அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
என்னுடைய தங்கப்பதக்கம் பதிவிற்கு தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுதலுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Printable View
hi DHANUSU,
It is a pleasant surprise to see you after a long time, but with a wonderful article about Nadigar Thilagam. The article announces various unknown matters about NT. Thanks a lot.
Saradha,
a fitting reply to Mr.Rajaram. But he will never realise the facts and will never change his attacks. So better we ignore him to avoid digression threads in this connections.
CHADRASEKHAR,
Thanks for your links to JV articles, which remembers the TMM inaguration day by NT. Nice to know EVKS Elangovan and Saidhai Duraisamy were with us on that day.
Athu therintha vishayam thaane! Vidunga, athaiyum nammalE koduthuviduvom.Quote:
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Abhinaya http://www.mayyam.com/talk/images/bu...post-right.png
வெள்ளை ரோஜா படம் தான் வெற்றி பெற்றது என்றால்,வெள்ளை ரோஜாவோடு வெளியான மற்ற படங்களின் 100வது நாள் விளம்பரத்தையும் வெளியிடலாமே?
அப்பொழுது தான் எந்த படம் வெற்றி பெற்றது என்ற உண்மை தெரியும்
Chennai - 3 theatres
Attachment 259
4. Kovai - Thanam, 5. Tiruchi - Kaveri, 6. Madurai - Sugapriya, 7 - Salem -Santham
dear parthi sir,
excellent writeup on thangapadhakkam.It wouldhave definitely rekindled the memories of watching that great movie in theatres with so much alapparai.I have seen that more than 15 times in theatres and whenever it was rereleased in bangalore the theatres such as sangeeth, sri,lavanya,devi,aruna wore festive look(bala sir may know).TP and vasantha maaligai were the two NT films which had more frequent releases in bangalore than any other films(kudiyirundha koyil and USV for mgr).
murali sir and saaradha madam,
you have beautifully narrated the super scenes and punch dialogues of TP.one more dialogue which was received with thunder"CHOWDHRY WILL NEVER FAILLLLL.....MY DEAR SONNN", the voice modulation and body language...........what to say?
dear friends,
please avoid persons like rajaram
நன்றி AREGU முன்பு ஒரு முறை சாதனை சிகரங்கள் தொடரின் நடுவே திரிசூலம் சாதனைகளை நீங்கள் பாராட்டி வியந்தது நினைவிற்கு வருகிறது.
சாரதி,
நன்றி. என் எழுத்துகள் உங்களை மேலும் சிறப்பாக எழுத தூண்டுமானால், அது இந்த திரியின் சிறப்பிற்கு மேலும் வளம் சேர்க்கும்.
சதீஷ், நன்றி.
நன்றி சாரதா. நீங்கள் குறிப்பிட்டது போல் மாடிப்படிகளில் நடிகர் திலகமும் புன்னகை அரசியும் பேசிக் கொண்டு வரும் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும். இது போன்ற டெக்னிகல் விஷயங்களை கவனித்து எழுதுவதில் வல்லவரான நீங்கள் அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.
சுவாமி & சந்திரசேகர் நன்றி.
ராகவேந்தர் சார்,
நடிகர் திலகத்திற்கு சிங்கை மக்களின் அஞ்சலி உணர்ச்சி வசம் என்றால் சத்ய சாய் அவர்களின் வாழ்த்துரை சாரதி குறிப்பிட்டது போல உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் செய்தி.
செந்தில்,
நன்றி. உண்மை மறு வெளியீடுகளில் பலமுறை வெளியான படம் தங்கப்பதக்கம் . நீங்கள் குறிப்பிட்ட காட்சி உண்மையிலே மிகப் பிரமாதமான ஒன்று. நடிகர் திலகத்தின் சிரிப்புக்கு பதிலாக சிரிக்க முயற்சித்து முடியாமல் தலை குனியும் ஸ்ரீகாந்திடம் நடிகர் திலகம் சொல்லும் அந்த வசனம் தியேட்டரில் உருவாக்கும் ஆரவாரத்தை நேரில் பார்க்க வேண்டும்.
அது போல the roof was brought down என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதை முழுமையாக அனுபவிக்கலாம் வேறொரு காட்சியில். சிறைவாசம் முடிந்து தனிக் குடித்தனம் செல்லும் ஸ்ரீகாந்திடம் சென்று சமாதானம் பேசும் விஜயாவிடம் உன் புருஷனை தலை குனிய வைக்கிறேனா இல்லையா பார் என்று சவால் விட, டேய் அவர் வாழ்க்கையிலே தலை குனிஞ்சது ரெண்டு தடவை. நீ பொறந்து என் பக்கத்திலே கிடந்தப்போ உன்னை பார்க்க வந்த அவர் முதல் முறையா தலை குனிஞ்சார்.இப்படி தனக்கு இப்படி ஒரு பையன் பொறந்திருக்கானேன்னு இரண்டாவது முறையா தனக்குதானே தலை குனிஞ்சு நிக்கிறார். அதை தவிர அவரை தலை குனிய வைக்க உன்னாலே மட்டும் இல்லைடா உன்னை படைச்ச அந்த ஆண்டவனாலும் முடியாது. இந்த வசனத்திற்கு எல்லாம் அரங்கில் அதகளமாக இருக்கும்.
tac & Dhanusu மீண்டும் நல்வரவு.
