கார்த்திக்,
என் மேல் தங்களுக்குள்ள நல்லெண்ணத்திற்கும் உயர்வான கருத்துக்கும் மிக்க நன்றி.
Printable View
கார்த்திக்,
என் மேல் தங்களுக்குள்ள நல்லெண்ணத்திற்கும் உயர்வான கருத்துக்கும் மிக்க நன்றி.
வருகிறேன்.... கீழே இறங்கி வருகிறேன் ... என்று துவங்கும் இந்த காட்சி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் வேறு யாராலும் கற்பனைக் கெட்டாத உயரத்தில் அமர்ந்து கொண்டு நடிகர் திலகத்தின் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
உடல் மொழி, இயல் மொழி, இயற்கலை, விழிமொழி என நடிப்பின் பரிமாணங்கள் அத்தனையும் வரிசையில் வரிந்து கட்டிக் கொண்டு நமக்கு இலக்கணம் கூறுகின்றன.
தர்மசங்கடமான சூழலில் சிக்கிக் கொண்ட மனிதன் இப்படித் தான் தவிப்பானோ - இல்லை, இல்லை, இப்படித் தான் தவிப்பான் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.
வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வாழ்க்கையில் விதியின் விளையாட்டை நொந்து கொள்பவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்களோ - இல்லை, இல்லை, இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.
இருக்கும் நண்பன் இறந்ததாக இருக்க வேண்டும், இருக்கும் கணவனை இருப்பதாக மனைவி எண்ண வேண்டும், இருக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் தவிக்கிறேனே என இப்படித் தான் மனிதன் புலம்புவானோ - இல்லை, இல்லை, இப்படித் தான் புலம்புவான் என ஆணித்தரமாகக் கூறுகிறது இக்காட்சி.
தர்மசங்கடமான சூழல் ஏற்படும் காட்சியில் இப்படித் தான் நடிக்கவேண்டுமோ என நடிகன் நினைப்பானோ - இல்லை, இல்லை, இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடிகன் நினைப்பான்.
இப்படி எந்த சூழலில் மனிதன் எப்படி நடந்து கொள்வான், உளவியல் ரீதியாக அவன் எப்படி பாதிக்கப் படுவான் இவற்றையெல்லாம் மனோதத்துவ நிபுணர்களிடம் போய்த் தெரிந்து கொள்வதற்கு அவசியமின்றி, அவன் இப்படித் தான் பாதிக்கப் பட்டு நடந்து கொள்வான் என ஆணித்தரமாகக் கூறியுள்ளார் நடிகர் திலகம் இப்பாத்திரத்தின் மூலம்.
http://youtu.be/b6M8kvsCSAc
ஆண்டனி, கோபால் ஒப்பீட்டுப் பதிவை மனமுவந்து பாராட்டிய அன்பு நண்பர்கள் வாசுதேவன் சார், பரணி சார், சந்திரசேகரன் சார், கிருஷ்ணா சார், ராமச்சந்திரன் சார் அனைவருக்கும் என் உளம் மகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பாராட்டுதல்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி!
டியர் கிருஷ்ணா சார்,
தாங்கள் தந்துள்ள தலைவர் வாழ்ந்து காட்டிய அத்தனை கேரக்டர்களும் அருமை. மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி அனைத்தையும் பார்க்க ஆவல் மீறிடுகிறது. இன்னும் ஒன்றே ஒன்று தங்களுக்காக நான் சேர்த்துக் கொள்கிறேன். 'வீர பாண்டியக் கட்ட பொம்மன்'. ஏனென்றால் (என்னுடைய அன்பு நண்பர் ஒருவர்... தீவிர தலைவரின் அபிமானி) தன்னுடைய பள்ளி நாட்களில் கட்டபொம்மனாக நடித்து சிறப்பான நடிப்பிற்காக முதல் பரிசு வாங்கி அசத்தினாராம். நடிகர் திலகத்தின் ரசிகரா... கொக்கான்னானாம். அந்த இனிய நண்பருக்கு இப்போது என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நண்பரும் இங்குதான் மையத்தில் இருக்கிறார். ஓ.கேவா?
