-
மறக்க முடியுமா?
எஸ்.எஸ்.ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட சேடப்பட்டி சூரிய நாராயணத் தேவர் ராஜேந்திரன் அவர்கள் அமரராகி விட்டார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட திரு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தயாரித்து 1947ம் ஆண்டு வெளியான, தலைவர் நடித்த பைத்தியக்காரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஆர்.
தமிழ் திரையுலகில் தனியான ஒரு நடிப்பு பாணியை ஏற்படுத்திக் கொண்டு தனது பிசிறில்லாத கம்பீர குரலால் வசனங்களை அர்த்த புஷ்டியுடன் உச்சரித்து தமிழுக்கு அழகு சேர்த்ததுடன் திரைத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டவர் எஸ்.எஸ்.ஆர். அவர்கள்.
மறக்க முடியுமா? திரைப்படத்தின் கிளைமாக்சில் குடிபோதையுடன் தாசி வீட்டுக்கு செல்லும் எஸ்.எஸ்.ஆர்., அந்தப் பெண் வறுமையின் கொடுமையால் அந்த நிலைக்கு தள்ளப்பட்ட தனது சகோதரி என்று தெரிந்து கொள்வார். அந்த சகோதரியும் வந்திருப்பது தனது தம்பி என்று அறிந்த அந்த மோசமான சூழ்நிலையில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டபின், குடிபோதையில், அதிர்ச்சியால் தெளிந்தும் தெளியாத மயக்க நிலையில், சோகத்தையும், அவமானத்தையும், குற்ற உணர்வையும் கொண்ட கலவையான உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவை கூட்டிக் கொண்டே சென்று கடைசியில் கதறும் காட்சியை யாரும் மறக்க முடியுமா?
புராணப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் பகுத்தறிவுக்கு முரணான கதைகளில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருமானம் போனாலும் பரவாயில்லை என்று கொள்கைக் குன்றாக நின்ற லட்சிய நடிகர் அவர்.
1962ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அண்ணா கண்ட திமுக சார்பில் வெற்றி பெற்றதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. அந்தத் தேர்தலில் நம் தலைவர் போட்டியிடவில்லை. ‘நின்றால் பொதுக் கூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு, முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள்’ என்று தன்னால் புகழப்பட்ட மக்கள் திலகத்தை தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பேரறிஞர் அண்ணா கோரியதால், தேர்தலில் தலைவர் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நம் தலைவரை தேர்தலுக்கு பின் எம்.எல்.சி. ஆக்கி அழகுபார்த்தார் நம் அண்ணா.
உலகில் எம்.எல்.ஏ.ஆன முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்றால் அவரது வெற்றிக்கும் பிரசாரம் செய்து (1962ம் ஆண்டு தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதிக்கும் தலைவர் தீவிர பிரசாரம் செய்து வெற்றிக்கு உறுதுணையாக விளங்கினார்) பின்னர் எம்.எல்.சி. ஆன முதல் நடிகர் நம் தலைவர். காஞ்சித் தலைவன் படத்தின் டைட்டிலில் நம் தலைவர் பெயருக்குப் பின்னால் எம்.எல்.சி. என்றும் திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் பெயருக்குப் பின்னால் எம்.எல்.ஏ. என்றும் காட்டுவார்கள்.
மருதுபாண்டியர் வரலாற்றைக் கூறும் சிவகெங்கை சீமை திரைக் காவியத்தில் (சிலர் இந்தப் படத்தை திரு.எஸ்.எஸ்.ஆர். தயாரித்ததாக கருதிக் கொண்டிருக்கின்றனர். அருமை நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் கூட இன்று இந்த படத்தை எஸ்.எஸ்.ஆர். எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகெங்கை சீமை படத்தை தயாரித்தது கவியரசர் கண்ணதாசன் என்பதை பணிவோடு அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்) மருதுபாண்டிய மன்னர்களுக்கு தளபதியாக மாவீரன் முத்தழகு தேவராக வாழ்ந்து காட்டியவர் திரு.எஸ்.எஸ்.ஆர்.
அந்த மனிதனின் மரணத்தில்தான் என்ன ஒரு உன்னதம் பாருங்கள். எந்த மன்னர்களுக்கு தளபதியாக நடித்தாரோ அந்த மன்னர்களை.... மருது பாண்டியர் சகோதரர்களை வெள்ளையர் அரசு தூக்கிலிட்ட நாள் 24-10-1801. அதே தேதியில் எஸ்.எஸ்.ஆர். மறைந்துள்ளார். அந்த மறவர் குல திலகத்தின் புகழ் வாழ்க.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
மக்கள் திலகம் நடிப்பில் மட்டுமல்ல இரட்டை வேட சண்டை காட்சிகளிலும் வித்தியாசம் காட்டி இருப்பார் அதற்கு சிறந்த காட்சி சிரித்து வாழ வேண்டும் படத்தில் வரும் இரு தலைவர்களும் மோதி கொள்ளும் சண்டை காட்சி நான் சிறுவயது முதல் இன்று வரை ரசித்து ரசித்து பார்க்கும் சண்டை காட்சி அன்பர்களே நீங்களும் ரசியுங்கள் உண்மை வீரனின் சாகசங்கள்
http://www.youtube.com/watch?v=lBiUKEFV15s
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.
http://i58.tinypic.com/1on8fs.jpg
ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :
ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.
2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
சகோதரர் திரு.செல்வகுமார் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஒரு படத்தைப் பற்றிய சர்ச்சை எழுந்தால் அந்த பிரச்னையை தீர்த்து வைப்பதும் தொடர்ந்து படம் வளர ஆர்வத்துடன் செயல்படுவதிலும் தயாரிப்பாளருக்கு முக்கிய பங்கு உண்டு.
ஆனால், ஏசுநாதர் படத்துக்கு பிரச்னை எழுந்தபோது தலைவர் மீது கொண்ட பேரன்பால் தனியொரு மனிதனாக போப்பாண்டவருக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு அவரிடம் இருந்து சான்று பெற காரணமாக இருந்த திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் நமது போற்றுதலுக்குரியவர். அவரைப் பற்றிய தகவலையும் அவரது படத்தையும் போற்றி பாதுகாத்து, நமது திரியில் வெளியிட்டு அந்த நண்பரை நாமெல்லாம் அறியச் செய்த திரு. செல்வகுமார் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
மாலை முரசு நாளிதழில் வெளிவந்த செய்தி.
http://i58.tinypic.com/ok7n8l.jpg
கணீர் குரலில் கத்தி வீச்சு போல தமிழ் வசனம் பேசியவர் ;
மருதுபாண்டியர் நினைவு நாளில் மறைந்த இலட்சிய நடிகர்
எஸ்.எஸ். ஆர்.
http://i58.tinypic.com/jpbl20.jpg
-
http://i61.tinypic.com/300glyu.jpg
தி இந்து (தமிழ் ) தினசரியில் வெளியான செய்தி.
---------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2ns0584.jpg
-
thirunindravur lakshmi