-
“தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்”
19,830 அடி நீளமுள்ள “நாடோடி மன்னன்” திரைப்படம் 22-8-1958-ல் வெளியானது. திரையிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் காலையிலேயே ரசிகர்கள் நீண்ட `கியூ’ வரிசையில் நின்றனர்.
படம் “மெகா ஹிட்” என்பது, திரையிடப்பட்ட முதல் நாள் -முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது. இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இரட்டை வேடக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஜி.கே.ராமு அருமையாகப் படமாக்கியிருந்தார்.
பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா உள்பட பலர் எழுதியிருந்தார்கள். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். “தூங்காதே தம்பி தூங்காதே”, “சம்மதமா, நான் உங்கள் கூடவர சம்மதமா?” உள்ளிட்ட பாடல்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தன.
ஏற்கனவே “வசூல் சக்ரவர்த்தி” என்று பெயர் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இப்படத்தின் மூலம் “தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னன்” என்று புகழ் பெற்றார்.
“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவை, மதுரை முத்து ஏற்பாடு செய்திருந்தார். தமிழ்நாடு சட்டசபையின் அன்றைய சபாநாயகர் யு.கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
4 குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது, 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது.
ஊர்வலம் முடிந்தபின், தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் அந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசாக வழங்கினார் .
courtesy - net
-
நாடோடி மன்னன் - 1958
மன்னர் ஆட்சி வேண்டாம். மக்களாட்சி வேண்டும். மக்களே, ஆட்சி செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைதான் "நாடோடி மன்னன்'.
கதைச் சுருக்கம்
இது இரட்டையர்களின் கதை. ஒருவன் நாடோடி, மற்றவன் அரசன், பெயருக்குத்தான் அரசனே தவிர, அவன் ராஜகுருவின் சொல்படி நடப்பவன். இதனால் மக்கள் துன்பப்படுகிறார்கள். நாடோடியோ மக்கள் நலனில் அக்கறை கொண்டவன். இதனால் இவனை ராஜ விரோதி என்று கருதுகிறது அரசாங்கம். அவன் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு விடுதலையாகிறான்.
அரசன் மார்த்தாண்டன் முடிசூடி பதவி ஏற்கப் போவதை அறிந்த நாடோடி, மக்களின் குறைதீர்க்க அரசனிடம் வருகிறான். இருவரும் ஒரே உருவ அமைப்புடன் இருக்கிறார்கள். சூழ்நிலையால் நாடோடி அரசனாகவும், அரசன் நாடோடியாகவும் கருதப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறான் நாடோடி. அங்கு அரசகுமாரியைச் சந்திக்கிறான். மிகக் கண்ணியமாக நடந்து கொள்கிறான். அவளோ அவனை காதலன் என்றே எண்ணிக் கொள்கிறாள். அரச உடையிலிருந்த நாடோடி, அவளுக்கு உண்மையை எடுத்துக் கூறி- தான் காதலன் அல்ல என்ற உண்மையை தெளிவாக்குகிறான். சில திருப்பங்கள், குழப்பங்களுக்குப் பிறகு உண்மை புலனாகிறது. நீதி நிலைத்து தர்மம் வெல்கிறது. இப்படத்தில் சந்திரபாபுவின் நகைச்சுவை பெரிய வரவேற்பைப் பெற்றது. நம்பியார் தனது முத்திரையைப் பதித்திருந்தார். பானுமதி "சம்மதமா' பாடலைப் பாடி தமது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நாடோடி மன்னன் படத்தில் தனக்குச் ஜோடியாக நடிக்க ஒரு புதுமுகம் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்களிடம் சொல்லவே, அவர் பெங்களூரில் தற்செயலாகப் பார்த்த பள்ளி மாணவி ஒருவரைப் பற்றி சொன்னார். அந்தப் பள்ளி மாணவி அழைத்து வரப்பட்டார். எம்ஜிஆருக்கு அந்தப் பெண் பிடித்துப் போகவே தன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அவர்தான் சரோஜாதேவி.