தங்கள் இனிய நினைவுகளுக்காக
https://www.youtube.com/watch?featur...&v=jKI0IJY5jp8
டியர் கார்த்திக் சார்.
http://cafeipiti.files.wordpress.com...2000-posts.jpg
தாங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் நான் வாழ்த்தத்தான் செய்வேன்.
தங்களுடைய ஒப்பிடமுடியாத முத்து முத்தான இரண்டாயிரம் பதிவுகளுக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள். மற்ற நண்பர்களின் பதிவுகளை வித்தியாசம் பாராது மனமுவந்து பாராட்டுவது மட்டுமல்லாது அந்த பதிவு தொடர்பான பல விஷயங்களை வெகு ஜனரஞ்சகமாக தாங்கள் எளிய முறையில் எங்களுக்கு தரும் அழகே தனி. அது போல பார்த்திருக்கிறேன். உங்கள் ஒரு, இரு வரிப் பதிவில் கூட கண்டிப்பாக ஒரு அருமையான மேட்டர் இருக்கும். மிஸ் ஆகவே ஆகாது. பலமுறை இதை எண்ணி நான் வியந்திருக்கிறேன். ஆழ்ந்து ரசித்திருக்கிறேன். தங்களுடைய இரண்டாயிரம் பதிவுகளும் ஒவ்வொன்றும் விஷயமுள்ளவை. வெளி உலகத்திற்குத் தெரியாத பல விஷயங்களை தாங்கள் எங்களுக்கு அளித்துள்ளீர்கள். (அதுவும் சென்னை தியேட்டர் அனுபவங்கள் பற்றி தாங்கள் எழுதும் பதிவுகள் என் போன்ற கடலூர் வாசிகளுக்கு அல்வா மாதிரி). ஆனால் நிறைகுடம் தளும்பாது என்பது போல தங்களின் அடக்கம் பல முறை என்னை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது. சமயத்தில் நீங்கள் திரிக்கு சில காலங்கள் வராமலிருந்தால் மிகவும் தங்களை மிஸ் செய்வேன்.
நடிகர் திலகத்தின் பெருமையை நமது திரியில் மட்டுமல்ல ...தங்களால் இயன்ற அளவிற்கு மற்ற திரிகளிலும் விட்டுக் கொடுக்காமல் நமது தலைவரின் புகழை நிலைநாட்டி வரும் தாங்கள் மென் மேலும் தங்கள் ஸ்டைல் பதிவுகளைத் தந்து, எனக்கு சீனியரான தாங்கள் எங்கள் நிறை குறைகளை சுட்டிக் காட்டி எங்களை வழி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மீண்டும் ஒரு முறை தங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டனி கோபால் ஒப்பீட்டுப் பதிவுக்காக தாங்கள் அளித்த இனிய பாராட்டிற்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய ஆண்டனி கோபால் ஒப்பீட்டு விஷயங்கள் அருமை. அழகான விளக்கங்கள்.
தங்களுக்காக என்னுடைய special அன்புப் பரிசு.
http://karateramesh.com/Images/large/29.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. கீழே இறங்கி வந்து மற்றவர்களை மேலே ஏற்றிவிட்டு அழகு பார்த்த நமது அன்புக் கடவுளின் 'சாந்தி' மனப்போராட்டக் காட்சியின் வீடியோப் பதிவுக்கு நன்றி.
தாங்கள் கேட்டுக் கொண்டதின் பேரிலும், எங்கள் எல்லோருடைய வேண்டுகோளுக்கு செவி சாய்த்தும் கோபால் சார் கண்டிப்பாக விரைவில் வர வேண்டும்.' ராஜா' வாக நின்று 'நீதி' வழங்க வேண்டும்.
ஹாய் கோபால்,
இப்ப வர்றியா இல்லையா? நைசா ப்ளான் போட்டு 72 சாக்கில் ஒளியை எழுதி விட்டு என்னை உசுப்பேத்தி விட்டுட்டு நீ நழுவிக்கினியே.... இன்னாபா ஞாயம் இது... சீக்கிரம் வந்து தொலை. நீ வரலைன்னா நானும் வரலை...
Mr Gopal Sir,
Expecting your post on Lorry Driver & CID. Pls come soon.
