அன்புமிக்க ரவிச்சந்திரன் சார்,Quote:
திரு rks அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் பக்தர்களின்
மன உணர்வைப்புரிந்து கொண்டு
தவறான பதிவை நீக்கம் செய்த
திரு செந்தில் அவர்களுக்கும் -
அந்த செய்தி நீக்கப்படவேண்டும்
என்று எடுத்துரைத்த தங்களுக்கும்
நன்றி.
வருகின்ற காலங்களில் இம்மாதிரி
செய்திகளை பதிவிட வேண்டாம் என்று தங்கள்
திரி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். பதிவிடும்போது
எங்கள் நண்பர்களால் அதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
அவரவர் தங்கள் கருத்துக்களை கொட்டித்தீர்க்கின்றனர்.
நமது திரிகளில் இடம்பெறும் தகவல்கள்
அடுத்த தலைமுறைக்கும் பயன்பெறும்
வண்ணம் நல்ல பல செய்திகளை பதிவிடுவோம்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
தாங்கள் கூறுவதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது தானே. நடிகர் திலகம் திரியில் ஒரு நண்பர் ஒரு பதிவிட்டு அது மற்றவர் மனது புண்படும் என்பதை உணர்ந்தால் ரவி கிரண் உள்ளிட்ட நண்பர்கள் அதை பகிரங்கமாக சுட்டிக் காட்டி அதை சரி செய்ய சொல்கிறோம். தங்களுடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி தவறான செய்தியை யாராவது எழுதினால், அதை இங்குள்ள நண்பர்கள் சுட்டிக்காட்டினால் தான் அது கவனிக்கப்படுகிறது. தற்பொழுது நெறியாளர் என்கிற முறையில் தாங்கள் வந்து விட்டதால் தாங்களும் ரவி கிரண் அவர்களைப் போல் தங்கள் திரியில் நண்பர்களின் பதிவுகளில் மற்றவர் மனம் புண்படும் படி இருந்தால், அதை பகிரங்கமாக சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும்.
பதிவை நீக்குவது என்பது ஒரு தீர்வாக இருந்தாலும், உலக மகா நடிகரான நடிகர் திலகத்தை, தமிழகத்தின் பெருமையை உலகெங்கும் இன்றளவும் எடுத்துச் சொல்லும் கலைத்தாயின் தலைமகனை, துணை நடிகர் என்பதும், போட்டியில்லை என்பதும், அவர்களுக்கே நிச்சயமாக மனதில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகத் தான் இருக்கும். எம்.ஜி.ஆர். அவர்களும் நிச்சயம் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார். பரஸ்பர நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருப்பவை இப்படிப்பட்ட மனோபாவங்களே...
இதை நம்முடைய இரு திரிகளிலும் உள்ள நண்பர்கள் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் பெருந்தன்மை, புரிந்துணர்வு இவற்றைப் பேணி, சிவாஜி எம்.ஜி.ஆர். இருவரின் சிறப்பையும் தத்தம் திரிகளின் மூலம் எடுத்துச் சொல்வதை மட்டுமே முன்னிறுத்திச் செல்வோமானால் எதிர்காலத்தில் நாம் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாய்த் திகழ முடியும்.
என்னுடைய பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் நல்லிணக்கத்திற்கு இடையூறாக வரும் எதையும் அறிந்து செய்ததில்லை. சுட்டிக்காட்டப்படும் போது அ்தைத் திருத்திக் கொள்ளவும் தயங்கியதில்லை.
புரிந்து கொள்ளுதலுக்கு நன்றி.