஸ்டைலுக்கு ஜே )அக்கால சண்டை என்றால் கொஞ்சம் boxing ,கொஞ்சம் மல்யுத்தம், கொஞ்சம் ஜூடோ,அப்புறம் காலால் X பிடி,கைமுறுக்கல் இவைதான்..ரவி- ஜெயா மேடம் chemistry அருமை. பாடல்கள் இதயம் பொல்லாதது,கண் படைத்தான், வாடா மச்சான் இசை,படமாக்கம் அருமை.(வழக்கொன்று பாடல் சுமார் ,காட்சி ஜோர்).நாகேஷ்-ரவி இணைவு நடனம் எப்போதுமே களை கட்டும்.இதிலும் அப்படியே. இக்கால road chase படங்களின் சாயல் கொண்ட விறுவிறுப்பு. கடைசி கோர்ட் காட்சி படு matured ஆக ,sensible ஆக இருக்கும். வசனம் ,காட்சிகள் சில ரொம்ப surprise கொடுக்கும். ஜாக்ரதை என்று ஜெயா சொல்லி விட்டு கதவை உடனே தட்டி எச்சரிக்கையின்றி திறக்கும் ரவியை இதுதான் உங்க ஜாக்ரதையா என்று கேட்பது,நண்பர் வக்கீலி டம் நடந்து முடிந்ததற்கு உங்கள் அட்வைஸ் வேண்டாம். நடக்க போறதை பேசலாம் என்பது.இப்படி பல.ரவியின் constipation முக பாவம்,பேச்சு சிறையிலிருந்து தப்பி வந்த கைதியின் anxiety கலந்த கவலைக்கு படு பாந்தமாய் அமைகிறது.ஜெயா மேடம் superb .மற்றவர்கள் ஓகே .
பிடிக்காதவை -அவ்வப்போது உட்கார்ந்து விடும் லாஜிக் இல்லா காட்சிகள்.அசோகன் காதல் வெளியிடும் காட்சி. ரவியின் ஓவர் வளைசல் .
மொத்தத்தில் ரொம்ப வித்யாசமான ரவியின் படம். இயக்குனர் ராமகிருஷ்ணன், வசனம் (மாரா ),இசை (மாமா) பலத்துடன் ஜெயித்தார். (வெற்றி படமே)
Last edited by Gopal,S.; 20th June 2013
http://youtu.be/9WLCf9ij8jU
நாம் மூவர் படத்தில் சிங்கப்பூரு மச்சான் பாட்டும் ,அதற்கு ரவியின் நடனமும் எனக்கு பிடித்த ஒன்று. ரவி இந்த பாட்டுக்கு ஆடும் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை. side ways step எடுக்கும் நேர்த்தி, partition மேல் ஏறி எடுக்கும் steps என்று கிழித்திருக்கிறார். பாட்டும் பிரமாதம்.
இந்த டான்ஸ் steps ,expressions ,grace ,style ,Agility எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு அள்ளுகிறது.
நான்கு சுவர்கள் படத்தில் ரவிக்கு சுவையான பாத்திரம். ஓரளவு நல்லதனம் கொண்ட, அனைவரையும் அணைத்து செல்லும் குணம்.வாணியின் காதலை பற்றி குற்ற உணர்வு இருக்காது. அவருடைய performance அதிகமாய் ,ஸ்டைல் குறைவாய் .இருக்கும். இந்த கலர் பட ,வெள்ளிவிழா திரை உலக இளவரசன் அழகு,நடிப்பு எல்லாமே கூட மிளிர்வதற்கு காரணம் கூட நடித்தவரின் குறைபாடுகள்,இவற்றை இன்னும் தூக்கி கொடுக்கும்.
பாலசந்தர் விரும்பியே ,இவருக்கு ஜோடி கொடுத்து, நடிக்க நிறைய வாய்ப்பு கொடுத்து,கடைசியில் முக்கிய வில்லனை முடிக்கும் பொறுப்பையும் வழங்கி ,தான் யாரை நாயகனாய் வரித்தேன் என்று காட்டி விடுவார்.
இப்போது பார்க்கும் போது ,கொஞ்சம் பட்டி தட்டி ,பஞ்சர் போட்டு ,ஒடுக்ககளை சரி பார்த்திருந்தால் எங்கோ போயிருக்க வேண்டிய படம்.
ரவிதான் படத்தின் பலம். சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் பண்ணி காட்ட கே பீ ,இந்த படத்தில் வேணாம் என்று சொல்லி,மூன்று முடிச்சில் உபயோக படுத்தி ,யாரையோ தூக்கி விட்டார்.
ரவியை வைத்து மூன்று முடிச்சுகள் என்று படம் ஆரம்பித்து ,ட்ராப் ஆனது.
'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்
http://74.208.147.65/ahtees/admin/mo...17_Malathi.jpg
நடிகர்கள்--'கலை நிலவு' ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்
படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970
தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்
பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்
மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்
இசை: "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.
திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். கலைநிலாவும்,காதல் மன்னனும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.
'கதை:
ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும்,பெண் பித்தனாகவும் அலைய சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.
இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.
ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).
ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.
K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.
பாடல்கள்:
"கற்பனையோ கைவந்ததோ" என்ற பி.சுசீலாவுடன் இணைந்து இளம் S.P.B. யின் குழையும் காந்தக் குரலில் ஒலிக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்
"சிடு சிடு சிடு சிடுவென...என்ற S.P.B., பி.சுசீலாவின் குரல்களில் ஒலிக்கும் உற்சாகப் பாடல்.
