Vikadan vimarsanam mudivil yar yar vimarsanam seitharkal endru payar and avarkalin tholil(!) ponra thagalvalkalum thanthathu
nanraka irunthathu.
Printable View
Vikadan vimarsanam mudivil yar yar vimarsanam seitharkal endru payar and avarkalin tholil(!) ponra thagalvalkalum thanthathu
nanraka irunthathu.
haha -well saidQuote:
Originally Posted by jaiganes
குறவஞ்சி படம் வெளியான தியேட்டர்கள் மற்றும் அது ஓடிய விவரங்களை அந்த படத்தின் பொன்விழா நாளில் வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்த சுவாமிக்கு நன்றி.
இந்த நாளை நினைக்கும் போது என் மனம் 32 ஆண்டுகளுக்கு முன்னால் போகிறது.1978 -ம் ஆண்டு மார்ச் 4 -சனிக்கிழமை. அன்றுதான் பாலாஜி தயாரித்த வெள்ளி விழா படங்களில் ஒன்றான தியாகம் வெளியானது. முதல் நாள் மாலைக் காட்சி மதுரை சிந்தாமணியில் பார்த்தது இன்றும் பசுமரத்தாணி போல் இருக்கிறது.
தேன் மல்லிப் பூவேயும், நல்லவருக்கெல்லாம் தியேட்டர் அலறியது. முதல் நாள் மாலைக் காட்சி பார்த்ததுபோல் 175 -வது நாளான ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை மாலைக்காட்சியும் அதே சிந்தாமணி தியேட்டரில் பார்த்தது மறக்க முடியாத ஒன்று. இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு 5 முறை பார்த்தேன்.
அன்புடன்
என்னவோ தெரியவில்லை - விளையாட்டுப் பிள்ளையின் 40 -வது ஆண்டு நிறைவை குறிப்பிட்ட நாளிலிருந்தே அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன.
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
'தியாகம்' பட வெளியீட்டு நிகழ்வுகளைத்தந்து, நினைவலைகளைப் பின்னோக்கி தட்டி விட்டு விட்டீர்கள். நேற்று நடந்த்து போல் இருக்கிறது. அதற்குள் 32 ஆண்டுகள் ஒடி விட்டதா?. தாவணி கூட போடாமல் வெறும் பாவாடை, சட்டை போட்டிருந்த சிறுமியாக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. படம் வெளியான அன்று சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில்தான் ஆண்களும் பெண்களுமாக என்ன கூட்டம். அவ்வளவு பெரிய கார் பார்க்கிங் ஏரியா நிறைந்து, பக்கத்திலிருந்த 'பால்ஸ் ரெஸ்டாரண்ட்' கிரவுண்டுக்கு கார்கள் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருந்தன. (இப்போது அந்த கிரவுண்ட் எல்லாம் கட்டடங்களாக மாறி விட்டன). கொடிகளும், பேனர்களும், ஸ்டார்களும், மாலைகளுமாக தியேட்டரே விழாக்கோலம் பூண்டிருந்தது என்றால், நீண்ட சர வெடிகள் அந்த வழியே பேருந்தில் பயணித்தோரின் கண்களை ஈர்த்தன. மன்றத்தின் மூலம் ரிசர்வ் செய்யப்பட்டிருந்த மூன்று டிக்கட்டுகளும் பாக்கெட்டில் இருக்கும் தைரியத்தில் அப்பா இந்த கொண்டாட்டங்களை ரசித்துக்கொண்டிருக்க, நானும் அம்மாவும் அவர் பக்கத்தில் நின்று ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
தியேட்டரின் உள்ளே படம் துவங்கியது முதலே ஆரவாரம் தான். படகில் அமர்ந்திருக்கும் 'தலைவரை' அவரது இரண்டு சிஷ்யர்களும் அழைக்க, தலையில் இருந்த பெரிய கூடைதொப்பியைக் கழற்றியபடி 'தலைவர்' தரிசனம் தந்ததும், ரசிகர்கள் மேடையில் ஏறி கற்பூர ஆரத்தி எடுத்தனர். பேப்பர் கட்டிங் களும், சில்லரைகளும் வீசப்பட்டன. காட்சிக்கு காட்சி ஆரவாரம். குறிப்பாக கோயிலில், 'உள்ளே போயிருவியாடா?' என்று கேட்கும் தேங்காயைப்பார்த்து, 'போவேண்டா' என்று சொல்லுமிடத்திலும், வாசுவை சேற்றில் தள்ளி புரட்டியெடுக்கும் காட்சியிலும் ஆரவாரம் என்றாலும் கூட, சாந்தி தியேட்டரே துவம்சம் ஆனது நடிகர்திலகம் - ஜஸ்டின் சண்டைக்காட்சியின்போதுதான். (மாற்றுமுகாமைச்சேர்ந்த ஜஸ்டினுடன் முதல் படம்). அந்த மீன் மார்க்கெட் சண்டைக்காட்சி படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று.
