-
க்ருஷ்ணா ஜி. நன்றி. தேசிய விருது பெற்ற படமா சப்தபதி..இசைக்காகவா.. இருப்பினும் முன்பு 88ல் பார்த்த போதும் சரி இப்போது பார்க்கும் போதும் சரி முடிவு சரியெனவே படுகிறது எனக்கு..
சில படங்கள் இப்படித் தான்..எதற்காகத் தோல்வியடைகிறது என்று யோசித்தால் கஷ்டமாகத் தான் இருக்கும்..
//இசை மனிதர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் வேறுபாடுகளை உடைக்கத் தக்க பண்பாட்டுக் கருவி. அதன் செயல்பாடு மிகவும் நயமானது. ஆனால் உத்தரவாதமானது.// unmai.. Thanks krishnaji..
-
அது கதையோட்டத்திற்காக நான் கற்பனையில் வைத்த பெயர் முரளி.. படம் கூட வெகு முன்னால் பார்த்தது தான்..ரவிகாந்த் அண்ட் கிரீஷ்.. ம்ம் நீங்கள் சொன்ன் பிறகு தான் பெயர் தெரியும்..தாங்க்ஸ் ஜி..
-
dear ck
அந்த 7 நாட்கள் நகைச்சுவை மேலோங்கி நின்ற படம். ஆனால் சப்தபதி என்ன சொல்ல . இன்னமும் சாவி விமர்சன வரிகள் நினைவில் தங்கி இருக்கிறது.
"ஜோதிலட்சுமி ,விஜயலலிதா,ஜெயமாலினி இடை ,துடை,உடை,எடையை காண்பித்து கொண்டு இருந்த கவ்பாய் படங்களும்,ராமர்,கிருஷ்ணர் தெய்வ படங்களும் எடுத்து கொண்டு இருந்த தெலுங்கு சினிமா சிரி சிரி முவ்வா,சங்கராபரணம்,சிவரஞ்சனி,சப்தபதி போன்ற திரை படங்களால் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமா எப்போது இந்த நிலைக்கு உயரும் ?"
இன்றைய கால கட்டத்தில் இந்த திரை படம் வெளியிட்டு இருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்து இருக்கலாம்
-
க்ருஷ்ணாஜி.. ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் ரேடியோவில் அடிக்கடி கேட்ட நகைச்சுவைக் காட்சி..
மியூசிக் டைரக்டரிடம்… அதுல பாருங்க தசரதர் செத்துப் போய்ட்டார்.. அந்த சிச்சுவேஷனுக்குஒரு சாங்க்..
மி.டை.. இது ஓகேயா..தசரதா..ஆ ஆ ஆ…
கேட்டவர்.. ஓகேங்க்..ஆனா ரொம்ப அழுகை அழுகையா வருது… வேற மாதிரி..
மியூசிக்: இது ஓகேயா பாருங்க.. ஹே ஹே தசரதா ஓ ஓ தசரதா..
கேட்டவர்.. இது ஓ.கே தான்..ஆனா என்னவோ தசரதர் செத்துப்போனவுடன் ஜனங்கள்ளாம் சந்தோஷமான மாதிரி இருக்குங்களே..!
(இது என்னபடம் யார் குரல் என்பதும் நினைவிலில்லை..கொஞ்சம் தெரிந்தால் சொல்ல இயலுமா.. )
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
அபூர்வமான நிழற்படம். பாராட்டுக்கள் யுகேஷ் பாபு.
எங்கம்மா சபதம் படத்திற்காக அன்பு மேகமே பாடலை, டி.எம்.எஸ். பி.சுசீலா, வாணி ஜெயராம், எஸ்.பி.பாலா பாட இசையமைப்பாளர் விஜயபாஸ்கர் ஒத்திகை பார்க்கும் காட்சி.
-
-
http://i59.tinypic.com/smq6fr.png
நண்பர்களுக்கு வணக்கம்.
மக்கள் திலகம் திரியின் 12ம் பாகம் துவங்கியதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ‘தாய் மேல் ஆணை’பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்த கட்டுரையை அன்பு பரிசாக அளித்துள்ள, அன்பு நண்பர், பன்முக ஆற்றல் கொண்ட பண்பாளர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும்,
நெல்லை தந்த முல்லை, பண்புக்கு எல்லையே இல்லை என்பதற்கு இலக்கணமாக திகழும் நகைச்சுவை நாயகர், பண்பாளர் ‘சிவ’ ‘ராம’ (ஜி) கிருஷ்ணா சார் அவர்களுக்கும்,
பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பண்பாளர் ரசிக வேந்தர் திரு.ராகவேந்தர் அவர்களுக்கும்,
அரிய கருத்துக்களை வழங்கி வாழ்த்தியுள்ள அன்பின் உறைவிடம் திரு.ஐதராபாத் ரவி அவர்களுக்கும்
நன்றிகள் கோடானு கோடி.
