Vinodh sir,
All ads are excellent. Only done by you. Thanks.
Printable View
Vinodh sir,
All ads are excellent. Only done by you. Thanks.
இனிய நண்பர் வாசு சார்
பானுப்ரியா நிழற் படங்கள் - வீடியோ பாடல்கள் - அருமை .90 களில் பானுப்ரியா மற்றும் சுகன்யாஇருவரும் ஒரு கலக்கு கலக்கினார்கள் .
என்ன வாசு ஜி. நலம் தானே ...
இரண்டு மூன்று நாட்கள் கொஞ்சம் இந்த பக்கம் வரமுடியவில்லை
இதோ உங்களுக்காக இன்னொரு மலையாள காவியப்பாடல்
இசையரசியின் குரலும் தேவராஜன் மாஸ்டரின் இசை வயலாரின் வரிகள்
அதாவது சகுந்தலை துஷ்யந்தனை பார்த்தவுடன் அவன் ஞாபகமாகவே இருப்பதால் அவள் பாடுவதாக அமைந்த பாடல்
அவள் கேட்கிறாள் மந்திரங்களை சொல்லும் உதடுகள் காதலை எப்படி பாடும் என்பது போல் பல வகையான கேள்விகளை அழகாக பாடுகிறார்
http://www.youtube.com/watch?v=pRxGLMhF_R8
MELODY SONG
http://youtu.be/Jyg-fNuiN_Q
ente favourite of sukanya
http://www.youtube.com/watch?v=jZtM1FkD0Xo
http://i.ytimg.com/vi/O2-oanVA-eQ/maxresdefault.jpg
ராஜேஷ்ஜி,
நலமே!
மலையாள சகுந்தலையை பார்த்து விட்டு எழுதுகிறேன்.
அதற்குள் இன்னொன்று. 'கண்ணன் வந்ததாலே நன்மை வந்தது' பாடல் சுகன்யா அருமை.
இந்தப் பாடல் 'தம்பி பெண்டாட்டி' என்ற படத்தில் வருவது. இந்தப் பாட்டை நீங்கள் போடும் போதே தங்கள் ரசனையின் உச்சம் புரிகிறது. இது புகழ்ச்சிக்காக அல்ல.
ஏனென்றால் பின்னாளில் 80 களுக்கு மேல் வந்த பல படங்களில் மிகச் சிறந்த படமாக இதை நான் தேர்ந்தெடுப்பேன். பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் மிக அருமையாக எடுக்கப்பட்ட மிக இயல்பான படம் இது. இப்படத்தைப் பற்றி தனியே எனக்குள்ளாகவே நான் பலமுறை சிலாகித்துக் கொள்வதுண்டு. (மற்றவர்களிடம் பகர்ந்து கொண்டால் அடி விழும். பல பேருக்கு இப்படமே தெரியாது)
ஒரு ஆச்சாரமான குடும்பத்துப் பெண் ஒரு மேற்போக்கான சிந்தனை உடைய, ஒரு ஜாலியான, ஜோவியலான, எல்லோரிடமும் கள்ளம் கபடம் இல்லாமல் பழகக் கூடிய ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்க்கைப் படுகிறாள். ஆனால் அவளுக்கு தன் கணவன் வீட்டார் செய்வது எல்லாமே தப்பாகப் படுகிறது. (மாமனார் நாகேஷ் தன் மனைவி கவிதாவிடம் வெகு சகஜமாக பேசி தொட்டு விளையாடுவார்) எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாள். கணவன் மிக பொறுமைசாலி. தன் வீட்டாரை தன் மனைவி புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுகிறான். அவளுக்கு விளக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான். அந்நாள் அவள் பிடிவாதமாக அவனை தனிக் குடித்தனம் அழைத்துச் சென்று அவனை அவன் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்து விடுகிறாள். தன் வீட்டாரை மறக்க முடியாமல் தவிக்கிறான் அவன். இப்படிப் போகும் கதை.
