மன்மத லீலையை அணுஅணுவாகப் படித்து ரசிக்கும் போது அதற்கு முன் எம் மன்னவர் புரிந்த மன்மத லீலைகளை 'திரும்பிப் பார்' க்காமல் இருக்க முடியவில்லை.
http://i1087.photobucket.com/albums/...%20-2/22-5.jpg
Printable View
மன்மத லீலையை அணுஅணுவாகப் படித்து ரசிக்கும் போது அதற்கு முன் எம் மன்னவர் புரிந்த மன்மத லீலைகளை 'திரும்பிப் பார்' க்காமல் இருக்க முடியவில்லை.
http://i1087.photobucket.com/albums/...%20-2/22-5.jpg
முந்தாநாள் ஊருக்குப் போய்விட்டதால் இன்றைய ஸ்பெஷல் போட முடியவில்லை. நேற்று ரெடி பண்ணி வைத்து போடப் போகும் போது அருமை கார்த்திக் சார் அழகான 'மன்மத லீலை' யை கொண்டு வந்தார். கோபாலும் தொடர்ந்து நல்ல பதிவுதர, போட்டு குழப்ப மனம் வரவில்லை. நிறுத்தி விட்டேன். இன்றைய ஸ்பெஷலை இன்று தொடருவேன்.
'உத்தமபுருஷன்' படத்தில் பிரபுவும் பிளே-பாயாக நன்றாகப் பண்ணியிருந்தார். படமும் நன்றாகவே ஓடியது.
பிரபுவின் ராஜா கைய வச்சா (சரியா போகாதது வருத்தமே),உத்தம புருஷன் (நல்ல ஹிட்) இரண்டுமே எனக்கு பிடிக்கும்.. டுபாக்கூர் ரோலில் ராஜா கைய வச்சா படத்தில் அவர் ,கவ்தமி இணைவில் கலக்கியிருப்பார். உத்தம புருஷன் படத்தில் காரில் பெண்களுக்கு லிப்ட் கொடுத்து கலாய்த்து மாடி கொள்ளும் சீன்.வாவ்!!!
நாசர் -மகளிர் மட்டும் சுமார்தான். பிரபுவிற்கு கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக பண்ணியிருப்பார்.
நடிகர்திலகம் ,playboy என்றால் திரும்பி பார், இருவர் உள்ளம்,வசந்த மாளிகை. காமெடி playboy என்றால் இருவர் உள்ளம்.தெய்வ மகனில் கொஞ்சம் விஜய் ஆரம்பத்தில்.
(கொஞ்சமே கொஞ்சம் பெண்ணின் பெருமை,துளி விஷம்,உத்தம புத்திரன்,தீபம்,நல்லதொரு குடும்பம்,திரிசூலம்)
கிருஷ்ணா சார்,
அப்போதிலிருந்து இப்போது வரை அனுபவித்து பார்க்கும் படம்.
எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள். நானும் ஏதோ ரசித்ததைக் கிறுக்குகிறேன்.
ரீனாவின் கண்ணடிக்கும் பழக்கத்திற்கு கமலிடம் அவர் அளிக்கும் பதில்.
'இது என்னுடைய வீக்னெஸ் சார்'
எது? கண்ணடிக்கிறதா?
நோ!நோ!கண் துடிக்கிறது.
'இந்த ஆபிஸ் கதவுக்கெல்லாம் ஒரு வீக்னெஸ். அப்பப்ப தொறந்துக்கும்'.
'இது ரசிக்கக் கூடிய வீக்னெஸ் இல்ல'.
'பெண்ணுக்கு கல்யாணம்... கல்யாணம் ஆனவர் உங்ககிட்டே காட்டறதுக்கு என்ன?" என்று தன் பெண்ணின் போட்டோவை கமலிடம் நீட்டும் அய்யரின் பெண்ணின் படத்தை பார்க்கும்போதே, ஒரே நிமிஷத்தில் அவளை பெண் பார்த்து ,கல்யாணம் பண்ணி கொண்டு, ஆசீர்வாதம் வாங்கி,முதலிரவில் பழம் ஊட்டி அவளை அணைத்துக் கற்பனை செய்து கொள்ளும் அல்ப அரை நொடி நேரக் கற்பனை சுகம்
'எங்கெல்லாம் பெண்கள் ஆபத்தில இருக்காங்களோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்' (ஜெயபிரதா மோட்டார் சைக்கிளில் ஆடைகள் மாட்டிக் கிழிந்து நிற்க, ஆடைகளைக் கழற்றிக் கொடுத்த கர்ண கிருஷ்ணன்)
'செக்ஸ் ஒரு பெரிய கடல். அதை முழுசா புரிஞ்சிக்குனம்னா ஒரு மனைவி போதாது'. (இது எப்படி இருக்கு)
பாவி. ஹியூமன் சைகாலஜி படத்தில் தெரியும் எலும்புக்கூட்டைக் கூட விட்டு வைக்காமல் அது ஆம்பள எலும்புக் கூடா பொம்பள எலும்புக் கூடா என்று பொம்பளை எலும்புக் கூட்டின் மண்டையோட்டில் பிகரை பொருத்தி பார்க்கும் கமலின் வியப்பான வீக்னெஸ். (இதுக்கு மேல எப்படி வீக்னெஸ் காண்பிக்கிறது)
'ex மேயர் மாப்பிள்ளை ஊர் மேயறான்' மகேந்திர மாமா வத்தி.
'பெண்கள்னா எனக்கு ஒரு ஈர்ப்பு, affection, அதீதமான ஈடுபாடு... அதான் என்னோட குணச்சித்திரம்' (குணச்சித்திரத்திற்கு என்னா ஒரு விளக்கம்)
மனோதத்துவ டாகடரிடம் கமல் ட்ரீட்மென்ட் எடுக்கும் போது அங்கு தூரத்தில் தெரியும் டாக்டரின் அசிஸ்டன்ட் பெண்ணை ஸ்க்ரீன் விளக்கி அடிக்கடி சைட் அடிப்பார்.
அந்தப் பெண் பிரவீணா பாக்கியராஜ்.
புருஷன் படிக்காத மேதையா இருந்தா பரவாயில்ல
படிக்காத போதையா இருந்தா (ஹேமாவிடம் கமலின் கரிசனம்)
ஒளிந்திருக்கும் ரூமுக்கு உள்ளேயே ஹேமா டிரஸ் மாற்றும் கதையை (மொட்டைமாடி வாட்டர் டேங்க் பாவ மன்னிப்பு) அய்யரிடம் சொல்லும் போது அய்யர் பதைபதைத்து 'அய்யயோ அப்புறம்! (என்னாச்சோ! இந்தப் படுபாவி என்ன பண்ணானோ) என்று அலற, கமல் அலட்டாமல் 'நீங்க ரொம்ப அவசரப்படுறீங்க' (அடுத்து நிகழ்ந்ததைக் கேட்க அய்யர் இவ்வளவு ஆவலாய் இருக்காரே) என்பாரே! இத்தனைக்கும் இருவர் முகமும் காட்டப்படாமல். நான் ரொம்ப ரசிச்ச இடம். கிரேஸி நினைவுக்கு வருவார்.
