:bow: :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
Thank you so much!
Printable View
:bow: :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
Thank you so much!
To beat the regular routine,
I absolutely admire character portrayal of,
1. Ashok
2. vEmbu
3. Samaiyal maami
4. Neelakantan
scale above the rest.
Please share ur favourites too ( and share reasons if u wanna add on)
மிக்க நன்றி SP
Ashok is good. But he did not impress me much. :oops: But definitely I agree with the 2, 3 & 4 in your list. :bow:Quote:
Originally Posted by Shakthiprabha
Neelakandan wasn't much impressive at first but later he picked up the character and started living as Neelakantan. :thumbsup:
Vembu and Samayal Maami :redjump: Wonderful character just like someone next door... :yes:
Thanks vr :)
I always appreciate ashok types and also relate to his types lot of times ( :| :oops: ) and definitely I know, most people wont admire his charactor or relate to him. Looks like we get along reg the rest.
March 17th
_________
இவ்வளவு நடந்த பின்பும் எப்படி ஒருவனால் நிச்சலனமாக, கடமைகளைத் தொடர முடிகிறது? அஷோக் அப்படித் தான் இயல்பாய் தன் பணிகளைத் தொடர்கிறான். பிறர் பழிப்பதோ புகழ்வதோ அவனுக்கு பொருட்டாய் தெரிவதில்லை. இதைத் தொடர்ந்து பேசிய கதாசிரியர், உண்மையான ஞானி மற்றோரின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை. தன் பாதையை தானே வகுத்துப் பயணிக்கிறான், என்கிறார். மற்றோரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, பிற சாமான்யர்கள் ஞானிகளை விட உயர்ந்தவர்கள் அல்ல (உயர்ந்தவர்கள் = உயர்ந்த ஞானம் உடையவர்கள்).
பட்டினத்தார் எப்பேர்பட்ட ஞானி என இன்று நாம் பேசிக்கொண்டாலும், அவர் வாழ்ந்த காலகட்டத்தில், அவரை இகழ்ந்தவர்களும், பைத்தியக்கார பட்டம் கட்டியவர்களும் அதிகம். ஒருமுறை பட்டினத்தார் வயல்வரப்பில் கையை தலைக்கு அணையாக வைத்து இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவ்வழியே கடந்து சென்ற இரு பெண்டிரில் ஒருவர், "இவரெல்லாம் என்ன ஞானி! உறங்கும் போதும் சுகம் வேண்டியிருக்கிறது பார், கையை தலைக்கு அணையாக்கி உறங்குகிறார்" என்று இன்னொருத்தியிடம் சாடை பேசுகிறாள். "அப்படி பேசாதே அவர் உண்மையில் பெரிய ஞானி" என்று மறுத்துரைக்கிறாள் மற்றொருத்தி. உடனே பட்டினத்தாருக்கு மனம் வெம்பியது. 'ஆஹா நம்மால் இன்னும் சரீர சுகத்தை துறக்கமுடியவில்லையே என்று வருந்தி, இனி இதுவும் வேண்டுவதில்லை என கையையும் விடுத்துப் படுத்தார். மீண்டும் அவ்வழியே திரும்பச்சென்ற அப்பெண்டிரில் இன்னொருத்தி "பார்த்தாயா நீ கூறியதும் அதையும் துறந்துவிட்டார்" என்று சொல்ல, முதல் பெண் "இன்னொருவர் சொல்வதைக் கேட்டு, அதனால் பாதிக்கப்பட்டு, தன் போக்கை மாற்றிக்கொள்ளும் இவரெல்லாம் ஞானியா" - அலட்சியம் பேசிச் செல்கிறாள். இக்கதையில் வரும் இரு பெண்டிரும் உமையும் சிவனுமே ஆவார்கள் எனக்கூறுவர். சுரீரென உறைத்தது பட்டினத்தாருக்கு. "உலகத்தோரின் பேச்சுக்கு தன் மனம், செவி சாய்த்து அதனால் பாதிக்கப்படுகிறதென்றால், எப்பேற்பட்ட அஞ்ஞானத்தில் உழன்றுகொண்டிருக்கிறோமே, இன்னும் எத்தனைப்படிகள் ஞானத்தை நோக்கி செல்லவேண்டுமோ" என மறுகுகிறார்.
"என் மனதுக்கு தெரியுமப்பா நான் பைத்தியம் அல்ல என்று" "நான் ஏன் கவலைப்பட வேண்டும்" என்கிறான் அஷோக். உலக மக்களைப் புரிந்து கொள்ள அவன் தன் வட்டத்தை விட்டு வெளிவர வேண்டும். அவர்களோடு பழகவேண்டும். அதன் பின்னர் அவன் சொல்லும் செய்தி, அவர்களுக்கும் எட்டலாம் என நாதன் அபிப்ராயப்படுகிறார்.