வசனம், அளவுடன், நறுக்கென்று இருந்தது. பாடல்கள் இனிமையாகவும், கருத்துச் செறிவுடனும் எழுதப்பட்டிருந்தது. தூங்காதே தம்பி தூங்காதே, சம்மதமா, தடுக்காதே என்னை தடுக்காதே, "சும்மா கெடந்த நிலத்தை', "கண்ணோட கண்ணு' ஆகிய பாடல்கள் கேட்டவுடன் பாடும்படியாக அமைந்திருந்தது. எம்ஜிஆர் சிறப்பாக டைரக்ட் செய்திருந்தார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "தூங்காதே தம்பி தூங்காதே' பாடலும், லட்சுமணதாஸ் எழுதிய "உழைப்பதிலா உழைப்பை' பாடலும் சூப்பர்ஹிட் பாடல்களாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. "செந்தமிழே வணக்கம்' என்ற டைட்டில் பாடலும், எம்ஜிஆரை வர்ணித்து கவிஞர் சுரதா எழுதிய "ஈந்து கரம் சிவந்தவனே' என்ற பாடலும், எம்ஜிஆரின் இமேஜை உயர்த்தியது.
"நாடோடி மன்னன்' வசூலில் சரித்திரம் படைத்தது. தனது மனைவி ஜானகியின் நகைகளை எல்லாம் அடமானம் வைத்து "நாடோடி மன்னன்' படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்தார். "நாடோடி மன்னன்' ரீலிஸின்போது எம்.ஜி.ஆர். "படம் ஓடினால் நான் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி' என்றார். படமும் சூப்பர் ஹிட்டானது.
1958-ல் வெளியான படங்கள் மொத்தம் நேரடிப் படங்கள் 37- மொழிமாற்றுப் படங்கள் 13. இதில் சிவாஜி நடித்த படங்கள் அன்னையின் ஆணை, உத்தம புத்திரன், சபாஷ் மீனா, சம்பூர்ண ராமாயணம், சாரங்கதாரா, பதிபக்தி, மக்களைப் பெற்ற மகராசி. இத்துடன் மாலையிட்ட மங்கை (டி.ஆர்.மகாலிங்கம்), நல்ல இடத்து சம்பந்தம் (எம்.ஆர்.ராதா), தை பிறந்தால் வழி பிறக்கும் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) ஆகிய படங்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
நடிகர், நடிகையர் :
எம்.ஜி.ஆர். (இரட்டை வேடம்), எம்.ஜி.சக்ரபாணி, நம்பியார், சந்திரபாபு, பானுமதி, சரோஜாதேவி மற்றும் பலர்.
கதை : எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா
வசனம் : ரவீந்தர்
பாடல்கள் : லட்சுமணதாஸ், பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், முத்துக்கந்தன்,
சுரதா, ஆத்மநாதன் முதலியோர்.
இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு
தயாரிப்பு : எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்
டைரக்ஷன் : எம்.ஜி.ஆர்.
courtesy - cinema express
-
எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சேர்த்த படங்களில் 'நாடோடி மன்னன்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சென்னை பாரகன், மதுரை தங்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டு திரையரங்க உரிமையாளர்கள், தங்களது கல்லாப்பெட்டியை அகலப்படுத்துவதற்கு ஆசாரியைக் கூப்பிடவேண்டி இருந்தது. சிங்கப்பூர்,இலங்கையிலும் இதே வசூல் நிலைதான்.
