http://i1170.photobucket.com/albums/...pse525f7a0.jpg
courtesy vikatan
Printable View
http://i1170.photobucket.com/albums/...pse525f7a0.jpg
courtesy vikatan
VEDAM PUTHITHU PADAM THODANGUVATHRKU MUNPU BARATHI RAJA RESPECT THALAIVAR
https://www.youtube.com/watch?v=5KUkL9wS870
http://i45.tinypic.com/2hov8mo.jpg
Many happy returns of the Day Vinod Sir.
May God Bless you with all cheer and health
http://i59.tinypic.com/264qjuv.jpg
இன்றுபோல என்றும் வாழ்க!
எங்கள் வீட்டு திருமகனே!
வாழைக் கன்றுபோல தலைவன் பக்கம்
சாய்ந்திருக்கும் குலமகனே!
இன்று பிறந்த நாள் காணும் திரு. வினோத் அவர்கள் தலைவர் புகழ் போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Dear Essvee. Happy Birthday wishes to the thread spinner who has secured the top berth in our Mayyam with his 10K mark!Every birthday is not only for the reminiscence of the past but also for the reminders on the aspirations of future, and I wish you turn a new leaf of victory on a bed of roses though we experience a path of thorns here and there before reaching that bed!!
regards, senthil
லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் மரணம் குறித்து கருணாநிதியின் அரிய புகைப் படங்களுடன் இணைந்த டார்ச்சர் பதிவுகள் அவரது பக்கத்தில் எதிர்பார்க்கலாம் என்ற பொழுதிலும் ... லட்சிய நடிகர் கருணாநிதி பற்றிய ஒரு மலரும் நினைவுகள் பேட்டியில் சொன்னதை அதற்கு முன்னரே இங்கே பதிவு செய்கிறேன் ... அவர் சொன்னது இது தான் ....
1967 இல் தி மு க முதன் முதலில் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எல்லா தி மு க தலைவர்களும் அண்ணாவை சந்தித்த வண்ணம் இருந்தனர் .
அப்பொழுது நான் அண்ணாவுடன் தான் இருந்தேன் , ஒவ்வொரு தலைவராக உள்ளே வந்து அண்ணாவைச் சந்திக்க , அண்ணா அவர்களோ ஒவ்வொருவரிடமும் அவருக்கான அமைச்சரவை துறை எது என்று விவரித்துக் கொண்டிருந்தார் . அப்பொழுது அடுத்து வரப் போவது கருணாநிதி என்று தெரிவிக்கப் பட்டவுடன் ...
அண்ணா அவர்கள் சிரித்த படி என்னிடம் சொன்னது " இப்ப தம்பி கருணாநிதி வந்து காவல் துறை அமைச்சகம் தான் வேணும்னு கேட்பார் பாருங்க " என்றார் ...
சொல்லி முடிப்பதற்குள் கருணாநிதி உள்ளே வந்து விட்டார் . வந்தவர் அண்ணாவிடம் வாழ்த்து பெற்று , தனக்கு பொதுப் பனித் துறையை அண்ணா அவர்கள் ஒதுக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்ட மாத்திரமே முகத்தில் தயக்கம் தெரிய காணப் பட்டார் ...
தயங்கிய படியே தனக்கு காவல் துறை அமைச்சகம் வேண்டும் என்றும் கேட்டார் ... அண்ணா என்னைத் திரும்பிப் பார்த்தார் ... பின்னர் கருணாநிதியிடம் " தம்பி பொதுப் பனித் துறை தான் நான் உனக்கு ஒதுக்கியிருக்கிறேன் என்று சொல்ல ...
" இல்லை அண்ணா , காவல் துறை அமைச்சகம்... " என்று கருணாநிதி இழுக்க ....
அண்ணாவோ " தம்பி , இரண்டு துறைகள் தான் என்னிடம் தற்பொழுது கொடுக்கும் நிலையில் உள்ளது , ஒன்று பொதுப் பனித் துறை , இன்னொன்று முதல்வர் பதவி , பொதுப் பனித் துறை உனக்கு வேண்டாம் என்றால் முதல்வர் பதவியை எடுத்துக் கொள் ... என்று சொல்ல .... அதிர்ந்து போனார் கருணாநிதி ...
உடனே , பொதுப் பனித் துறையை தான் ஏற்பதாக கூறிவிட்டு கிளம்பினார் ... பின்னர் நான் அண்ணாவிடம் கேட்டேன் , எப்படி உங்களால் அவர் அதைத் தான் கேட்பார் என்று கணிக்க முடிந்தது என்று ... அதற்கு அண்ணா சொன்னார் ...
தம்பி கருணாநிதிக்கு பழி வாங்கும் எண்ணம் அதிகம் உண்டு , காழ்புணர்ச்சியால் காங்கிரஸ் காரர்களை பழி வாங்குவதற்காகவே அந்தத் துறையைக் கேட்கிறார் , அதனால் தான் அதைத் தர நான் மறுத்து விட்டேன் என்று சொனனர் .... அதிகாரத்தை கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குவதில் கருணாநிதிக்கு நிகர் அவரே என்பதற்கு இது சிறந்த அத்தாட்சி ...
பி .கு : அப்பொழுது குண்டடி பட்டு மருத்துவமனையில் இருந்த மக்கள் திலகத்திடம் அமைச்சர்களின் பட்டியல் அண்ணாவினால் கொடுத்தனுப்பப் பட்டது , தன்னிடம் தகவலை தெரிவிக்க அண்ணா முடிவு செய்ததை பார்த்து நெகிழ்ந்தார் மக்கள் திலகம் , அதில் ஒரு மாற்றமும் செய்யச் சொல்லி கேட்டார் ... சி . ப ஆதித்தனார் அவர்களுக்கு மந்திரியாக பதவி தருவதில் தனக்கு ஒப்புதல் இல்லை என்று மக்கள் திலகம் கூற அதை ஏற்றுக் கொண்டார் அண்ணா
courtesy net
அது மக்கள் திலகமோ , அவர்கள் நிலைத்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் சக்தியால் மட்டுமே , மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்ட நிலையில் வேறு எந்தச் சக்தியும் அவர்களை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது .
அதற்கு பல உதாரணங்கள் இருப்பினும் , ஒன்றை முன் வைக்கிறேன் , 1973 ம் ஆண்டு .... மதுரைக்கு வந்திருந்தார் பிரதமர் இந்திரா காந்தி . அப்பொழுது அ தி மு க துவங்கிருந்த நேரம் , கருணாநிதி தலைமையிலான தி மு க ஆட்சியின் ஊழல்கள் குறித்த புகார்களை இந்திரா காந்தி அம்மையாரிடம் கொடுக்க நினைத்த மக்கள் திலகம் , மதுரைக்கு சென்று கொடுக்க முடிவெடுத்தார் .
ரயிலில் பயணம் , வழி நெடுகிலும் தொண்டர்கள் கூட்டம் , எங்கும் மக்கள் வெள்ளம் . ரயில் ஊர்ந்து செல்கையில் அதனுடன் மக்கள் நடந்து வருகிறார்கள் , சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி ரிக்ஷாவைப் போல மெதுவாக நகர விட்டனர் தொண்டர்கள் .
காலை 7 மணிக்கு வர வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதாகி மாலை 5 மணிக்குத் தான் மதுரையை தொட்டது . மதுரையில் ரயிலுடன் சேர்ந்து மக்கள் வெள்ளம் நடந்து வருகையைப் பார்த்து ரயில்வே துறை அதிகாரிகளே அசந்தனர் ,
தாமதத்தினால் , கொடை ரோடு ஸ்டேஷனில் இறங்கி கார் மூலம் மதுரைக்கு சென்று விடலாம் என்று திட்டமிட்ட மக்கள் திலகத்திடம் , ரயில் ஓட்டுனரும் , ஸ்டேஷன் மாஸ்டரும் , " கொடை ரோடு முதல் மதுரை வரை வழி நெடுகிலும் மக்கள் வெள்ளம் காத்திருக்கிறது , நீங்கள் இல்லாமல் , ரயிலை மதுரைக்குக் கொண்டுச் செல்ல முடியாது , நீங்கள் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்தால் தான் பாதுகாப்பு " என்று கேட்டுக் கொண்டனர் ....
இந்தக் காலத் தாமதத்தால் , இந்திரா காந்தியை மக்கள் திலகம் மதுரையில் சந்திக்க முடியாமல் போனது . மதுரை ரயில் நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் மக்கள் கூட்டம் அலை மோதியது , மக்கள் திலகம் மயக்கமடையும் அளவிற்கு கூட்ட நெரிசல் . அப்படியே அவரை வேனுக்கு அழைத்துச் சென்று பாண்டியன் ஹோட்டலுக்கு விரைந்தனர் .... பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை பொதுக் கூட்டத்தில் பேசினார் ....
அது தான் மக்களின் உணர்ச்சி ... அவர்களுக்கு அரசியல் என்பதையும் கடந்து மக்கள் திலகமும் , அவர்கள் இதய தெய்வங்கள் ... எந்தக் காலக் கட்டத்திலும் மக்களிடமிருந்து அவர்களை பிரிக்க முடியாது
courtesy net