அதுபோல 'நல்லவர்க்கெல்லாம்' பாடல் காட்சியின்போதும் ஆரவாரம், கைதட்டல். குறிப்பாக, பாடல் முடிந்ததும் லட்சுமி நடிகர்திலகத்தைப்பார்த்து 'சூடு ஆறிப்போச்சு' என்று சொல்லும்போது.
ஹும்.... எப்படிப்பட்ட சுவையான நாட்கள் அவை.
நான் வாழ வைப்பேன் (என்று நினைக்கிறேன் :roll: )Quote:
Originally Posted by PARAMASHIVAN
சாரதா,
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஜஸ்டினோடு போடும் சண்டைக் காட்சி பெரிய ஆரவாரத்தைப் பெறும் [காரணத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள்]. அது போல் உலகம் இருட்டு பாடல் காட்சி, பாடலே இல்லாமல் நடிகர் திலகமும் படாஃபட்டும் ஆடும் காட்சி, தொடர்ந்து 72 மணி நேரம் சைக்கிள் ஓட்டும் காட்சி, எல்லாமே அலப்பறை காட்சிகள்தான். போலீஸ் ஸ்டேஷன்-ல் முதலில் பாலாஜி சாட்டையால் அடிக்கும் போது பாலாஜியை அப்படி திட்டுவார்கள், உண்மை தெரிந்த பிறகு ஏன் இப்படி என்று கேட்கும் பாலாஜியிடம் புன்னைகைத்துக் கொண்டே எல்லோருக்கும் நேரா எழுதியிருக்க ஆண்டவன் எனக்கு கோணலா எழுதியிருக்கான் என்று கட்டை விரலால் நெற்றியை காண்பித்து விட்டு போவாரே அந்த சீன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். லட்சுமியும் நன்றாக செய்திருப்பார். அவர் அந்த படத்தில் அணிந்து வந்த புடவைகள் ரொம்ப பேஃமஸ். வசந்த கால கோலங்கள் [கண்ணன் எந்தன் காதலன் பாடல் மெட்டை நினைவுப்படுத்தினாலும்] காட்சியும் நன்றாக இருக்கும். வெளிப்புற காட்சிகள் முழுக்க கேரளத்தில் படமாக்கப்பட்டிருக்கும். ஆற்றில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஒரு புதுமை. A.L. நாராயணன் வசனம் சுவையாக இருக்கும்.
மதுரையில் முதல் 63 நாளில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ் புல். மதுரையில் 175 நாட்களில் வசூல் Rs 6,75,000/-. திரிசூலம் வந்து இதை முறியடிக்கும் வரை இதுவே ரிகார்டாக இருந்தது[அதாவது 175 நாட்களில் மதுரையில் அதிக வசூல் இதுதான்].
விட்டால் முழு படத்தையும் வசனத்தையும் எழுதி விடுவேன் என நினைக்கிறேன். என்னையும் மீண்டும் அந்த காலக்கட்டத்தை அசை போட வைத்ததற்கு நன்றி.