மகேஷ்,சதீஷ்,tac
இந்த திரியின் இரண்டு முக்கிய நோக்கங்களே நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனை இன்றைய நாளைய தலைமுறைக்கு சரியான முறையில் அறிமுகப்படுத்துதல் மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு கலை மற்றும் அரசியல் தளங்களில் நடந்த சதி மற்றும் சூழ்ச்சிகளின் காரணமாக மறைக்கப்பட்ட சாதனைகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருதல் எனவையே ஆகும். இவ்விரண்டு நோக்கங்களும் இந்த திரியில் சரியான வழியில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. இதை தடுப்பதற்கும் திசை மாற்றுவதற்கும் நடக்கும் முயற்சிகளை புறந்தள்ளி நாம் எப்போதும் போல் முன்னேறி செல்வோம். இதை என் அன்பு வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கிறேன். யார் தலைகீழாக நின்று முயற்சித்தாலும் நடிகர் திலகத்தின் சாதனைகள் இல்லை என்றாகி விடாது. Please ignore disturbances
அன்புடன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு செஞ்சுரி ஆர்ட்டிஸ்ட். அவருக்குப் பிறகு எனக்கு இந்த விருது கிடைத்து இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
- கே .பாலசந்தர்
Quote:
எம்.ஜி.ஆரின் எல்லா சாதனைகளும் நடிகர்திலகத்தால், எம்.ஜி.ஆர்.சினிமா உலகில் இருந்த காலத்திலேயே முறியடிக்கப்பட்டன.
'எங்க வீட்டுப்பிள்ளை' வசூல் 'திருவிளையாடலால்' முறியடிக்கப்பட்டது.
சாரதா மேடம்,Quote:
'உலகம் சுற்றும் வாலிபன் வசூல்' எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும்போதே (1974), 'தங்கப்பதக்கம்' படத்தால் முறியடிக்கப்பட்டது.
ஏன் இப்படி வந்து மாட்டிக் கொள்கிறீர்கள்.
எங்க வீட்டுப் பிள்ளை 7 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. நெல்லையில் நூலிழையில் வெள்ளிவிழாவை தவறவிட்டது. இல்லை என்றால் 8 திரை அரங்குகளாக மாறி இருக்கும்.
அதே போல் உலகம் சுற்றும் வாலிபன் 6 திரை அரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.
சிவாஜியின் திருவிளையாடல் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.
அது எப்படி 7 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய எ.வீ.பியை முறியடித்தது.
அதே போல் தங்கப்பதக்கமும் சென்னையில் மட்டும் 175 நாட்கள் ஓடியது.அது எப்படி 6 திரை அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய உ.சு.வாவை முறியடித்து.
இப்படி நினைக்க சிவாஜி ரசிகர்களல் மட்டுமே முடியும்.
உ.சு.வா பெங்களூரில் 3 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
மொத்ததில் 20க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடி தமிழ் திரை உலக வரலாற்றில் சாதனை படைத்தது.
எம்.ஜி.ஆர் திரை உலகில் இருந்த வரை சிவாஜியின் எந்த ஒரு திரைப்படமும் இந்த மாதிரி சாதனைப் படைத்ததில்லை.
எனவே தான் எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி என்று கூறுகிறார்கள்.
நடிகர் திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் (தொடர்ச்சி...)
10. தேவர் மகன் (1992) / விராசட் (1994) - ஹிந்தி
இந்தப் படத்தில் நடிகர் திலகம் பெரிய தேவராக வாழ்ந்து காட்டியதைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன்னர் திரு. பிரபுராம் அவர்கள் மிகச் சிறப்பாக ஒரு தேர்ந்த தமிழ்ப் பண்டிதருக்கேயுரிய அற்புதத் தமிழில் ஒன்பது பாகங்கள் எழுதிப் பிரமாதப் படுத்தியிருந்தார். இந்தத் திரியை நான் ஓராண்டுக்கு முன் படிக்கத் துவங்கியபோதே அந்தக் கட்டுரைகளைப் படித்து வியந்திருந்தாலும், இப்போது, தேவர் மகனைப் பற்றி எழுத விழைவதற்கு முன்னர், அந்தக் கட்டுரைகளை மீண்டும் ஒரு முறை படித்தேன். அவர் அளவிற்கு நுணுக்கமாக இனி ஒருவர் எழுத முடியுமா என்பது சந்தேகமே. என்றாலும், ஓரிரு வார்த்தைகள்.