ராதாரவியை கடுப்பேற்ற கமலை ஜெயப்பிரதா ஹக் செய்து 'பொறாமை படறானா பாரு' என்பார்.
அதற்கு கமல் பதில்
'பொறாமை பத்தல'.
'நாதமென்னும் கோயிலிலே
இசையும்
எனக்கிசையும்.
தினம் என் மனம்தான்
அதில் அசையும்
மனதை அசைத்த பாடல்தான்.
சுகம்தானா
சொல்லு கண்ணே
அருமையான சுகானுபவம்.
இன்னும் நிறைய எழுதலாம். வித்தியாசமான ரசிக்கத் தகுந்த காட்சிகள். ஆனால் கோர்வையற்ற ரசமான வைரத் துண்டுகளின் இணைப்புகள்.
பிருந்தாவன சாரங்கா.
சொந்தங்களுக்குள் காதல் எண்ணங்களை பரிமாறி கொள்வது,சொந்தங்களை சீராட்டுவது(குழந்தைகளையும் சேர்த்தே), காதலியிடம் உருகி நீதான் என் மனதில் என்று அழுத்தி சொல்வது ,இவற்றுக்கேன்றே ஒரு ராகம் உள்ளதா? உள்ளேன் ஐயா என்று உங்கள் முன் ஆஜர் ஆவது பிருந்தாவன சாரங்கா.
சிறு வயதில் மூன்று படங்கள் என்னை உலுக்கும்.இவ்வளவு வித்யாசமான கதை கரு, திரை கதை மற்றும் கலை மேதையின் நடிப்பு மூன்றிலும். படித்தால் மட்டும் போதுமா,ஆலய மணி,புதிய பறவை. முற்றிலும் வேறு பட்ட சிந்தனையில் புத்தம் புதிய நமக்கு பழகாத கதையமைப்பு கொண்டவை. இரண்டு இணை பிரியா சகோதரர்கள் (ஒன்று விட்ட) .ஒருவன் sophisticated படிக்காத வேட்டை காரன். மற்றவன் polished படித்த மென்மையான மனிதன். இருவரும் ஒருவருக்கு பார்த்த பெண்ணை மற்றவர் சென்று பார்த்து அங்கீகரிக்க ஏற்பாடு செய்து ,வந்த பிறகு எண்ணங்களை பரிமாறி கொள்ளும் மைல் கல் காட்சி.இதில் படித்தவனின் எண்ணம் திரிபு பட என் விழியில் நீ இருந்தாய் என அப்பாவி வேட்டை காரனும், உன் வடிவில் நான் இருந்தேன் என படித்த வக்கிரமும் பாடும் இந்த பாடலும் இன்றும் எல்லோராலும் நேசிக்க படும் அதிசயம்.டி.எம்.எஸ் ஒரு கட்டை குறைக்க,பீ.பீ.எஸ் ஒரு கட்டை ஏற்ற ,இந்த இரண்டு நேர்த்தியான பாடல் திலகங்களின் அபூர்வ சங்கமம்."பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை".
இருவர் மேல் எனக்கு அலாதி பற்று. இருவருமே அவரவர்க்கு உரிய அங்கீகாரம் பெறாத மேதை பால்கேக்கள். இருவரும் பெற வேண்டிய இடம் என் மனதில் நிஜமாகாத நிழலாகவே தொடர்கிறது. அடிமைகள், மற்றும் சிலகம்மா செப்பிந்தி என்சற படங்களை தழுவி இயக்குனர் சிகரம் தந்த நிழல் நிஜமாகிறது.ஈர்ப்பு நிறைந்த வசீகரம்.இரு துருவங்களாக கமல்,சுமித்ரா.love teasing concept வைத்து இதற்கு மேல் எதுவும் செய்ய இல்லை என்று பாலு-கமல்-சுமித்ரா கூட்டணி இறுதி செய்து விட்ட முத்திரை படம். தோதுவாய் சரத்-ஷோபா-ஆனந்து. உறுத்தாமல் மௌலி (suspect list லே கூட இல்லியா).ஒரு பாதிக்க பட்டு பெண்ணுக்கு காப்பளனான ஒருவன் தன் ஒரு முனை பட்ட தன்னலமற்ற அன்பால் அந்த பெண்ணின் மனதிலும், அல்லிராணி காதலில் விழுந்தாலும் புகை படர்ந்த சந்தேகத்தால் ,தன் காதலை தள்ளி வைத்து போடும் நாடகம். இரண்டையும் இணைத்து சொந்தங்களின் மன ஓட்டத்தை ,போராட்டத்தை சொன்ன மெல்லிசை மன்னர் தான் யார் என்று ஊருக்குணர்த்திய பாடல். "இலக்கணம் மாறுதோ,இலக்கியம் ஆனதோ".
70 களில் ,horny teen -ager (இன்றும் அப்படித்தான் .மனிதன் மாறவில்லை.அவன் மயக்கம் தீரவில்லை)ஆக நான் வலம் போது ,ஒரு பாடல்,அது படமாக்க பட்ட பரபரப்பான சூழ்நிலை,அற்புதமான இசை,நடித்தவர்களின் தோதுவான erotic Enactment &expressions என்று கிக் ஏற்றி படத்தின் வெற்றிக்கே துணை செய்தது.அந்த பாடல் "நாலு பக்கம் வேடருண்டு".
இந்த ராகத்தில் எனது மற்ற விருப்பங்கள்.
1)பூவரையும் பூங்கொடியே- இதயத்தில் நீ.
2)முத்து நகையே உன்னை- என் தம்பி.
3)சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே-வீர பாண்டிய கட்டபொம்மன்.
4)இது குழந்தை பாடும் தாலாட்டு-ஒருதலை ராகம்.
5)நெஞ்சாங்கூட்டில்- டிஷ்யூம்.
சனி,ஞாயிறு ஓவர் டைம் செய்தது எதற்காம். ஒரு வாரம் லீவ் சார் please ,Sanction . As my grand mother is sick ,so I request you to (as உம் so வும் சேர்ந்து வர கூடாதுடா அபிஷ்டு)
ஏன் தீபம்..ராஜா யுவ ராஜா??
இன்றைய ஸ்பெஷல் (10)
அன்று பிரபலமாய் ஒலித்த இன்னொரு சுறுசுறு பாடல். எல்லோர் நெஞ்சங்களிலும் குடிகொண்ட பாடல்.
'மழை மேகம்' படத்தில் அழகான ஒரு பாடல்
http://img.youtube.com/vi/RORk83QZVp0/mqdefault.jpg
அப்படி ஒரு படம் வந்தது பலருக்குத் தெரியாது. முத்துராமன், சாரதா இணை.
