புதிருக்கும் விடைக்கும் பாராட்டுகள்.
அன்பு வாசு அவர்கள் பதில் அளிப்பதிலும் ஒரு சாதனை செய்கிறார் - அற்புதப் படங்களுடன்..
அகிலன் அவர்களின் இன்னொரு நாவலும் நடிகர்திலகம் நடிக்கப் படமானது : பாவை விளக்கு
Printable View
புதிருக்கும் விடைக்கும் பாராட்டுகள்.
அன்பு வாசு அவர்கள் பதில் அளிப்பதிலும் ஒரு சாதனை செய்கிறார் - அற்புதப் படங்களுடன்..
அகிலன் அவர்களின் இன்னொரு நாவலும் நடிகர்திலகம் நடிக்கப் படமானது : பாவை விளக்கு
தங்கப்பதக்க வசூல் விவரங்களுக்கும் ஹரிச்சந்திரா ஆராதனைப் படங்களுக்கும் நன்றி
திரு முரளி ஶ்ரீனிவாஸ் + திரு ராகவேந்திரா இருவருக்கும்!
என் விருப்பம்....
யுத்த நிதிக்காக சொந்த மனைவி நகைகளைக் கொடை தந்த நாயகரின் பாடல்..
பின்னாளில் பொதுநலத்துக்காக மனைவி நகைகளைத் தானம் செய்யும் முன்னேற்பாடான வரிகள்..
அதில் அன்பும் காதலும் வர்ணிப்பும் எல்லாம் சரிவிகிதம் கலந்தால்...
இனிய இணைப்பாடல்..
மழையாலும் நனையாத உள்ளம்..
நடிகர்திலகம் விழிமொழியால் நனைந்தாடித்துள்ளும்..
ஊருக்கு ஒரு பிள்ளையைக் காண...
http://www.youtube.com/watch?v=Xm_WRRm9bTs
முத்து மணிச் சிரிப்பிருக்க ....
மெல்லிசை மன்னரின் மற்றொரு இனிமையான படைப்பு ....
மிக அபூர்வமான தேர்வு காவிரிக் கண்ணன் சார் ..
இதை இதை இதைத்தான் ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறோம் ...
பாராட்டுக்கள்..
திலகப் புதிர்
கானக் குயில் எம்.எல்.வசந்தகுமாரி பாட, நடிகர் திலகம் உடன் உரையாடும் பாடல் எது? இடம் பெற்ற படம் எது? இசையமைப்பாளர் யார்?
My Choice என் விருப்பம்
http://youtu.be/WngSPSrIRJM
இன்றைக்கு என் விருப்பம் ... நம் அனைவரின் நெஞ்சிலும் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள பாடல் ...
சிவகாமி உமையவளே முத்து மாரி
உன் செல்வனுக்கும் காலம் உண்டு முத்து மாரி
மகராசன் வாழ்க வென்று வாழ்த்துக் கூறி - இந்த
மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி ...
தமிழ்நாட்டையே புரட்டிப் போட்ட வரிகள் ...
இந்த வரிகள் மட்டும் பலித்திருந்தால் ..
இன்றைக்கு தமிழ் நாடு
http://cdn.lightgalleries.net/4bd5ec...ay_soy03-2.jpg
இப்படி பசுமையாக வளமாக இருந்திருக்காதா....
இப் பாடலில் ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய சிறப்பைக் காட்டியிருப்பார். அதுவும் ஒரு கட்டத்தில் கால்களை மட்டும் பக்கவாட்டில் எடுத்து வைப்பது போல் ஒரு நடன அமைப்பு வரும் ... நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்..
மதுரையை அடுத்த சோழவந்தானில் டி.ஆர். மகாலிங்கம் அவர்களின் பண்ணையில் படமாக்கப் பட்டது.
மதுரையில் தங்க பதக்கத்தின் வெற்றி வசூலைப் பற்றிய தகவலைத் தந்த முரளி சாருக்காக இப் பாடல்.
முரளி சார் தங்க பதக்கம் வசூல் விபரம் பற்றிய தகவலுக்கு பாராட்டுக்கள். கிடைத்தால் நிழற்படங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.
சில தினங்கட்கு முன் என்னைப் போல் ஒருவன் திரையிடப் பட்ட ஈரோடு விஜயா திரையரங்கில் எடுக்கப் பட்ட நிழற்படங்கள்
http://sphotos-a.ak.fbcdn.net/hphoto...03989936_n.jpg
http://sphotos-e.ak.fbcdn.net/hphoto...49223418_n.jpg
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto...85683355_n.jpg
நன்றி நமது நண்பர் சுப்பு எ சுப்ரமணியம் அவர்கள்
படம்: பெற்ற மனம்.
இசை: S.ராஜேஸ்வர ராவ்.
http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/folder.jpg
பாடல்: "சிந்தனை செய்யடா சிரித்து பாரடா"
பாடலைக் கேட்க
http://www.inbaminge.com/t/p/Petra%20Manam/
குறிப்பு: 1958-இல் வெளிவந்த இந்திப் படமான 'நவ்ரங்' திரைப்படத்தில் C.ராமச்சந்திரா அவர்களின் இசையமைப்பில் மஹேந்திர கபூர் மற்றும் ஆஷா போன்ஸ்லே குரல்களில் உருவான காலத்தை வென்ற பாடலான "ஆதா ஹே சந்த்ரமா ராத் ஆதி" என்ற பாடலின் மெட்டைதான் 'பெற்ற மனம்' திரைப்படத்தில் "சிந்தனை செய்யடா சிரித்து பாரடா" பாடலுக்கு மூலமாக எடுத்திருப்பார்கள். இதே மெட்டில் இஸ்லாமிய பக்திப் பாடல் ஒன்றை நாகூர் ஹனிபா அவர்கள் பாடியிருப்பார்.
'நவ்ரங்' திரைப்படத்தில் காலத்தை வென்ற பாடலான "ஆதா ஹே சந்த்ரமா ராத் ஆதி"
http://www.youtube.com/watch?v=aasw1WDNhgY&feature=player_detailpage