"எங்கே என் கிண்ணங்கள்" என்ற T.M.S இன் ஜாலி பாடல் (ராதிகா...தேவிகா...ஓடிவா... என்று வரிசையாக பெண்களின் பெயரை உச்சரிப்பது அழகு. இந்த டைப் பாடல்கள் ரவிக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கின்றன!)
http://www.buycinemovies.com/images/...289-vcd-37.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-25.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/9-6.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-24.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-13.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-13.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-19.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-12.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/7-7.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'ஸ்மார்ட் ஹீரோ', 'கலை நிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் திரைப்படப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. காதலிக்க நேரமில்லை - 27.2.1964 - காஸினோ, கிருஷ்ணா, உமா (210 நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம்)
2. இதய கமலம் - 27.8.1965 - சித்ரா, மஹாராணி, உமா, ராம் (100 நாட்களுக்கு மேல் ஒடிய சூப்பர்ஹிட் படம்)
3. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி (100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் படம்)
4. குமரிப்பெண் - 20.5.1966 - காமதேனு, முருகன், மஹாலட்சுமி, ஜெயராஜ் (100 நாட்களுக்கு மேல் ஓடிய நல்ல வெற்றிப்படம்)
5. தேடி வந்த திருமகள் - 18.6.1966
6. எங்க பாப்பா - 8.7.1966 - பிளாசா, பிராட்வே, சயானி, சீனிவாசா
7. கெளரி கல்யாணம் - 11.11.1966
8. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி - 16.12.1966
9. தங்கத்தம்பி - 26.1.1967 - பிரபாத், கிருஷ்ணவேணி, சரஸ்வதி, தங்கம்
10.மகராசி - 14.4.1967 - கிருஷ்ணவேணி, பிராட்வே, உமா
11. அதே கண்கள் - 26.5.1967 - வெலிங்டன், பிரபாத், ராக்ஸி, ராம் (100 நாட்களுக்கு மேல் ஓடிய பெரிய வெற்றிப் படம்)
12. வாலிப விருந்து - 2.6.1967 - சாந்தி, பத்மநாபா, மஹாலட்சுமி
13. மாடி வீட்டு மாப்பிள்ளை - 23.6.1967 - பாரத், சயானி, காமதேனு, லிபர்ட்டி
14. எங்களுக்கும் காலம் வரும் - 7.7.1967 - கெயிட்டி, கிருஷ்ணா, மஹாலட்சுமி
15. எதிரிகள் ஜாக்கிரதை - 28.7.1967 - கெயிட்டி, கிருஷ்ணா, சயானி
குறிப்பு:
1. நடிகர் திலகத்துடன் ரவிச்சந்திரன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.
2. குமரிப்பெண் தென்னகமெங்கும் 6.5.1966 அன்று வெளியானது. சென்னையில் மட்டும், இரண்டு வாரங்கள் கழித்து, 20.5.1966 அன்று வெளியானது.
கலை நிலவு வளரும் ......
அன்புடன்,
பம்மலார்.
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.
http://t3.gstatic.com/images?q=tbn:A...PSSrNxopGHj7mq
http://t2.gstatic.com/images?q=tbn:A...aCG9xKVrWFuEwC
படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
இசை: T.K.ராமமூர்த்தி.
ஒளிப்பதிவு: G.விட்டால் ராவ்.
சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
நடன அமைப்பு: சின்னி-சம்பத்
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
தயாரிப்பு: ஆதிநாராயணன்.
பேனர் : விவிதபாரதி
ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.
கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.
இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.
ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.
படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.
ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.
பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..
பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)
இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.
சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).
கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)
பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.
திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.
O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.
இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.
கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.
பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.
"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...
என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.
பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.
ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)
இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.
'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்
http://123tamilforum.com/imgcache2/2...ondi0001-1.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/1-11.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-12.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/3-9.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/5-8.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-10.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/7-5.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/8-5.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
ரவி சந்திரன் என்ற அழகிய 1964 இன் இளமை சுனாமி.
17/10/1952 இல் நடந்த அதிசயத்துக்கு சற்றும் குறையாத மற்றொரு அதிசயம் 27/2/1964 இலும் நடந்தது. அதுதான் முதல் படத்திலேயே ஒரு நாயகன் இமாலய வெற்றி பெற்று தமிழகம் முழுதும் தன் ரசிகர்களாக திருப்பிய விந்தை. ரவி சந்திரன் என்ற இனிய புயல் சுமுகமாக கரை கடந்தது. இது ஒரு வண்ண மயமான வாண வேடிக்கை. அதுவரை senior நடிகர்களின் மோகத்தில் மூழ்கியிருந்த தமிழகம் ,தமிழ் பட உலகம் சற்றே stale ஆக போனதை உணர்ந்து, தங்களுக்கு ஹிந்தியில் அன்றிருந்த musical romance trend படி sweet nothings பேச ஒரு இளம் அழகிய நாயகன் வருகையை உணர்ந்தது. அடுத்த நான்கு வருடம் அந்த அலை ஓயவே இல்லை.அது நம் சீனியர் நாயகர்களையும் தாக்கி ஒரு அன்பே வா கொடுக்க வைத்தது. நடிகர்திலகத்தை இளைக்க வைத்து தங்கையின் கலாட்டா கல்யாணத்தை நடத்தி ராஜாவாக்கியது.
அப்போது திலகங்களை தவிர ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் இவர்களாலோ ,முன்னேறி கொண்டிருந்த முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜனாலோ கனவிலும் நினைக்க முடியாத ஒரு status மற்றும் மாற்றம்.
