-
எம்.ஜி.ஆர். திரையில் செய்த பிரச்சாரங்கள்
முன்னதாக, 67 தேர்தலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் ' அரசகட்டளை ' என்ற படத்தை உருவாக்கியிருந்தார். 1966 துவக்கத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட இப்படம், ராஜா ராணி - புரட்சிக்காரன் கதை தான். இப்படத்தின் நோக்கமே மறைமுகமாக ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிப்பதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ' தேனும் பாலும் ஓடும் ' என்று மக்களுக்கு சொல்வது தான். வசனங்களும்
பாடல்களுமாக படம் முழுக்க அரசியல் பிரச்சார நெடி.
குறிப்பாக, அனல் பறக்க " ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஆடிவா.." என ஆரம்பிக்கும் பாடலை சொல்லலாம். இப்பாடலை வழக்கமான கவிஞர் வாலிக்குக் கொடுக்காமல் திராவிட இயக்க அபிமான கவிஞர் முத்துக்கூத்தன் என்பவரைக் கொண்டு எழுதி வாங்கினார் எம்.ஜி.ஆர்.
" தடை மீறி போராட சதிராடி வா
செந்தமிழே - நீ பகை வென்று
முடிசூட வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ- மாங்
குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ;
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ- அதன்
முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ. (ஆடி வா..)
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ - அதன்
உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ.
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாள்வதோ (ஆடி வா..) "
தொண்டர்களின் கட்சி உணர்வை தட்டியெழுப்புவதுமாக இப்பாடல் வரிகள் அமைந்தன.
*************
நன்றி - திண்ணை
-
-
-
-
-
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்
http://i59.tinypic.com/xp3qer.jpg http://i59.tinypic.com/wanbqq.jpg
மக்கள் திலகத்தின் பெரும்பாலான திரைப்படங்கள் (99%) தற்பொழுது யூடியூபில் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் DVD வழியாகவும் விற்பனை ஆகி வருகின்றன. அதற்கு மேலும் தொலைக்காட்சி மூலமாகவும் தினம் தோரும் ஒளிபரப்பாகி வருகிறது. இவற்றை எல்லாம் மிஞ்சும் வண்ணம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமங்களிலும் மக்கள் திலகத்தின்-மன்னாதி மன்னனின் திரைப்படங்கள் வசூலிலும் புதிய படங்களுக்கு இணையாக ஓடி வருகிறது. இவற்றை எல்லாம் காணும் பொழுது அவர் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகிறது. இதுதான் மக்கள் திலகத்தின் மாபெரும் சாதனை. இன்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்க மேடைகளிலும், அறிஞர்களாலும், கவிஞர்களாலும், ஆன்மீக சிந்தனையாளர்களாலும், எம்.ஜி.யார். எனும் மந்திர சொல் / திருநாமம் உலகின் எங்காவது ஒரு பகுதியில் உச்சரிக்கப்பட்டு / ஒலித்து கொண்டே இருக்கிறது.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.
இவ்வாறு அவர் பாடியது அவருக்கு மட்டுமே இலக்கணமாகி உண்மையாகி உயர்வானது. அவரின் வாழ்க்கை பயணம் மனித வாழ்க்கைக்கு ஒரு இதிகாசம் ஆகும். இயற்கை இச் சமுகத்திற்கு தந்த நற்கொடையாளன். மக்கள் திலகத்தின் புகழ் பாடுவது, மக்களுக்கும் தற்பொழுது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் அது அவர்களுக்கு நல்லதை நல்கும் நம்பிக்கை நாயகன்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்
-
Quote:
Originally Posted by
esvee
நேரினில் பார்த்ததில்லை மன்னவனே உந்தனையே தேரினில் வந்தவனை திரையினில் கண்டவனை நான்கு வயசினில் இருந்தே நெஞ்சமதில் வைத்தவனை எந்தன் இதய தெய்வமானவனை காணக் கண் கோடி வேண்டும்
-
-
-