Thank you for your information sir. We are eagerly awaiting for the issue about our only actor sivaji
Regards
C.Ramachandran, Trichy
Printable View
Thank you for your information sir. We are eagerly awaiting for the issue about our only actor sivaji
Regards
C.Ramachandran, Trichy
[attach=conAttachment 2545fig]2544[/attach]
மீள் வருகைக்கும் ஞானஒளி பதிவிற்கும் நன்றி வாசு சார். படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நடிகர் திலகத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அசைவில் கூட அவர் கவிதை வடித்திருப்பதை உணர முடிகிறது. அண்மையில் பார்த்த போது மிகவும் ரசித்த ஒரு அசைவை நீங்கள் புகைப்படமாகவே அளித்து விட்டீர்கள்.
அருண் வீட்டிக்கு வரும் லாரன்ஸ். Mr. அருண் எங்கே என்று கேட்கும் லாரன்ஸிடம் அவர் இப்போதுதான் சாப்பிட போனார் என்று பதில் சொல்லும் வேலைக்காரன், அடாடா ஒரு விருந்து சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டேனே என போலியாக அங்கலாய்க்கும் லாரன்ஸ். எங்க எஜமானுக்கு விருந்து சாப்பாடே கஞ்சிதான் என கூறும் வேலைக்காரனிடம் பழக்க தோஷம் என நக்கலடிக்கும் லாரன்ஸ். அதிலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு பேரின் indirect மோதல். லாரன்ஸ் ரேடியோவை வைப்பது, அந்த நாள் ஞாபகம் பாடல் ஒலிப்பது, அந்நேரம் நடிகர் திலகம் மாடியில் நின்று மேஜரையே பார்ப்பது என தூள் கிளப்பும். அடுத்து சாத்துக்குடி பிழியும் ஷாட், மேஜரின் பொடி வைத்த கமன்ட், அப்படி எழுதிக் கொண்டே போகலாம். நான் சொன்ன புகைப்படத்திற்கு வந்து விடுகிறேன்.
அருண்தான் ஆண்டனியா என்பதை கண்டுபிடிக்க அருண் அணிந்திருக்கும் கூலிங் கிளாசை is it Ray Ban? என்று கேட்டுக் கொண்டே லாரன்ஸ் கழட்டி விட, அருணின் இரண்டு கண்களும் நன்றாகவே இருக்க, உங்க இடது கண் என்று இழுக்கும் மேஜரிடம், இடது கண்ணுக்கு என்ன நல்லாதானே இருக்கு என்றவாறு ஒரு கையால் வலது கண்ணை மூடிக் கொண்டு முதலில் டையை தொட்டு "You are wearing a black tie, பின் கையைப் பிடித்து -- ரிஸ்ட் வாட்ச் and the time is 4'o clock என்று சொல்லி விட்டு சோபாவின் பின் புறம் சென்று அதன் முதுகு புறத்தில் இடது கையை ஊன்றி, முகத்தின் இடது பக்கத்தை மட்டும் பக்கவாட்டில் காமிராவிற்கு காட்டிக் கொண்டே " இன்ஸ்பெக்டர், நம்ம அறிவுக்கு சரின்னு படற விஷயங்களை சில நேரங்களிலே நம்மாலே practical -a நிரூபிக்க முடியறதில்லை இல்லையா" என்று ஒரு மந்தகாச புன்னைகையுடன் கேட்கும் அந்த ஷாட்டை புகைப்படமாக்கி இங்கே பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி.
ஒரு பக்கவாட்டு profile போஸிலேயே இவ்வளவு ஜால விதை காட்ட யாரால் முடியும்?
அன்புடன்
நடிகர் திலகத்தின் திரிக்கு புதிய வரவாக வந்திருக்கும் திருச்சி ராமச்சந்திரன் அவர்களே நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இனி திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் முந்தைய சாதனைகள் மற்றும் தற்போது வெளியாகும் மறு வெளியிடுகளின் தகவல்களை அளிப்பீர்கள் என நம்புகிறோம்.
அன்புடன்
ஜோ,
பாச மலர் பற்றிய பதிவை வெகு விரைவில் பதிவிடுகிறேன்
வாசு சார்,
தாங்களே ஒப்பு கொண்டாலும் ,ராகவேந்தர் சார் தங்களை வரவழைத்தது நானில்லை ,அந்தோனியும்,அருணும்தான் என்பதை பட்ட வர்தனம் ஆக்கி விட்டார். எப்படியாவது அற்புதமான கதையொன்றை சொல்லி திரும்பி வந்ததற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்போதுதான் திரிக்கு உயிர் வந்தது போல் உள்ளது.
திரு ராமச்சந்திரன் அவர்களே ,வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
ராகவேந்தர் சார், நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு பிசி என்று அறிகிறோம்.உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
முரளி- திருக்குறள் போல அழகான பதிவு.
கார்த்திக் சார்,ஆர்.நம்பி சார் ,கல்நாயக்,பரணி ஆகியோருக்கு நன்றிகள்.
அவர் வருவார் வரவேண்டும் என எதிர்பார்த்து ஞான ஒளி சாக்கில் 1972ஐ ஆரம்பித்து, அருணையும் அந்தோணியையும் அழைத்துக் கொண்டு நெய்வேலி போய் அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து தரதரவென இழுத்து வரச் செய்தது யாராம்?Quote:
வாசு சார்,
தாங்களே ஒப்பு கொண்டாலும் ,ராகவேந்தர் சார் தங்களை வரவழைத்தது நானில்லை ,அந்தோனியும்,அருணும்தான் என்பதை பட்ட வர்தனம் ஆக்கி விட்டார். எப்படியாவது அற்புதமான கதையொன்றை சொல்லி திரும்பி வந்ததற்கு எல்லையற்ற மகிழ்ச்சி. இப்போதுதான் திரிக்கு உயிர் வந்தது போல் உள்ளது.
தொடர்ந்து கிட்டத்தட்ட தினமும் என் பெயரில் பதிவுகள் வருகிறதே... அதையெல்லாம் நான் போடவில்லையா... அய்யய்யோ.. யாரய்யா என் பெயரில் பதிவுகள் இடுவது... கண்டு பிடித்துச் சொல்லுங்களேன் ... புண்ணியமாய்ப் போகும் ... பொறுப்பை ஒப்படைத்து விட்டு அக்கடா என்று நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்துக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாமே...Quote:
ராகவேந்தர் சார், நீங்கள் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் முன்னிட்டு பிசி என்று அறிகிறோம்.உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.