சினிமாவை நேசிக்கும் மதுரை மாநகரம். 'நாடோடி மன்னன்' படத்தின் வெற்றிவிழாவால் கூடுதலாய் ஒரு தீபாவளியை சந்திக்கிறது. நான்கு குதிரைகள் பூட்டிய தேரில், தாமரை மலராசனத்தில் அமர்ந்து ஊர்வலம் வருகிறார் எம்.ஜி.ஆர். இருபுறமும் நிறுத்தப்பட்ட யானைகள், வாடப்போகும் பூக்களை அள்ளி,வாடாத தங்கமுகத்தின்மீது தூவுகின்றன.விழாவில் எம்.ஜி. ஆருக்கு 110 சவரன் தங்க வாள் பரிசளிக்கப்படுகிறது. இந்திய - சீன யுத்தம் நடந்த 1962ல் அந்த வாளை ஏலத்துக்கு விட்டு, தேசப்பாதுகாப்புக்கு நிதி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
ஆனால்? சொந்தப்பட நிறுவனமாக 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்'சை உருவாக்கி, படத்தை வெளியிடும் நேரத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்காக அவர்பட்ட பாடு ஆண்டவனையே அழவைத்திருக்கும். (நெருங்கிய நண்பர்களை 'என்ன ஆண்டவனே!' என்றுதான் அழைப்பார் அவர்). நாடோடி மன்னன் படப் பிடிப்பில் நாடோடி மன்னன் படப் பிடிப்பில் எம்.ஜி.ஆர் சொந்தப்பட நிறுவனம் தொடங்கியபோதே எம்ஜிஆருக்கு மறைமுக அர்ச்சனைகள் நடந்தன. ''நடிச்சு நாலு காசு சம்பாதிச்சோம்னு இல்லாம இதெல்லாம் தேவையா?'' என்று பலரும் அக்கறை(?)ப்பட்டார்கள் . அவர்தான் இயக்கப்போகிறார் என்பதை அறிந்ததும் கடுப்புகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளைநிரப்பும் அளவுக்கு ஆனது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் களத்தில் இறங்கினார் எம்.ஜி.ஆர். தனக்கு திருப்தி தராத காட்சிகளை மீண்டும் மீண்டும் படம்பிடித்தார். ''எதையெல்லாமோ எடுக்கிறாரு. திரும்பத்திரும்ப எடுக்கிறாரு. இதெல்லாம் என்ன ஆகப்போகுதோ?'' என்று படக்குழுவே அக்கம்பக்கம் பார்த்தபடி அங்கலாய்த்துக்கொண்டது.
கைகொட்டிச்சிரித்தவர்கள் எல்லோரும் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் காலமும் அமைந்துவிட்டது. காட்சிகளின் நேர்த்தி கருதி, ஆயிரக்கணக்கான அடி பிலிம் சுருள்களை வீணாக்கவேண்டிய சூழ்நிலை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அவருக்கு மட்டுமல்ல, சினிமா உலகத்துக்கே அது ஒரு இக்கட்டான காலகட்டமாக இருந்தது. பச்சாதாபம் காட்டும் முதலாளிகள்கூட கச்சா பிலிமுக்கு கைவிரித்த நேரம் அது.
கச்சா பிலிமை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளும் தடை போட்டன. நாடோடி மன்னன் படப் பிடிப்பில் நாடோடி மன்னன் படப் பிடிப்பில் எம்.ஜி.ஆர் ஸ்டுடியோக்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஒரு படத்துக்கான பிலிம் ரோல்களை வாங்கமுடியும். ஆயிரம் அடி பாசிட்டிவ் பிலிமின் நியாயமான விலை 75 ரூபாய் மட்டுமே. அதுவே வெளிமார்க்கெட்டில் 500 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டி இருந்தது. ஆனாலும் எம்.ஜி.ஆர் காசைப்பற்றிக் கவலைப்படாமல் பிலிம் ரோல்களை வாங்கி படமெடுத்தார். படப்பிடிப்பும், இறுதிக்கட்ட பணிகளும் முடிந்தன. படத்தை சென்சாருக்கு அனுப்பவேண்டிய கட்டம் வந்தது. கூடவே கஷ்டமும் வந்தது. பாசிட்டிவ் பிலிம் வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கவேண்டிய நிலை.
'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று ஆரம்பித்தாலும், ஒரு ஆணும் பெண்ணும் திமுக கொடியை தாங்கிப் பிடித்திருப்பதைப் போலவே படக்கம்பெனியின் சின்னத்தை வடிவமைத்திருந்தார் எம்..ஜி.ஆர். அவருக்கு திமுகவில் பல நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும் அவர்களிடம் போய் கடன் கேட்க விரும்பவில்லை. தொழில்முறையிலேயே யாரிடமாவது கடன் கேட்கலாம் என்று முடிவு செய்தார். எதிரிக்கும் கொடுத்துப் பழகிய எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு உதவ, ஒரு ராமச்சந்திரன் வந்து சேர்ந்தார். அவர்தான் 'கெயிட்டி' திரையரங்கத்தை நடத்திவந்த ராமச்சந்திர ஐயர். ஏவி.எம் நிறுவனத்தில் பேசி, தேவையான தொகையை வாங்கித்தருவதாக உறுதியளித்தார் ஐயர்.