இத்தனைக்கும் அபார அழகு,துரு துருப்பு இருந்ததென்றாலும், நடிப்பு திறமை சுமார்தான்.சிவாஜி ஸ்டைலை பின்பற்றி பொழுது போக்கு படங்கள்தான் கொடுத்தார். ஆனால் நடனத்தில் ஒரு style ,grace ,unique execution இவற்றினால் கலக்கினார். இவர் வரவில்லையென்றால் ஒரு நான், ஒரு அதே கண்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.madras to pondichery படத்தில் இவர் கலக்கிய கலக்கலில் 10% கூட அன்றைய இளம் அமிதாப் பச்சன் Bombay to Goa படத்தில் கொடுக்க இயலவில்லை. நான்,அதே கண்கள் remake ஆகியிருந்தாலும் ,அன்று ரவி கொடுத்த உணர்வை கொடுக்க அகில இந்தியாவிலும் ஆளில்லை.
டான்ஸ் பண்ணுவதிலும் மிக மிக கஷ்டமான movements ,படு பிரமாத படுத்தி விட்டு ,சாதாரண அசைவை சொதப்புவார்.ஆனாலும் நமக்கு இவர் படம் பார்க்கும் போது ஒரு pleasantness இழையோடும். கலாட்டா பண்ணி கொண்டே நடக்கும் இளமை திருவிழா.காதல் காட்சிகளில் ரசனை இருக்கும். அத்து மீறிய crassness அறவே இருக்காது.
நடிப்பு பற்றி யார் கவலை பட்டது?அதை கொடுக்கத்தான் நமக்கு நடிப்பு அசுரன் நடிகர்திலகம் இருந்த போது ,அதை கொடுக்க இன்னொருவர் எதற்கு என்று ரவியை ரசித்தோம்.
ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.
சிவாஜி முதல் ரஜினி வரை தொடரும் சில ஸ்டைல் களின் மத்திய கால சங்கிலி இவர்.
ரவி சந்திரன் இளைஞர்களை ஈர்த்த ரகசியம்.
தெரிந்த விஷயங்களை inhibitions இல்லாமல் செய்த சரளம். காட்சிக்கு prepare ஆகும் ஒரு pretensions இருக்காது.
நிறைய imperfections கொண்ட நடிப்பு பாணி(சில சமயம் Dumb தான்.). நிறைய அமெச்சூர் தனம் இருந்தாலும்,அன்றைய தினம் தமிழ் பட உலகின் இறுக்கத்தை தளர்த்தி இளக வைத்தது இவர் படங்களே.
கண்ணுக்கு தெரியாதா போன்ற பாடல்களில் ,ஒரு infection போல நம்மை தொற்றி கொள்ளும் உற்சாகம் ,நம் inhibition துறந்து குதியாட்டம் போட தோன்றும்.
படிப்பறிவு சிறிது அதிகரிக்க தொடங்கிய காலம்.அப்போது கல்லூரிகளில் நுழைந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு கட்டற்ற சுதந்திரம் என்ற உணர்வு மிகுந்து . பொறுப்பு, குடும்பம், கடமை என்பதை மீறி கொண்டாட்ட மனநிலை எதிர்பார்த்த இளைஞர்கள் , இந்த sweet nothings விஷயங்களில் கவர பட்டு பைத்தியமானதில் என்ன ஆச்சரியம்?
நிஜமான handsome இளைஞரே இளமை துடிப்புடன் வந்த அதிசயம்.அதுவரை ஏ .வீ .எம் .ராஜன் போன்றவர்களை கல்லூரி மாணவர்களாக பார்த்தவர்கள் கண்களுக்கு பேராறுதல்.
ஒரு ஹிந்தி பட range இல் இங்கேயும் ஒரு இளைஞர்.
காதலிக்க நேரமில்லை ஒரு உண்மையை முகத்தில் அறைந்து சொன்னது நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா பாட்டில். முத்துராமன் அசைவுகளை கவனித்து ,ரவியின் உற்சாகமான style நடிப்பு,நடனம் பார்த்த இளைஞர்கள் ,தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற எதை தேர்ந்தெடுப்பது என்று உணர்ந்தார்கள்.
நான் இதை எழுதும் போது ,அன்றைய காலத்திற்கே சென்று ,அந்த கொண்டாட்ட மனநிலைகளை உணர முடிகிறது.
கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,
தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே,
உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.
கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்
எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.
காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,
எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,
நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.
நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.
'சத்தியம் தவறாதே' (20.12.1968)
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க" மிக மிக மிக அரிய பாடல் முதன் முதலாக இணையத்தில்.
'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா (பணமா பாசமா புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழிமாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)
'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.
இப்படத்தின் vcd,dvd எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே
"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...
பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை சில வருடங்களுக்கு முன் 'விஜய்' தொலைக்காட்சியில் போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.
இதோ... அந்த அற்புதமான "முத்துக்குளிப்பவரே"...பாடல் கண்டு மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?feature...&v=0pj5iZOzX74
அன்புடன்,
வாசுதேவன்.
Madam Shardha
கொலை.... கொலை.... தினமொரு கொலை...
"அதே கண்கள்"
உங்களுக்குப்பிடித்த ரவிச்சந்திரனின் ஐந்து படங்களைச்சொல்லுங்கள் என்று யாரைக்கேட்டாலும் சரி. அவர்கள் சொல்லும் ஐந்து படங்களில் மற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ‘அதே கண்கள்’ படம் இருக்கும். திகில், மர்மம், பொழுதுபோக்கு, இனிய பாடல்கள், அற்புதமான வண்ண ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். ஒரு பணக்காரரின் நான்கு வாரிசுகள். மூத்தவர் படம் துவங்கியதுமே கொல்லப்படுகிறார். கொன்றது யாராக இருக்கும் என்று துப்புத்துலங்கும்போதே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இறந்த மூத்தவருக்கு அடுத்தவர் அசோகன், அதற்கடுத்தவர் எஸ்.வி.ராமதாஸ். இவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்ப டாக்டர் பாலாஜி. இவர்களில் கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை நடக்கிறது. வெள்ளை மஃப்ளரால் இறந்தவர்கள் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதால், எப்போதும் வெள்ளை மஃப்ளர் அணிந்திருக்கும் பாலாஜியா?. இவர்களோடு வயதான துறவி போல தங்கியிருக்கும் கிழவனா?. மர்மம்... மர்மம்... போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறது.
வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் (இறந்துபோன மூத்தவரின் மகள்) காஞ்சனா ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் குடும்ப பங்களாவில் அடிக்கடி நடக்கும் கொலை அவரை பயமுறுத்துகிறது. அவர்களின் துணைக்கு வந்து தங்கியிருப்பதோடு, கொலையின் மர்மத்தையும், கொலையாளி யார் எனவும் கையும் களவுமாகப்பிடிக்கத் துடிக்கும் அவரது காதலன் ரவிச்சந்திரன். மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முன்பு ராமதாஸும் கொல்லப்படுகிறார். இதற்குமேலும் தாமதித்தால் இருப்பவர்களையும் இழக்க நேரிடும் என்று கதாநாயகன் ரவி முழுமூச்சாக இரவு முழுதும் விழித்திருக்க, யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மாளிகையின் மேலிருக்கும் வட்ட வடிவ கண்ணாடி கதவு மெல்ல மூடுகிறது. அதிர்ந்து போய் மெல்ல மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, ஓ.... அதோ... ரவியை முன்னே போகவிட்டு, கதவோடு ஒட்டியிருந்தவன மெல்ல கையில் மஃப்ளரோடு பின் தொடர... நம் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. ( நமக்கு இந்தக் காட்சியில் "ரவி, கொலைகாரன் பின்னாடியே வரான் பாருங்க" என்று கத்ததோன்றும்).
நாம் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பயங்கர சண்டை. முகமூடியணிந்திருக்கும் கொலையாளியின் முகமூடியைக்கிழிக்க ரவி முயற்சிக்க, அவன் தப்பியோடி விடுவான். ஆனால் அவன் கண்கள் மட்டும் அவர் மனதில் அப்படியே பதிந்திருக்கும். விசாரணையின்போது அந்தக்கண்களை வைத்துக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொருவர் முகத்தையும் மறைத்து கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒருவன் கண்களில் மட்டும் கொலைவெறி. 'இதோ... அதே கண்கள்... அதே கண்கள்' என்று ரவி கத்த, கொலையாளி மாட்டிக்கொள்கிறான். அது யார் என்று தெரியும்போது நமக்கே அதிர்ச்சி. இத்தனை கொலைகளையும் செய்தவன் இவனா?. (எவன்?. படம் வந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் கூட பார்க்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆகவே சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்).
ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், பாலாஜி, நாகேஷ், ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி, ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி, டைப்பிஸ்ட் கோபு, பி.டி.சம்பந்தம் என நட்சத்திரக்கூட்டத்துக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு காஞ்சனாவின் தோழிகள் பட்டாளம் வேறு. சஸ்பென்ஸைக்கூட்டுவதாக நினைத்துக்கொண்டு நடுராத்திரியில் கருணாநிதி, கையில் கத்தியோடு குரல் எழுப்புவதையெல்லாம் காட்டி குழப்ப வேண்டுமா?. அதுபோலவே நடுராத்திரியில் கீதாஞ்சலி பாடும் "வா அருகில் வா" பாட்டும் அதற்கான காட்சியும்.
படத்துக்கு திருஷ்டிப்பொட்டு எதுவும் கிடையாதா? இதோ இருக்கிறதே. நாகேஷின் மகாமட்டமான காமெடி. பெண்வேடம் போட்டுவரும் அவர் பின்னால் பி.டி.சம்பந்தம் அலைவதெல்லாம் ஒரு காமெடியா?. அருவருப்பு.
'அதே கண்கள்' என்ற படத்துக்கு ஏ.வி.எம்.செட்டியார், வேதாவை இசையமைப்பாளராக போட்டார். அந்தப்படம் ஒரு திகில் படமென்பதால் வேதாவைப்போட்டால் நன்றாக இருக்கும் என்று அவரது மகன்கள் விரும்பினர்.
அப்போது வேதாவை அழைத்து செட்டியார் சொன்னார்: "இங்க பாருப்பா, நீ மற்ற சில கம்பெனி படங்களுக்கு (மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சொல்லவில்லை) இந்திப்பட மெட்டுக்களை காப்பியடித்து பாட்டுப்போடுறேன்னு எனக்கு தெரியும். நானும் கேட்டிருக்கேன். ஆனால் என் படத்துக்கு அத்தனை பாடல்களுக்கும் நீ சொந்தமாகத்தான் மெட்டுப்போடனும். என் நிறுவனத்துக்கென்று ஒரு பேர் இருக்கு. நாளைக்கு ' என்ன செட்டியாருமா இப்படீ?'ன்னு யாரும் பேசிடக்கூடாது. என் பையன் களோட விருப்பத்தால்தான் உன்னைப்போட்டேன். சொந்தமாக மெட்டுப்போட முடியலைன்னா சொல்லிடு. நான் வேறு இசையமைப்பாளரை வச்சிக்கிறேன்" என்று கறாராக பேசி விட்டார்.
விளைவு..?. 'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா. அத்தனையும் SUPER HIT ஆயின. (இந்த விவரம் ஏ.வி.எம்.குமரன் ஒரு TV பேட்டியின்போது சொன்னது).