சிரஞ்சீவி
நடிகர் திலகம் நடித்த படத்தில் அதிகம் விவாதிக்க படாத படத்தில் எதுவும் ஒன்று 1984 ல் வந்த படம் இது
கதை ஒரு கப்பலில் நடக்குது , அந்த கபளின் topaz ( துப்பரவு தொழிலாளி ) தான் டேவிட் சிரஞ்சீவி (நடிகர் திலகம் ), அவர் 7 வயது முதல் அந்த கப்பலில் வேலை செய்து கொண்டு வருகிறார் , அவர் யை எல்லோரும் அன்புடன் அங்கிள் என்றே அழைகிறார்கள் அவர் திருமணம் ஆகாதவர்
ஒரு நாள் அவர் reitre ஆக போவதை கப்பல் கேப்டன் தெரிவிக்கிறார். இந்த சமயத்தில் அவர் அந்த விஷியத்தை எடுத்து கொள்ளும் விதம் , அந்த முகத்தில் தான் எத்தனனை விதமான உணர்ச்சி , அவர் உடம்பும் நடிக்கிறது , பிறகு தன் மனசாட்சி சொல் படி கேட்டு கடைசியாக சிங்கப்பூர் ல் இருந்து சென்னை வரும் ட்ரிப் ல் தன் கடமையை செய்கிறார்
இந்த ட்ரிப் ல் வருவோர்கள் தான் ஸ்ரீ பிரியா (பைத்தியம் ), சரத்பாபு (கைதி ), சௌகார் (சிஸ்டர் ), தேங்காய் & மனோரமா (ஜோசியர்) சரத் யின் காதலி மற்றும் சத்யராஜ் & கோ
இவர்களின் பிரச்சனை யை எப்படி சிவாஜி தீர்த்து வைக்கிறார் என்பதே கதை. சௌகார் யிடம் இருக்கும் வைரம் , நகைகளை அபகரிக்க சத்யராஜ் & கோ முயற்சிப்பதும் , அது முடியாமல் போவதும் , சிவாஜி அதை தடுப்பதும் , ஒரு கடிதாசி யை வைத்து , யார் சௌகார் யிடம் கொள்ளை அடிக்க முயல்க்கியர்கள் என்பதை கண்டுபிடிப்பது , ஸ்ரீ பிரியா பைத்தியம் இல்லை என்பதை அறிந்து கொண்டு , அவர் தான் சௌகார் யின் மகள் என்பதை அறிந்து கொண்டு , சௌகார் க்கு பாவ மணிப்பு வழங்குவது , அதனால் தர்மசங்கடம் நேரும் பொது அதை தாங்கி கொண்டு நடப்பது , முடிவில் ஒரு பலன் கூட எதிர் பாராமல் உயிர் விடும் பொது மனதில் நிரந்து விடுகிறார்
இந்த படத்தில் சிவாஜி ஒரு அனாதை , அதுவும் ஒரு chirsitian , அதுக்கு தகுந்தாற்போல் அவர் மேக் உப பொருத்தம் , ஒரு அழுக்கு சட்டை அதில் மேல் பட்டன் போடாமல் , பெரிய சிலுவை அணிந்து கொண்டு , கடை நிலை உழியன் என்பதால் நடந்து நடந்து ஒரு பக்கமா நடப்பது , மூஞ்சியில் பெரிய கிருதா அதில் கொஞ்சம் நிரை என்று பாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் (சிவாஜி சார் க்கு இது சொல்ல தேவை இல்லை )
கடல் ல் இருப்பதால் குரல் கூட கட்டடி இருக்கும் , இந்த படத்தில் அதுவும் சிவாஜி யின் பாத்திரத்தில் பிரதிபலிகிறது.
படம் முழுவதும் கப்பலில் எடுக்க பட்டு உள்ளது , இயக்குனர் சங்கர் கொஞ்சம் விறுவிறுப்பு , செண்டிமெண்ட் என்று படத்தை தொய்வு இல்லாமல் கொண்டு சென்று உள்ளார்
Dear Vasu sir,
Superb comparison of both Gopal & Arun , semma thinking hats off