http://i68.tinypic.com/349eb9d.jpg
Printable View
திறனாய்வாளர் திரு திருநாவுக்கரசர் கூறுகிறார் .
எம்ஜிஆர் படங்கள் பற்றி ?
எம்ஜிஆர் சினிமா என்றால் 1947ல் துவங்கி 1977 ஜூன் வரை 115 படங்கள் அவர் நாயகனாக நடித்தவை ,ஏறத்தாழ 31 ஆண்டுகள் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் , அதிக வெள்ளிவிழா 100 நாட்கள் என்று வெற்றி விழாக்கள் கொண்டாடிய படங்கள் என்ற பெருமையை பெற்றார் என்றால் அது மிகை அல்ல .வியாபாரம் ரீதியாக,தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் , மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி காட்டியவர் .
CREATOR & TREND SETTER IN INDIAN CINEMA .. THAT IS ONLY M.G.R
எம்ஜிஆர் தன்னுடைய கொள்கைக்கு உட்பட்டு , சமூக சிந்தனையோடு , மக்களின் ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து அதற்கேற்றாற் போல் தன்னுடைய படைப்புகளை வழங்கினார் .
நல்ல விஷயங்களை , அறிவுரைகளை நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் கூறியது போல் வேறு எவரும் கூறியதில்லை .அதனாலதான் மேல் தட்டு , கீழ் தட்டு ,நடுத்தர வர்க்கம் என்று எல்லா தரப்பினரும் எம்ஜிஆரை நேசித்தார்கள் .
எம்ஜிஆர் படத்தின் தலைப்பு , பாடல் வரிகள் , பாடல் படமாக்கப்பட்ட காட்சிகள் , எம்ஜிஆரின் திறமையான நடிப்பு , இன்றளவும் மக்கள் மனங்களில் நிலைத்து விட்டது என்னுடைய ஆராய்ச்சில் நான் எடுத்து கொண்ட 25 எம்ஜிஆர் படங்கள்
http://i67.tinypic.com/30adtlf.jpg
ராஜகுமாரி
என்தங்கை
மலைக்கள்ளன்
குலேபகாவலி
மதுரை வீரன்
சக்கரவர்த்தி திருமகள்
நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
திருடாதே
பாசம்
பெரிய இடத்து பெண்
வேட்டைக்காரன்
எங்க வீட்டு பிள்ளை
பெற்றால்தான் பிள்ளையா
அரச கட்டளை
ஒளிவிளக்கு
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
நான் ஏன் பிறந்தேன்
உலகம் சுற்றும் வாலிபன்
சிரித்து வாழ வேண்டும்
நாளை நமதே
உழைக்கும் கரங்கள்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
எம்ஜிஆருக்கு ஏன் இத்தனை புகழ்
எம்ஜிஆரை ஏன் ரசிகர்கள் இன்னமும் நேசிக்கிறார்கள்
மக்கள் எம்ஜிஆரை மக்கள் திலகமாக ஏன் அழைத்தார்கள்
எல்லா தரப்பு ரசிகர்கள் , பத்திரிகைகள் , ஊடகங்கள் , சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இன்னமும் எம்ஜிஆரை அவருடைய படங்களை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதுதான்
எம்ஜிஆர் என்ற மந்திர சொல் .விருதுகள் எம்ஜிஆரை தேடி வந்தது . எம்ஜிஆர் ரசிகர்கள் என்றுமே எதற்குமே ஏங்கியதில்லை .இது தற்புகழ்ச்சி அல்ல . நிதர்சனமான உண்மை
.
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...
‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’
courtesy - THE HINDU TAMIL.