முதல் பாடல், காஞ்சனாவும் தோழிகளும் குடிசைப்பகுதியை சீரமைக்கும்போது பாடும் "பூம் பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி" பாடலில் காஞ்சனா குழுவினர் கஷ்டப்பட்டு ஆடும் ஆட்டத்தை விட நம்மைக்கவர்வது, மாட்டுக்காரன் சின்னச்சின்ன அசைவுகளுடன் அசால்டாக ஆடும் ஆட்டம்தான். இப்பாடலை P.சுசீலா பாடியிருப்பார்.
கிளப்'பில் காஞ்சனா கோஷ்டியை டீஸ் செய்து ரவி (TMS) பாடும் "கண்ணுக்குத் தெரியாதா" பாடல், வேகமான அசைவுகளுடன் கூடிய ரவிச்சந்திரன் பிராண்ட்.
ரவி & நாகேஷ் பாடும் "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்" பாடலில், நாகேஷ் மாடிப்படிகளில் படுவேகமாக, அதே சமயம் ரிதம் தவறாமல் இறங்கி வரும் காட்சி பிரபுதேவா, விஜய், சிம்பு காலத்திலும் கூட நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.
பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்ட "ஓ...ஓ... எத்தனை அழகு இருபது வயதினிலே" பாடல் வேதாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக துவக்கத்தில் வரும் அந்த ட்ரம்பெட் இசை அட்டகாசமான துவக்கம்.
"வா அருகில் வா" பாடல் யார் நீ படத்தில் வரும் 'நானே வருவேன்' பாடலை நினைவுபடுத்தும். கடற்கரையில் கீதாஞ்சலி நீச்சல் உடையில் பாடியாட அசோகன் ரசித்துக்கொண்டிருக்கும் "என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே" பாடல், அதிகம் பாப்புலராகாத, அதே சமயம் அழகான பாடல். ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.
திகில் படத்துக்கேற்ற திகில் செட். இந்திப்படத்துக்காகப் போடப்பட்ட இந்த செட்டைப் பயன்படுத்தி ஒரு தமிழ்ப்படமும் எடுக்க வேண்டும் என ஏ.வி.எம். செட்டியார் சொன்னபோது, இந்த செட்டுக்கு வேறெந்த கதையையும் விட திகில், மர்மம் நிறைந்த கதைதான் ‘ஸுட்’ ஆகுமென் எல்லோரும் அபிப்ராயம் சொல்ல அதன்பின்னரே இந்தக்கதையை செட்டியார் படமாக்கத்துணிந்தாராம்.
A.C..திருலோக்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' படம் (உதவி இயக்குனர் SP.முத்துராமன்) பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பி, 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
சிவாஜிக்கு அடுத்து கேமரா கண்களின் பேரழகன் ரவி. ரவியின் நடிப்பு பாணி சிவாஜியின் ஸ்டைல் தழுவிய ராமண்ணா படங்கள்.
இருவரின் உருவம், ஸ்டைல்,grace ,elegance ,poise , flow இவற்றை உணர கீழ்கண்ட பாட்டுகளின் வீடியோ பாருங்கள். சொல்ல வருவது புரியும்.
சிவாஜி
https://www.youtube.com/watch?v=ORqLDJZ6WJk
ரவி
https://www.youtube.com/watch?v=9dqQOjkJxkM
கல்யாண மண்டபம் படத்தில் பீ.பீ.எஸ் -சுசிலா இணைவில் (Parthasarathy Music) ரவிச்சந்திரன் -மாலதி இணையில்.(அசப்பில் ஈ.வீ.சரோஜா மாதிரி இருப்பார்). ரவி ,நடிகர்திலகத்துக்கு அடுத்த தமிழக ஆணழகன். இந்த உடையிலும் அசத்தல். பாட்டுக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசிக்கிறார். படு பாந்தமான பாடல். படமாக்கம். எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.
https://www.youtube.com/watch?v=KwAm_UuufDc
நூறாயிரம் ஹிட்ஸ் கண்டு ,பல்லாயிரமாக வளர்ச்சி காணவிருக்கும் ,ஐந்து நட்சத்திர திரியான "திரையுலக இளவரசன்", "கலை நிலவு " ரவி சந்திரன் திரிக்கு, வாழ்த்துக்கள். பல்வேறு பதிவர்கள் பங்களிப்புடன் நாளும் புது மெருகு கண்டு ,செழுமை பெற்று வரும் இளமை திரிக்கு எங்கள் வாழ்த்துக்கள்
From GG's Treasure Island with Love!
டப்பாங்குத்து டான்ஸ் பாடல்கள் !!
மனதை மகிழ்விக்கும் எத்தனையோ வகை ஆடல் பாடல்கள் இருந்தாலும் ஒரு இலக்கண;வரையறைக்குள் வராமல் மனம் போன போக்கில் இசைக்கும் பாடல் வரிகளுக்கும் ஏற்றபடி இடுப்பை அசைத்து கைகால்களை வீசி குதித்தாடும் டப்பாங்குத்து தரும் மகிழ்ச்சியே தனிதான் !
எனக்கு மிகவும் பிடித்த நான் பொழுதுபோக்கு சித்திரத்தில் உற்சாகத் துள்ளலான இப்பாடலுக்கு கலைநிலவு ரவிச்சந்திரன் ஆடியிருக்கும் விதம் கலக்கலே !!
Though this Silver Jubilian Star could not shine bright he was the star dancer at his times and his original approach of dancing to the tune with a perfect rhythm was commendable even today when we see his dance-song sequences in Channels!! This sort of foot tapping dancing I have also observed with the thespians Chandrababu Shammi Kapoor and the Global dancing supremo Gene Kelly of Singing in the Rain fame!
https://www.youtube.com/watch?v=PZuauTLKPUs
https://www.youtube.com/watch?v=vNiSTIT-Uyo
https://www.youtube.com/watch?v=_o3y7fvoVNM
https://www.youtube.com/watch?v=Aus1PA5-SyI
'காவியத்தலைவி'- By Shardha.