"அடடா பணக்காரனுக்கு இவ்வளவு கஷ்டமா" - பர்வதத்தின் கேள்விக்கு வசுமதியின் பதில் நன்றாய் இருந்தது. "பணத்தை நாங்க வெச்சுண்டு இருக்கிறதா நினைக்கிறா, அது தான் இல்லை, பணம் தான் எங்களை வெச்சுண்டு இருக்கு"
( ரஜினிகாந்துடைய 'முத்து' படத்திற்கு வைரைமுத்து எழுதிய வரிகள் நினைவிற்கு வருகிறது.
கையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன் )
பணக்காரனுக்கு உள்ள துன்பங்கள் சொல்லி மாளாது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. கட்டிக்காக்கும் பொறுப்பு இருக்கையில், அதைப் பற்றிய பயமும் அதிகரிக்கும். பணக்காரர்கள், தம் நண்பர்கள் -பகைவர்கள் - உறவினன் என எல்லோரையும் பயத்துடனேயே நெருங்குகின்றனர். என்றைக்கேனும் தனதென்று வைத்துள்ளது தம்மை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சம் நிறைந்த வாழ்க்கை. "மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்" என்ற தொன்மை மிகுந்த கூற்றை இங்கு அப்படியே with literal meaning பயன்படுத்திக்கொள்ளலாம்.
சேமித்து வைத்து அதை தனதென்று உரிமைக்கொண்டாடி, பயத்துடன் கட்டிக்காப்போனுக்கு தேனி கதை பொருந்தும். தேனி சிறுக சிறுக சேமித்து கூட்டைக் கட்டும், ஒரே நாளில் அதை அழித்து அதன் பலனை இன்னொருவன் கொண்டு சென்றுவிடுவான். சேகரித்து சேமித்து வைக்கும் பணக்காரன் நிலையும் இது தான். இவ்வுலகில் எதுவும் சாஸ்வதம் அல்ல. தேவைக்கு அதிகமாக சேர்க்காத மலைப்பாம்பு, இரை அருகில் வந்தால் உண்ணுமாம். பசி நேரத்தில், தேவையான அளவு கிடைத்த பொழுது கிடைத்த உணவை உண்ணும்
மலைப்பாம்புக்கு வேறு அனாவசிய கவலைகள் இருக்க வாய்ப்பில்லை. உயர்ந்த ஞானிகள் தமக்கென சேமித்து வைப்பதில்லை. பட்டினத்தார், ஒருநாள் யாசகம் கேட்டுச் செல்கையில், அவருக்கு திருட்டுப் பட்டம் கட்டிவிட்டனர். மனம் வருந்தி, 'உணவு எனைத் தேடி வந்தால் உண்பேனே ஒழிய, இளைத்தாலும், நான் இனி உணவைத் தேடிச் செல்லமாட்டேன் என வைராக்கியம் பூண்கிறார்.
முக்கியத் திருப்பங்கள்:
1. தம் பெண்ணுக்கு அடையார் விட்டை எழுதிக்கொடுத்து தனிக்குடித்தனம் வைக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார் ருக்மிணி, ஜகன்னாதன் உடன் படுகிறார்.
2. தேர்ந்த மருத்துவர் ஒருவரின் சான்றிதழின் பேரிலேயே அசோக் மனநிலையை உறுதி செய்ய முடியும் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். அவர்களை அடக்க, மந்திரியின் உதவியை நாடி, வையாபுரி வெற்றி காண்கிறார்.
3. சமையல் மாமியின் கணவருக்கு தம் மகள் கல்யாணாத்தையொட்டி பணம் புரட்டுவது கடினமாகிறது. தீர்கதரிசனத்துடன், அனேகமாக சமையல் மாமியே அவருக்கு உதவக்கூடும் என்ற முடிவுக்கு நாமே வரலாம்.
(வளரும்)
:ty: SPQuote:
Originally Posted by Shakthiprabha
அட் பாவமே !!
இங்கும் இப்படியா :hammer: :hammer:
Today's episode was good.
Cho explained the reason why Women should be treated with dignity.. :bow:
I loved his speech. Each point sounded very valid!!! :bow:
And, Kripa's wife's character has been portrayed so well. Romba nalla ponnu :cool:
Kripa's attitude - :hammer:
SP akka, awaiting your writing :yes:
:| எழுதறேன்.Quote:
Originally Posted by viraajan
March 18th
_________
தனிக்குடித்தனம் மிகுதியாகிவிட்டபடியால், தனிக்குடித்தனத்தை முகச்சுளிப்போடு ஏற்கும் நிலை போய், இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கும் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறோம். கலியுகத்தில் மனிதன் தன் மனைவி வழி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணத்தாலும் சரீராத்தாலும் உழைக்கக் கடவான் என்று பாகவதத்தில் கூறியிருக்கிறதாம். இதன் முக்கிய காரணம் வீட்டில் உள்ள பெண்கள். அனுசரணையாய் இல்லாமல், பிடுங்கும் ஒரு பெண்ணை சமாளிக்கத் தெரியாமல் அவள் போதனைக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயம். சமுதாயம் என்னும் பிணைப்பில் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால், பெண்கள் சிந்தனைகள் மாறுவதற்கேற்ப, ஆண்களும் மாறுவது இயல்பு. இறுதியில் வீட்டில் நிம்மதி என்பது பெண்ணின் கூட்டுறவால் அமையப்பெறுகிறது, அதை அவள் விருப்பத்திற்கு இணங்கி விலை கொடுக்கவேண்டியதாயிருக்கிறது.
