http://i1065.photobucket.com/albums/...pshkffoxiv.jpg
Printable View
புரொஜெக்டர் ரூமில்நின்றுஎடுத்த போட்டோ
http://i1065.photobucket.com/albums/...pshqbj1qoh.jpg
இனிய நண்பர் திரு ராகவேந்தர் அவர்களே..
நீங்கள் கூறுவது மிக சரியே !
உதாரணமாக நான் இங்கு பதிவு செய்ததுகூட இணையதளத்தில் இருந்து எனக்கு மாறி...மாறி....ஷேர் செய்து வந்ததுதான்...எனக்கு கடைசியாக ஷேர் செய்த நபர் இதுபோல படங்களை பதிவிடாதவர் என்ற காரணத்தால் அதான் முக நூல் என்று மட்டும் குறிப்பிட்டு பதிவு செய்தேன்...காரணம் ஆவணம் யாருடையதோ அவர்களுக்குதான் அந்த credit பூரணமாக போகவேண்டும்.
உதாரணமாக தனியார் தொலைகாட்சியில் வந்த உரையாடல் திரு சேகர் பரசுராம் என்று நினைக்கிறன்..முகநூளில் பதிவு செய்து இருந்தார்...அவர் பதிவு செய்ததை சில வாக்கியங்கள் நீக்கிவிட்டு அவரது பெயருடன் பதிவு செய்துள்ளேன்..நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.
பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.
மேலும்....ஆவணத்தில் வாட்டர்மார்க் செய்வது நல்ல விஷயம் என்றாலும் அதில் கூட கேள்விகேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்விகேட்கலாமே ? உங்களிடம் உள்ள ஆவணம் வாட்டர்மார்க் போடுவதால் உங்களுடயதாகிவிட முடியாதல்லவா என்று யாராவது கேட்டால் ? காரணம் உண்மையான அதாரம் போட்டாலே நம்பகத்தன்மை இல்லை என்று கூறுகிற காலம் இது !
ஆகவே....இளைய திலகம் பிரபு கூறுவது போல...நம்பிக்கை.....அதுதானே எல்லாம் !
Rks
ஆர்கேஎஸ்,Quote:
என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.
பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.
பழமொழி, தத்துவம் இவையெல்லாம் மேம்போக்கான வாக்கியங்கள் அல்ல, அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதில் உண்மை புதைந்திருக்கிறது. நான் பலமுறை கூறியிருக்கிறேன். அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கும் மின்னணு ஊடகத்தில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. என்ன எழுதுவதாக இருந்தாலும் ஆவணங்களின் அடிப்படையில் தான் நாம் இங்கு பேச வேண்டும், அதுவும் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் வசூல் விவரங்களோடு விளம்பரம் கொடுத்திருந்து அது நம்மிடம் பிரதி இருந்தால் நம்மால் ஆணித்தரமாகக் கூற முடியும். அது இருந்தால் வாதம் எதற்கு என்று ஒரு குதர்க்கமான கேள்வியும் உங்களிடமிருந்து வரலாம். ஆனால் அது தேவையற்ற கேள்வி.
விவரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி ரசிகனானவன். அப்போதிலிருந்து பத்திரிகை விளம்பரங்களை சேகரித்தவன். பல நாட்களில் உணவு உண்ணக் கிடைத்த காசைக் கூட பத்திரிகை விளம்பரத்திற்காக வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தவன். காலப்போக்கில் என்னை மீறிய காரணங்களால் அவற்றில் பெரும்பகுதியை என்னால் பராமரிக்க முடியவில்லை.
லாஜிக் என்பது ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டும் தான் பேச முடியும். அதை ஏற்க மாட்டேன் என்பவர்களிடம் ஆதாரம் மட்டுமே தான் பதிலாகத் தந்து பேச முடியும்.