சௌகார் ஜானகி இரட்டை வேடங்களில் நடித்து சொந்தமாகத்தயாரித்த படம் இது. அம்மா, மகள் என இரட்டைவேடம். அம்மா யார் என்று மகளுக்குத்தெரியாது (கிளைமாக்ஸ் வரையில்). அதே சமயம் மகள் யாரென்று அம்மாவுக்குத்தெரியும். இப்படியான ஒர் வித்தியாசமான கதை. இந்தியில் 'மம்தா' என்ற பெயரில் வெளியான படத்தை தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் திரைக்கதை வசனம் இயக்கத்தில் படமாக்கியிருந்தனர். இரட்டை வேடம் என்பதாலும், சொந்த தயாரிப்பு என்பதாலும் படம் முழுக்க சௌகார் ஜானகியே வியாபித்து இருந்தார்.
அம்மா சௌகாரின் இளம் வயது காதலனாகவும், மகள் சௌகாரின் வளர்ப்புத்தந்தையாகவும் ஜெமினி கணேசன் நடிப்பில் கொடிகட்டிப்பறந்திருந்தார். இந்தப்படத்துக்காகத்தான் 1970-ம் ஆண்டின் சிறந்த நடிகராக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார். 1970 அவருக்கு பல வகையில் சிறப்பான ஆண்டு. ஆம், அந்த ஆண்டுதான் அவருக்கு மத்திய அரசின் பெருமைக்குரிய 'பத்மஸ்ரீ ' விருதும் வழங்கப்பட்டது.
இரண்டாவது (மகள்) சௌகாரின் ஜோடியாகவும், ஜெமினி கணேஷின் ஜூனியர் வழக்கறிஞராகவும் ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடித்ததாலோ என்னவோ சௌகாரும் நல்ல துடிப்பான நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருந்தார். ரவிச்சந்திரன் - சௌகார் ஜோடிக்கு ஒரு டூயட் பாடலும் உண்டு. இளிய சௌகாரின் உண்மையான அப்பாவாக எம்.ஆர்.ஆர்.வாசு நடித்திருந்தார். (வாசுவுக்கு பைஜாமா, ஜிப்பா, ஷெர்வாணி அணிவித்து அப்படியே வடநாட்டு சாயலை உண்டாக்கியிருக்க வேண்டுமா?). ஜெமினியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்கும் சௌகாரிடம், அவரது வருங்கால மருமகனைக்காட்ட, மேஜையின் கண்ணாடி வழியே பார்க்க வைத்திருப்பது போன்ற இடங்களில் பாலச்சந்தர் தெரிகிறார்.
கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வடநாட்டு சாயலில் அமைந்த
'என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு' பாடலை சுசீலா ரொம்ப அனாயாசமாகப் பாடி அசத்தியிருந்தார்.
ஜெமினி - சௌகார் டூயட் பாடலான (ஆனால் சௌகார் மட்டுமே பாடுவார்)
'கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்'
அன்றைய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.
ரவிச்சந்திரன் - சௌகார் ஜோடியின் டூயட் பாடலான
'ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ.... ஆறேழு நாட்கள் போகட்டும்' பாடலை அன்றைய இளம் எஸ்.பி.பி.யும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருந்தனர். (சௌகார் ஜானகியை 'பெல்பாட்டம் பேண்ட்'டில் எல்லாம் பார்ப்பதற்கு கொஞ்சம் கண்கள் உறுத்தத்தான் செய்தது).
இவை எல்லாப்பாடல்களையும் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்த பாடல், பார்ட்டியில் இளம் சௌகார் தன் தாயை நினைத்துப் பாடும்...
'ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்' என்ற பாடல்தான். பி.சுசீலாவின் மாஸ்ட்டர் பீஸ்களில் ஒன்று. அதில்'என்னுயிர் தாயே நீயும் சுகமா' என்ற வரிகளின்போது எழும் கோரஸ் வயலின் இசை, சட்டென்று நிற்கும்போது நம் உடம்பே சிலிர்க்கும். அதிலும் கடைசியாக வரும் சரணத்தின் முடிவில்....
'வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த
வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்... மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்..'
சுசீலாவின் குரலோடு எழும் வயலின் கூட்டத்தின் இசைவெள்ளம் அப்படியே பயணித்து அடங்கி ஓயும்போது... மழையடித்து ஓய்ந்தது போல் இருக்கும். எம்.எஸ்.வி... மனிதரா அவர்? இல்லை பிரம்ம ராட்சஸன். என்னவெல்லாம் சாதித்துவிட்டு எப்படி ஒண்ணுமே தெரியாதவர் போல அவரால் இருக்க முடிகிறது.
1970 தீபாவளியன்று சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், காவியத்தலைவி, மாலதி, சுகுண சுந்தரி ஆகிய படங்கள் வெளியாயின. அவற்றில் முதல் மூன்று படங்கள் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின. மாலதி சுமாரான வெற்றியடைந்தது.
ராகவேந்திரன்
சகோதரி சாரதா அவர்களின் காவியத்தலைவி படத்தைப் பற்றிய குறிப்புகள் அப்படத்தைக் கண்முன்னே கொண்டு நிறுத்துகின்றன. எம்.ஆர்.ஆர். வாசுவின் அற்புத நடிப்பாற்றலில் வெளிவந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த நடிகர் உச்சத்தில் வந்திருக்க வேண்டியவர். சில தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகி பல வாய்ப்புகளை இழந்தார். போதாக்குறைக்கு காங்கிரஸ் மேடைகளில் பேச்சாளராகப் பங்கேற்று ஊர்ஊராகச் சென்றதில் படவாய்ப்புகள் நழுவியதும் ஒரு காரணம். காங்கிரஸுக்காக வாழ்க்கையைத் தொலைத்த கலைஞர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர் எம்.ஆர்.ஆர்.வாசு.
