தங்க மகன் நெல்லையில் சுமார் 2 வாரங்களே ஓடிய படம். தங்க மகன் தமிழகத்தில் பரவலாக அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.
தூங்காதே தம்பி தூங்காதே நெல்லையில் 85 நாட்களுக்கு மேல் ஓடியது.
வெள்ளை ரோஜா நெல்லை பூர்ணகலாவில் 50 நாட்கள் ஓடியது.
Printable View
1983 Deepavali Releases - Madurai details
Thoongathe Thambi Thoongathe - released in Sugapriya and Madhu
Sugapriya - 200+ days
Madhu - 40+ days
shanthi - 50 days(second release)
Thanga mahan - released in Meenakshi paradise and sundaram
Meenakshi paradise - 175 + days
sundaram - 40+ days
Vellai roja - central - 100 days
Thangaikkor geethan - abirami - 100 days
சிவாஜி படம் மட்டும் தான் ஓடியது. மற்ற படங்கள் ஓடவில்லை என்று வரலாற்றை மாற்றாதீர்கள்.
நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
என்னடா இது இந்தக் கட்டுரையை இன்னும் முடிக்கலையா இந்த ஆள் என்று யோசிக்க வேண்டாம்! அலுவலக நிமித்தமாக இடைவிடாது வேலைகள் இருந்து கொண்டே இருந்ததால், இடையே சிறிது இடைவெளி. இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதி விட்டால், இந்தக் கட்டுரையை முடித்து அடுத்த கட்டுரையைத் துவங்கி விடுவேன். (அடப்பாவி! விட மாட்டானோ?)
9. தங்கப்பதக்கம் (1974) / கொன்ட வீட்டி சிம்ஹம் (1980) தெலுங்கு / ஷக்தி (1981) ஹிந்தி
இயக்குனர் மகேந்திரன் கதை வசனம் எழுதி செந்தாமரை அவர்களால் "இரண்டில் ஒன்று" என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டு வந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு, பார்த்து, அந்த நாடகத்தை இன்னும் மெருகேற்றி, தங்கப்பதக்கம் என்ற பெயரில், சிவாஜி நாடக மன்றத்தின் மூலம், நாடகமாகவே சில காலம் நடத்தி/நடித்து, பின் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் சார்பில், அதே பெயரில், திரு. மாதவனை வைத்து, திரைப்படமாக்கினார். வசூல் சாதனை செய்து (தமிழகம் மட்டுமல்லாது, பெங்களூரு போன்ற மற்ற நகரங்களிலும் கூட) வெள்ளி விழாக் கொண்டாடிய படம். நடிகர் திலகம் மறுபடியும், தொடர்ந்து, இருபத்தியிரண்டாம் வருடத்தில், நான் ஒரே நேரத்தில், அற்புத நடிகன் மற்றும் மிக மிக வெற்றிகரமான நட்சத்திரம் என்பதை நிரூபித்த படம்! அதாவது, பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிதாக இல்லாமல், கதை, களம், நல்ல இயக்கம், நடிப்பு போன்ற அம்சங்களை வைத்தே, மறுபடியும், வெற்றிக்கொடி நாட்டிய படம்.
இந்தப் படத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக நாட்கணக்கில் அலச முடியும்.
இந்தப் படத்தைப் பற்றிப் பேசினால், கீழ்க் காணும் விஷயங்களைக் குறிப்பிட்டு விட்டுத்தான் படத்துக்குச் செல்ல முடியும்.
ஒன்று, அவரது ஒப்பனை மற்றும் நடை, உடை, பாவனை. குறிப்பாக, அந்த சிகை அலங்காரம் மற்றும் மீசை. இப்போதெல்லாம், ஆளாளுக்கு, தடுக்கி விழுந்தால், அதுவும் நடிக்க வந்த புதிதிலேயே, காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்கிறார்கள். ஆனால், நடிகர் திலகம் நடிக்க ஆரம்பித்து, 22 வருடங்கள் வித விதமான பாத்திரங்களை ஏற்று நடித்து, பின்னரே, ஒரு முழு நீள காவல் துறை அதிகாரி பாத்திரத்தை ஏற்றார். இதற்கு முன்னர், ஸ்கூல் மாஸ்டர் (மூன்று மொழிகளில், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி) படத்தில் கௌரவ வேடத்திலும், ராஜாவில், ஒரு ஐந்து நிமிடங்களும் மட்டும் போலீஸ்காரர் வேடத்தில் வருவார். அந்தப் படங்களிலும், அந்த அர்பணிப்பையும் சிரத்தையையும் காணலாம். சிலர் நடிப்பது போல், எக்கச்சக்க தலை முடி, ஸ்டெப் கட் மற்றும் அடர்த்தியான பெரிய கிருதா இல்லாமல், ஓட்ட வெட்டிய கிராப்பு, மற்றும் மீசையுடன் வருவார். நடிகர் திலகம் ஒரு நாளும் வியாபார காரணங்களுக்காக, கலைத்தன்மையை இழந்ததில்லை. இந்தப் படம் வந்து சில மாதங்களில் வெளியான, என் மகன் படத்தில், வேறு மாதிரியான போலீஸ் கார ஒப்பனையில் வந்து, வித்தியாசமாக நடித்திருந்தார். இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெள்ளை ரோஜாவில், வேறு கெட்டப் நடிப்பு, தீர்ப்பு படத்தில், வேறு விதம், திருப்பத்தில் வேறு விதம், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!