எம்.ஜி.ஆரின் முகத்திலும் அகத்திலும் பரவிய மகிழ்ச்சி ரேகையை அழிப்பதற்காகவே புறப்பட்டவர்போல வந்துசேர்ந்தார் எம்.கே.சீனிவாசன். அவரது ஆலோசனைப்படிதான் ஏவி.எம் நிறுவனம் கொடுக்கல்- வாங்கல்களுக்கு 'எஸ்' ஆர் 'நோ' சொல்லும். கடன் வாங்கவேண்டும். ஆனால் கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர் கையெழுத்துப்போடும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது, வந்தாலும் ஒப்புக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன். ''கடன் கொடுப்பதற்கு ஏவி.எம் நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு கண்டிஷன், எம்.ஜி.ஆரின் கையெழுத்து அவசியம்'' என்றார் எம்.கே.சீனிவாசன். எம்.ஜி.ஆர் பிக்சர்சின் இயக்குனர்களில் ஒருவரும், எம்.ஜி.ஆரின் அண்ணனுமான எம்.ஜி.சக்ரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இருவரும் பலமுறை கேட்டுப்பார்த்தும், எம்.கே.சீனிவாசனிடமிருந்து வந்த பதில், ''எம்.ஜி.ஆரின் கையெழுத்து வேண்டும்'' என்பதாகவே இருந்தது. கடைசியாக ஒரு திட்டத்தைக் கையில் எடுத்தார் ஆர்.எம்.வீரப்பன். ''எங்களது தயாரிப்பான 'நாடோடி மன்னன்' படத்தின் இலங்கை வெளியீட்டு உரிமையை சினிமாஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகையை, நாங்கள் வாங்கும் கடனுக்கு அடமானமாக வைத்துக்கொள்ளும் வகையில், ஒப்பந்தத்தின் மூலப்பிரதியை உங்களிடம் தந்துவிடுகிறோம். நானும் சக்ரபாணியும் கையெழுத்துப் போடுகிறோம்'' என்று சீனிவாசனிடம் சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். இந்த டீல் ஓகே ஆனது. பணம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எனவே, பிலிம் சுருள் வாங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டார். எம்.ஜி.ஆர் புகழ்பெற்ற பிறகு வாங்கிய ஒரே கடன் இது மட்டும்தான்.
- courtesy - net
-
Makkalthilagam mgr., thread elder members kindly registers makkalthilagam prouds & multiface personalities...
-
-
-
-
-
-
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-
மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.
எல்லா புகழும் எம்.ஜி.ஆருக்கே
எம்ஜிஆர் புகழே துணை நமக்கு.
துணை நமக்கு. துணை நமக்கு.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியம் .
சினிமாவிலும் அரசியலிலும் யாராலும் அசைக்க முடியாத எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லை யாராலும் உச்சரிக்க முடியாமல் இருக்க முடியாது. திரை உலகினர் அனைவரும் எம்ஜிஆரின் பன்முக திறைமைகளை பாராட்டி அவர் வகுத்த பாதையில் செல்ல முயற்சிக்கிறார்கள். அரசியலில் எம்ஜிஆரின் ஆளுமைகளை உணர்ந்து பார்க்கிறார்கள். ஆனால் இரு தரப்பினரும் வெற்றிகளை அடைய முடியவில்லை. எம்ஜிஆர் என்ற மாமனிதரின் செல்வாக்கு, புகழ் , கலை உலகில் அவர் உண்டாக்கிய பிம்பம், இனி யாராலும் எட்டி பிடிக்க முடியாது. எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே. மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்-செல்வாக்கு அவர் மறைவிற்கு பின்னரும் 27 ஆண்டுகளாக தொடர்வது உலக சாதனை.அரசியல் தலைவராக, கலை உலக சக்ரவர்த்தியாக எம்ஜிஆர் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த போவது எதிர் கால சாதனையாகும். மக்கள் திலகத்தின் புகழை மிஞ்ச செயற்கை வழியில் எவரும் போட்டி போட முயல்வது எவருக்கும் நல்லதல்ல.
https://www.youtube.com/watch?v=LAwxzl2Iua8