அன்புடன்
கோடீஸ்வரன் - Part I
தயாரிப்பு: கணேஷ் மூவி டோன்
இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்னி
வெளியான நாள்: 13.11.1955
ஊரில் பெரிய மனிதர் ராவ் பகதூர் ராமசாமி. அவருக்கு ஒரு மகன் கண்ணன். ஒரு மகள் நீலா. கண்ணன் சென்னையில் எம்.ஏ. படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். மகள் நீலா வீட்டில் இருக்கிறாள். பணத்தாசை பிடித்த ராமசாமி தன் மகனுக்கு பெரிய அளவிலான வரதட்சணை எதிர்பார்க்கிறார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிதம்பரம். வசதிக் குறைவானவர். அவர் மகள் கமலா கல்யாணத்திற்காக காத்திருக்கிறாள். ஆனால் வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் வரதட்சணை அதிகமாக கேட்க அவளின் கல்யாணம் தள்ளிப் போகிறது. ஒரு டாக்டர் அவளை பெண் பார்க்க வந்து விட்டு ஏராளமான கேள்விகள் கேட்டு ஏராளமான வரதட்சணையும் கேட்க அந்த வரனும் தட்டிப் போகிறது. கமலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.
சிதம்பரத்தின் அண்ணன் மகன் சந்தர். சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து கொண்டிருக்கும் சந்தர் கண்ணனோடு ஊருக்கு வருகிறான். அது மட்டுமல்ல, ஆனந்தன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதுபவன். ஊருக்கு வரும் சந்தர் பரமசிவத்தின் பண மோகத்தையும் கண்ணனும் கமலாவும் ஒருவரை ஒருவர்
விரும்புவதையும் தெரிந்துக் கொள்கிறான். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணனின் தங்கை நீலாவிற்கு சந்தர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகுகிறது.
ஏற்கனவே பெண் பார்க்க வந்து வரதட்சனை கேட்டு தங்களை அவமானப்படுத்திய டாக்டர் பசுபதியை பழி வாங்க அவரை மீண்டும் வரவழைக்கிறார்கள் சந்தரும் நீலாவும். இப்போது கல்யாண பெண் இடத்தில் நீலா இருந்து டாக்டரை பாட தெரியுமா, ஆடத் தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு அவமானப்படுத்த, டாக்டர் அவர்கள் மேல் வன்மம் கொள்கிறார்.
கண்ணன் கல்யாணம் நடைபெற சந்தர் ஒரு யுக்தி செய்கிறான். முதலில் தயங்கினாலும் கண்ணன் ஒத்துக் கொள்கிறான். இதற்கு நீலாவின் ஆதரவும் இருக்கிறது. அதன்படி கண்ணன் வீட்டிற்கு பெண் கேட்க செல்லும் சிதம்பரத்துடன் உடன் செல்லும் சந்தர் தன் பணக்கார மாமா ஒருவர் இறந்து விட்டதாகவும் வாரிசில்லாத அவரது உயில்படி சொத்தெல்லாம் தன் பெயருக்கு வருவதாகவும் அதனால் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் சொல்கிறான். அண்ணன் என்ற முறையில் தங்கை கல்யாணத்தை நடத்தி வைப்பதாக கூறும் சந்தர் வரதட்சனை பணத்தையும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறான்.
இந்த பணத்தை கொடுப்பதற்காக ஒரு தந்திரம் செய்யும் சந்தர் கண்ணனிடம் அவனது தந்தையின் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கொடுக்கும்படி சொல்கிறான். நீலாவிடமும் இந்த திட்டத்தை சந்தர் ரகசியமாக சொல்வதை தங்கையான சிறுமியும் கேட்டு விடுகிறாள்.
தந்தையின் படுக்கைக்கு அடியில் இருக்கும் இரும்பு பெட்டி சாவியை எடுத்து பணத்தை எடுக்க சிரமப்படும் கண்ணனுக்கு நீலாவும் உதவுகிறாள். கல்யாணம் நல்லப்படியாக நடந்து முடிகிறது. தன் மகள் நீலாவை சந்தர் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ராவ் பகதூர் கேட்க நீலா இப்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.
