Originally Posted by joe
PR,
உங்கள் எழுத்தைப்பற்றி நான் ஒன்று சொல்லியாக வேண்டும் .தமிழில் சினிமா குறித்த கட்டுரைகளை தியோடர் பாஸ்கரன் ,ராமசாமி போன்றவர்கள் எழுதப் படித்திருக்கிறேன் . அவ்வாறு தீவிர சிற்றிதழ் இலக்கியப்பரப்பில் சினிமா பற்றி எழுதுபவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காகவும் ,அல்லது தனது தகுதிக்கெல்லாம் தமிழ் சினிமா ஜுஜூபி என்ற மனப்பான்மையோடு தமிழ் சினிமா குறித்து எள்ளல் தொனிக்கவே எழுதுவார்கள் ..அவர்களில் பலர் வெகுஜன மக்களின் ரசனைத் தளத்தில் நின்று தமிழ் சினிமாவை அணுகுவதில்லை .. ஆனால் உங்கள் அணுகுமுறையோ மிகுந்த மகிழ்ச்சி தருகிறது . உங்களால் வெகுஜனம் ,மேட்டிமை இரண்டு தளங்களிலும் இயங்க முடிகிறது .அதுவும் தமிழ் சினிமாவை புறக்கணிக்காமல் இது நம் சினிமா என்ற உரிமையோடு நிங்கள் எழுதுவது மிகவும் பாராட்டத்தக்கது ..வெறுமனே உயர்வு நவிற்சியாக சொல்லவில்லை ..உங்கள் தமிழ் வளமும் ,எழுத்து நடையும் ,சினிமா அறிவும் யாருக்கும் சளைத்ததல்ல ..நீங்கள் இளையர் என்ற போதிலும் ..வாழ்க! :D