பெரிய திரையில் நடிக்கத் துவங்கி நாற்பத்தியிரண்டு வருடங்கள், வகை வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, அவைகளுக்கு, உயிரும் உணர்வும் கொடுத்து, ஒவ்வொரு பாத்திரத்தையும், வித்தியாசமாக நடித்து வந்த நடிகர் திலகம், மீண்டும் ஒரு முறை இந்த பெரிய தேவர் பாத்திரத்திற்கு ஒரு புதிய நடிப்பைக் கொடுத்து, so called subtle ஆக்டிங் ஸ்டைலுக்கு மறுபடியும் இலக்கணம் வகுத்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் நெக்குருக வைக்கும் அந்த அதிசயத்தை அனாயாசமாக நிகழ்த்திக் காட்டினார். அறுபத்து நான்கு வயதிலும், கதைக் களத்தையும், கதாபாத்திரத்தையும் சிதைக்காமல், உடன் நடித்த அத்தனை கலைஞர்களையும் விஞ்சி நடித்து, அந்த பெரிய தேவர் பாத்திரத்தை மறக்க முடியாத திரைக் கதாபாத்திரமாக உலவ விட்டார்.
படத்தைப் பார்த்த ஒவ்வொருவரையும், நடிகர் திலகமும், கமலும் நிஜ தந்தை - மகன் என்றே நம்ப வைத்து விட்டிருந்தனர்.
இப்படத்தை இன்று பார்க்கும் இளைய தலைமுறையினரும் கூறும் விஷயம் – இந்தப் படம், சிவாஜி இறந்தவுடன், ஏன், ஒரேயடியாக, சுவாரஸ்யம் இழந்து, தொய்ந்து விடுகிறது என்பது தான். அதுதான், அந்த யுகக் கலைஞனின் தனிச் சிறப்பு. அந்த அளவிற்கு, அந்த பெரிய தேவர் பாத்திரமும், அதில் நடித்த நடிகர் திலகத்தின், உயிர்ப்பான நடிப்பும், பார்ப்பவர் கண்ணை விட்டகலாதிருக்கும். இப்படம், நடிகர் திலகம் இறந்தவுடன் சுவாரஸ்யம் இழந்தாலும், மறுபடியும், கடைசியில், நாசரும், கமலும் மோதிக் கொள்வதிலிருந்து சூடி பிடித்து, யதார்த்தமாக முடிவடையும்.
தேவர் மகன், ஹிந்தியில், "விராசட்" என்ற பெயரில் எடுக்கப்பட்டு, படு தோல்வி அடைந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அந்த மொழியின் மண்ணிற்கேற்ப அதை எடுக்கத் தவறியது. மற்றொன்று, நடித்த முக்கிய கலைஞர்கள், மூலப் படத்தின் அளவிற்கு நடிக்க முடியாமல் போனது. (அம்ரீஷ் பூரி மற்றும் அனில் கபூர்). அனில் கபூராவது, கமல் நடித்த பாத்திரத்தை ஓரளவிற்கு நிறைவாக செய்ய முயற்சியாவது செய்தார். ஆனால், அம்ரீஷ் பூரியாலோ (என்ன ஒரு விவஸ்தை கெட்ட தேர்வு?) நடிகர் திலகத்தின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை என்பதை விட, எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு சிதைத்து விட முயற்சி செய்து, அதில் முழு வெற்றியும் அடைந்தார் எனலாம். மூலத்தின் வெற்றிக்கு ஆதாரமான நடிகர் திலகத்தின் பாத்திரம் ஒரேயடியாக அம்ரீஷ் பூரியால் சிதைக்கப்பட்டது அந்தப் படத்தின் படுதோல்விக்கு பெரிய அளவில் காரணமாக அமைந்தது. (இதே போல், முன்னொரு முறை, நாயகன் படத்தை "தயாவன்" என்ற பெயரில், வினோத் கன்னாவும், பெரோஸ் கானும் வெற்றிகரமாக சிதைத்திருந்தனர்!?.).
இந்தக் கட்டுரை இனிதே நிறைகிறது. இருப்பினும், நடிகர் திலகம் என்ற மொழிகளுக்கும், விவரணைகளுக்கும் அப்பாற்பட்ட கலைஞனின் சாதனைகளையும், திறமைகளையும், ஆற்றலையும், ஒரு இருபது படங்களை மட்டும் வைத்து அடைத்து விட முடியாது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி