http://i58.tinypic.com/s4w21z.jpg
Printable View
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஹா ஹா ஹா ஹா ...
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச் சுட வெளுத்து
வளரும் ஜாதியடா
வந்தால் தெரியும் சேதியடா
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா!
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து ...
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா
எதிர்த்தால் வாலை நறுக்குமடா
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
நான் செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''power '' என்ன என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா .
1966 சென்னை விருகம்பாக்கம் திமுக மாநாட்டில் அண்ணா அவர்கள் ''தம்பி உன் முகத்தை காட்டு .எனக்கு வாக்குகள் கிடைக்கும்'' என்று மனம் திறந்து பாராட்டினார் .1967 தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் குண்டடி பட்ட பின் எடுத்த அவரின் நிழற்படம் 234 தொகுதிகளிலும் ஒட்டப்பட்டது . வெற்றி கனியும் பறிக்கப்பட்டது .
1969ல் மக்கள் திலகத்தின் அரசியல் சக்தியை உணர்ந்தவர்கள் 1972ல் உணர முடியாமல் போனதில் ஒரு விதத்தில்
எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , தமிழகத்திற்கும் கிடைத்த பெரும் பாக்கியம். உணராமல் போனதின் விளைவு நம் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற நிலைக்கு உயர்த் தபட்டார் .தமிழக முதல்வராக தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தார் . உலக அரங்கில் இன்றளவும் மக்கள் மனங்களில் தினமும் அவருடைய பெயரை உச்சரிக்கும் பெருமையும் பெற்றார் .''பாரத ரத்னா'' புகழும் , பாரத் பட்டமும் நம் மக்கள் திலகத்திற்கு கிடைத்தாலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திர சொல் மகிமை இன்னும் நூறாண்டு காலம் மேல் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை .
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
மக்கள் திலகத்திற்கு இந்த புகழ் வரிகள் சாத்தியமாயிற்று
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பாடினார் . பாடியதை நிறைவேற்றி காட்டினார் எம்ஜிஆர் .
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
அன்றும் இன்றும் என்றும் .. ,,,,
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
Excellent mr. Vinoth sir, your writings about makkalthilagam MGR., - Absolutely Fact...
Welcome mr. Saravanan, puducherry--- Kindly write about a lot of messages- history about Our Makkalthilagam MGR... Only Emperor of Universe- Cinema Fields...
Our Makkalthilagam thread hubbers... kindly register rare photos & documents of ponmanachemmal- regarding a lot... kindly consider dear friends (puratchinadigar followers, wellwishers )
மக்கள் திலகத்தின் ''நீரும் நெருப்பும் '' 45 வது ஆண்டு துவக்கம் . 18.10.2015.
மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரட்டை வேடங்களில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த படம் ..மக்கள திலகம் vs மக்கள் திலகம் பிரமாண்டமான சண்டை காட்சி , மக்கள் திலகம் -அசோகன் -மோதும் சண்டை காட்சிகள் மிகவும் அற்புதம். இன்று படம் பார்த்தாலும் புத்தம் புது படம் போல் ரசித்து , மகிழ்ந்து பார்க்கும் படம் நீரும் நெருப்பும் .
மக்கள் திலகத்தின் ;;நீரும்நெருப்பும் '' - 18.10.1971
நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .
பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.
இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.
தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.
திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!
மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!