இந்த நிலையில் சந்தருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சிதம்பரம் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க சந்தரின் தங்கை தன் வயதையொத்த தன் கஸினிடம் கோவிலில் வைத்து [அவள் ஏற்கனவே சந்தர் நீலாவிடம் ரகசியமாக சொன்னதை கேட்டிருந்ததால்] உண்மையை சொல்கிறாள். இதை கோவிலுக்கு வந்திருக்கும் டாக்டர் பசுபதி தற்செயலாய் கேட்டு விட, அப்போதே ராவ் பகதூர் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லி விடுகிறார்.
தன்னிடம் வரும் நோட்டுக் கட்டுகளின் எங்களை எழுதி வைக்கும் வழக்கமுடைய ராவ் பகதூர் தன்னிடமிருந்த நோட்டுகளின் எண்களையும் சந்தர் கொடுத்த நோட்டுகளின் எண்களையும் ஒப்பிட்டு பார்க்க, குட்டு வெளிப்படுகிறது. கோவமுறும் ராவ் பகதூர் கண்ணனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சந்தரையும் சிதம்பரத்தையும் கேவலமாகவும் பேசி விடுகிறார். தன் சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து விடுகிறார்.
நடந்த தவறுகளுகெல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் சந்தர் மீண்டும் கண்ணனையும் அவனது தந்தையுடன் சேர்த்து வைக்க சபதம் எடுக்கிறான். ஆனால் இப்போதும் சந்தரை ராவ் பகதூர் ஒரு கோடிஸ்வரனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முயற்சி எடுக்க, அவர் மகள் நீலாவோ தன் தந்தை வற்புறுத்தியதால் தன் மனம் சந்தரை நாட தொடங்கி விட்டது என கூறுகிறாள்.
இந்நிலையில் டாக்டர் பசுபதி நீலாவை மணந்து கொள்வதாக மீண்டும் வருகிறார். ராவ் பகதூர் வீட்டிற்கு வரும் சந்தர் தான் நீலாவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என்றும் ஆனால் அதற்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறான். அதை கேட்டு விக்கித்துப் போகும் ராவ் பகதூருக்கு அடுத்த அடியாக ஒரு தந்தி வருகிறது. அவர் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலாகி விட்டது என்பதே அந்த செய்தி. இதை கேட்டவுடன் டாக்டர் பசுபதி கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விட ராவ் பகதூர் கதறி அழுகிறார்.
தன் சம்பந்தி, மகன், மருமகளை எல்லாம் அழைத்து மன்னிப்பு கேட்கும் அவரிடம் வங்கி திவாலாகவில்லை என்றும் அவரது குணத்தை திருத்தவே இப்படி ஒரு நாடகமாடியதாக சந்தர் உண்மையை வெளிப்படுத்துகிறான். தான் கோடீஸ்வரன் அல்ல என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.
ராமசாமி மனம் மாறி அனைவரையும் ஏற்றுக் கொள்ள சந்தர் நீலா இணைகிறார்கள்.
அன்புடன்
கோடீஸ்வரன் - Part II
ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.
50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.
இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.
நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.
நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.
பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.
டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.
கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.
தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].
இசை - S V வெங்கட்ராமன்.
எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.
கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.
கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.
உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.
யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.
சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.
நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.
அன்புடன்
சிங்காரச் சென்னையின் ஸ்டார் திரையரங்கில், இன்று (5.3.2010) வெள்ளி முதல், தினசரி பகல் காட்சியாக, சிங்கத்தமிழனின் "தங்கப்பதக்கம்" திரைக்காவியம் திரையிடப்பட்டுள்ளது.
இத்தகவலை அளித்த ரசிக நல்லிதயம் திரு.ஆர்.குமார் அவர்களுக்கு பற்பல நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
அனைத்து நல்லிதயங்களுக்கும் வணக்கம்.