நான் பல நாட்களுக்கு முன் படித்த செய்தி - இந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு, நடிகர் திலகம் அப்போதைய தமிழகத் தலைமைக் காவல் அதிகாரி திரு. I.G. அருள் அவர்களையும் இன்னும் சில மூத்த காவல் அதிகாரிகளையும் அழைத்திருந்தார். படம் முடிந்தவுடன், திரு. அருள் அவர்கள், "தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து காவல் துறை அதிகாரிகளும், அலுவலர்களும், இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். இது ஒன்று போதும், நடிகர் திலகத்தின் அற்பணிப்பைப் பறை சாற்ற.
பின்னர், திரு. தேவாரம் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடிகர் திலகம், நான் இந்த சௌத்ரி பாத்திரத்திற்கு, தற்போது இருக்கும் ஒரு அதிகாரியை தான் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டேன். உங்களால் அது யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் என்று சொல்ல, அவரும் தெரியாது என்று சொல்ல, பின்னர், நடிகர் திலகம், இது உங்களை வைத்துதான் என்றாராம் - அதாவது, அந்த சிகை அலங்காரம், மீசை மற்றும் சில உடல் மொழிகள். தேவாரம் வாயடைத்துப் போனாராம். நடிகர் திலகம் இத்தனைக்கும் அவரை பல வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தடவை தான் சில நிமிடங்கள் பார்த்திருக்கிறார். அதாவது, ரொம்ப நாட்களுக்கு முன், ஊட்டியில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது, நடிகர் திலகத்தைக் காணப் பெருங்கூட்டம் கூடி விட, கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போது அங்கு உயர் காவல் துறை அதிகாரியாக இருந்த தேவாரம் அவர்கள், ஜீப்பில் இருந்து இறங்கிக் கூட்டத்தை அவருடைய பாணியில் கட்டுப்படுத்தி விட்டு, நடிகர் திலகத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் பேசி விட்டுச் சென்றாராம். அந்த சில நிமிட நேரத்தில், தேவாரம் அவர்களின் உடல் மொழி மற்றும் ஒப்பனையை வழக்கம் போல், நடிகர் திலகம் கூர்ந்து கவனித்து, பின்னாளில், அதை தங்கப்பதக்கம் படத்தின் எஸ்.பி.சௌத்ரி பாத்திரத்திற்குப் பல வருடங்கள் கழித்து பயன்படுத்திக்கொண்டதை அறிந்து, தேவாரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தாராம்! (தேவாரம் மட்டுமா?)
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் நடிகர் திலகம் மறைந்த சில நாட்களில், சென்னை தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், நடிகர் திலகத்தைப் பற்றியும், அவரோடு, தங்கப்பதக்கத்தில் பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றியும் உணர்வுபூர்வமாகக் கூறினார். ஒரு முறை, மகேந்திரன் நடிகர் திலகத்திடம், அது எப்படி, நேரில், சாதாரண உயரமாய் இருக்கும் நீங்கள், திரையில், மிக உயரமாகத் தெரிகிறீர்கள் என்று வினவினாராம். அதற்கு நடிகர் திலகம் சிரித்துக் கொண்டே, அதெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு பாத்திரத்தை நான் ஏற்று நடிக்கும்போது, அந்தப் பாத்திரத்தை உணர்வு பூர்வமாய் சித்தரிக்கிறேன். ஆனால், பார்க்கும் நீங்கள் என்னை அந்தப் பாத்திரமாகத்தான் பார்க்கிறீர்கள். நீங்கள், கெளரவம் படத்தைப் பார்க்கும் போது, பாரிஸ்டர் பாத்திரத்தில் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி சுய மரியாதை நிரம்பியவராய் நடித்ததால், அந்தப் பாத்திரத்தில், நான் எல்லோருக்கும் உயரமாகத் தான் தெரிவேன். இப்போதும், அப்படித்தான் என்று சாதாரணமாய்க் கூறினாராம். மகேந்திரனும், "மீண்டும் நாடகம் ஆரம்பித்தது. நாங்கள் மறுபடியும் எஸ்.பி. சௌத்ரியைப் பார்க்கும்போது திரும்பவும் அவர் உயரமாகத் தான் தெரிந்தார். இது கண் கட்டு வித்தையோ? என்று மறுபடியும் வியந்தோம். இன்றும் வியந்து கொண்டு தான் இருக்கிறோம்" என்று கூறினார்.