மேற்பட்ட கருத்தை மறுப்பதும் ஒப்புவதும் அவரவர் தனிப்பட்ட அனுபவங்களைப் பொருத்து. ஆனால் நம் சாம்புவும் அவர்கள் வீட்டாரும் விகல்பம் இல்லாது, நல்லமனதுடன் வாழத்தி தம்பதிகளை தனிக்குடித்தனம் வைக்கின்றனர்.
(பி.கு: க்ருபா/ப்ரியா திருமணம் ஒரே சீனில் மூன்றே மூன்று டைலாக்குடன் இனிதே முடிந்தது!)
எல்லாம் தெரிந்த ஞானிகளும் சில நேரம் ஏன் உலக விஷயங்களில் மூக்கை நுழைத்து மாட்டிக்கொள்கின்றனர்? ஸ்ரீ அரோபிந்தோ இந்திய பாக்கிஸ்தானிய உறவுகளுக்கு பாலமிட உடன்படுமாறு எடுத்துரைக்க முற்பட்டு அனுப்பிய மனு கவனிக்கபடவில்லை. அது கவனிக்கப்படாது என்று அவருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததல்லவா? தெரிந்திருந்திருந்தும், தம் கடமைக்காக செய்தார் என்று கூறியிருக்கிறார்.
பிட்டுக்கு மண் சுமந்த ஈசனும், பூமியில் பிறந்ததால், தாம் செய்ய வேண்டிய அனுபவிக்க வேண்டிய கடமையிலிருந்தும் தவறவில்லை. இராமனுக்கு சீதை அபரிக்கப்படுவாள் என்று தெரிந்திருந்ததா? அவர் பதினாறு குணங்கள் நிரம்பப்பெற்ற அவதார புருஷனல்லவா! தெரிந்திருக்கும் வாய்ப்பிருக்கிறது. துளசிதாஸ் இராமாயணத்தில் இராமன் அவதாரமாக இறைவனாக போற்றப்படுகிறான். ராவணன் அபகரித்தது நிஜ சீதையை அல்ல அது 'மாயா சீதா' எனும் வேதவதி என்ற கதை உண்டு. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் இராமன், மனிதனாக அவதரித்து, ஒரு உயர்ந்த மனிதாக மட்டுமே வாழ்தார். மனிதாக மட்டுமே தன்னை உணர்ந்தார் என்றே கூறப்படுகிறது. அக்னிப் ப்ரவேசம் முடித்ததும், தேவதிதேவர்களும், சிவனும், பிரம்மனும் வந்து "நீ யார் என்று விளங்கவில்லையா" என்று கேட்டும் கூட "நான் தசரத புத்திரன் இராமன்" என்றே கூறுகிறாராம்.
{ ( சில சிந்தனைகள் ): இதை இரண்டு விதமாய் யோசிக்கலாம். தன்னை மனிதனாக பாவித்தப் பின், நிகழ்காலத்தின் மட்டுமே வாழ்ந்த ஞானியின் நிலையில், அவன் தன் இயல்பை மறந்து மனிதனாக மட்டுமே செயல் பட்டான். அப்படி செயல்பட்டதால், அவனே இறையம்சத்தின் பிரதிபலிப்பு என்பதும் கூட நினைவிலிருந்து அகன்று விட்டது.
அல்லது
தான் இறை என்பது நினைவில் இருந்தும், அவன் தன்னை மனிதனாக மட்டுமே வெளிப்படுத்தினான்.
கண்ணன் அவதாரம் வெகு வித்தியாசமானது. பரிபூர்ண அவதாரமான க்ருஷ்ணன், தான் மனிதனாக வாழ்ந்த போதும், இறைவனின் அத்தனை அம்சங்களையும் வியக்கத்தக்க வகையில் பல சில சமயங்களில் வெளிப்படுத்தினார் }
நீலகண்டன் நியாயவாதியாய் செயல்படுகிறார். வைதீகத்தை ஒருபுறம் அனுசரித்த போதும், மற்றைய விவகாரங்களில் வளைந்து கொடுத்து நடப்பவனை விட, தம் மனதுக்கு சரியென பட்ட தர்மத்தை துணிந்து செயலாற்றும் உயர்ந்த குணம் இவரிடம் மின்னுகிறது. அசோக் விவகாரத்தில் நேரடியாக இவர் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ள, வையாபுரி ஏவியதில் சிங்காரம், நீலகண்டனையும் அவர் குடும்பத்தையும் மிரட்டிச் செல்கிறான்.
(வளரும்)