1970ம் ஆண்டைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக தீபாவளி 1970ல் வெளிவந்த 4 அசல் படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நான்கிலும் ஒரு கதாபாத்திரம் குடிகார கதாபாத்திரம். நான்கிற்கும் இசை மெல்லிசை மன்னர். சுகுண சுந்தரி மொழி மாற்றுப் படம்.
அண்ணா சாலையில் மாலதி வெலிங்டனிலும், காவியத் தலைவி மிட்லண்ட்டிலும், சொர்க்கம் தேவி பாரடைஸிலும், எங்கிருந்தோ வந்தாள் சாந்தியிலும் வெளியாயின. மாலதியில் கற்பனையோ கைவந்ததோ என்ற அற்புதமான பாடல் இடம் பெற்றது. மற்றொரு டூயட்டான சிடுசிடு என்ற பாடல் பார்க்க நெருடலாக இருக்கும். ஜெமினி சரோஜாதேவி இருவரும் பைக்கில் அமர்ந்து போகும் போது வரும் பாடல். முக்கால்வாசி பேக் ப்ரொஜக்ஷன். சரோஜாதேவி சற்று முதிர்த் தோற்றத்தில் சுடிதாரில் கையை காலை ஆட்டி வண்டியிலேயே டூயட் பாடு்ம் காட்சி தற்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். ஜெமினி வயதாகி டூயட் பாடியதை எவரும் எந்தப் பத்திரிகையும் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வயதாகி டூயட் பாடியதாக விமர்சிக்கப் பட்ட ஒரே கலைஞர் நடிகர் திலகம் மட்டுமே. மற்றவர்கள் எவ்வளவு வயதாகி டூயட் பாடினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
மன்னிக்கவும் கருத்து ஓட்டத்தில் பாதை மாறிவிட்டிருக்கிறது. மீண்டும் ரவிச்சந்திரன் படங்களுக்கு வருவோம். ரவி நடித்து சில படங்கள் மறு வெளியீட்டில் திரையிடப்படவில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மயிலாடும் பாறை மர்மம், அன்னை சொன்ன சொல், துள்ளி ஓடும் புள்ளி மான், பொய் சொல்லாதே, சத்தியம் தவறாதே போன்றவையாகும். இவற்றில் துள்ளி ஓடும் புள்ளி மான் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்ததோடு சரி, அதற்குப் பின் அப்படம் மறந்தே போய் விட்டது.
மற்ற படங்களை யாராவது பார்த்திருந்தால் அவர்கள் இங்கு அதைப் பற்றி எழுதினால் நலம். சாரதா அவர்கள் பார்த்திருப்பார்களா என தெரியவில்லை. பார்த்திருந்தால் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
Ravichandran (Tamil actor)
From Wikipedia, the free encyclopedia
Born B.S. Raman
1939-40
Kuala Lumpur, Federated Malay States
Died 25 July 2011
Chennai, Tamil Nadu, India
Occupation Actor, director, Agriculturist
Years active 1964–2011
Spouse(s) Vimala (divorced)
Sheela (divorced)
Ravichandran (died 25 July 2011) was a Tamil film actor who played lead hero roles in Tamil movies from 1964-1979. He has also acted in supporting roles from 1986, and directed a few films.[1][2] He was given the title of Kalaingnar Thilagham in many of the on-screen credits of films starring him in the lead role. He was, also, called "Puratchi Kalaignar" (Refer: Anandha Bairavi Tamil Movie Title Scene). Before entering cine-field, during his studies in Trichy, he has acted in two dramas, namely., "AanaiyidungalAnna" and "Udhaya Suriyan". After entering cine-field, he has acted in two dramas, namely, "Mapplley Yen Magalaik Kadhali" and "That Man from Poonthamallee". In the drama "That man from Poonthamallee", he performed in double role and Thirumuruga Kirupanandha Variyar, who presided over the drama in Vellore, has appreciated and awarded a title "Nadaga Sigamani". He has, also, acted in a TV Serial namely., GEE boom ba in 1986. During his tenure of acting, his fans, journalists, movie-directors/producers have given many titles, viz., Kalai Ulaga Ilavarasar, Kalai Nilavu, Romantic Hero, Velli Vizha kathanayagan, Vannap Pada Nayagan, Evergreen Hero, Chennai MGR, Kalaignar Thilagam, Style King, Stunt Man an, Bhagdath Perazhagan, Kalai chelvan, Pudhumai Thilagam etc. He was much affectionate with his fans.
Contents [hide]
1 Life
2 Filmography
3 References
4 External links
Life[edit]
Ravichandran was born B.S. Raman in Kuala Lumpur, capital of the Federated Malay States. He moved to Tiruchirappalli, India in 1951, and studied at the St. Joseph's College. He was married twice; his first marriage was to Vimala, with whom he had a daughter, Lavanya, and two sons, Balaji and Hamsavardhan. There after, he married Malayalam actress Sheela, and had a son George. His sons Hamsavardhan and George also took up acting as a career, with Hamsavardhan starring in the film Manthiran, directed by Ravichandran himself. Lavanya is married and has 2 daughters.
The final movie is Theri as a protogonist.