அதாவது, அவர் ஒரு பாத்திரத்தை மனதில் வாங்கி, அதை அப்படியே internalise செய்து ஒரு கதாசிரியன் எந்த கற்பனையோடு எழுதினானோ, அதை அப்படியே நூறு பங்கு, வடித்து, சாரி, நடித்து, மக்களிடம் அந்தப் பாத்திரத்தை எடுத்துச் செல்லும் விதம். இந்த விஷயத்தைப் பல வருடங்கள், மிக வெற்றிகரமாகச் செய்ததனால் தான் அவர் நடிகர் திலகமாகிறார். யுகக் கலைஞனாகிறார்.
தங்கப்பதக்கம் ... தொடரும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
Rajaram alias abhinaya,
Thanks for madurai input. As NT fans, we don't claim that only NT movies ran and became history. You conveniently forget that Madurai Central has got 3-4 times seating capacity than that of Sugapriya. Moreover, TTT didn't run 40 days in Madhu. TTT was removed in 5 weeks from Madhu. So, though VR was released in only one theater, it was the biggest BO winner for that Deepavali. So, get the history and fact correct before commenting. Also, when you list out theaters, make sure you highlight seating capacity alongside - that will show a clear picture to others about your understanding of your own hometown Madurai theaters.
Regards
காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்.
Nadigar Thilagam's VELLAI ROJA
Box-Office Mega-Hit of the year 1983
No.1 Deepavali-Grosser of 1983
100th Day Ad [Daily Thanthi : 11.2.1984]
http://i1094.photobucket.com/albums/...alar/VR100.jpg
Collection Notice
http://i1094.photobucket.com/albums/...tionNotice.jpg
Note:
1. VELLAI ROJA hit the Silver Screens in Chennai & all over South on the Deepavali day of 1983 [4.11.1983].
2. The film also got screened at Chennai Safire from 3.12.1983 and ran upto 16.2.1984 for a period of 76 days.
3. In a handful of centres, "Thanghaikkoar Geetham" surpassed "Thoonghathe Thambi Thoonghathe" in BO collections and attained the No.2 Slot.
Warm Wishes & Regards,
Pammalar.
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 11
"புதுநாடகத்தில் ஒரு நாயகி"
http://www.youtube.com/watch?v=-QB1TLRkEAk
நடிப்பு : நடிகர் திலகம், புன்னகை அரசி கே.ஆர்.விஜயா
பின்னணிக் குரல் : பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்
படைப்பு : கவியரசர் கண்ணதாசன்
திரைக்காவியம் : ஊட்டி வரை உறவு(1967)
அன்புடன்,
ராகவேந்திரன் & பம்மலார்.
அன்பு ராதாகிருஷ்ணன்,
மருதநாட்டு வீரன் தெளிவான பிரதியுடன் மோசர் பேர் நிறுவனத்தால் தனியாகவும் மற்ற படங்களுடன் கூடிய நெடுந்தகடாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இதோ தங்கள் பார்வைக்கு அந்த நெடுந்தகட்டின் அட்டை
http://i872.photobucket.com/albums/a...maGunamaUP.jpg
அன்பு பம்மலார்,
வெள்ளை ரோஜா திரைப்படத்தின் விளம்பரத்தை இங்கே பிரதியேற்றி நம்மை எல்லாம் அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.
சென்னை திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கில் மீண்டும் வெற்றி காண வருகிறது, சிவாஜி பிலிம்ஸ் புதிய பறவை. 29.04.2011 முதல் தினசரி 3 காட்சிகள்.
http://www.haihoi.com/tamil-movies/M...%20Paravai.jpg
அன்புடன்
ராகவேந்திரன்
தகவல்கள் அமர்க்களமாக உடனே தந்தமைக்கு நன்றி. அதிலும், நாளிதழ் விளம்பரமே நம்பகத் தகவலாகும். இருப்பினும், விக்கிப்பீடியாவில், தூங்காதே தம்பி தூங்காதே குறித்து வெளியாகியுள்ள... "தூங்காதே தம்பி தூங்காதே 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 4 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.".... என்ற தகவலையும் கவனத்தில் கொள்ளலாம்.