திரு.வாசு சார். ரிலாக்சுக்காக இங்கு அடிக்கடி வாருங்கள் என்று அழைப்பு விடுத்தீர்கள். உண்மையிலேயே இங்கு வருவது ரிலாக்சாகத்தான் இருக்கிறது. மாறுபட்ட கருத்து கொண்டவர்களையும் இசை என்னும் மையப் புள்ளியால் இணைக்கும் இந்த அற்புத தளத்தை உருவாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
உங்கள் அனைவரோடும் ஒரு அருமையான பாடலை ரசிக்கலாம் என்று விரும்புகிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் கதையில் உருவான, இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் நடித்த ‘எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் இடம் பெற்ற பாடல். அமைதியான சோலை வனத்தில் சலசலக்கும் நீரோடையாய் எஸ்.ஜானகி அவர்களின் குரலும், தமிழ் திரையுலகுக்கு திராவிட இயக்கம் கொடையாக அளித்த கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவரான நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களின் இனிய குரல் வளமும், தாலாட்டும் இசையும் கொண்ட அற்புத பாடல்.
‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே,
என்ன சொன்னாலும் கண் தேடுதே,
என்னை அறியாமலே, ஒன்னும் புரியாமலே,
நெஞ்சம் ஆடுதே... வாடுதே’
எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை தரவேற்றி உதவினால் அனைவரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த அளவுக்கு கேட்போரை ஈர்க்கும் பாடல்.
இன்னொரு விஷயம் திரு.வாசு சார். இப்போதே சொல்லி விடுகிறேன். கடந்த முறை நான், ‘வாங்க, வாங்க கோபாலய்யா...’ பாடலை விரும்பிக் கேட்டபோது, நான் மறைமுகமாக நண்பர் கோபாலை குறிப்பிடுவதாக கூறி சிரித்தீர்கள். அதேபோல, சில நாட்களாக திரியில் காணமுடியாத நண்பர் கோபாலை மனதில் கொண்டு இந்த பாடலை நான் தேர்வு செய்து கேட்டிருப்பதாக நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
KALAIVENTHAN SIR
YOUR FAVOURITE SONG- ONLY AUDIO IS AVAILABALE
http://youtu.be/VBI1Ijd_DF8
-
ஜெய்ஷங்கர் அதிகமாக தத்துவ பாடல்கள் பாடினதில்லை - அதனால் இந்த பாடல் ஒரு அறிய பதிவாக இருக்கலாம் - மிகவும் தன்னம்பிக்கையை ஊட்டக்ககூடிய பாடல் இது . படம் : இதயம் பார்க்கிறது - இந்த பாடலில் இவரும் ஒரு குருடனாகவே வருவார் . கண் பார்வை இல்லாதவர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பணம் தந்தது போல இருக்கும் . யானையின் பலம் தும்பிக்கை என்றால் மனிதனோட பலம் நம்பிக்கையில் ----
என்ன அருமையான வரிகள் பாருங்கள் - TMS இன் குரலில் மனதை கசக்கி எடுக்கும் சில உறங்கும் உண்மைகள் ----
" ஆதி மனிதன் கடலை கண்டு பயந்ததும் உண்டு - அடுத்து வந்த மனிதன் கொஞ்சம் துணிந்ததும் உண்டு -பயந்து போன மனிதன் அந்த கரையினில் நின்றான் - துணிந்தவனோ படகு கட்டி கடலையும் வென்றான் ----
கண்கள் பார்க்க வில்லையென்றால் இதயம் பார்க்கட்டும் -நம்மை கடவுள் பார்க்க வில்லையென்றால் காலம் பார்க்கட்டும் -மூன்று கண்கள் கடவுளுக்கு வந்ததிலையோ - அந்த மூன்றாவது கண் நம் மனதில் இல்லையோ ----
பாவத்திற்கு தண்டனையா - பார்வை போனது ? - கண் பார்வை உள்ள மனிதர் தானே பாவம் செய்வது - ஏற்ற தாழ்வை மறப்பதர்க்கோ குருடர் ஆனது - நம் எல்லோர்க்கும் எங்கிருந்து உறவு வந்தது ---"
அடுத்தவனை கெடுப்பவர்கள் அறிவு குருடர்கள் ; அந்த அன்னையையும் மறப்பவர்கள் அன்பு குருடர்கள் - அணைத்தவனை வெறுப்பவர்கள் நன்றி குருடர்கள் - நாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட பிறவி குருடர்கள் -----
http://youtu.be/f_f-tzZYOac