சாரதா அவர்களின் தியாகம் பற்றிய முதல் நாள் காட்சிகளைப் பற்றிய நினைவுகள் மிகவும் நெகிழ்வூட்டுபவையாயிருந்தன. காரணம் அந்தத் தேதியில் அங்கு நானும் இருந்தேன். ஏற்கெனவே 26.01.1978 அன்று அப்படத்தைப் பார்த்து விட்ட படியால் எங்கெங்கெல்லாம் அளப்பரை ஆரவாரம் வரும் என அறிந்திருந்தோம். அதே போல் அரங்கின் வெளியிலும். அந்த நாட்கள், அந்த அனுபவங்கள் கோடி கொடுத்தாலும் தற்போதைய தலைமுறைகளுக்குக் கிட்டாது. படம் வெளியாகி சிலநாட்களுக்குப் பிறகு சேலம் சென்றிருந்தேன். அங்கு சாந்தி திரையரங்கில் வெளியாகியிருந்தது. அங்கும் அதே ஆரவாரம் தான், அதே காட்சி தான். உலகெங்கும் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களின் நல்லிதயங்களும் ஒரே கோணத்தில் தான் சிந்திப்பார்கள் என்பதற்கு இது மற்றோர் உதாரணம்.
முரளி சாரின் கோட்டீஸ்வரன் படத்தினைப் பற்றிய அலசல் மிகவும் மகிழ்வூட்டியது. சற்றும் விறுவிறுப்புக் குறையாமல் போரடிக்காமல் செல்லக் கூடிய படம் கோட்டீஸ்வரன். குறிப்பாக எஸ்.பாலச்சந்தர் அவர்களுக்கு சிறப்பான பங்களித்திருந்தார்கள். ராகினியும் பத்மினியும் சேர்ந்து அவரை முட்டாளாக்கும் காட்சிகளில் சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. உலாவும் தென்றல் பாடலில் எஸ்.வி.வெங்கட்டராமன் அவர்கள் பின்னணியில் ரயில் ஒடும் ஒலி போல் ஒரு சிறப்பு சப்தம் இணைத்திருப்பார். மிகவும் புதுமையாக இருக்கும். அனைத்து ரசிகர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் கோட்டீஸ்வரன். இப்படத்தை எந்த நிறுவனமாவது குறுந்தகடு அல்லது நெடுந்தகடாக வெளியிட்டால் மிகுந்த வரவேற்பைப் பெறும்.
பம்மலார் வழக்கம் போல் தகவல் களஞ்சியங்களை அள்ளித் தருகிறார். குறிப்பாக மதுரை புதிய பறவை வசூல் விவரம் அனைத்து ரசிகர்களையும் மிகவும் மகிழ்வூட்டிய செய்தியாக அமைந்தது.
ஸ்டார் திரையரங்கில் தங்கப் பதக்கம் - அதுவும் பகல் காட்சியாக ... ஆஹா..
தென் சென்னையில் பகல் காட்சியை அறிமுகப் படுத்திய திரையரங்கம் ஸ்டார் என நினைவு. திரையிடப் பட்ட முதல் படம் ஆலயமணி என எண்ணுகிறேன்.
மீண்டும் ஸ்டாரில் பகல் காட்சியில் நடிகர் திலகத்தின் படம் ...
நினைத்தாலே இனிக்கும்.
மற்றோர் மகிழ்வான செய்தி. சிங்காரச் சென்னையின் அடையாளச் சின்னமாம் நமது சாந்தி திரையரங்கு தற்போது 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி இந்த 50 ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள், முக்கியமான சாதனைகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளிட்ட தகவல்களோடு நமது இணைய தளம் சார்பில் ஒரு நினைவூட்டல் பேனர் வைக்கப் பட்டுள்ளது. சாந்தி திரையரங்கம் செல்லும் வாய்ப்புக் கிடைப்பவர்கள் இதைப் பார்த்து விட்டு தங்கள் கருத்தைப் பகிரந்து கொள்ளலாம்.
ராகவேந்திரன்