ரவி சார்,
தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி! கல்தூணின் உடுக்கை பாடல் என் உணர்வுகளோடு சங்கமம் ஆனது.
தங்களின் தந்தைக் கரு அமர்க்கமாகத் தொடர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. அருமையான நிறைய விஷயங்கள் பாடலோடு.
'அப்பா வந்தார்' குறும்படம் அருமை. நன்றி ரவி சார்.
குழந்தைப் பருவத்திற்கு கல்தூண் படப் பாடலான 'சிங்கார சிட்டுத்தான்' பாடல் நல்ல தேர்வு.
" நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ்வுலகு "
குரலுக்கு விளக்கம் அருமை.
ஆமாம்! நண்பர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? கல்ஸ் காணோம். ஆதிராம் சார் எங்கே? ராஜேஷ்ஜியும் அவ்வளவாகக் காணோம்? சி.க இன்னும் டூர் முடிக்கவில்லை.