ஆச்சார மருமகளாக சுகன்யாவும், கணவனாக ரகுமானும் நடித்திருப்பார்கள். இல்லை இல்லை வாழ்ந்திருப்பார்கள். மிக அருமையான திரைக்கதையைக் கொண்ட பஞ்சு அருணாச்சலத்தின் பிரமாதமான படம் இது. நல்ல படமாயிற்றே! ஓடுமா? பெட்டியில் படுத்து சுருண்டு கொண்டது.
இளையராஜா இந்தப் படத்தில் பிரமாதப் படுத்தியிருப்பார். ரம்யா கிருஷ்ணனும், ரகுமான் கானும் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சி என்றைக்கும் மறக்க முடியாதது. ராஜா இந்தப் பாடலில் தனி முத்திரை பதித்திருப்பார். மிக மிக பிரமாதமான பாடல்.
'உன் எண்ணம் எங்கே எங்கே
நீ தேடும் வண்ணம் இங்கே'
அதுவும் அந்த 'டம டம டிங் டிங்'
ரொம்ப ரொம்ப அருமை.
நான் மிக மிக ரசித்து அனுபவித்த பாடல். வித்தியாச டியூன் கொண்டது. 'இன்றைய ஸ்பெஷல்' பாடல் பதிவுக்காக நான் தேர்வு செய்து வைத்திருந்த பாடல். பரவாயில்லை. இப்போது தங்கள் அனைவருக்கும் அளிப்பதில் மிகவும் சந்தோஷம். ஒரு அருமையான படத்தை நினைவு கூற வைத்தமைக்கு நன்றி ராஜேஷ்ஜி. ஒரே ஒரு பாடலைப் பதிந்து அந்தப் படத்தையே நெஞ்சில் ஓட வைத்து விட்டீர்களே! இதுதான் ஒரே நேர்க்கோட்டு ரசனையோ!
(ராஜேஷ்ஜி,
இந்தப் பாடலைப் பற்றிய தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்)
http://www.youtube.com/watch?v=6HNmH...yer_detailpage
ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது இல்லை இல்லை பாடம் இது. இப்படத்தை இங்கு அளித்துள்ளேன். நேரம் கிடைக்கையில் அனைவரும் அவசியம் பார்க்கவும்.
http://www.youtube.com/watch?v=O2-oanVA-eQ&feature=player_detailpage
குட்மார்னிங் ஆல்..
வாசு சார்..பானுப்ரியா பற்றிய படங்க்ள், பாடல்கள்வசந்த் பற்றிய பதிவு (அவர் இறந்து விட்டாரா..எனக்குத் தெரியாது), தம்பி பெண்டாட்டி (பார்த்ததில்லை) படம் பாடல் அனைத்துக்கும் நன்றி.. த.பெயில் மெய்னாக த் தெரிவது ரம்யா க்ருஷ்ணனோன்னோ ( நாராயண நாராயண!) :)
பானுப்ரியாவைப் பொறுத்தவரை அவரதுசொந்த வாழ்க்கை மிக சோகம்.. ஜெயா டிவியில் தகதிமி தாவோ என்னவோ ஒரு ஷோவில் சுகாசினி பேட்டி கண்ட போது அவரது குரல் போய் முகமும் மிக வாடி கொஞ்சம் பாவமாகவே இருந்தது..
சுகன்யா நல்ல நடிகை என்பதை விட அந்தக் கால கட்டத்தில் அவரை ஒழுங்காக யாரும் உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை..ஆஹாவில் சிறு ரோல்..ம்ம்
எஸ்வி.சார்.. அந்த பழைய விளம்பரங்களுக்கு நன்றி .. ராதா மட்டும் நினைவுக்கு வருகிறது..மலையாள சகுந்தலை வீட்டுக்குப் போய்த் தான் பார்க்க வேண்டும்.. நன்றீ ராஜேஷ்