Filmography[edit]
Year Film Role Language Director Co-stars Notes
1964 Kaadhalikka Neramillai Ashok Tamil C. V. Sridhar R. Muthuraman, Kanchana, Rajashri 1st Movie
1964 Nalvaravu Tamil Charlie / Manian Rajashri, Nagesh (actor)
1965 Idhayak Kamalam Tamil Srikanth K. R. Vijaya
1966 Gowri Kalyanam Tamil K. Shankar Jaishankar, Jayalalithaa
1966 Kumari Penn Tamil T. R. Ramanna Jayalalitha
1966 Motor Sundaram Pillai Tamil Balu Sivaji Ganesan,Jayalalithaa , Sivakumar
1966 Madras to Pondicherry Tamil
1966 Naam Moovar Tamil Jaishankar
1966 Kalyana Mandapam Tamil
1967 Adhey Kangal Bhaskar Tamil A. C. Tirulokchandar Kanchana, Sheela Remade in Telugu Simultaneously as "Ave Kallu"
1967 Maadi Veetu Mapillai Tamil Jayalalithaa
1967 Magaraasi Tamil Jayalalitha
1967 Naan Tamil Muthuraman, Jayalalithaa
1967 Ninaivil Ninraval Tamil
1967 Thedi Vantha Thirumagal Tamil S. S. Rajendran
1967 Thanga Thambi Tamil
1967 Valibha Virundhu Tamil
1967 Ethirigal Jakkirathai Dr. Baskar Tamil R. Sundaram R. S. Manohar, L. Vijayalakshmi
1968 Moondreezuthu Tamil Jayalalitha
1968 Nimindhu Nil Tamil
1968 Panakkara Pillai Tamil Jayalalithaa
1968 Delhi Mapillai Tamil
1969 Odum Nadhi Tamil
1969 Singapore Seeman Tamil
1969 Selviyin Selvan Tamil
1969 Nalum Therinthavan Tamil
1970 Kadhal Jothi Tamil
1970 Kaviya Thalaivi Tamil Gemini Ganesan, Sowkar Janaki
1970 Snegithi Tamil
1970 Malathi Tamil Gemini Ganesan, Saroja Devi
1971 Thulli Odum Pulliman Tamil
1971 Vimochanasamaram Malayalam
1971 Agni Mrugam Malayalam
1971 Poi Sollathey Tamil
1971 Sabhatham Tamil
1971 Justice Vishwanathan Tamil G. R. Nathan Major Sundarrajan Remake of 1969 Hindi movie Do Bhai (1969 film) starring Ashok Kumar and Jeetendra.
1971 Meendum Vazhven Tamil
1971 Utharavindri Ulle Vaa Tamil Kanchana
1972 Pugundha Veedu Tamil
1972 Varappirasadham Tamil jayachithra
1972 Aromalunni Malayalam
1972 Omana Baby Malayalam
1972 Sakthi Malayalam Crossbelt Mani Sheela, Thikkurissi Sukumaran Nair
1973 Engal Thaayi Tamil
1973 Manjal Kungumam Tamil
1973 Baghdad Perazhagi Tamil Jayalalitha
1974 Avalukku Nigar Avale Tamil Kalyan Kumar, Venniradai Nirmala
1974 Doctoramma Tamil
1974 Puthiya Manidhan Tamil
1974 Sorgathil Thirumanam Tamil
1975 Hotel Sorgam Tamil
1975 Thai Veetu Seedhanam Tamil
1975 Avalluku Ayiram Kangal Tamil Jayalalithaa
1976 Varaprasadham Tamil
1977 Nee Vaazha Vendum Tamil
1978 Iravu 12 Mani Tamil
1979 Neeya Ravi Tamil Durai Kamal Haasan
1979 Kavari Maan Tamil S. P. Muthuraman Sivaji Ganesan
1979 Sikharangal Malayalam
1980 Bombay Mail 109 Tamil
1986 Amman Kovil Kizhakale kanmani's father Tamil R. Sundarrajan Vijayakanth
1986 Oomai Vizhigal P.R.K Tamil Vijayakanth, Karthik, Jaishankar
1987 Sattam Oru Vilayaattu Tamil Vijayakanth
1987 Neethikku Thandanai Tamil Vijayakanth
1987 Ninaive Oru Sangeetham Tamil Vijayakanth
1988 Guru Sishyan Rajamanickam Tamil SP. Muthuraman Rajinikanth, Prabhu
1988 Therkathi Kallan Tamil
1989 Raja Chinna Roja Tamil SP. Muthuraman Rajinikanth, Raghuvaran
1989 Oru Thottil Sabadham Tamil
1989 Chinnappadass Tamil C. V. Rajendran Sathyaraj
1991 Manitha Jaathi Tamil
1992 Sevagan Tamil Arjun
1993 Pudhiya Mugam Tamil
1995 Karna Arjun's father Tamil Arjun
1997 Arunachalam Tamil Rajinikanth, Jaishankar
2002 Pammal K. Sambandam Tamil Kamal Haasan
2002 Ramana Tamil Vijayakanth
2003 Thennavan Tamil Vijayakanth
2003 Indru Mudhal Tamil
2003 Tagore Telugu Chiranjeevi
2004 Thendral Singara Velu Nayagar Tamil R. Parthiban
2006 Adaikalam Tamil Prashanth, Thiagarajan
2008 Arasangam Tamil Vijayakanth
2009 Kanden Kadhalai Tamil Bharath
2011 Aadu Puli Tamil Aadhi, Prabhu
A rare song:
Film: Kathalikka 90 Naal.
https://www.youtube.com/watch?v=jBTSjerz3MY
Kattuven kaiyil unnai...
Bombay Mail 109
https://www.youtube.com/watch?v=mxQI1NeOmIs
In Ravichandran Filmography......
Recently discussed Naangu Suvargal is not in the list.
Varaprasadham comes two times 1972 & 1976