புலமைப்பித்தன் வரிகளுக்கு 'திரை இசைத் திலகம்' மியூசிக்.
யாரோ இளசுகள் ரெண்டு ஆடும் என்று நினைத்திருந்தால் கொஞ்சமும் எதிர்பாராமல் நம் முத்துராமனும், சாரதாவும் இளமை புத்துணர்ச்சியுடன் டூயட் பாடுகிறார்கள்.
முத்துராமன் பொதுவாக டூயட் பாடல்களில் 'எனக்கென்ன' என்று மசமசவென இருப்பார். இப்பாடலில் பரவாயில்லை. சாரதாவுடன் ஓடுகிறார்...துரத்துகிறார்... சாரதா நெஞ்சத்தில் வாசனை பிடிக்கிறார்.... குதிரையெல்லாம் ஓட்டி சாரதாவை ஓட்டுகிறார்.
நம் 'புவனேஷ்ஷ்.......வரி'க்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஸ்ரீகாந்திடம் ஏமாந்து போய் கண்ணீர் விடத்தான் மிகப் பொருத்தமானவர்.
கே.வி.எம்மிடம் ஒரு குறை. அவரது வாத்தியக் கருவிகளின் இசையைக் மிக ஈஸியாக கண்டு பிடித்துவிடலாம். 'வாணிராணி' 'வசந்தமாளிகை' 'எங்கள் தங்க ராஜா' படப்பாடல்களின் இடையிசை நமக்கு அப்படியே ஞாபகத்திற்கு வருகிறது. மனிதர் மாற்றவே மாட்டார். ஆனால் டியூனில் மட்டும் ஏமாற்றவே மாட்டார்.
வழக்கமான அதே சமயம் துறுதுறுப்பான சுலீலா, பாலாவின் வளமையான குரல்களின் பின்னணியில்.
இனி பாடல் வரிகளில் சங்கமிப்போம்.
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா.
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
மேகத்தில் இரவுக்கு பஞ்சணை விரித்து
வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து
பாடம் சொல்லக் கூடாதோ
பார்வை ஒன்று போதாதோ
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
எண்ணிரண்டு ஆண்டுகள் எழுதிய பாட்டு
என்னை உன் இடையென்னும் சிறையினில் பூட்டு
மங்கள இசை தரும் வீணையை மீட்டு
மாந்தளிர் மேனியில் குங்குமம் தீட்டு
மாலைத் தென்றல் தீயாக
காணும் இன்பம் நீராக
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
ஆனந்தத் தீர்த்தம் என்னை ஆடச் சொன்னது
உள்ளம் ரெண்டும் ஆடட்டும்
ஒன்றில் ஒன்று கூடட்டும்
ஆஹஹா.... அஹஹா ஆஹஹா... அஹஹா...ஆஹஹா....அஹஹஹாஹஹா...ம்ம்ஹுஹும்...
பாடலில் பாலா பாடிக்கொண்டிருக்க அவரோடு சேர்ந்து சுசீலா ஹம்மிங்கில் இணைந்து இழைய, பின் சுசீலா பாட, அவரோடு சேர்ந்து பாலா ஹம்மிங் தர நாம் அனுபவிப்பது கோடைக்கால தென்றலின் சுகம்.
கிருஷ்ணா சார்,
'சிம்லா ஸ்பெஷல்' படத்தில் 'மெல்லிசை மன்னர்' இசையில் ஒலிக்கும்
'Look Love Me Dear
Lovely Figure
lasting colour
வெண்மேகமே ஓடிவா
என் உள்ளத்திலே வெள்ளிப்பனி அள்ளித்தெளி
சங்கீதமே பாடி வா'
பாடலின் டியூனும், 'ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது' பாட்டின் ஆரம்ப இசையும்' அப்படியே ஒன்றாக இருக்கும்.
மேல்கொண்டு எழுதினால் வம்பு வளப்பதற்கென்றே ஒரு கேஸ் அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு தீனி போட்டாற்போன்று ஆகிவிடும்.
பாடலை ஒருமுறை பார்த்து விடலாமா!
http://www.youtube.com/watch?feature...&v=RORk83QZVp0
மதுரகானங்களை வானொலியில் ரசிக்கும் மக்களின் நடிகர். (ரேடியோதானே)
http://i812.photobucket.com/albums/z...ps9063c9fe.jpg
மன்மத லீலை (4)
'நாதமென்னும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்'
இதே பாலச்சந்தரின் படத்தில் வந்த 'ஏழு ஸ்வரங்களைத்' தொடர்ந்து வாணி ஜெயராமின் அதே மாதிரியான இன்னொரு மாஸ்ட்டர்பீஸ். அப்போது வாணியம்மா வாயிலிருந்து சிந்தியதெல்லாம் அமுதமாகவே வந்து விழுந்தது.
படத்தில் சுனந்தினி நன்றாகப் பாடக்கூடிய பாடகி. ஆனால் பாராட்டுவோர், சீராட்டுவோர் இல்லாமல் தவிப்பவள். அதனால் யாராவது ஒருத்தர் தன் பாடலைக்கேட்டு கைதட்டினால்கூட அதை பெரிதாக மதிப்பவள். இயல்புதானே. மன திருப்திக்காக பதிவுகள் இட்டாலும் அதை நாலுபேர் பாராட்டும்போது மனம் மகிழ்கிறது அல்லவா. ('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர்).
இவ்வளவு அழகாக இனிமையாகப் பாடக்கூடிய பாடகியை பாராட்ட யாருமில்லைஎன்பது ஆச்சரியமே. வெறுமனே காச் மூச்சென்று கத்திய சில மேற்கத்திய பாடகர்களுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருந்தார்களாமே. ஆனால் நம் நாட்டில் உண்மையான திறமையாளர்களை எவன் மதித்தான்?. அதுதான் இந்தப்பெண்ணுக்கும்.
அதனால்தான் பாராட்டிய ஒரே ரசிகன் மீது இவளுக்கு அவ்வளவு ஈர்ப்பு. அவளை சந்தித்ததற்கு மனைவியிடம் மது சொல்லும் காரணம் "சும்மா அவள் பாட்டைக்கேக்கிறதுக்கு அவ வீட்டுக்குப் போவேன், அவ்வளவுதான்". "ஒருத்திக்கு பாடிக்காட்ட போவீங்க, இன்னொருத்திக்கு பாட்டைக்கேட்க போவீங்க, அப்படித்தானே?".
அவள் பாட ஆரம்பித்ததும் வீட்டின் பெரிய ஹாலில் படிப்படியாக கூட்டம் வந்து நிறைவதும், பின்னர் படிப்படியாக கூட்டம் குறைந்து ஹால் காலியாகி அவள் முகம் வாடுவதுமான கற்பனை கே.பி.போன்றவர்களால் மட்டுமே சிந்திக்க முடியும்.
நாதமென்னும் கோயிலிலே
ஞான விளகேற்றி வைத்தேன்
ஏற்றிவைத்த விளக்கினிலே
எண்ணெய்விட நீ கிடைத்தாய்
எனக்குக் கிடைத்த ஒரே ரசிகன் நீ உன்னை விடுவதாக இல்லை. அடி பேதைப்பெண்ணே, கிடைத்த அந்த ஒரு ரசிகன் எதை ரசிப்பவன் என்று தெரிந்தால் உன் மனம் என்னாகும். நீ பாடும்போது உன் குரலில், உன் வார்த்தைகளில் உள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பவன் அல்ல, உன் உடலில் உள்ள வளைவு நெளிவுகளை ரசிப்பவன்.
இசையும்...... எனக்கிசையும்....
உன் மனம்தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும்
நீ அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோயிலிலே
இணையே எனக்கிலையே இங்கு
வெறும் கதையானது கலையே
விலையே சொல்லி உனையே நான்
அணைத்தேன் உயிர் பிழைத்தேன்
(கிருஷ்ணாஜி, வரிகள் சரிதானா?. பாட்டை கேட்டு ரொம்பநாள் ஆச்சு)
இறைவன் என ஒருவன் என்
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில்
அவன்தான் உன்னைக்கொடுத்தான்
நாதமென்னும் கோயிலிலே....
பாடலை ஏற்கெனவே நண்பர் வினோத் காணொளி வடிவத்தில் தந்து விட்டார். காண்போம் களிப்போம்.
கார்த்திக் & கிருஷ்ணாஜி இருவரும் சேர்ந்து மன்மத லீலையை கலக்கோ கலக்கு என்று கலக்கி விட்டார்கள். வாசு சொன்னது போல் இது போன்ற வகை படங்களென்றால் வரிந்து கட்டிக் கொண்டு வரும் கோபாலும் சேர்ந்து கொள்ள அதகளம். [ஆமாம், ஒரு சந்தேகம். மதுர கானங்கள் திரிக்கும் சிறந்த தமிழ் படங்களின் லிஸ்டிற்கும் என்ன சம்பந்தம்]? கண்ணனும் வாசுவும் வேறு சேர்ந்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.
இங்கே பலரும் குறிப்பிட்டது போல் நானும் இந்த படத்தை பல தடவை ரசித்தவன். படம் வெளியானது 1976 பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமை. மறுநாள் சனிக்கிழமை பள்ளி விடுமுறை. காலைக்காட்சி 10.30 மணிக்கு. நண்பர்கள் யாராலும் கூட வரமுடியவில்லை நகரின் மையப் பகுதியில் இருந்த வீட்டிலிருந்து பஸ் பிடித்து கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாண்டிற்கு போய் இறங்கி சினிப்ரியா அரங்கிற்கு போய் சேர்ந்தபோது தியேட்டர் ஹவுஸ் புல் ஆகி விட்டது. எவ்வளவு முயற்சித்தும் டிக்கெட் கிடைக்காமல் அதே complex-ல் இருக்கும் மினிப்ரியா அரங்கில் அன்றுதான் வெளியாகியிருந்த Crazy Boys of the Games படத்திற்கு போய்விட்டு வீட்டிற்கு போனேன்
அன்று மாலை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஏ,வி. ரமணனின் Musiano குழுவினரின் மெல்லிசை கச்சேரி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நாங்கள் [எங்கள் உறவினர் ஒருவரும் வந்திருந்தார்] நிகழ்ச்சி முடிந்ததும் ரமணன் அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தோம். கூட வந்திருந்த உறவினர் கர்நாடக சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அங்கயற்கண்ணி சங்கீத சபா என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அந்த சபாவிற்கு வேண்டி ஒரு மெல்லிசை கச்சேரி நடத்தி தர முடியுமா என்று ரமணனை கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சபாவின் சார்பில் இரண்டு வாரங்களுக்கு பிறகு கமல் அவர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி மதுரையில் ஏற்பாடு செய்திருப்பதையும் ரமணனிடம் கூற அவர் நிகழ்ச்சி பெரும் வெற்றி பெறும். காரணம் மன்மத லீலை பெரிய ஹிட் ஆக மாறும் என்று கூறனார். நேற்றொரு மேனகை பாடலை மன்மத லீலை படத்தில் பாடிய அவர் [அன்றைய நிகழ்ச்சியிலும் பாடினார்] படத்தை பார்த்து விட்டதாகவும் மிக நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டி விட்டது.
மறுநாள் ஞாயிறு மதியக் காட்சிக்கு போய் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கியாகி விட்டது. படம் ரொம்பவே ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. படத்தை அதன் பிறகு 4,5 முறை பார்த்தேன். ஏற்கனவே சொன்ன மாதிரி மார்ச் 14 ஞாயிறு அன்று அந்த சபா சார்பில் தமுக்கம் மைதானத்தில் கமல் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. உறவினருடன் கமல் தங்கியிருந்த பாண்டியன் ஹோட்டலுக்கு சென்று அவரை சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது [எங்கே போனது என்றே தெரியவில்லை] அவர் " கமல்ஹாசன் - அன்பை வணங்குபவன்" என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்தது எல்லாம் பசுமரத்தாணியாய் நினைவில் நிற்கிறது. விழாவில் ஜெமினி அவர்களும் கலந்து கொள்ளவிருந்ததால் போதிய காவல்துறையின் பாதுகாப்பு இருக்கிறதா என்று கமல் கேட்டதும் நிழலாடுகிறது. அன்றைய நாட்களில் ஏறும் மேடைதோறும் controversial ஆக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் ஜெமினி. எனினும் அந்த நிகழ்ச்சி எந்த பிரச்சனையுமின்றி நடந்தது. ராங் நம்பர் Y.விஜயாவும், சுனந்தினியும் வந்திருந்தார்கள். எனக்கு முன்வரிசையில் இரண்டு பேரையும் இரண்டு பக்கம் இருத்திக் கொண்டு நடுவில் அமர்ந்து கைகளினால் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார் காதல் மன்னன்.
இனி படத்திற்கு வருவோம். படத்தின் பலமே குறும்பான இளமை கொப்புளிக்கும் வசனங்கள். அனைவரும் பிரித்து மேய்ந்து விட்டனர். அவர்கள் விட்டு வைத்தவற்றில் சில
இந்த பொண்ணை எப்படி பழக்கம்?
தொழில்முறையில்தான்.
உங்க தொழிலா அவ தொழிலா?
ஒருத்திக்கிட்டே பாட்டு பாடணும் ஒருத்திக்கிட்டே பாட்டு கேட்கணுமா
எல்லாம் ஒரு obligation தான்
முருகா சரணம்னா முடிந்தால் வரவும்னு அர்த்தம்
ஏம்ப்பா அவர் ஆட்டோவிலே எங்கே உட்கார்ந்து வந்தார்?
நீங்க உட்கார்ந்திருக்க மாதிரியே வலது பக்கம் ஓரத்திலே
அவ எங்கே உட்கார்ந்திருந்தா
அதே வலது பக்க ஓரத்திலே
எப்படிப்பா ஒரே இடத்திலே இரண்டு --------
இது என்ன கார் சீட்டிலே மல்லிகைப்பூ?
அது அந்த பத்மாவதியைதான் கேட்கணும்
யார் அது பத்மாவதி?
Mrs. வெங்கடாசலபதி!
சிரிக்காதீங்க வயிறு எரியுது
வயிறு எப்படி எரியும்? கன்னம்தானே எரியணும்
கன்னம் -- அப்போ நீங்க வந்தீங்களா?
மஞ்சளிலே வரலே மறைவா வந்தேன்
கண்ணாடி வீட்டுக்குள்ளே இருந்து என்ன செய்ய கூடாது தெரியுமா
இது தெரியாதா? கல்லெறியக் கூடாது
அதுதான் இல்லை! லைட்ஐ போட்டுக்கிட்டு கிஸ் பண்ணக்கூடாது ஏன்னா எல்லோரும் பார்பாங்களே
இப்படி டெலிபோனில் பாடினால் எல்லாரும் கேட்பாங்களே
பேர் என்ன உஷாவா?
இல்லை பார்கவி
நான் fan -ஐ கேட்டேன்
ஜப்பான், முன்னாடி நீ வேலை பார்த்த இடத்திலே உன்னை ஏண்டா வேலையை விட்டு துரத்தினாங்க?
அதுவா. ஒரு நாள் முதலாளியை பார்க்க ஒருத்தர் வந்தாரு. நான் போய் ஒரு ஆள் வந்திருக்கிறார்னு சொன்னேன், அப்படி சொல்லக் கூடாது மரியாதையா கஸ்டமர் வந்திருக்கிறார்னு சொல்லணும்னு சொன்னாங்க. மறுநாள் அவங்க சொன்னததான் சொன்னேன். என்னை வேலையை விட்டு துரத்திட்டாங்க
ஏன் என்ன ஆச்சு?
ஒருத்தர் வந்தாரு. நான் முதலாளி அம்மாகிட்டே போய் உங்க கஸ்டமர் வந்திருக்கிறார்னு சொன்னேன். அவ்வளவுதான்.
ஏன்னா எப்ப பார்த்தாலும் என் தலையெழுத்து என் கஷ்டம்னு சொல்லிண்டேயிருக்கேளே, நம்மனு சொல்லக் கூடாதா?
சொல்றேண்டி சொல்றேன். போய் நம்ம வேஷ்டியையும் நம்ம அண்டர்வேரையையும் எடுத்துண்டு வா.
ஏங்க இந்த பையனுக்கு உருப்படியா ஏதாவது சொல்லிக் கொடுங்களேன்
சொல்லிக் கொடுத்துட்டாப் போச்சு.
(சொல்லி விட்டு ஆலம் குளிக்க போக திரும்பி வரும் போது)
A பார் அனுபமா
B பார் பாமா
C பார் சந்திரா
D பார் தமயந்தி
E பார் எலிசபத்
F பார் பாத்திமா
S பார் செக்ஸ்
S E X - SEX
உடனே ஸீன் freeze ஆக, கதை வசனம் direction K. பாலச்சந்தர்.
மீண்டும் சந்திக்கிறேன்.
அன்புடன்
மன்மத லீலை வெளிவந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும், நிறைய கல்லூரிகளில், கோர்ஸ் முடிந்து செல்லும் சீனியர் பேட்ச்களின் சோஷியல் பிரேக்-அப் பார்ட்டிகளில் இந்தப்படமே திரையிடப்பட்டது. அதற்குக் காரணம் இளசுகள் என்ஜாய் பண்ணி கலாட்டா செய்ய நிறைய கிளு கிளு காட்சிகள், நகைச்சுவை இணைப்போடு. கிளுகிளுப்பான சில இடங்கள்.......
புதிய செக்ரடரிப்பெண் (ரீனா) எதிர்சீட்டில் இருக்க, வேண்டுமென்றே பென்சிலை கீழே போட்டு அதை எடுப்பது போல, மேஜைக்கு கீழே அவளது வெறும் கால்களை ரசிப்பது.
அதே பெண் நின்றுகொண்டு நோட்ஸ் எடுக்கும்போது, அவளை பிரா, ஜட்டியுடன் கற்பனை செய்வது.
மனைவி ரேகா ஜாக்கெட் அணியும்போது 'அட்டாக்' என்று சொல்லி திகைக்க வைத்து, அவள் பிராவுடன் நிற்பதை ரசிப்பது, பின்னர் தலையணை அடிவாங்குவது.
டாக்டருடன் பேசிக்கொண்டே உள்ளே குனிந்து வேலை செய்துகொண்டிருக்கும் டாக்டரின் பெண் அசிஸ்டென்ட்டை ரசிப்பது, அவளை அருகில் வரவழைக்க திடீரென்று கத்துவது.
பாடகியின் திறந்த முதுகைப்பார்த்து, முன்பக்கம் திரும்பச்சொல்வது, அவள் சேலையுடன் திரும்புவதைப்பார்த்து வழிவது.
தன்னைக்கைவிட்டவன் பொறாமைப்படும்படி தன்னைக் கட்டிக்கொள்ளச்சொல்லும் ஜெயப்ரதாவை, அதுதான் சாக்கு என்று, 'பொறாமை பத்தலை' என்று மீண்டும் கட்டிக்கொள்வது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் அடிபட்டுக்கிடக்கும் ஜெயப்ரதாவையும், ராதாரவியையும் நெருங்கும்போது, ஒரு கம்பத்தில் மாட்டியிருக்கும் கிழிந்த சேலையைக்கூட தூக்கிப்பார்ப்பது, அதன்மூலம் அவர் கேரக்டருக்கு இயக்குனர் இன்னும் வலு சேர்ப்பது.
முரளி,
மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட mischievous மன்மதன் உங்களையும் ஈர்த்து ஓடி வர வைத்து விட்டான்.
நம் படங்களையும் இசையையும் பிரிக்கவே முடியாது.அதுதான் சம்பந்தம்.ஏதோ போகிறதென்று விடுவீர்களா,நோண்டி கொண்டு. அது சரி ,ரசித்தீர்களா?
முரளி சார் கார்த்திக் சார் ம்ம் மன்மத லீலை அலசல்கள் ப்ரமாதம்..
ஆனால் இந்தப் படத்தை ரிலீஸான போது எல்லாரும் போட்டுத் தாக்கியிருந்ததாக நினைவு..(இன்னொரு படம் நினைத்தாலே இனிக்கும்) இஸிண்ட் இட்?
கார்த்திக்,
தூங்க விடாமல் பண்ணியதற்கு,இந்தியா வரும் போது என்னை நேரில் பார்த்து ஒரு strip தூக்க மாத்திரைக்கான காசை கொடுத்து விடவும்.(தாமரை நெஞ்சம் அளவு வேண்டாம்) அப்படியாவது நேரில் தரிசிக்கலாமே. பம்மலார் புத்தக வெளியீட்டு விழாவில் நேரில் சந்திப்பதாக சொன்ன ஞாபகம். எப்போ கை கூடுமோ?
எஸ்.வீ சார்,
தாங்கள் வருத்த பட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் சொன்ன கருத்து சரியென்றாலும் சொன்ன விதம் தவறு என்று அவர்கள் எடுத்துரைத்ததால்,நான் சொன்ன விதத்துக்காக தங்களிடம் மன்னிப்பை கோருகிறேன். தாங்கள் நிலை மறந்து ஒருமையில் விளித்தது ஒரு மூத்த சகோதரனின் உரிமையாய் எடுத்து ,நினைத்து மகிழ்கிறேன்.வருத்தம் எனக்கு இல்லை.
நாங்கள் எத்தனை பதிவுகள் இட்டாலும் எங்கள் முரளி சார் பதிவு இல்லாமல் எதுவும் நிறைவடையாது. அந்த வகையில் 'மன்மத லீலை' பார்த்த அனுபவங்கள் பற்றியும், அப்படத்தின் ஸ்பெஷல் டயலாக் மற்றும் காட்சிகள் பற்றியும் மிக அழகாக அருமையாக பதிவிட்டு 'முரளி முரளிதான்' என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
என்ன ஒன்று, இப்படிப்பட்ட அரிய பதிவுகளைப் பெற தவம் கிடக்க வேண்டியுள்ளது. அத்தி பூத்தாற்போல வருகிறீர்கள். வேலைப்பளு காரணமென்று நினைக்கிறோம். இருப்பினும் எங்களுக்கும் நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி...
டியர் வாசு சார்,
மழைமேகம் படத்தின் பாடல் இதுவரை பார்த்திராதது. நன்றாக இருந்தது. காணக்கிடைக்காத அபூர்வம்.
'மாமா' இசைபற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே. சாரதா இந்த மாதிரி பாடல்களிலும் நடித்திருக்கிறாரா என்பதும் ஆச்சரியமே.
அடுத்த அபூர்வம் என்னவோ...
அன்பு கார்த்திக் சார்,
பாலச்சந்தரின் 'மன்மத லீலை' நகாசு வேலைகள் அத்தனையையும் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். கிரீடம் வைத்தாற்போன்று நம் முரளி சாரும் அமர்க்களப்படுத்தி விட்டார்.
ரிலாக்ஸ் என்பதன் அர்த்தம் நன்றாகவே புரிகிறது.
தங்களின்
('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர்).
வரிகள் தங்களது உயரிய பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகின்றன.
தங்களின் 'நாதமென்னும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்' மிக மிக ரசித்துப் படித்தேன். அடிக்கடி என் வாயில் வந்து மாட்டி அவஸ்தைப்படும் பாடல். வாணியின் இன்னொரு மாஸ்டர் பீஸ். இது போல அதிகம் கண்டு கொள்ளப் படாதவற்றை நாம் அனைவரும் வெளிக்கொணர்வோம். நீங்கள் அடிக்கடி கூறுவது போல் வாணி கூட தான் அளிக்கும் பேட்டிகளில் இத்தகைய தான் பாடிய அபூர்வ பாடல்களை நினைவு கூர்வதில்லை. மல்லிகை மணம் ஒன்றிலேயே திருப்தி அடைந்து கொள்வார். (ஆனால் நாம் நினைவில் கொண்டு பகிர்ந்துண்டு சந்தோஷப்படுகிறோம்.)
வாணியின் ஏராளமான பாடல்களை தங்களுக்காகவே தேடித் பிடிக்கிறேன். வாணி சந்தோஷப்படுவாரோ என்னவோ தெரியாது நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்பது திண்ணம்.
தங்களது 'மன்மதலீலை' முடிவுறாமல் தொடரட்டும். லீலைகளில் மூழ்க 24 மணி நேரமும் நான் (நாங்கள்) ரெடி.
நன்றி!
கார்த்திக் சார்,
ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர நாதமென்னும் கோவிலிலே பாடலைச் சரியாகத்தான் எழுதி உள்ளீர்கள். இப்போது முழுப்பாடல் வரிகள் நம் எல்லோருக்காகவும். நான் என்னென்ன வார்த்தைகளை விட்டிருக்கிறேனோ! கிருஷ்ணாவே துணை
http://s2.dmcdn.net/E61if/526x297-5nv.jpg
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..
நாதமென்னும் கோவிலிலே ..
இசையும் எனக்கிசையும் - தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே ..
விலையே எனக்கிலையே - தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே ..
இறைவன் என ஒருவன்
எனதிசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்
நாதமென்னும் கோவிலிலே ..
கார்த்திக் சார்
'மழை மேகத்' தை ரசித்ததற்கு நன்றி!
பக்கங்கள் பறந்தாலும் பதிவர்கள் முன்னால் போட்ட பதிவுகளை மறக்காமல் படித்து நினைவு வைத்துக் கொண்டு அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதில் தங்களுக்கு இணை யாரும் இல்லை. (நான் கூட சில சமயங்களில் மறந்து விடுவதுண்டு அல்லது சோம்பலில் மூழ்கி விடுவதுண்டு)
நன்றி! அபூர்வங்கள் தொடரும் தங்களைப் போன்ற அன்பு ரசிக நெஞ்சங்களுக்காகவே!
முரளி சார்,
தங்களின் இன்னொரு ரசனை பரிணாமத்தைப் பார்த்து மறுபடியும் வியந்து போய் நிற்கிறேன்.
'மன்மத லீலை' பற்றிய சுவையான தகவல்களை அம்சமாகத் தந்துள்ளீர்கள். 'மன்மத லீலை' பதிவுகள் முழுமையடைந்தது தங்களால். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
(வி!)ரசமான படம். ஷார்ப்பான வசனங்கள். இனிமையான இசை. இளமையான கமல். ஏராளமான கிளுகிளு நாயகிகள். பஞ்ச் காமெடி.
ரசனை மிக்க பதிவர்கள். பிரமாத பதிவுகள். கலகலப்பை கூட்டிவிட்டது லீலை.
உழைக்கும் கரங்கள் திரைப்படத்திற்காக தான் எழுதிய கந்தனுக்கு மாலையிட்டாள் பாடலுக்கு மெல்லிசை மன்னர் போட்ட பல மெட்டுக்களில் ஒன்று தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அந்த மெட்டில் அந்தப் பாட்டு பதிவாக வேண்டும் என்று தான் மிகவும் விரும்பியதாகவும் இன்று நடைபெற்ற எம்எஸ்விடைம்ஸ் காம் விழாவில் கவிஞர் முத்துலிங்கம் கூறினார். இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.
அந்த மெட்டு ....
நாதமெனும் கோவிலிலே
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது..எப்போதோ கேட்ட் பாடல்.. நன்றி வாசு சார்..சாரதா முத்துராமன் காம்பினேஷன் அறியாத ஒன்று..
//இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.
அந்த மெட்டு ....
நாதமெனும் கோவிலிலே // ராகவேந்தர் சார் இது நான் அறியாத ஒன்று..வாவ்..
கந்தனுக்கு மாலையிட்டாளும் நல்ல பாட்டு..
இன்றைய ஸ்பெஷல் (11)
இன்றும் ஒரு அபூர்வ பாடல்
'மெல்லிசை மாமணி' குமார் அவர்களின் இசையில் மனதை மயிலிறகால் வருடும் ஒரு கிராமத்துப் பின்னணி பாடல். இனிமை என்றால் அப்படி ஒரு இனிமை.
http://tamilthiraipaadal.com/files/1...20Sabatham.jpg
'ஜானகி' சபதம் (1976) படத்தில். (ஆர்.சாந்தாவின் தயாரிப்பில் 'அவினாசி' மணி எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா, நிர்மலா, மனோரமா நடித்திருந்தனர்)
பழுத்த அனுபவம் மிக்க டி.எம்.எஸ், சுசீலா இளசுகளுக்காக இணைந்து பாடிய இனிமையான ராகம் கொண்ட பாடல்.
மாஸ்டர் சேகரும், ரோஜாரமணியும் கிராமத்து காதலர்களாக வயல் வரப்புகளில் ஆடிப்பாடும் காதல் டூயட்.
பால்ய வயது சேகர் பருவ வயது சேகராக அடி எடுத்து வைத்த சமயத்தில் (இதே வருடத்தில்தான் ஸ்ரீதரின் 'ஓ..மஞ்சு' திரைப்படத்தில் 'மாஸ்டர்' சேகர் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். கவிதாவும் இதில்தான் அறிமுகம்) அதே போல குழந்தையாக இருந்த ரோஜாரமணி 'பருவகாலம்' எய்திய 'வயசுப்பொண்ணு' ஆன சமயத்தில் இருவரையும் ஜோடி சேர்த்து எடுத்த பாடல்.
ஜோடி பொருத்தமாக இருப்பது போலவும் தோன்றுகிறது. இல்லாதது மாதிரியும் தெரிகிறது. சேகரை சின்னப் பையனாகவே பார்த்து பழக்கப்பட்டு விட்டதால் இப்பாடலில் வாலிபனாக பார்க்க ஒத்துவரவில்லை.(கவரிமானில் பரவாயில்லை) ரோஜாரமணி வழக்கம் போல். சேகர் கொஞ்சம் துறுதுறு. ஹீரோயின் அமைதி காக்கிறார்.
சேகருக்கு டி.எம்.எஸ்.வாய்ஸ். பொருந்தவே இல்லை. (இந்தக் காலக் கட்டத்தில் 'இளைஞர்களுக்கு பாடலா.... கூப்பிடு பாலாவை' என்றுதானே சொல்வார்கள்!) குமாருக்கு என்ன ஆயிற்று? 'பாடகர் திலகம்' எவ்வளவோ இளமையாக பாட முயன்றும் சேகருக்கு எடுபடவில்லை. ஆனால் இனிமையாக பாடி சௌந்தரராஜன் ஈடுகட்டி விடுகிறார்.
சுசீலா ஒரே வார்த்தையில் சொன்னால் அற்புதம்.
ஒரு தடவை கேளுங்கள். 'பரவாயில்லை' என்று சொல்லுவீர்கள். இரண்டு முறை கேட்டால் 'அருமை' என்று சொல்வீர்கள். குமாரின் அருமையான மெட்டில் அப்படியே நம் நெஞ்சை அள்ளிக்கொண்டு போகிறது இப்பாடல்.
எப்போதுமே இப்பாடலை 'நெனச்சா இனிக்குது'.
உன்னை நெனச்சா இனிக்குது (புல்லாங்குழல் இசை மறக்க முடியாதது)
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
கண்ணே ராஜாவே
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
(வயலின் கலக்கல்)
முல்லைப்பூ மல்லிப்பூ
முத்துப்பூ பிச்சிப்பூ
முன்னாலே வந்தாடுது
உள்ளாடும் ரோஜாப்பூ
உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது
முல்லைப்பூ மல்லிப்பூ
முத்துப்பூ பிச்சிப்பூ
முன்னாலே வந்தாடுது
முள்ளாடும் ரோஜாப்பூ
உள்ளூர உள்ளூர
சந்தோஷ நீராடுது
சிவப்பானது மாம்பழக் கன்னம்
உனக்காகவே மின்னுது இன்னும்
சிவப்பானது மாம்பழக் கன்னம்
உனக்காகவே மின்னுது இன்னும்
கொஞ்சம் வா
கொஞ்ச வா
முன்னம் வா
பின்ன வா
வாடியம்மா இனியென்ன வெட்கம்
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
சந்தனம் குங்குமம் மங்களம் கங்கணம் ('கங்கணம்' சுசீலா உச்சரிப்பு டாப்)
எப்போது நான் பார்ப்பது
சம்சாரம் கொண்டாட
பஞ்சாங்கம் நான் பார்ப்பேன்
அப்போது நீ கேட்பது
இனி நான் உன்னைப் பிரிவதுமில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை
இனி நான் உன்னைப் பிரிவதுமில்லை
பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை
கொட்டட்டும் மேளங்கள்
கொஞ்சட்டும் உள்ளங்கள்
மனசுக்குள் விழுந்தது மாலை
உன்னை நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா மணக்குது
ரொம்ப சுகமா இருக்குது
கண்ணே என் ராஜாத்தி
உன்னை நெனச்சா இனிக்குது (அஹ்ஹா)
அள்ளி அணைச்சா மணக்குது]
https://www.youtube.com/watch?v=MotNmO0cs-0&feature=player_detailpage
(இந்தப் படத்தில் 'இளமைக் கோயில் ஒன்று... இரண்டே தீபங்கள்' என்ற காலத்தை வென்ற பாடல் உண்டு. அது பற்றி பின்னால் வ(த)ருகிறேன்)
வாசு சார்/முரளி சார்/கார்த்தி சார்/தமிழருவி ck சார்/கோபால் சார்/வேந்தர் சார்/வினோத் சார்
(பொதுக்கூட்டம் நினைவிற்கு வருகிறது )
சொந்த வேலையாக ஒரு நாள் ஊரில் இல்லை . ஜோலி முடித்து வந்தால்
இங்கே சொலியெ எல்லோரும் பெருககிட்டங்க
மன்மத லீலைக்கு இவ்வளுவு (தீபம் படத்தில் சுருளி மனோரமாவிடம் சொல்வது போல் ) போஸ்ட் . எல்லாம் செம கலக்கல்
பாருங்க நம்ம வேந்தர் சார் வந்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் ராத்திரி மெகா டிவியில் பார்த்த msv ப்ரோக்ராம் பற்றி கொடுத்துட்டு போறார்
இந்த நேரத்தில் திரு கார்த்திக் அவர்களிடம் மன்மத லீலை போஸ்ட்க்கு நடுவில் பாலசந்தர் இன் அவர்கள் படத்தில் இருந்து "அங்கும் இங்கும் பாதை கண்டு " பாடல் பற்றி ஒரு போஸ்ட் போட்டுட்டேன் . திரு கார்த்திக் என்னை ஷமிக்கணும் (நடிகர் திலகத்தின் படத்திற்கு மற்றுஒரு NT படமே போட்டியாக வருவது போல் )
வாசு சார் உங்கள் மழை மேகம் 1977
எ.எஸ் பிரகாசம் டைரக்டர் .
சாரதா அம்மா சொந்த படம்
முத்துராம் ஒரு ஜோடி . வெள்ளை சாரதா
நம்ம ஸ்ரீகாந்த் ஜோடி கருப்பு சாரதா (அவங்கள் தான் மழை மேகம் )
ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
(நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் வாணி ராணி ஜாடையில்
"முல்லை பூ பல்லக்கு போவது எங்கே honey மூன் முன் போகும் பாதை எங்கே " பாடலை நினவு படுத்தும்
இந்த படத்தில் இன்னொரு பாடல் நினவு உண்டு
"ஜானகி " குரலில் உடன் சௌந்தரராஜன் என்று நிநேகிறேன்
"சொக்கு போடி போட்டனாம் மச்சான் மச்சான்
சொன்னபடி கேட்க தானே வைச்சான் வைச்சான் "
ஒரு மாதிரி ஜோதியில் வந்து கலந்துட்டேன்
இன்னும் ஜானகி சபதம் பற்றி எழுதணும்
நிறைய சோலி இருக்கே 24 மணி நேரம் காண மாட்டேங்குது
வணக்கம்.
வாருங்கள் கிருஷ்ணா சார். 'மன்மத லீலை' முடிந்ததா?:)
கிருஷ்ணா சார்
மழை மேகத்தில் இன்னொரு பாடல். 'ஒரு கோடி சுகம் வந்தது' ஜானகி ஏ.எல்.ராகவன் இணைவில்.
நன்றாகவே இருக்கும்.
நீங்கள் போட்ட
'சொக்கு பொடி'யில் மாட்டிகிட்டேன். கரெக்ட்.
கிருஷ்ணா சார்
நிஜமாகவே புள்ளி விவரப்http://www.corbett-national-park.co....r_animated.gifசார் நீங்கள். ரொம்ப சாக்கிரதையாய் இருக்கணும் உங்ககிட்டே.:)
மன்மத லீலை அதுக்குள்ளே முடிஞ்சுருமா
இன்னும் இருக்கே
மது வீட்டிற்கு அருகில் அருந்ததி (ஜெயா விஜய) வீடு மாறி குடி வருவது
ரேகா (ஹலம்) ஜப்பான் பையன்ஐ விட்டு டென்னிஸ் பால் போட்டு
அதுதானா என்று விசாரிக்க சொல்வது
ஜப்பான் பையன்
"என்ன அதுதானா .தெருவில் எல்லோரும் கசமுசானு பேசிக்கிறாங்க "
ரேகா "எல்லோரும் பேசிக்கிறாங்களா அப்ப சரிதான் "
"என்ன சரி தான். என்னன்னு தான் சொல்லுங்களேன் "
"அது எல்லாம் உனக்கு தெரியாது நீ சின்ன பையன் "
"விபச்சாரினா எனக்கு தெரியாதுனா நினசீங்க ஆமா விபச்சாரின என்ன அர்த்தம் "
"அட பாவி சரி சரி இதுக்கு மேலே நீ தெரிஞ்சுக்க வேணாம் "
அன்று காலை மாடியில் அருந்ததி exercise செய்வது கமல் அதை வேடிக்கை பார்ப்பது பார்த்து கையை ஆட்டுவது உடனே அருந்ததி
அத்தான் என்று அழைப்பது
அன்று இரவில் மது வீட்டு கொலுவிற்கு அருந்ததி வருவது
வந்து "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடலை பாடுவது
அப்போது கமல் திடீர் என்று வருவது
வந்தவுடன் அருந்ததி "அத்தான் என்ன அத்தான்" என்று பாடுவது
தெரு பெண்கள் எல்லோரும் சிரிப்பது
உடனே அருந்ததி வசனம்
"நான் பாடியதை கேட்ட சிரிச்சாங்க
இந்த தெருவில் எல்லா ஆண்களும் எனக்கு பழக்கம் .
ஆனால் ஒருத்தரை தவிர என்கிட்டே இந்த கிண்டல் வேண்டாம் "
அதை கேட்டு ரேகா மாடியில் கமலிடம்
(அப்போது கமல் கையில் mad என்ற magazine இருக்கும் - பாலச்சந்தர் technique )
"இன்னைக்கு கொலுவிற்கு எதிர் வீடு பெண் வந்தாள் ரொம்ப அசிங்கம் "
"எ னக்கே அசிங்கமாயிருக்கே உனக்கு இருக்காத " ??
"வந்தவள் ஒரு விஷயம் சொன்ன சிவா சிவா "
"என்ன விஷயம் "
"இந்த தெருவில் எல்லா ஆண்களும் எனக்கு பழக்கம் .
ஆனால் ஒருத்தரை தவிர சிவா சிவா "
"சிவா சிவா " இது கமல்
"அந்த ஒருத்தர் யாராயிருக்கும் சிவா சிவா அதை தெரிஞ்சுகலனே
எனக்கு மண்டையே வெடிச்சுரும் போல இருக்கே " - ரேகா
"எனக்கே மண்டை வெடிச்சுரும் போல இருக்கே உனக்கு இருக்காதா" -கமல்
"ஆ ஆ அந்த எதிர் வீடு கிருஷ்ணமுர்த்தி யாதான் இருக்கும் சுத்த கஞ்சன் கஞ்சன் " கமல்
ரேகா விஸ்வரூபம் எடுப்பது
கமல் "தப்பு தப்பா சொல்றேன் நான் தான் அந்த கஞ்சன் "
அப்ப மெல்லிசை மன்னரின் BGM chorus ஹம்மிங் அண்ட் தபேல
vasu sir
"ஒரு கோடி சுகம் " அந்த பாட்டு first நைட் பாட்டு என்று நினவு
கரெக்ட் ஆ சார்