ஏனோ தானோ என்று உணர்ச்சி வசத்தில் ஆவேசப்பட்டு வசூல் விவரம் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. உங்களுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் திலகத்தின் படங்கள் மக்களிடம் சென்று சேருவதற்கு அயராது உழைத்தவர்கள் நாங்கள். எனவே தங்களுடைய சான்றிதழுக்காகவோ அல்லது இங்கே என்னைக் குறை கூறும் மற்ற நண்பர்களுக்காகவோ நான் சிவாஜியை ரசிக்கவில்லை. உங்களையெல்லாம் இங்கு வந்த பின் தான் எனக்குத் தெரியும். இணையம் என்ற ஒன்று கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அவர் புகழைப் பாட அவருக்காக உழைத்த என்னைத் தாங்கள் குறை கூறுவதால் எனக்கு எந்த இழிவும் ஏற்பட்டு விடாது. அதனால் நான் குறைந்து விடவும் மாட்டேன்.
வாசு சார் போட்ட பதிவில் இருந்த விஷயம் எனக்கு உடன்பாடாக இருந்ததால் நான் அவர் கூறுவதை ஆமோதித்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. அது மட்டுமின்றி தர்த்தி படத்தைப் பற்றி நஷ்டம் என்று விவாதம் வந்த பின்னரே நான் அது பற்றிய என் விளக்கத்தை அளித்தேன். இந்த தர்த்தி ஹிந்தி வெற்றிப் படம் என்பதை நானும் வாசுவும் முன்னரே மய்யத்தில் கூறியுள்ளோம். இது ஒன்றும் புதிய விஷயமில்லை.
தயவு செய்து என்னைக் குறை கூறுவதில் தங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
அதே போல தங்களிடமிருந்து பாராட்டை எதிர்பார்த்தும் நான் பதிவுகள் இடவில்லை.
ஆவணம் என்கின்ற போதே அதுவும் இணையத்தில் அது மீள் பதிவாகிறது என்கிற போது. அந்த ஆணவம் யாரால் முதலில் தரவேற்றப்பட்டது என்பதற்கான அடையாளமாகத் தான் வாட்டர் மார்க் போடப்படுகிறது. அது மீள் பதிவு செய்யப்படும் போது அது பற்றிய குறிப்பு இடம் பெறுவதால் படிப்பவர்கள் அதனைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். எனவே வாட்டர் மார்க் போட்டவர் தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தார் என்பதாக யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் வாட்டர்மார்க் மட்டுமே உரிமையாளரை அடையாளம் காட்டும். இது இன்றைய இணைய உலகில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.Quote:
ஆவணத்தில் வாட்டர்மார்க் செய்வது நல்ல விஷயம் என்றாலும் அதில் கூட கேள்விகேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்விகேட்கலாமே ? உங்களிடம் உள்ள ஆவணம் வாட்டர்மார்க் போடுவதால் உங்களுடயதாகிவிட முடியாதல்லவா என்று யாராவது கேட்டால் ?
ஆவணங்களை மட்டுமல்ல ஆய்வு கட்டுரைகளை கூட அப்படியே அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, மூளையைக்கசக்கி எழுதியவன் பெயரை குறிப்பிடாமல் அம்போவென்று விட்டு விடுவார்கள். இங்குள்ள பலருடைய கட்டுரைகளை பல்வேறு வலைத்தளங்களில் அவர்களுடைய சொந்த உழைப்பு போல பதித்திருப்பதை பார்த்திருக்கிறேன். என் கண்டனத்தையும் பதிவிட்டு இருக்கிறேன். ("இந்த வேலை செய்வதைவிட....." என்கிற ரேஞ்சுக்கு இறங்கி)
செந்தில்வேல் சார்,
சாந்தி தியேட்டர் உட்புறம் எடுக்கப்பட்ட நிழற்பட பதிவுகள் அனைத்தும் மிக அருமை. அப்படியே மலரும் நினைவுகளில் மனம் சுழல்கிறது.
இதோடு நில்லாமல் அங்குள்ள 'ஷீல்டு காலரி'யையும் படமெடுத்து பதியுங்கள், ப்ளீஸ்.