Complete lyrics:
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெய்யில் வந்தாலே
ஓடிப்போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஓ..ஓ..
கண்ணீர் வரும் பின்னாலே ஓ..ஓ..
என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
இதற்குத்தானா ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெருக்குதே
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள்
என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா