ஜி
ஆம் ஆம் தேருக்கு சேலை பாட்டு
நிர்மலா கொள்ளை அழகு
ஜோதிக்கு இடை உண்டோ ...
ஆம் சொர் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுவும் தூள்
சொல்லத்துடிப்பது என்ன பாடலும் சூப்பர்.
Printable View
ஜி
ஆம் ஆம் தேருக்கு சேலை பாட்டு
நிர்மலா கொள்ளை அழகு
ஜோதிக்கு இடை உண்டோ ...
ஆம் சொர் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுவும் தூள்
சொல்லத்துடிப்பது என்ன பாடலும் சூப்பர்.
எனக்கு மிகவும் பிடித்த வானமும் பூமியும் ஆலிங்கனம்
https://www.youtube.com/watch?v=-mW5rQJQyME
சினிமாவில் டிராமா
சீதையை சிறையெடுத்த ராவண காஞ்சனா:) (அடையாளமே தெரியாது) அவளைத் தனக்கு இணங்குமாறு வற்புறுத்த, சீதை மறுக்க, ராவணனோ 'தொடாமல் வைத்து தூக்கி வந்தால் மிஞ்சுகிறாய்' என்று மிரட்டி 'இனி பலத்தால் உன்னை அடைவேன்' என்று சபதமிடுகிறா(ள்)ன்.:) நாடகம் பார்க்கும் நம்பியாரிடம் உண்மையில் சீதையின் நிலைதான் படத்தில் காஞ்சுவிற்கும். டைரெக்ஷன் யுத்தியாம். கற்பு பத்தி சீதை உரைக்கையில் நம்பியார் முகம் எப்படி எரிச்சல் அடைகிறது!:)
உடனே ஹனுமான் விஜயம். ஹனுமான் குரங்கு யார் தெரியுமா? 'நடிப்புச் சுடர்'தான்.
அப்புறம் ராவணனை ராஜன் மீட் செய்வது....காஞ்சனா ராவணன் 'யாரடா குரங்கே?' என்று ராட்சஸி குரலில் ராவுவது...
'அடா புடா' என்று ராவணன் தன்னை மரியாதை இல்லாமல் பேசியதால் ஹனுமான்,
'ராமதூதன் என்று அறியாமல் என்னை 'அடா' வென்று அழைக்கத் தொடக்கி'நாய'டா.:)
இந்தா நான் சொல்லும் 'அடா'க்களை எண்ணிக் கொள்.
அடா அடா அடா
அடடா அடடா அடடா
அடடடடா அடடடடா அடடடடா
அடடா! ராஜன் குரங்கு:) அதாவது ஹனுமான் என்னா குத்து குத்துகிறது!:)
'நூறாண்டு காலம் வாழ்க' படத்தில் வரும் ஜோர் ராமாயணம் இது.
ஒரு சமயம் இப்படத்தைப் பற்றி நானும், ராகவேந்திரன் சாரும் அகம் குளிர பேசி மகிழ்ந்திருக்கிறோம். படமும் என்கிட்டே முழுசா இருக்கே.:)
https://youtu.be/fM_rPQug3YY
ஜி!
நீங்க வேற ராட்சஸி பத்தி சொல்லி வெறி கிளப்பிட்டீங்க. கூடவே அடிஷனலா நிர்மலாவையும் சேர்த்து விட்டுட்டீங்க. நியாமா? தர்மமா?:) மனசு அங்கேயே நின்னு நகர மாட்டேங்குது.
இந்தப் பாட்டப் பாருங்க. ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டது. கூட 'மக்கள் கலைஞர்' வேறு.
'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்'
'உங்களுக்காச்சு எங்களுக்காச்சு பாப்பமா
இந்த பொம்பளை என்ன ஆம்பளைகிட்ட தோப்பமா'
'சோ' வேற 'ஜெய்சங்கர்... ஜெய்சங்கர்' என்று 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' பாட்டை சாக்கா வச்சுகிட்டு நிஜமாகவே மக்கள் கலைஞரை புகழ்வது போல இருக்கும்.
சும்மா 'பாடகர் திலகம்' ஆம்பளையா வரிஞ்சி கட்டிக்கிட்டு வருவாரே பார்க்கலாம்.
'உங்களுக்காச்சு எங்களுக்காச்சு பாப்பமா
இந்த ஆம்பளையெல்லாம் பொம்பளகிட்ட தோப்பமா'
கூட ஆடும் எக்ஸ்ட்ராக்கள் டான்ஸ் சூப்பரோ சூப்பர். இந்தக் கால ஆட்டம் போல இருக்கு.
'ஜுகுஜுகுஜுகுஜூ' என்று ராட்சஸி படா ஜோர்.
நடுவில நடிகர் திலகம், மக்கள் திலகம் வேற மாட்டுவார்கள் மறைமுகமாக.
'குதிர ஏறினா மதுர வீரனா
மீச வச்சவன் கட்டபொம்மனா'
நிர்மலா டிரெஸ் 'சிக்'கோ 'சிக்'. 'பூவா தலையா'வில ரெண்டும் தனியா சண்டை போட்டுக்கும். இதுல குரூப்போட வந்து சண்டை போடுதுங்க. அட சர்தான்...
இன்னா படம்னு சொல்லலியே...'முத்துக்கு முத்தாக' ன்னு கண்டசாலா பாடுவாரே அந்தப் படம்தான்.:)
https://youtu.be/_lOpyPns18s
ஹலோ! மன தைரியம் உள்ளவங்க இந்த பார்ட்னர்களைப் பாருங்க. அப்பால நம்மள கொற சொல்லக் கூடாது.
லீலா வினோதம் புரியும் தேங்காய். அந்தபந்தமில்லாமல் தொப்பையும் தொந்தியுமாக. அவர் ஸ்டைலில் கழுத்தொடித்து.
கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ
ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ
மகாபலிபுர கடற்கரையோர சவுக்குத் தோப்பில் சல்லாபக் காதல்.
தேங்காய் பண்ணுவதை காமெடி என்பதா...ஹீரோத்தனம் என்பதா...ஸ்டைல் என்று பொருள் கொள்வதா...கொடுமைடா சாமி.
உடை விஷயத்தில் 'கெட்டிக்காரி' லீலா.:)
மட்டை உரித்த தேங்காயாக 'தேங்காய்' :)
சுசீலா குரலில் பாடல் மட்டும் சுகமே. Hello Partners.... நிறுத்திக்கவா?:)
https://youtu.be/6jCaniwepqM
நன்றிகள் ஆயிரம் ஆதிராம் சார். உங்கள் சந்தோஷமே எனக்கு மகிழ்வு. இப்போது போல எப்போதும் 'நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து' தலைவர் சொன்னது போல.
'பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா' பாடலில் குரல்கள் மாறி நடிகைகள் வாயசைப்பதை கண்டுபிடித்து அநியாயத்துக்கு ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள். உண்மைதான். கில்லாடி சார் நீங்கள்.
பாடலின் துவக்கத்தில் பல்லவியில் மேடம் அவர்கள் ஈஸ்வரி குரலுக்கு வாயசைப்பார். அதே பல்லவி திரும்ப லஷ்மிக்கு வரும்போது அவருக்கு சுசீலா அம்மாவின் குரல்.
முதல் சரணத்தில் 'கண்பட்டு...உங்கள் கைபட்டு' லஷ்மிக்கு ஈஸ்வரி குரலில் மாறும். பின் அப்படியே தொடரும்
அடுத்த சரணத்தில் மேடத்துக்கு சுசீலா அம்மாவின் குரல். ('சொன்னால் தெரிவதில்லை எதுவும்... அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்')
பின் வரும் சரணத்தில் 'போடுங்கள்...கூண்டில் ஏற்றுங்கள்' லஷ்மிக்கு ஈஸ்வரி.
அப்புறம் மேடத்துக்கு சுசீலா குரல்தான்.
'நன்றாயிருக்குதிந்த உவமை
இந்த பெண்ணே உந்தன் சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை'
நடுவில், முடிவில் எல்லாம் கரெக்ட் தான். மேடத்துக்கு சுசீலா. லஷ்மிக்கு ஈஸ்வரி. இதுதான் கணக்கு. ஆரம்பம் மட்டும் மாறி விட்டது.
ஆனால் பாட்டு...அமர்க்களம். நிஜமாகவே கந்தர்வ கானம்தான். சலிக்கவே சலிக்காது.
https://youtu.be/DDAtnADiyGo
//ஜி!
இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும். // நற நற ம்ம் வீக் எண்ட்ல ராணிலலிதாங்கீ பார்த்தே தீரணும் போல இருக்கே :) யூ ட்யூப்ல ஃபுல் மூவி இருக்கா என்ன
//டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்// அதானே .. தேவிக்யூட்டி தேவிகா பத்தி ப் பேச்சு வந்ததேன்னுபார்த்தேன்..
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால்..
ஒரு பெரிய கவிஞர் எல்.வைத்தீஸ்வரன் ( கிணற்றில் விழுந்த நிலவைத் தூக்கிவ்டு என்ற கவிதை ரொம்பவே ஃபேமஸ்) சென்னையில் சந்தித்துப் பேசியது நினைவில்..அப்போதே அவருக்கு 60 வயதுக்கு மேல் என நினைக்கிறேன்.. அவர் அவரது இளமைக் காலத்தில் எஸ்.வி.சகஸ்ர நாமம் ட்ரூப்பில் நடித்திருந்தார்.. அவருடன் நடித்த பிரமீளா பற்றி நிறையச் சொன்னார்..அவர் தான் தேவிகாஎனப் பிற்காலத்தில் அறியப்பட்டவர் எனச் சொன்னதும் அனிச்சையாய்க் கைகள் பற்றிக் குலுக்கினேனாக்கும்.. :) எஸ்.வி. சகஸ்ர நாமமும் அவரது நாடக வாழ்க்கை பற்றியபுத்தகத்தில் பிரமீளா என்றே குறிப்பிட்டிருக்கிறார்..ம்ம்
ஒரு பாலாஜி படத்தில் கூட அவர் ஜோடியாக ப்ரமீளாவை (பழைய) பார்த்த நினைவு..
'கலாட்டா கல்யாணம்'
கலாட்டா மாற்றம்.
http://i.ytimg.com/vi/_E-c7FfPn58/hqdefault.jpg
'கலாட்டா கல்யாணம்' படத்தில் 'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' பாடலில் நடிகர் திலகம், ராஜன் இவர்களுக்கு டி.எம்.எஸ்.அவர்களின் குரல். நாகேஷுக்கு அப்படியே நைஸாக வி.கோபாலகிருஷ்ணனுக்கும் சேர்த்து பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்.
'பத்துப் பதினாறு பிள்ளைகள் பெறலாமோ'
'ஆணைகளை வெறுத்தாயே'
இதை பி.பி.எஸ் நாகேஷுக்குப் பாடுவார். அப்படியே தொடரும் 'மன்மதன் நான்தானே' வரியை கோபாலகிருஷ்ணனுக்கு சாமர்த்தியமாகத் தந்திருப்பார்கள் அதே பி.பி.எஸ்.குரலில்.
இப்போதான் கொஞ்சம் மாறிவிடும்
'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' என்று டி.எம்.எஸ்.அமர்க்களமாக பாட, வாயசைப்பவர் ராஜன். உடனே 'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' என்று சுசீலாவின் குரலுக்கு வாயசைக்கும் ஜோதி அடுத்த வரியான
'மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன'
பாடும்போது ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைப்பார். முன் வரியை சுசீலா குரலுக்கு ஜோதியைப் பாட வைத்தவர்கள் அடுத்த வரியை அதே ஜோதிக்கு ஈஸ்வரியின் குரலைத் தவறாகத் தந்தது முரண்தானே! அதுவும் அந்தக் காலக் கட்டத்திற்கு.
மறுபடியும் ஒரு தவறு. திரும்ப பதிலுக்குப் பாடும் ராஜனுக்கு அதே டி.எம்.எஸ் வாய்ஸ்தானே மீண்டும் ஒலித்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல் மாறாக பி.பி.எஸ் குரல் ராஜனுக்கு மாறி
'முன்னம் காணாத இன்பம் என்னென்ன'
என்று ஒலிக்கும்.
இது எப்படி?
ஒரே ஜோடிக்கு முதலிரண்டு வரிகளை ஒரு பாடகர்களும், அடுத்த இரண்டு வரிகளை வேறு பாடகர்களும் ரிககார்டிங்கில் பாடியிருக்க முடியாது. அது பாடகர்கள் தவறல்ல. காட்சிப்படுத்தியவர்களின் பிழைதான் இது.
ஒருவேளை
'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' டி.எம்.எஸ்.வரிகளை
நடிகர் திலகத்திற்கும்,
'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' சுசீலா வரிகளை
மேடத்திற்கும்
பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.
அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.
'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.
ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு. அதில் பாதி வெற்றியும் பெற்றிருப்பார் நமது டார்லிங் இயக்குனர். மீதியை அட்ஜஸ்ட் செய்து எடுப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.
சரி! ஏதோ ஒன்று. பாடல் அருமை. படமாக்கலும் அருமை. இசையும் அருமை. பாடகர்களும் அருமை. நடிகர்களும், நடிகைகளும் அருமை. நடனமும் அருமை. ஒளிப்பதிவும் அருமை. இயக்கமும் அருமை. பொருட்காட்சியும் அருமை. அதைவிட அருமை நடிகர் திலகத்தின் இளமை.
என்ன சரிதானே!
https://youtu.be/ZpDSEwPYu6w
இப்படி மாத்தி மாத்தி பாடுவதை எழுதினால் எதை எழுதியது யாருன்னே புர்லே ! கலாட்டா கல்யாணம் பத்தி ராகவேஷ் எழுத மாட்டுக்கார வேலன் பற்றி சின்னவாசு எழுதினாரா ? கொஞ்சம் நிதானமா படிக்கணும்...
வாசு ஜி... வைராக்கியம் படப்பாடல்களை யூடியூபில் பழைய பாடல்கள் பதிபவகளிடம் கேட்டு கேட்டு கேட்டு கடேசியா ஒருத்தர் அபய கரம் நீட்டி விட்டு எல்லா பாடல்களையும் போட்டார். இப்போ நிறைய பேர் பதிஞ்சுட்டாங்க.
அந்த சர்ர்ர்ர்ர்... எப்பவும் என் ஃபேவரிட் சர்ர்ர்ர்ர்ர்... கடைசில ஜோதிலட்சுமி சி.ஐ.டி. என்று மாத்தி புதியபறவை ரேஞ்சுக்கு கொண்டு போகப் பார்ப்பாங்களே !
ம்ம்ம்... மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் "பொன்னே பூமியடி" பாட்டுக்கு ஸ்ரீதேவியும் மனோரமாவும் நடிக்க வாணியும், ஜானகியும் குரல் கொடுத்திருப்பாங்க... முதலில் ஸ்ரீதேவிக்கு ஜானகிதான் ஆரம்பிக்கிறார். ஆனா ஹீரோயினுக்கு அவங்க.. காமெடியனுக்கு நானா.. அப்படிங்கற பேச்சு வரவேண்டாம் என்று நினைத்தோ என்னவோ அப்பப்போ ஆளும் குரலும் மாறும்.
https://www.youtube.com/watch?v=5rfli7_pHmE
இன்றைய கேஷவ்வின் படத்திற்கு எழுதியது..
காணாமல் நின்றாடும் கண்ணாவுன் காட்சிதனை
ஆனாலும் இங்கே அழகாக -கானாபோல்
ஓடும் கவிதையாய் ஓர்கோட்டில் தந்தாரே
ஆடுதே நெஞ்சமே ஆம்..
https://scontent-fra3-1.xx.fbcdn.net...db&oe=568D366C
https://youtu.be/ZRsIu8UkAWw
Mdhunna chandrakala thaan CID.. hmmmmmmmmm
adhu seri intha SJ VJ paatukku romba kashtapattangalam. both VJ & SJ dont like each other.
when this song was recording they were in full hate mode .. it was tough for shyam to bring them together and made them sing is what i heard
each sang their portion and left ..
evlo dhooram unmaiyo :)
From RaNi Lalithangi(57)
aaNdavane illaiye........
http://www.youtube.com/watch?v=IPQLSXVWemY
மதுண்ணா இதோ வைராக்கியம் முழு படம்
https://www.youtube.com/watch?v=pc_mfsQlppk
"அவள் பறந்து போனாளே"
மாடிப்பட்டுக்களில் இறங்கி வரும் நடிகர்திலகத்தின் பூட்ஸ்கால்களைமட்டும் காட்டும் அந்த ஆரம்ப காட்சியே வித்தியாசமானதுதான்.. பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் கதாநாயகனின் அறிமுக காட்சிக்கு
மட்டுமே காட்டப்பட்டு வந்த உத்தியை படத்தின் சோக பாடலுக்கு பயன்படுத்திய சிறப்பு இப்பாடலுக்கு உண்டு.
பூட்ஸ் கால் ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கி மெல்ல வரும்.அப்படியே காமிரா மெல்ல உயர்ந்து இடுப்பு,நெஞ்சு, முகம்னு நடிகர்திலகத்தின் உருவம் காட்டப்படும் என்று நெஞ்சு நிமிர உட்கார......
பின்னர் பார்த்தால் சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஏமாற்றம்தான்.
இறங்கி வருகிற பூட்ஸ் கால்களோட தொடர்ச்சியா ,டீப்பாய் மேல வைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிற வேற ஒரு கால்களை காண்பிப்பார்கள்.அந்தக் கால்களை தூக்கி நிலத்தில் நிற்கும் உருவத்தை காட்டும் காமிரா...
அது முத்துராமன் .
நடிகர்திலகத்தின் கால்களை மட்டும் காண்பித்து முகத்தை காட்டாமல் அதனின் தொடர்ச்சியாக வேறு கால்களை காண்பித்து அப்படியே முத்துராமனை காட்டுவது ஒரு வித சாதுர்யமான டெக்னிகல் உத்தி. இப்படி காட்டுவதால் அது ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பின் சற்று ஏமாற்றத்தையும் அளிக்கும்.அதே சமயம் தேர்ந்த திறமை வாய்ந்த டைரக்டர் அந்த காட்சியை காண்பிக்கிறார் என்றால் பின்வரும் காட்சிகள் ஏதோ ஒரு பிரளயத்தை உண்டு பண்ணுவதாக இருக்கும் என்பதுதான் அந்த உத்தியின் மூல காரணமாக இருக்கலாம்.
என்ன ஒரு டெக்னிகலான காட்சியமைப்பு.கறுப்பு வெள்ளை காலகட்டத்தில் உதித்த அந்த ஐடியா
பாராட்டப்பபவேண்டிய அம்சம்.சரி பீம்சிங் காரணமில்லாம இந்த ஷாட்டுகளை காண்பிக்கமாட்டாருன்னு நமக்கு நாமே அப்போது தேற்றிக்கொண்டோம் என்பதே உண்மை
முத்துராமனுமஅவள் பறந்து போனாளே பாடலின் பல்லவியைவீட்டிற்குள் பாடுவது போல் காட்சி.
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே
அந்தப் பல்லவியும் முடிஞ்சு இப்ப பிண்ணணி இசை ஓடிக்கொண்டு இருக்கும்.இப்ப இடம் வேற.பாறைகள் நிரம்பிய இடத்தில் நுரைகள் பொங்க
நீர் பெருக்கெடுத்து ஓடும் இடம்.பயத்தையும்,ஆச்சரியத்தையும்,ரசிப்பையும் கொண்ட இடம் அது.
"சந்திராராராரா"
ஓர் உரத்த கணீரெண்ற குரல் மட்டும் தான் இப்போது கேட்கும்.
அட TMS குரல் கேட்டாச்சு. தலைவரோட அதகளம் ஆரம்பிக்குப்போகுதுன்னு நிமிர்ந்து உட்காருவோம். திரும்பி நிற்கும் உருவ அமைப்பும் ஸ்டைலும் மறுபடியும் ஏமாற்றத்தை தரும்.
ஆனாலும் அதன் பின் வரும்காமிரா பதிவுகள் அசத்தல்.
அணைகட்டு நீரில் அலைகளாட,
அதில் முத்துராமனும் விஜய குமாரியும் ஆடும் காட்சி மிக்ஸிங்செய்யப்பட்டு DOUBLE EXPOSE'பாணியில் படமாக்கப்பட்டிருக்கும்.
முத்துராமன் நடந்து செல்லும் பாலைவன காட்சி யில் ஒளிப்பதிவு பிரமாதம்.
முத்துவோட நிழலைக் காண்பித்து அந்த நிழலிருந்து நிஜத்திற்கு மாறும் ஷாட் பிரமாதமாயிருக்கும்.
அப்போது திரையில் ஒலிக்கும் வரிகள்.
"என் நிழலுக்கு உறக்கமில்லை"
முத்துவின் பக்கமிருந்துஅப்படியே லாங்சாட்டுக்கு மாறி பாலைவனத்தை
காட்டுவது சிறப்பான ஒளிப்பதிவு.
பீம்சிங் படங்களில் ஒளிப்பதிவு தனி அம்சமாக விளங்கும்.
பல்லவி ,முதல் சரணம் முத்துராமனின் நடிப்பில் நிறைவு பெறுகிறது.
http://i1065.photobucket.com/albums/...psi3gosmon.jpg
திடீரென்று எரிமலை வெடித்துச் சிதறுவதை விட அந்த எரிமலை இப்ப வெடிக்கும் அப்பறம் வெடிக்கும் என்று பார்த்திருந்து,பார்த்திருந்து,
காத்திருந்து,காத்திருந்து ,ஒரு பதட்டத்தை ஏற்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெடித்துச்சிதறும் எரிமலை போல்
தான் இந்தக் காட்சியை இன்றும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.
மாடிப்படிக்கட்டுகளில் நிற்கும் நடிகர்திலகம் இந்த வீட்டுக்கு விளக்கில்லை என்று முதல் வரியை பாடி திரும்பி நிற்பார்.அப்போது வீட்டின் விளக்குகள்அணைந்து இருட்டில்
சில் ஹவுட்டாகநடிகர்திலகத்தின் உருவம் தெரியும்.
திரும்பிநிற்கும் நடிகர்திலகத்தைஅடுத்த ஷாட்டில் முன்பக்கம் காண்பிக்கும் அந்தக்கணம்எல்லா விளக்குகளும் எரியும்.அப்பொழுதே இது போன்ற டெக்னிகல் உத்திகளில் அதுவும் கறுப்பு வெள்ளையில் தெளிவான காட்சிகள் படம் பிடிக்கப்படிருப்பது பெருமையான விஷயம்.தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்த பிற்காலங்களில் சில திரைப்படங்கள் இந்தப்பாடலில் வருவது போன்ற காட்சிகள் அமைந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது.ஆனால் பழமையான அந்தக்காலகட்டத்திலேயே கறுப்பு வெள்ளைகளில் சிறப்பான ஒளிப்பதிவுகள் தமிழ்சினிமாவில் கையாளப்படிருக்கிறது என்கிற வரலாற்றைத்தான் பிற்கால ரசிகர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
நடிகர்திலகத்தை காட்டும்விதம்
ஒன்று போதும்.அந்தப்பாடலின்
சிறப்புக்கு.லைட்டிங் டெக்னாலஜியைப்பொறுத்தமட்டில் அந்தக்காலகட்டத்திலேயே இந்த மாதிரி டெக்னிகல் எபக்ட்ஸ் பயன்படுத்தப்பட்டு விட்டதால்
பிற்காலத்தில் வந்த சில படங்களை
சொல்வதில் புதுமையில்லை.
இல்லை என்பதில் முடியும் இரண்டாவது சரணத்தின் வரிகள்.
அதுபி.பி.எஸ்க்கு.
மூன்றாவது சரணத்தின் வரிகளும்
இல்லை என்ற வார்த்தையில் முடியும்
இது TMSக்கு.
இல்லை இல்லை என்று சொன்னாலும் அதில் இல்லாதது எதுவும் இல்லை.
சிறந்த நடிப்பு சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு சிறந்த லொகேஷன்
சிறந்த உடையமைப்புசிறந்த குரல்.etc...
http://i1065.photobucket.com/albums/...psxmpn7iuy.jpg
மறுபடியும் அந்த பாலைவனத்தில் அடுத்த சரணம்.முத்துராமன் பாடுவதாக இருக்கும்.சூறைக்காற்று வீச,புழுதிப்படலத்தின் பிண்ணணியில் அந்தக் காட்சி செல்லும்.இப்படியொரு பாடல் பாலைவனத்தில் எடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமான யோசனை. புதுமையும் கூட.
.....தன் சிறகை விரித்தாளே.
http://i1065.photobucket.com/albums/...psafgrndam.jpg
http://i1065.photobucket.com/albums/...pskgdjvbna.jpg
(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜி ரசிகனே...
நீ
நினைத்ததை
உன் தலைவன்
நிறைவேற்றாத
காட்சி
எதிலேனும்
உண்டா?)
(எது நடக்க வேண்டும் என்று சிவாஜி ரசிகன் நினைத்தானோ அது நன்றாகவேநடந்திருக்கும் பாடலின் முடிவில்.)
நடிகர்திலத்தின் விழிகளை பார்த்து பேசுவது பெரும் கலைஞர்களுக்கே
சிரமம் என்று சொல்வதுண்டு.அவருடைய இந்த விழிகளைப் பார்த்தால் அதை என்னவென்று சொல்வது?
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு விழிகள் மேல் நோக்கி நிலைத்த நிலையில்
எந்த அசைவையும் காட்டாமல்
உட்கார்ந்திருக்கும் அந்தப் போஸ்
பார்ப்பவர்களை மிரளவே செய்யும்.
http://i1065.photobucket.com/albums/...psry7yyu3t.jpg
"அவள் எனக்கா மகளானாள்"
"நான் அவளுக்கு மகனானேன்"
"என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்."
என்று முடியும் பாடல்.
ட்ரிக்ஷாட்டில் எடுக்கப்பட்ட கடைசி வரிகளுக்கான படப்பதிவுகள்.
http://i1065.photobucket.com/albums/...psnfib7017.jpg
(பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்
இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
Aval Paranthu Ponale: http://youtu.be/utaMgFouiF4
Varam Movie Songs - Ningi Nela Song - Prabhu, Ama…: http://youtu.be/XLEUI7-Y66s
நல்ல இனிமையான தமிழ்பாடல்.
தெழுங்கில் கிடைக்கிறது.
தமிழில்?
தமிழ்ப்பாடல்:
வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம்
மழையும் அடிக்க வெயிலும் அடிக்க இங்கே கல்யாணம்.
காதல் மாலை சூடும் வேளை கண்ணில் கார்காலம்
கண்ணே உந்தன் கன்னம் ரெண்டில் கண்ணீர் ஊர்கோலம்.
இசை MSV
பாடியவர் ஜெயச்சந்திரன்.,சுசீலா?சித்ரா?
இப்பாடல் சென்னை தொலைக்காட்சியில் மெல்லிசை
பாடல்களில் அடிக்கடி ஒலிபரப்பு செய்யப்படும்.பாடலின் இனிமையும்,
மென்மையும் டைரக்டர் கேட்டு அது அவரை ஈர்த்திருக்கலாம்.அந்த சமயத்தில் அவர் எடுத்த இந்த திரைப்படத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.படத்தின் சிச்சுவேசனும் இந்த வரிகள் மிகவும் பொருத்தமாய் அமைந்திருந்ததும் ஒரு காரணம்.
திரைப்படத்திற்காக சில வரிகள் பாடலாசிரியரிடம் கேட்டு மாற்றப்பட்டிருக்கலாம்.
டைரக்டர் RC சக்தி
கவிஞர் வைரமுத்து
நடிப்பு
இளையதிலகம்
அமலா
டாப்சிலிப் மூணாறு மலைப்பகுதிளை
ரசிக்கலாம்.
படம்:வரம்
//சுசீலா வரிகளை மேடத்திற்கும் பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.
அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.
'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.
ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு.//
டியர் வாசு சார்,
இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அண்ணாநகர் உலக பொருட்காட்சியில் கூட்டம் குறைவான ஒரு செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணிக்குள் பாடல் காட்சியை படமாக்கி முடித்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் படப்பிடிப்பு குழுவினர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் (தகவல்: அன்றைய குமுதம் இதழில் சித்ராலயா கோபுவின் "பொருட்காட்சியில் படக்காட்சி")
எனவே நேரம் போதாமை காரணமாக குரல் மாற்றம் குளறுபடிகள் நேர்ந்திருக்கலாம்.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...f5&oe=56C81810
Image from Pesum Padam magazine.
Ungal Nanban was a short film screened during early 60s to bring police closer to the society. Nadigar Thilagam made a Special Appearance in the movie.
A song from Nallathambi(1949) in his memory:
vignaanathai vaLarkka poreNdi....... by N.S.Krishnan.
http://www.youtube.com/watch?v=nMBkOcKJSls
ராகவ் ஜி..
ஒரு சின்ன சந்தேகம். தங்கப் பதக்கம் படத்தில்தானே எஸ்.பி.சௌத்ரி எனும் பெயர் பிரபலமானது ? அது 1974 வெளிவந்ததில்லையோ ? உங்கள் நண்பன் குறும்படம் Early 60s ல் வந்திருக்குமா ? அந்த கவிதையில் நடிகர் திலகத்தின் இந்த கதாபாத்திரத்தின் பெயர் வருகிறதே ? அந்த நாடகம் கூட அறுபதுகளின் இறுதியில்தானே அரங்கேறியது ?
அல்லது அந்தக் கவிதை பிற்காலத்தில் வெளியிடப்பட்டதா ?
சிக்கா வந்து கவிதையில் கேட்டு வைப்பார்... அதுக்குள்ள சொல்லிடுங்க.. இல்லாட்டி குழம்பிடுவீங்க !! ( நான் ஜூட்ட்ட் )
மது
அது என் உள்மனதின் வெளிப்பாடு..
ஆதங்கத்தின் எதிரொலி...
நிழற்படம் மட்டுமே பழையது..
சி.க. வுக்கு பயந்து பயந்து எழுதுதாக இருக்கு..
என்ன செய்றது.. சீர் செனத்தி எல்லாம் கொண்டு வந்தால் தான் தங்கை என்பது போல சொல்லி விடுவார்..
எதற்கும் முன் கூட்டியே ஒரு எக்ஸ்கியூஸ் கேட்டு வைக்கிறேன்..
சி.க. சார்.. கைண்ட்லி எக்ஸ்கியூஸ் மீ ஃபார் எனி எரர் ஆர் ஒமிஷன் ஆர் கிராமேடிகல் மிஷ்டேக்..
Courtesy Dinamani
சிரிப்பு தேவதை
ளின் கலைஞரான இந்த நடிப்புக் கருவூலம் பற்றி எந்த வார்த்தைகளில் எழுதினாலும் சொற்கள் கர்வப்பட்டுக் கொள்ளும். மனோரமா என்று உச்சரிக்கும்போதே ரணப்பட்டுப் போன பாமர மனசு பூரித்து நிற்கும். நோயாளியின் முகமும் பரவசமாகும். மவுனமாக உடலில் புது ரத்தம் ஓடும்.
மனோரமா வெறும் நடிகை மாத்திரம் அல்ல. மன நலம் காக்கும் மருத்துவரும் கூட.
அன்றாடம் பணம் கொட்டும் ஏடிஎம் மெஷினாக எண்ணித் துரத்தும் உறவுகளுக்கு மத்தியில், வாழப் பிடிக்காமல் உயிரை விடத் துடிக்கும் நடிகைகள் வாழும் நாடு இது. மனோரமாவின் மடியில் விழுந்து ஆறுதல் தேடியவர்கள் அதிகம்.
காண்போரையெல்லாம் கவர்ந்த அந்த கலைத்தாய்க்கு ஈடாக(அதிக பட்ச வார்த்தை என்று எண்ணி விடாதீர்! காலம் காட்டும் உண்மை!) வேறு யாரைச் சொல்ல முடியும்!
உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் அறியாத நடிப்பின் ஜீவநதி மனோரமா! நூற்றுக்கணக்கான கதாநாயகிகளுக்கு மத்தியில் தனித்து நகைச்சுவைக்கென்றே உதித்து நாளடைவில் காவியத்தலைவி ஆனவர்.
மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!
நடிப்பவர்களுக்கான முதல் அருகதை அவர்களது வசீகர வதனமும், கடல் போன்ற கண்களும். இரண்டுமே மனோரமாவுக்கு மைனஸ்.
சராசரிக்கும் குறைவான முகம். சின்னக் கண்கள். அவை மனோரமாவுக்கு உதவியது போல் வேறு யாருக்காவது உபயோகம் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.அவருக்கு இறைவன் அளித்த மிகப் பெரிய வரம் குரல்! அந்தக் குரலில் மனோரமா வெளிப்படுத்திய நவரச பாவங்கள், வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏராளம்... ஏராளம்.
எடுத்துக்காட்டுக்கு ‘கம்னு கட’ ஒன்று போதாதா!
காமெடி நடிகை என்பதால் மனோரமாவுக்கு நடிப்பில் எந்தத் தடைகளும் இல்லை. எப்படி வேண்டுமானால் நடிக்கலாம். எவ்வித இலக்கணங்களும் கிடையாது. சினிமாவில் காபரேவும் ஆடியிருக்கிறார். வில்லியாகவும் வலம் வந்திருக்கிறார்.
நினைத்த மாத்திரத்தில் கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் முழுமையாக கை வரப் பெற்றவர் மனோரமா.
ஆயிரத்து முன்னூறு படங்களில் எத்தனை எத்தனை வேடங்கள்...! அன்றாட வாழ்க்கையில் தினம்தோறும் நாம் காணும் சக மனுஷிகளை செல்லுலாயிடில் செதுக்கியவர் மனோரமா.
விளைவு, கின்னஸில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமையைப் பெற்றார். ‘உன்னால் முடியும் தம்பி’படத்துக்குப் பிறகு அடுத்த ஆண்டே அபூர்வ சகோதரர்களும் புதிய பாதையும் சேர்ந்து மனோரமாவை முகம் மலர வைத்தன. தேசிய விருது முதல் முறையாக மனோரமாவைத் தேடி வந்தது.
மனோரமாவுக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் ஸ்டார் ஷெர்லிமேக்ளின்.
மனோரமாவின் கால் தடம் பதிந்த முதல் படப்பிடிப்பு நிலையம் எது தெரியுமா?
‘நான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ஷூட்டிங் பார்க்க ஆசைப்பட்டேன். ஒரு நாள் எங்க குரூப்புடன் நியூடோன் ஸ்டூடியோவில் நுழைந்தேன். அன்று என்.எஸ். கிருஷ்ணனும் டி.ஏ. மதுரமும் நடித்த ராஜா ராணி படப்பிடிப்பு. அதுதான் நான் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங்.’- மனோரமா.
‘காக்கா’ ராதாகிருஷ்ணனில் ஆரம்பித்து ‘மயில்’ சாமியையும் கடந்து அவருடன் காமெடியில் கலக்கியவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள். அநிருத் போன்ற சமீபத்திய பிரபலங்கள் நீங்கலாக எம்.எஸ். விஸ்வநாதன், வி.குமார், குன்னக்குடி வைத்தியநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ், ஏ.ஆர். ரஹ்மான்... என இவர்கள் எல்லோரும் மனோரமாவை சொந்தக்குரலில் பாட வைத்த முன்னணி இசை அமைப்பாளர்கள்.
பொம்மலாட்டம் ‘வா வாத்யாரே ஊட்டான்டே’ மனோரமாவின் சிறப்பைப் பாட்டிலும் எதிரொலித்து இன்றும் பரவசப்படுத்துகிறது.
பேசும் படம் இதழ், ஒவ்வொரு இதழிலும் ‘இம்மாத நட்சத்திரம்’ என்று அம்மாதத்தில் வெளியான படங்களில் சிறப்பாக நடித்த நாயகன்-நாயகிகளைப் பாராட்டி மிக நீண்ட காலமாக எழுதி வந்தது.
கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம், பொம்மலாட்டம் இரண்டும் ஒரே நாளில் 1968 மே 31ல் வெளிவந்தன. சரோஜாதேவி, கே. பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம் அது. மிக அற்புதமாக கமலா எனும் கேரக்டரில் நடித்திருப்பார்.
சரோஜாதேவியை விட்டு விட்டு, அவ்வரிசையில் பொம்மலாட்டத்தில் சிறப்பாக நடித்ததற்காக மனோரமாவைத் தேர்வு செய்தது பேசும் படம். அனைவருக்கும் ஆச்சர்யம்!
பேசும் படத்துக்கு சோ உடனே ஒரு கடிதம் எழுதினார். ‘மனோரமா இம்மாத நட்சத்திரம் மாத்திரம் அல்ல. அவர் இந்தத் தலைமுறையின் நட்சத்திரம்!’ என்று.
அந்நாளில் சினிமா விமரிசனங்களில் மனோரமா குறித்துப் பெரிதாக எதுவும் எழுத மாட்டார்கள். சோ எழுதிய பதில் மீடியாவைத் திகைப்பில் ஆழ்த்தியது.
மனோரமாவின் திறமையை முழுதாக உணர்ந்தவர் சோ. பார் மகளே பார் படத்தில் சோ அறிமுகமானார். சோவின் முதல் ஜோடியாக மனோரமா நடித்தார்.
சோ இயக்கிய முதல் படம் முகமது பின் துக்ளக். அதில் மனோரமாவுக்கு இந்திரா காந்தி போல் ஒரு வேடத்தைக் கொடுத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கலக்கினார். மத்திய மாநில அரசுகளின் கெடுபிடிகளைக் கடந்து துக்ளக் திரைக்கு வந்தது தனி வரலாறு. அடுத்து சோ - மனோரமா பங்கேற்ற அரசியல் நையாண்டி, தங்கப்பதக்கம் படத்தின் வசூலுக்கு உரமாக இருந்தது.
எம்.ஆர். ஆர். வாசு விவித் பாரதி சிறப்புத் தேன்கிண்ணத்தில் மனோரமாவை ‘திரையுலகில் என் ரவுடி தங்கச்சி!’ என்று பாராட்டி ‘வா வாத்யாரே வூட்டாண்டே’ பாடலை ஒலிபரப்பினார். எம்.ஆர்.ஆர். வாசு – மனோரமா கூட்டணியில் வெளிவந்த ‘பாரத விலாஸ்’ சிகரம்.
ரவிச்சந்திரனின் சொந்தத் தயாரிப்பு ‘மஞ்சள் குங்குமம். அதில் தேங்காய் -மனோரமா ஜோடி பாடி நடித்த தெலுங்குப் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.
‘ரா ரா பாவா ரா... ராங்கான பாதையில போத்தாவா அக்கட இக்கட சூஸ்தாவா அசடு போல பேஸ்தாவா’ என்று தொடங்கும் அந்தப் பாடலை எழுதியவர் கதாசிரியர் ‘தேவர் பிலிம்ஸ்’ மாரா. மனோரமாவுடன் பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பேசிப் பேசி சிரிக்க வைக்கும் மனோரமா ஊமையாக ‘வாழ நினைத்தால் வாழலாம்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு கதை சொல்லும் கட்டம் அட்டகாசம்! அதில் மவுன மொழியிலேயே ‘கானாங்குருவிக்கு கல்யாணமாம்’ என்று பாடல் வேறு. ஊமை பாடுவதா? அது மனோரமாவால் மட்டுமே முடியும்.
முதல்முதலாக ‘அபலை அஞ்சுகம்’ படத்தில் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துக் கட்டத் தொடங்கிய மனோரமா தொடர்ந்து அனாயசமாகப் பேசிய வட்டார மொழிகள் ஆய்வுக்குரிய வரலாறு. சின்னக் கவுண்டரில் எடுப்பான பல் அழகியாக கொங்குத்தமிழில் பேசி நெஞ்சம் கலந்தவர்.
‘சூரிய காந்தி’ யில் ‘தெரியாதா நோக்கு...’ என்று பாடி ஆடும் மடிசார் மாமிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ ‘நூன் ஷோ’ மாமிக்கும் நடிப்பில் எத்தனை வித்தியாசம்! முக்தா சீனிவாசனின் படங்களில் மனோரமாவின் பங்களிப்பை அத்தனைச் சீக்கிரத்தில் யாரால் மறக்க முடியும். மனோரமா மறைவுக்கு முக்தா சீனிவாசன் கதறி அழுத காட்சி இயல்பான தோழமை உணர்வின் வெளிப்பாடு.
தீபாவை கமல் ஜோடியாகத் தனது ’அந்தரங்கம்’ படத்தில் அறிமுகப்படுத்தியவர் முக்தா. அதில் தேங்காய், சோ, மனோரமா மூவரும் தஞ்சாவூர் பாஷை பெரிதா, கோவை, மதுரை ஸ்லேங் பெரிதா என்று மோதுவார்கள்.
‘பாஷையெல்லாம் மாத்தி மாத்திப் பேசறதுக்கு மனோரமாவை விட்டா வேற யாரு இருக்காங்க இப்ப’ ன்னு சிவாஜி என்னைப் பாராட்டிப் பேசினார். எனக்கு வானத்துல இறக்கை இல்லாமப் பறக்கற மாதிரி இருந்தது. அதுதான் முதலும் கடைசியுமா சிவாஜி என்னை நேருக்கு நேர் பாராட்டின ஒரே சந்தர்ப்பம். அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துக்கெல்லாம் அவர் இல்ல.’ - மனோரமா.
அதே மனோரமாதான் முகச்சவரம் செய்யும் குமரிமுத்துவின் மனைவியாக கே.பாக்யராஜின் பாமரத் தாயாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜொலி ஜொலித்தது!
மைக்கேல் மதன காமராஜனில் ரூபிணியுடன் சேர்ந்து ‘சிவராத்திரி... தூக்கம் ஏது ஹோ...! என்று இரவில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆடிப் பாடியபடி வெளிப்படுத்திய சிருங்கார பாவங்கள் மனோரமாவைத் தவிர வேறு யாருக்கு வரும்?
பாரதிராஜா, மணி ரத்னம் என மிகச் சிலரைத் தவிர மனோரமாவுடன் சேர்ந்து பணியாற்றி, ரெடி டேக் ஆக்ஷன் சொல்லாத இயக்குநர்கள் யார்?
அவருடன் பணியாற்றிய இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தாலே தமிழ் சினிமாவின் வரலாறும் அதன் அத்தனைப் பரிமாணங்களும் புரியுமே!
இயக்குநர்களில் விசு விசேஷமானவர். ஒரு வாரம் மட்டும் மனோரமாவை நடிக்க வைத்து, முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் 25 வார விழாவைக் கொண்டாடியவர். முதல்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு தங்கத்தாமரை என்கிற இமாலயப் பரிசை ‘சம்சாரம் அது மின்சாரம்’ வெள்ளிவிழாப் படம் மூலம் அளித்தவர்.
மனோரமா நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த முதல் படம் ’வடிவுக்கு வளைகாப்பு’. சிவாஜி பட டைட்டில் கார்டுகளில் மனோரமாவின் பெயர் முப்பது ஆண்டுகளைக் கடந்து கடைசி வரை தொடர்ந்தது. சிவாஜி-மனோரமாவுக்கு இடையேயான பந்தம் மிக அபூர்வமானது.
சிவாஜி ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் மனோரமாவுக்கு இருந்தது. அதுவும் ஞானப்பறவை படத்தில் தீர்ந்தது. மனோரமாவின் ஆசையை நிறைவேற்றியவர் வியட்நாம் வீடு சுந்தரம்.
1958-ல் கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை மூலம் அறிமுகமான மனோரமா அடுத்துப் புகழ் பெற்றது அபலை அஞ்சுகம் படத்தில். 1962-ல் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் நாகேஷ் கம்பவுண்டராகவும் மனோரமா நோயாளி நவநீதமாகவும் நடித்தார்கள்.
‘நவநீதம்... நவநீதம்...’ என்று காட்சிக்குக் காட்சி வித்தியாசமாக பேசி நாகேஷ் பிரபலமானார். அதற்குப் பிறகு மனோரமாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நாகேஷ் ஹீரோவாக அறிமுகமான சர்வர் சுந்தரம் படத்தில் அவருடன் சினிமா நடிகையாக சில நிமிடங்களுக்கு கவுரவத் தோற்றத்தில் வருவார் மனோரமா. எஸ். வி. ரங்காராவ் இயக்குநர்.அந்தக் காட்சியில் மனோரமா சரோஜாதேவியை ஞாபகப்படுத்துவது மாதிரி கொஞ்சும் தமிழில் பேசி நாகேஷை மிரள வைப்பது அபாரம்.
பொதுவாக எம்.ஜி.ஆரின் சினிமாவில் நாயகன், நாயகியைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் டூயட் இருக்காது. மனோரமா மட்டும் விதிவிலக்கு!
‘வேட்டைக்காரன்’ படத்தில் முதல்முதலாக நாகேஷ் - மனோரமா இருவரும் ஆடிப்பாடிய ‘சீட்டுக்கட்டு ராஜா’ என்கிற டூயட் அதில் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுடன் நாகேஷ்-மனோரமா ஜோடியும் சேர்ந்து கொண்டது.
தில்லானா மோகனாம்பாளில் ஜில் ஜில் ரமாமணியாக நடித்ததில் மனோரமா புகழின் உச்சிக்குச் சென்றார். கலைஞர் தலைமையிலான தமிழக அரசு மனோரமாவை சிறந்த துணை நடிகையாக கவுரவித்து விருது வழங்கியது.
மனோரமா ‘ரமாமணியாக’ மாறிய விதம் குறித்து என்னிடம் கூறியவை :
‘பாலையா அண்ணனைப் பார்த்து சிவாஜி சாரே பயப்படுவாங்க. அப்படிப்பட்ட மகா நடிகர் அவர். பாலையா அண்ணன், சிவாஜி, சாரங்கபாணி இவங்க கூடத்தான் எனக்கு முதல் ஷாட்.
‘என்ன சிக்கலாரே சவுக்கியமான்னு...’ விசாரிக்கிற சீன். அப்ப பாலையா அண்ணன் சொல்லுவாங்க. ‘இவங்க ஆட்டத்துல பேர் போனவங்கன்னு…’
அவங்களுக்கு முன்னால எனக்கு நடிக்கவே முடியல. பயமா இருக்கு. அழுகையா வருது. நான் தான் தொடர்ந்து வசனம் பேசணும். சிவாஜிக்கு என்னைக் கவனிக்கிற ஷாட் மட்டுமே. நான் ஏபிஎன். சாரைப் பார்க்கறேன். நடிப்பு வரல. அவர் என்னைக் கூப்பிட்டார்.
‘இந்த சீன்ல நீதான் பெரிய ஆள். அவங்கள மறந்துடுன்னு’ தைரியம் சொன்னாரு. அப்புறம் படபடன்னு பேசி நடிச்சேன்.
இப்பவும் நீங்க படத்தைப் பாத்தீங்கன்னா அந்த சீன்ல சிவாஜி வசனம் எதுவும் இல்லாம, ‘பரவாயில்ல போலிருக்கு. சின்னப் பெண்ணா இருந்தாலும் நல்லா ஆக்ட் பண்றே’னு என் நடிப்பையே ரசிக்கிறது தெரியும்.’ என்றார் மனோரமா.
ஏ.பி. நாகராஜனின் சின்ன பட்ஜெட் படங்களான திருமலை தென் குமரி, கண் காட்சி ஆகிய படங்கள் மனோரமாவுக்கு கை கொடுத்தது. இரண்டிலும் அவருக்கு அமைந்த புதிய ஜோடி சுருளிராஜன். ‘திருமலை தென்குமரி’ நூறு நாள்கள் ஓடியது. ’இந்தப் படம் ஓட வேண்டும் என்று நான் வேண்டாத தெய்வமே இல்லை’ என்று மனோரமா அதன் வெற்றி விழாவில் பேசினார்.
தமிழில் 150 படங்கள் பூர்த்தியான நிலையில் மனோரமாவுக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன. அவர் நடித்த முதல் தெலுங்கு படம் ‘எதிர் நீச்சல்’ ரீமேக்.
1969 முதல் 1971 வரையில் சினிமாவில் மிகப் பெரிய வெற்றிடம். கடுமையாகப் போராடினார் மனோரமா. கோடம்பாக்கம் கை விட்டவுடன் சித்ராலயா கோபுவின் நாடகக் குழுவில் முழு மூச்சாக நடித்தார்.அங்கு உருவான ‘காசேதான் கடவுளடா’ நாடகம் சினிமாவானது. ஏவிஎம் தயாரிப்பில் நூறு நாள்கள் ஓடியது.
ஹீரோ முத்துராமனை விட மனோரமாவுக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் மிகப் பெரிய திருப்புமுனை அந்தப் படம். மனோரமா செகண்ட் இன்னிங்ஸ்ஸில் கொடி கட்டிப் பறந்தார்.
ஜெய் சங்கர்-ஜெய்சித்ரா நடித்த ‘உங்கள் விருப்பம்’ படத்தில் தேங்காய் சீனிவாசன் - மனோரமா பாடி நடித்து, பிரபலமான ஒரு டூயட் - ‘மஞ்சள் பூசி மஞ்சம் வந்த ராதா ராதா.’ அன்றைய வானொலி நேயர்களுக்கு மிகவும் பிடித்தமானது. தேங்காய் சீனிவாசனுடன் மனோரமா நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
மனோரமா சுயம்பு. விழுந்த சுவடே தெரியாமல் விரைவாக விஸ்வரூபம் எடுத்து நின்றவர். எம்.ஜி.ஆர். அரசியலில் முமு மூச்சாக ஈடுபட, மனோரமாவை மேலும் கை தூக்கி விட்டவர் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர். (‘ராமன் தேடிய சீதை’ எம்.ஜி.ஆருடன் மனோரமா பங்கேற்ற கடைசி படம்.)
தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்று கே.பாலாஜியின் தயாரிப்புகளில் மனோரமாவுக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு.
நீதி படத்தில் மனோரமாவுக்காகவே டிராக்டர் ஓட்டும் கிராமத்து பொன்னம்மா கேரக்டரை கே.பாலாஜி உருவாக்கினார். சிவாஜியை ஒரு தலையாகக் காதலிக்கும் வேடம். விசிலுக்குக் கேட்க வேண்டுமா..? மீண்டும் வசந்தம்!
1981-ல் பாலாஜியின் படமான ‘சவால்’ மனோரமாவுக்கு பெரிய பிரேக். அதில் கமலுடன் பிக் பாக்கெட் அடிக்கும் ‘பர்மா பாப்பா’ வாக மனோரமா தூள் கலக்கி இருப்பார். ‘பந்தம்’ படத்தில் பேபி ஷாலினியுடன் செவிட்டுப் பெண்ணாக நடித்து குழந்தைகளைச் சிரிக்க வைப்பார்.
சினிமாவில் சிரிக்க சிரிக்கப் பேசி ஹாஸ்யங்கள் புரிந்த மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் சோகத்தின் சுவடுகளே அதிகம்.
அம்மாவை தெய்வமாக மதித்தவர். தாய் சொல்லைத் தட்டாதவர். சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொன்ன கணவரை, அன்னையின் ஆணைக்கேற்ப விட்டுப் பிரிந்தார். அம்மாவின் கனவை நிறைவேற்ற கலையுலகில் மாபெரும் சாதனையாளராக உயர்ந்தவர்.
‘கண் திறந்தது’ படம் மூலம் பிரபலம் ஆன ராமநாதன், மனோரமாவின் கணவர். மனோரமாவுடனான திருமண வாழ்க்கை முறிந்ததும் அவர் மறு விவாகம் செய்து கொண்டார். ஆனால் வாரிசுகள் இல்லை. 1992-ல் அவர் மறைந்தபோது தன் கணவருக்குக்குக் கொள்ளி வைக்க மகன் பூபதியுடன் சென்ற பெருந்தன்மைக்குரியவர் மனோரமா.
வெவ்வேறு திசைகளில் தமிழ் சினிமா பயணித்தாலும் மனோரமா தன் இடத்தை சாமர்த்தியமாகத் தக்க வைத்துக்கொண்டார்.
முப்பது ஆண்டுகளாக நகைச்சுவைக்கு ஒரே சிறந்த நடிகையாக ஆண்டு தோறும் விருதுகளைக் குவித்தவர் மனோரமா. சிவாஜியை மட்டும் அல்ல. எம்.ஜி.ஆருக்கு நிகரான பானுமதியையும் வியக்க வைத்தவர் அவர்.
‘பத்து மாத பந்தம்’ படத்தில் ‘தெய்வமகன்’ சிவாஜியைப் போல் அம்மாவாகவும் இரண்டு மகள்களாகவும் தினுசு தினுசாகப் புதுப்புது வடிவங்களில் மக்களை மகிழச் செய்தார்.
‘மொத்தம் மூன்று மனோரமாக்களைச் சந்திக்கிறோம். ஹைஸ்கூலில் காதலித்துக் கல்லூரியில் கல்யாணம் செய்துகொண்டு வாயும் வயிறுமாக ஹாஸ்யம் படைக்க வருகிறார் முதலில். அவர் தன் வயிற்றை மறந்து உற்சாகமாகக் குதி போடத் தொடங்குவதும் பிறகு ‘ஆ’வென்று வயிற்றைப் பிடித்தவாறு சோர்ந்து போவதும் வேதனையான வேடிக்கை. அவருடைய இரட்டைப் பெண்களாக மழலைக் கொஞ்சல் மனோரமாக்கள் வேறு. அமர்க்களம் போங்கள்!’ என்றது எவரையும் எளிதாகப் பாராட்டி விடாத குமுதம்.
பத்து மாத பந்தம் லேசான படமல்ல. கிருஷ்ணன்- பஞ்சு இயக்கியது. 1974 தைத் திருநாள் வெளியீடு.
பி. பானுமதி, சரோஜாதேவி, எம்.என். ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, ஏவிஎம். ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன், அசோகன்... என நட்சத்திரப் பட்டியல் நிறைந்தது. அத்தனை பேருக்கும் நடுவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதியோடு ஒரு வண்ணப் படத்தில் அவரையும் மீறி ஒருவர் பெயர் பெறுவது சாத்தியமே அல்ல.
சகலகலாவல்லியான பானுமதியுடன் சேர்ந்து அவரது இயக்கத்தில் ‘இப்படியும் ஒரு பெண்’ (1975 மே 1 ரிலீஸ்) படத்தில் ஜெயில் காட்சியில் பாடி நடித்திருக்கிறார் மனோரமா. ‘அகப்பட்ட வரையில் சுருட்டிட்ட யாரும் சுகப்பட்டதில்ல’ என்று அதன் பல்லவி ஆரம்பமாகும்.
1989-ல் ஏவிஎம்.மின் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ அவரது ஹாஸ்ய நடிப்பின் நிறைவான கட்டமாக இருந்தது. அதில் கம்புச் சண்டையும் போட்டு சிறுவர் சிறுமியரைத் தன் வசப்படுத்தினார். சந்திரபோஸ் இசையில் அவர் பாடிய டைட்டில் சாங் ஒலிக்காத ஊரே இல்லை. அன்றைய முதல்வர் கலைஞர் தலைமையில் வெள்ளி விழா நடந்தது. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தைத் தெலுங்கிலும் ஏவிஎம் தயாரித்தது. அதில் மனோரமாவின் வேடம் பானுமதிக்கு.
‘மனோரமா இந்த ரோலை கிரியேட் பண்ணிட்டாங்க. நான் அந்த ரோலில் ஆக்ட் பண்றேன். அவ்வளவுதான். ஐ டு நாட் நோ ஹவ் ஃபார் ஐ வில் ரீச் மனோரமா’ என்றார் பானுமதி.வசிஷ்டை வாயால் பிரம்ம ரிஷி பட்டம் யாருக்குக் கிடைக்கும்? ஆந்திரத்து ஆஸ்கார் அல்லவா அது!
மூப்பு வந்ததும் வயதுக்கேற்ப மெல்ல குணச்சித்திர நடிப்பில் ஆர்வம் காட்டினார். கமல்- ஷங்கர் இணைந்த ஒரே படமான ‘இந்தியனில்’ மனோரமா ஏழைக் கிழவியாக உருக வைத்ததை யாரால் மறக்க முடியும்! அதற்குக் கிடைத்த பலன் - 1996ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக மனோரமாவை கவுரவித்தது பேசும் படம் இதழ்.
அவர் வயதான தாயாராக நடித்த சின்ன கவுண்டர், சின்ன தம்பி, நாட்டாமை போன்ற படங்கள் தாறுமாறாக ஓடி வெள்ளிவிழா கொண்டாடின. ஏராளமான வசூலைக் குவித்தன. தெலுங்கிலும் ஏராளமான கேரக்டர் ரோல்கள் மனோரமாவைத் தேடி வந்தன. தமிழைப் போலவே அற்புதமாக சுந்தரத் தெலுங்கிலும் மாட்லாடுவார் மனோரமா.
சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ சினிமாவாக வந்தது. நாட்டுப்புறப்பாடல் பாடும் கிழவியாக மனோரமா அநாயாசமாக நடித்திருப்பார். படம் ஓடவில்லை. அவ்வாறு மனோரமாவின் உழைப்பு தெரியாமல் போன படங்கள் எக்கச்சக்கம்.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்தாலும் ஜனங்களுக்கு மிகவும் பிடித்த ஜதை நாகேஷ் - மனோரமா. ஆறு ஆண்டுகளில் அலுப்பு சலிப்பில்லாமல் நூறு சினிமாக்களுக்கு மேல் நடித்த ஒரே காமெடி ஜோடி. அவை அத்தனையும் சிரஞ்சீவியான காட்சிப் பெட்டகம்!
கே.பாலசந்தரின் அனுபவி ராஜா அனுபவி படத்தில் வரும் ‘முத்துக் குளிக்க வாரீயளா...!’ பாடல் மனோரமாவின் இறுதி ஊர்வலத்திலும் இடம் பிடித்தது.
நவராத்திரி நேரத்தில் முப்பெரும் தேவியரோடு சேர்ந்து மனோரமாவும் சாமியாகி விட்டார்! என்றும் வாழும் அவர் புகழுக்கு அஞ்சலி எழுத வேண்டாம் என்று இருந்தேன். மனோரமாவை சிரிப்பு தேவதையாகப் பார்த்து பார்த்து ரசித்த பாழும் மனசு கேட்கவில்லை.
சிவாஜி, ஜெமினிக்கு செய்தது போல ஆச்சியின் தகனத்தையும் அரசு மரியாதைகளுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க நடத்தியிருக்கலாம்.
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
மதுண்ணா, ராகவ்ஜி..
இஃதென்ன மதுரைக்கு வந்த சோதனையால்ல இருக்கு! :)
உங்களின் நண்ப னென்றே
..உணர்வுகள் சொல்லும் போதில்
தங்களின் சிந்தை யுள்ளே
..தகதக வென்றே தோன்றும்
விந்தையாம் கேள்வி என்ன
..விளக்குவீர் சிறுவன் நானும்
சொந்தமாய் எழுதிப் பார்த்தும்
..சோர்வினைப் போக்கு வேனே! (ம்ம் பாவம் விதியாரை விட்டது) :)
மதுண்ணா சொன்னது போல் 60 களில் நடிக்கப்பட்ட உங்களின் நண்பன் குறும்படம் என்ற செய்தி படித்தால் என்ன தோன்றுகிறது..
அந்தக்காலத்தில் குறும்படம் இருந்ததா என்ன… ந.தி ஸ்பெஷல் அப்பியரன்ஸாக நடித்தார் சரி..எஸ்.பி செளத்திரியாகவா நடித்தார்..
கொஞ்சம் கோல்ட் மெடல் எனத் தமிழில் ”வாசு வாசு” பண்ணிப் பார்த்ததில்:
சிவாஜி நாடக மன்றம் என்ன காரணத்தாலோ கலைக்கப் பட்டு விட- அதில் நடித்திருந்த நடிகர்களான செந்தாமரை எஸ். ஏ கண்ணன் இருவரும் ஒரு நாடகக் குழு ஆரம்பித்து போட்ட நாடகம் – இரண்டில் ஒன்று.. அது 42 வது முறை அரங்கேறிய போது பார்க்க வந்தார் ந.தி.
அதில் ஒன்றி, மறுபடியும் செந்தாமரையிடம் “ செந்தாமரை.. நாளைக்கு எங்க போடப் போகிறீங்க”
செந்தாமரை பவ்யமாய் “ அண்ணா.. இன்ன இடத்தில் “ எனச் சொல்ல நாளையோட நாடகத்தை நிறுத்திக்குங்க”
செந்தாமரைக்கும், எஸ்.ஏ. கண்ணனுக்கும் ஷாக்.. “ஐயா…”
ந.தி சிரித்து..” இல்லைப்பா.. நானே அதில் நடிக்கிறேன்.. நம்ம சிவாஜி நாடக மன்றம் அதிலேயே இந்த நாடகம் வரட்டும் என்ன சொல்றீங்க”
மெய்யுடன் மேன்மை பொங்க
…மேதினி மக்கள் நெஞ்சம்
கொய்தவன் கேட்க உள்ளம்
…கோலமாய்த் துள்ளி ஆட
நெய்யினை விட்ட தீபம்
..நேர்பட மின்னற் போலே
செய்யலாம் என்றே சொன்னார்
…செந்தா மரையும் அங்கே..
வேறென்ன வேண்டும்.. நாங்கள்லாம் தம்மாத்தூண்டு நடிகர்கள்.. ஏதோ நீங்க தரலைன்னு நாங்க ஏதோ மகேந்திரன்னு ஒரு ரைட்டர் வச்சு நாடகம் போடறோம்.. உங்களுக்கு அந்தக் கதாபாத்திரம் பிடிச்சுருக்கா.. நடிக்கலாங்க – என்றனர் செந்தாமரையும் கண்ணனும்..
அப்படி தங்கப் பதக்கம் நாடகம் போடப்பட்டது..அதுபற்றி முதல் நாள் என்ன ஆச்சுன்னாக்க….அதை கதாசிரியர் மகேந்திரன் வாயிலாகவே கேட்போம்..
“
அடுத்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு முடிந்து வந்த பிறகு நாடக வசனங்களை படிக்கச் சொல்லி கண்மூடி கேட்டார் சிவாஜி. நான்காம் நாள் மேடையில் பிரதான ஒத்திகை. ஐந்தாம் நாள் "தங்கப் பதக்கம்' நாடகம் தலைவர் காமராஜர் தலைமையில் மியூசிக் அகாடமியில் அரங்கேற்றம் கண்டது.
அரங்கேற்ற தினத்தன்று ஒப்பனை அறையில் சிவாஜியை எட்டிப் பார்த்தேன். ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு "எஃகு' போல் நிமிருகிறது. மூன்று நாள்தானே வசனம் படிக்கச் சொல்லி கேட்டார். எதையும் மறக்காமல் எப்படி வசனம் பேசுவார்? என்ற மாதிரியான கேள்விகள் எனக்குள் இருந்தது. மணி அடித்துவிட்டது.
நாடகம் தொடங்கியது. நான் எழுதிய ஒரு வசனத்தைக் கூட அவர் மறக்கவில்லை. எனக்குள் பிரமிப்பு! எப்படி இது சாத்தியம்? நாடகம் முடியும்வரை கைத்தட்டல் ஓயவில்லை.
நாடகம் முடிந்து ஒப்பனை அறைக்குள் போனேன். ஒப்பனை கலைத்து விட்டு களைப்போடு உட்கார்ந்திருந்தார் நடிகர் திலகம்.
நாடகம் முழுக்க அவர் காட்டிய கம்பீரத்திற்கும், ஓப்பற்ற நடிப்பிற்கும் அவர் தனது உடல் சக்தி அத்தனையையும் தந்து விட்டு இப்போது ஒப்பனை கலைந்ததும் செளத்ரியாக வாழ்ந்து நடித்தவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அவர் அவராகி விட்டார் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும், ""என்னப்பா உன் டயலாக்கை எல்லாம் ஒழுங்காக பேசினேனா?'' என்று ஒரு மாணவனைப் போல கேட்டார் அந்த மாபெரும் நடிகர். என் கண்கள் கலங்கின.”
ஸோ..தங்கப் பதக்கம் நாடகமாகி பின் திரையில் 1974 இல் வந்தது என்றால் நாடகம் 1973 இல் போடப்பட்டு இருக்கவேண்டும் இல்லியோ..
மதுண்ணா கேட்டது போல 1960 இல் செளத்ரி பிறந்திருக்க (கதாசிரியரின் இதயத்தில்) வாய்ப்பே இல்லை.. ( நானே பிறந்திருக்கவில்லை ஹி..ஹி..)
ஓஹ்..அதான் ராகவேந்தர் ஜி சொல்லிட்டாரே..
//அது என் உள்மனதின் வெளிப்பாடு..
ஆதங்கத்தின் எதிரொலி...
நிழற்படம் மட்டுமே பழையது..//
ஓ..கே ஜி.. நீங்கள் கேட்டுக்கொண்ட படி மன்னித்தாகி விட்டது.. :)
//
என்ன செய்றது.. சீர் செனத்தி எல்லாம் கொண்டு வந்தால் தான் தங்கை என்பது போல சொல்லி விடுவார்..//
ராகவேந்தர் சார்.. நீங்கள் அவ்வப்போது கொடுக்கும் பழைய ஆவணங்களே எங்களுக்கு சீர் ஆக்கும்… எவ்வளவு நீங்கள் கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம்
தீர்க்கமாய்ச் சொல்லிடுவோம் தித்திக்கும் ஓவியங்கள்
சீர்களெனச் சாற்றிடுவோம் ஆம்..
ஹப்பாடி..முடிச்ச்சுட்டேன்.. :)
ஆனந்த விகடன் தங்கப் பதக்கம் விமர்சனம்.. ( சொல்ல மறந்துட்டேன்..தங்கப்பதக்கம் நான்பார்த்தது மதுரை சென் ட்ரல்.. புரியாமல் பார்த்தது..வெகு சின்னக் கண்ணன் எனச் சொல்லவும் வேண்டுமோ) :)
https://awardakodukkaranga.wordpress...E%AE%E0%AF%8D/
தசரதன் மகன் நான்
ஜனகனின் மகள் நீ
மாமனின் வீட்டிற்கின்று விருந்துக்கு வந்தேன்..
தேங்காய் ராமராகவும் மனோரமா சீதையாகவும்..இமாஜின் பண்ணினாக் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமாத் தான் இருக்கு :)
https://youtu.be/-cu0ELoiMWc
//மதுரம் தொடங்கி மதுமிதா வரையில் உலகில் தமிழ்நாடு போல் சிரிப்பு காட்டி திரைக்குச் சிறப்பு சேர்த்த பெண்கள் வேறு எங்கும் காணோம். அவர்களில் மனோரமா சிரஞ்சீவி. நிரந்தரமாகப் புகழ் மகுடம் சூட்டிக் கொண்ட ஒரே மகாராணி!//
மீன்ஸ் தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகைகள்..
சின்னதாய் லிஸ்ட் போட்டால்
டி.ஏ.மதுரம் - என் எஸ் க்ருஷ்ணன் - திரு நீலகண்டர்
நாகேஷ் - மாதவி - ( அதே கண்கள்)
மனோரமா
கோவை சரளா
நாகேஷ் சச்சு கா. நே
நாகேஷ் ரமாப் ப்ரபா - உ.இ. உ வா..
வெண்ணிற ஆடை மூர்த்தி - அந்தக் கூழாங்கல் மின்சார மோகினி - வெண்ணிற ஆடை படம் (பெயர் மறந்துவிட்டது)
மதுமிதா ( ஒருகல் ஒரு கண்ணாடி)
வேற யார் லாம் இன்பெட்வீன் இருக்காங்க..
ஓ. தங்கவேலு சரோஜா
தங்கவேலு - முத்துலட்சுமி (அதான் தெரியுமே)
இவங்க தான் அத்தை நமஸ்காரம் பண்ணிக்கம்மா..என நாகேஷ் சொல்ல அத்தை தொபீல் என விழ தியேட்டர் அலறும் - கலாட்டா கல்யாணம் - அவர் பெயர் மறந்து விட்டத்..
வேறு யாராக்கும் இருக்காங்க..
மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன்....சி.க.சார்...:bow:
அது ஷைலஸ்ரீ எ ஆஷா.Quote:
வெண்ணிற ஆடை மூர்த்தி - அந்தக் கூழாங்கல் மின்சார மோகினி - வெண்ணிற ஆடை படம் (பெயர் மறந்துவிட்டது
எஸ்.என்.பார்வதிQuote:
இவங்க தான் அத்தை நமஸ்காரம் பண்ணிக்கம்மா..என நாகேஷ் சொல்ல அத்தை தொபீல் என விழ தியேட்டர் அலறும் - கலாட்டா கல்யாணம் - அவர் பெயர் மறந்து விட்டத்..
லிஸ்டில் இன்னும் ஒன்றிரண்டு
அந்தக் காலத்தில் ...
அச்ச்சோ சித்ரா..
அம்முகுட்டி புஷ்பமாலா
இப்போது மோகன்ராமன் சார் புதல்வி.. வித்யுத்... சான்ஸ் நெறைய கிடைச்சா இந்த தலைமுறைக்கு மனோரமாவாக வரலாம்.. ஆனால் மதுமிதாவின் போட்டி ரொம்ப அதிகம்..
சற்று பூசினாற்போல உடம்பு வைத்துக்கொண்டு காமெடி பாத்திரங்களில் பிச்சி உதறியவர்களில்..
பிந்து கோஷ்
ஆர்த்தி..
அதுக்குத்தான் கையிலே எப்பவும் ஜெலுசில் இருக்கணும்கிறது.. தெரியுதில்லே.. டைஜஸ்ட் ஆகாதுன்னு தெரிஞ்சே சாப்பிட்டா அனுபவிச்சுத்தான் ஆகணும்...Quote:
தேங்காய் ராமராகவும் மனோரமா சீதையாகவும்..இமாஜின் பண்ணினாக் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமாத் தான் இருக்கு
என்ன நான் சொல்றது..
[சாமிக்கண்ணு மாதிரி தலையை சாச்சிப்பாத்தா கழுத்து சுளுக்கு தான் மிச்சம்]
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
43
'முள்ளில்லா ரோஜா'
http://i.ytimg.com/vi/nTVQkdmUtqo/hqdefault.jpg
'மூன்று தெய்வங்கள்'
இதோ இன்றைய தொடரில் பாலாவின் புயல் பாட்டு. சூறாவளி சாங். மேலும் புகழ் உச்சியில் அவரைக் கொண்டு நிறுத்திய, அமர்த்திய பாடல். ரோஜாவின் மென்மையை இந்த பாடக ராஜாவின் குரலில் உணரலாம். உடன் 'முள்ளில்லாத ரோஜா'வாக சுசீலா அம்மா குரலால் குல்கந்து சுகம் தருவதை உணரலாம்.
'மூன்று தெய்வங்கள்' படத்தில் பாலா, சுசீலா இணைவில் ஒருவர் விடாமல் அத்தனை தமிழ் நெஞ்சங்களும் கொண்டாடிய பாடல். ரசித்து மகிழும் பாடல் இன்றுவரை. என்று வரையும்.
வீட்டுக்கு வீடு ரோஜாச் செடி வைத்திருந்தார்களோ என்னவோ தெரியாது ஆனால் எல்லா வீடுகளிலும் வானொலிப் பெட்டிகளில் 'முள்ளில்லா ரோஜா'தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்போதைக்கு வந்த அத்தனை டூயட்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து பூத்த பாடல். நம் மனதை சுகமாய்த் தைத்த பாடல். அத்தனை வானொலி நிலையங்களும் போட்டா போட்டி போட்டு, போட்டுத் தாக்கிய பாடல்.
'மூன்று தெய்வங்களி'ல் மூன்று நாயகர்களுக்கு அப்புறம் நாலாவது நாயகர் இளம் சிவக்குமார். இவரும், சந்திரகலாவும் செய்யும் காதலை வைத்தே படத்தின் கதை சுழலும். (மூலக்கதை மதுசூதன் கலேல்கர்)
இருவரும் அவுட்டோரின் மலைப்பகுதிகளில் நெடிதுயர்ந்த காட்டு மரங்களுக்கு நடுவே, அந்தி இளம் வெயிலில் ஆடிப் பாடும் இந்தப் பாடல் ஆனந்தமாய் நம் இதயத்தை அள்ளுகிறது.
நடித்தவர்களை விட பாடகர்களே நெஞ்சை ஆக்கிரமிக்கிறார்கள். கூடவே ரகளையான இசைப் பின்னணியும்.
சிவக்குமார் இளமை ததும்பும் நாயகன். ஆனால் சந்திரகலா அழகில் சுமார்தான். சிவக்குமாரோ 'ஒயிட் அண்ட் ஒயிட்' ஷர்ட்டில் (பாடலுக்குப் பொருத்தமாக ஒயிட் ஷர்ட்டில் மலர்ந்தும் மலராத, முள்ளில்லா ரோஜாக்கள் இரண்டும், அதன் மேல் ஒரு ரோஜா மொக்கும் இருப்பது போல டைமிங்காக எம்பிராய்டெரி ஒர்க் என்று நினைக்கிறேன்.) கொள்ளை அழகு. அதனால் ஜோடிப் பொருத்தம் அந்த அளவிற்கு எடுபடாது. ஆனால் பாலா, சுசீலா குரலும், அருமையான ஒளிப்பதிவும், அழகில் தோய்த்தெடுத்த வண்ணமும், அமுதமான இசையும் அந்தக் குறையை அறவே போக்கி விடுகின்றன.
பாலா அழுத்தமான குரலில் கம்பீரமாக,
'முள்ளில்லா ரோஜா'
எனும் போதே நம் முகம் அனைத்தும் மலரத் தொடங்கி விடும்.
'முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்'
முடித்தவுடன் வரும் ஷெனாய் ஒலி அருமை.
மிக உயர்ந்த மரங்களின் நிழல்களுக்கிடையே சூரிய ஒளிக்கதிர்கள் லேசாக அந்திப்பட்டு நேரத்தில் ஊடுருவிப் பாய, வெளிச்சங்களுக்கும், நிழல்களுக்கும் நடுவே, காதலர்கள் தங்கள் நீளமான நிழல்கள் நிலத்தில் விழ, ஆடிப் பாடுவது ரம்மியம்.
இந்தப் பாடலின் சரணங்கள் நடுவே வரும் இடையிசை கூட அனைவருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்திருக்கும் என்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. இப் பாடலைக் கேட்கும் போது, பலர் பாடலுடன் இணைந்து பாடும் போது, இடையிசையையும் மறக்காமல் தொடர்ந்து வாயால் அளிக்கக் கேட்டு நான் பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு 'மெல்லிசை மன்னர்' வாத்தியக் கருவிகளால் அதகளம் புரிந்திருப்பார்.
தலையில் கனகாம்பரப் பூவுடன், அதே கலரில் மேட்சாக மணி, பட்டுப்புடவை உடுத்தியிருக்கும் சந்திரகலா (இவரும் அழகாகப் புடவை கட்டுவதில் வல்லவர்தான்.) சிவாவை விட கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. ஆதலால் பெரும்பாலும் சரிவுப் பகுதிகளில் சந்திரகலாவை நிற்க வைத்து, மேடான பகுதியில் சிவக்குமாரை நிற்க வைத்து காதல் காட்சிகளை அட்ஜஸ்ட் செய்து எடுத்திருப்பார்கள். (இத்தனைக்கும் சிவா பிளாக் கலர் ஷூ வேறு போட்டிருப்பார். சந்திரகலா வெறும் கால்களுடனே நடித்திருப்பார்) பாடலினூடே தூரத் தெரியும் பச்சை பசேல் தேயிலைத் தோட்டங்கள் மலைகளின் படிக்கட்டுகளாகப் பரவித் தெரிவது கண்ணுக்குப் பசுமைப் பரவசமே.
http://i.ytimg.com/vi/pKuiEkGsTVY/hqdefault.jpg
முதல் சரணம் முடிந்ததும் சுசீலா 'ஹாஹஹா' எடுக்கையில் தூரத்தில் மரங்களுக்கிடையே ஓடி வரும் சந்திரகலாவையும், அருகில் மரங்கள் அல்லாத பகுதியில் நின்று பின் ஒரு சுற்று திரும்பி சந்திரகலாவின் ஓட்டத்திற்கு இணையாக வேகமாக நடந்து வரும் சிவக்குமாரையும், அவருக்கும் கீழே உள்ள சரிவில், அதே வேகத்துடன் டிராலியில் காமெரா வைத்து நகர்ந்து கொண்டே 'அண்டர் டு டாப்' ஷாட்டாக, இந்தக் காட்சியை மிக அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவு இயக்குனர் கே.எஸ்.பிரசாத் அவர்கள். இந்த ஷாட் என் உள்ளம் கொள்ளை கொண்ட ஷாட்டாகும். மிக மிக அற்புதமாய் இருக்கும். ஒரே ஒரு குறை. இந்த ஷாட்டில் அந்த திரும்பி நடக்கும் நடைக்கு நடிகர் திலகம் இருந்திருந்தால்?....காலமெல்லாம் நம் சொல்லிச் சொல்லி மகிழ அற்புதமான இன்னொரு நடை நமக்குக் கிடைத்திருக்கும். ப்ச்!
இடையிசை முடிந்து வரும் பாலா, சுசீலா தரும் அந்த 'ஹாஹஹா' ஹம்மிங்...அடடடா! ஆஹா!
'மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ'
வரிகளில் கவிஞர் அள்ளுவார். பாலாவும் 'மறைந்து போகுமோ' வார்த்தைகளை நாம் என்றுமே மறந்து போகாதவாறு அருமையாக உச்சரித்துப் பாடுவார். 'கண்ணுக்குள்' என்று பாலா ஒர் வார்த்தை கூற, அதற்கு சுசீலா 'கொஞ்சம் பாருங்கள்' என்று பதில் கூற, திரும்ப பாலா 'என்னென்ன' என்று பாட, 'உண்டு கேளுங்கள்' என்று இசையரசி முடிப்பது வார்த்தைகள் சுகம்.
சிவக்குமார் சின்னக் குழந்தை போல ஓட்டமும், நடையுமாக உற்சாகமாக செய்திருப்பார். சந்திரகலா பாந்தம்.
இந்தப் பாடலிலும் நிழல்களின் நீளங்கள் சில இடங்களில் மாறி படமாக்கப்பட்ட பகல், மாலை நேரங்களை நமக்குக் காட்டிக் கொடுக்கும்.
பொன்னூஞ்சல் போல நம் இதயத்தில் என்றும் ஊஞ்சலாடும் இளமைப் பாடல்.
http://s1.dmcdn.net/Cj6Zq/x240-VNE.jpg
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப் போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் பொன்னை அள்ளித் தந்தேன்
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
மானென்னும் பேர் கொண்டு பெண்ணொன்று வந்தது
மார்பில் ஆடட்டும்
மானென்னும் பேர் கொண்டு பெண்ணொன்று வந்தது
மார்பில் ஆடட்டும்
ஏனென்று கேளாமல் நானிங்கு வந்த பின்
ஏக்கம் தீரட்டும்
ஏனென்று கேளாமல் நானிங்கு வந்த பின்
ஏக்கம் தீரட்டும்
கண்ணுக்குள்
கொஞ்சம் பாருங்கள்
என்னென்ன
உண்டு கூறுங்கள்
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
ஆஹஹஹா.....ஹா
ஆஹஹஹா..... ஹா
தேன் பட்ட கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
தேன் பட்ட கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
சந்தித்தால்
கொஞ்சம் தொல்லைதான்
சிந்தித்தால்
இன்ப எல்லைதான்
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப் போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் பொன்னை அள்ளித் தந்தேன்
முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
ஹாஹா ஹாஹா
ஹாஹா ஹாஹா
https://youtu.be/pKuiEkGsTVY
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!
வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.
வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.
ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.
மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.
பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.
வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.
முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.
இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.
இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.
மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!
வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.
வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.
ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.
மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.
பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.
வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.
முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.
இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.
இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.
பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.
மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!
Courtesy: Tamil Hindu
ஒரு வேடம் மிச்சமிருக்கிறது!
வெற்றிபெற்ற திரைக் கலைஞர்களுக்கு மூப்புமில்லை; மரணமுமில்லை. அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்கிறார்கள். அந்த வகையில் ஆச்சி மனோரமா உடல் மறைந்தாலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ ஜில் ஜில் ரமாமணியும், ‘அன்பே வா’ கண்ணம்மாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் நம்முள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.
நாடகங்களிலிருந்து வந்ததாலோ என்னவோ திரைப்படங்களில் நாடகக் காட்சிகள் இடம் பெற்றால் வெளுத்து வாங்கிவிடுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் குழு மற்றும் பத்மினி குழுவினர் கிளாஸிக்கல் இசை- நடனத்தின் பிரதிபலிப்பாக ஜொலித்தார்கள் என்றால் அடித்தட்டு மக்களைக் கவர்ந்த நாடக நடிகராக, ஒற்றையாளாக மனோரமா வெளுத்து வாங்கினார். சொந்த வாழ்வின் துயரங்களை மறைத்துக்கொண்டு மேடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் ஜில் ஜில் ரமாமணியாக, ரோஸ்ஸா ராணியாக செட்டிநாட்டுத் தமிழில் பேசி நடித்துத் தூள் கிளப்பினார்.
இப்படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் முன்னர் தான் இயக்கிய ‘குலமகள் ராதை’ படத்தில் சிவாஜி கணேசன் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக மனோரமாவை செட்டிநாட்டு பாஷை பேச வைத்து நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கினார். அப்படம் வெற்றி பெறாததால் அது மக்கள் மத்தியில் பரவலாகப் போய்ச் சேரவில்லை. ‘தில்லானா மோகனாம்பாள்’ மூலம் அதே பேச்சு வழக்கையே இன்னும் கொஞ்சம் இழுவையாக மெருகேற்றி, ஜில்லுவாக உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் உட்கார்த்தி வைத்தார். அந்த வெற்றியின் பின்னணியில் ஆச்சியின் கடும் உழைப்பும் இருந்தது.
துரை இயக்கிய ‘ஒரு குடும்பத்தின் கதை’ படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழ் கொஞ்சி விளையாடும் அவர் நாவில். அதே கெட்-அப்பில் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்தால் எப்படியிருக்கும்? பாப் வெட்டிய தலை, கவுனுடன் லோகிதாசனை மடியில் கிடத்திக்கொண்டு ‘மவ்னே லோகிதாஸா’ என அவர் கொச்சை மொழி பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது. பின்னர் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம் நெடுகப் பல நாடகங்கள், நாடகங்கள் தோறும் பலப்பல கேரக்டர்கள். நாடக நடிகையாக அவர் செய்யும் அலம்பல்கள் அசல் நாடகக் கலைஞர்களைப் பிரதிபலித்தன. ‘காசி யாத்திரை’ படத்தில் அம்பிகாபதி நாடகத்தில் அமராவதியாக நடித்தார். எல்லா நாடகங்களுமே நிஜத்தில் சோக நாடகங்கள். ’கல்யாணராமன்’ படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் இணைந்து ‘மனோகரா’ நாடகத்தை சென்னைத் தமிழ் பேசி நடித்துக் குலுங்க, குலுங்கச் சிரிக்க வைத்தார்.
மாறுபட்ட சந்திரமதி
அரிச்சந்திரா, அம்பிகாபதி, மனோகரா நாடகங்களைப் பார்த்தால் யாராவது விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோமா? ஆனால், நகைச்சுவையால் அரங்கைக் குலுங்க வைக்கும் காட்சிகளாக அவை மாறியிருந்தன. மதுரை, கொங்குத் தமிழ், பிராமண பாஷை, சென்னைத் தமிழ் என தமிழகத்தின் அத்தனை வட்டார வழக்குகளும் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு.
‘சரஸ்வதி சபதம்’ படத்தில் அவர் தத்தித் தத்திப் பேசும் தமிழும் ஓர் அழகுதான். ‘காசேதான் கடவுளடா’ படத்தில் பணத்தைப் பிசாசு போல அடைகாக்கும் பணக்காரப் பெண்ணாக, அப்பணத்தைச் சுற்றி வரும் அனைவரையும் தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்து அடக்கியாளும் கம்பீரமான ஒரு பெண்ணாக வந்து அசத்துவார். ‘ஆயிரம் பொய்’ என்று ஒரு படம். அதில் ‘அசோக்குக்கு உடம்பு சரியில்ல, அவனைப் பார்த்துக்க வீட்டோடு ஒரு டாக்டர் வேணும்’ என ஒரு டாக்டரைத் தேடுவார்.
அவரைக் காதலிக்கும் சோ, போலி டாக்டராக வந்து சேருவார். ‘அசோக் எங்கே இருக்கான்?’ என அவர் அப்பாவியாகக் கேட்க, அவரிடம் ‘அசோக்கை அவன் இவன் என்று சொல்லக் கூடாது’ என்று கொஞ்சும் குரலில் கண்டிஷன் போடுவார். கடைசியில் அந்த செல்ல அசோக் அவர் வளர்க்கும் நாய்தான் என்று ரசிகர்களுக்குத் தெரிய வரும்போது தியேட்டரே அதிரும். அப்பாவித்தனமும், அதே நேரத்தில் பணக்காரச் செருக்கும் கலந்து கலகலக்க வைப்பார்.
ஏற்காத வேடம்
இப்படி எத்தனை எத்தனை படங்கள், எத்தனை, எத்தனை பாத்திரங்கள் … கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து நடிகர்கள், நடிகைகளுடனும் இணைந்து நடித்துவிட்டார். அவரது உச்சக்கட்டம் 60, 70-கள்.
இக் காலகட்டத்தில் அவர் இடம் பெறாத படமே இல்லை எனலாம். தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, அவர் மகன் வாசு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி என எத்தனை நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் பிரிக்க முடியாத ஜோடியாக நாகேஷுடன் மட்டுமே நினைவில் நிற்பவர். ‘ஞானப்பறவை’ யில் நடிகர் திலகத்தின் ஜோடிப் பறவையாகவும் ஜொலித்தார்.
நகைச்சுவைப் பாத்திரங்கள் முடிவுக்கு வந்தபோது குணச்சித்திரப் பாத்திரங்களை நகைச்சுவை கலந்து மெருகேற்றித்தான் அளித்தார். 1980-களுக்குப் பிந்தைய நாயகர்கள் அனைவருக்கும் அம்மா, ஆத்தா, அக்கா, அண்ணியாக வாழ்ந்தார். அம்மா என்றால் சும்மா இல்லை. கனம் நிறைந்த உணர்வுப்பூர்வமான வேடங்கள். ‘மிச்சத்துக்கு நானிருக்கேன்’ என்று சத்துணவுக் கூடத்து அடுப்புத் தீக்குத் தன்னுடலைத் தரும் ’ஜென்டில்மேன்’ அம்மா, கண்களுடன் மனதையும் சேர்த்துக் கலங்க வைத்துவிடுவாரே! இது நம்ம ஆளு, இந்தியன், சூரியன், சின்னக்கவுண்டர், ராசுக்குட்டியின் அம்மாக்கள் அன்பும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவர்கள் இல்லையா?
‘வா வாத்யாரே வூட்டாண்டெ’, ‘நான் மெட்ராஸச் சுத்திப் பாக்கப் போறேன்’ என்று அவர் பாடிய இரண்டு பாடல்களுக்கும் இடையில் இரண்டு தலைமுறை இடைவெளி. எவர் கிரீன் அசத்தல்கள்! நாகஸ்வர வித்வான், நாடக நடிகை, மடிசார் கட்டிய மாமி, கிராமத்துப் பெண், கோடீஸ்வரி, குப்பைக்காரி, காபரே டான்ஸர், பர்மா அகதி, ஈழத் தமிழ்ப் பெண் என்று அவர் ஏற்காத வேடங்கள் உண்டா? தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கனவு எப்படி நிறைவேறவில்லையோ, அதுபோல மனோரமாவும் விரும்பி ஏற்க நினைத்த திருநங்கை வேடம் மட்டும் அவருக்குக் கிடைக்கவே இல்லை. காலம் அதற்குள் முந்திக்கொண்டது. எந்த நடிப்புக் கலைஞருக்கும் அவர்கள் ஏற்று நடிக்க ஒரு வேடம் மிச்சமிருக்கத்தான் செய்கிறது.
வாசு சார்,
என்ன சொல்வது.. வழக்கம் போல என்றும் இந்த ப் பாடல் பதிவினில் ரசித்து எழுதுகிறீர்கள் எனச் சொல்லலாம்..
பாடல் எடுத்த நேரம், சிவகுமார் உயரம் மட்டு எனில் காலில் செருப்பில்லாமல் சந்திரகலா ப்ளாக் ஷூ சிவகுமார், அவரது சட்டையில் எம்ப்ராய்டரி, திறம்படச் சேலை கட்டும் மாதர்களில் – அதாவது புடவைக்குப் பொருத்தமாய் அளவான உயரத்தில் பூசினாற்போன்ற உடற்கட்டில்- சந்திரகலாவும் ஒருவர்,டிராலியில் கேமரா நடந்து கொண்டே வரும் ஷாட் என அனுபவித்து அழகாக வண்ணங்களில் எண்ணங்களை எழுத உம்மைப் போல் எவருண்டு.
நடிகர் திலகம் இருக்கவேண்டிய பாடல் என்றீர்கள்.. அப்படிப் பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன..என்ன செய்ய..அந்தக்கால டைரக்டர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.
ஒளிப்பதிவு கே.எஸ். பிரசாத்.. இவர் தான் தில்லானா மோகனாம்பாளுக்கும் ஒளிப்பதிவு இயக்குனர். அந்த தில்லானா பாடலுக்குப் படமாக்கப் பட்ட கோணங்கள் மறக்க முடியுமா என்ன.. வேறு படங்கள் சட்டென எனக்கு நினைவுக்கு வரவில்லை..
சந்திரகலாவின் சுமாரான அழகுக்குக் காரணம் அவருடைய சிகப்பு நிற முகப்பவுடர் கலந்த ஒப்பனை தான்..ஏற்கெனவே கொஞ்சம் மாநிற உடற்கட்டுக் கொண்ட அவரழகை இன்னும் சுமாராக்கி விட்டது.. ஒளிப்பதிவைக் குற்றம் கூற இயலாது..
ரோஜா செடியிலிருந்து மலர்ந்து சிரித்தபடி இருக்கும்.. பறிக்கும் போது முட்குத்தும்.. ஆனால் இந்தப் பெண்ணோ ஏற்கெனவே தலைவனுக்காக மலர்ந்து பறிக்கப் பட்டு ப் புன்சிரிக்கும் பொல்லாத ரோஜாபோல் கன்னம் சிவந்து இருக்கிறாள்.. முத்தாரம் என்பதே பல நன்முத்துக்களால் கோர்க்கப் பட்ட ஆரம்.. அதுவும் அந்த முத்தாரங்களால் அலங்கரிக்கப்பட்டு தகதகவென ஆனிப் பொன்னால் செய்த ஊஞ்சலைப் போன்று மின்னும் மேனி கொண்டவள்.. இரண்டு வரிகளில் ஆழப் பொருள் தருவதற்கு கவிஞர் கண்ணதாசனை விட்டால் வேறு யார்..
நல்ல பாடல் தான் வாசு..
அன்புடன்
ஆதிராம். (அர்ஜூனன், நீலிமா ராணி புகழ்).
ஹி ஹி..வாஸ்ஸு.. ஆதிராம் சார் பாணியில் எழுதிப் பார்த்தேன்..
அர்ஜூனன் – இலை தெரிகிறதா இல்லை கிளை தெரிகிறதா இல்லை என்ன தெரிகிறது கிளி மட்டுமே தெரிகிறது
நீலிமா ராணி – மொழி படத்தில் பிருத்வி ராஜை ஒரு தலையாய்க் காதலிக்கும் பெண்ணாக நடித்தவர்.. அவருக்கு படத்தி பிருத்வி ராஜ் மட்டும் கண்ணுக்குத் தெரியும்..உடன் நிற்கும் பிரகாஷ் ராஜோ மற்றவரோ கண்ணில் தெரியமாட்டார்கள்!
சரி வாஸ்ஸு.. என் பங்கு பாராட்டு…
துள்ளிசைப் பாடல்களில் தூக்கிவிட்டே வந்திடுமே
முள்ளிலா ரோஜாவே முன்.
தேன்சிட்டுக் கன்னங்கள் தேடித்தான் தந்தீரே
எண்ணமெலாம் நின்றீரே தான்…
வழக்கம் போல நல்ல அலசல் நன்றி வாசு..
pinna vaaren :)
கரும்பு வில் மீன்கொடித்தேரில் மன்மதராசன் ஊர்வலம் போகின்றான், மலர்களிலே ஆராதனை நினைவூட்டி விட்டுவிட்டீர்கள் எஸ்.வாசுதேவன் .. அந்தக்காலத்தில் கல்லூரியிலோ முடித்தோ.. நைட் பரீட்சை நேரங்களில் டீ குடிக்க வரும்போது இது டேப்ரிகார்டரில் ஒலிக்கும்..தவிர ரேடியோ வின் ஆல்டைம் ஃபேவரிட்..கடைசியில் படம் இங்கு வெளிவராமல் சிலோனில் ரிலீஸான நினைவு.. படிப்பினை ஊட்டும்குடும்பச் சித்திரம் என விளம்பரமும் கேட்ட நினைவு..
வாஸ்ஸூ, போகும் ஸ்லோவைப் பார்த்தால் நான் நினைத்திருக்கும் கமல் ஜெய்யூ பாட்டு வர நாளாகும் போலிருக்கே இன் எஸ்.பி.பி. :)
முள்ளில்லா ரோஜா எப்போதும் வாடாததும் கூட...
மதுண்ணா..சின்னப் பெண் ஒரு த்தி சிரிக்கின்றாள் தமிழில் வீடியோஇல்லையா என்ன ..படத்துலயே இல்லியா.. எனக்கு நினைவில்லை.. பார்த்தால் இந்த தெலுகு ரீமிக்ஸ் தான் வருது :)
https://youtu.be/11vlthrRpU4
அது போல ஞான ஒளியில் உள்ளம் போ என்றது நெருங்கிப் பார் என்றது.. இதுவும் படத்தில் இல்லை தானே..