செந்தில்வேல்
தலைமுறைகளைக் கடந்து நிற்கும் அவதார புருஷனின் உன்னதங்களை உங்களுக்கே உரிய சிறப்பான வடிவில் இங்கு பகிர்ந்து வருவது உள்ளபடியே மகிழ்ச்சியாகவும் மன நிறைவாகவும் உள்ளது. அடுத்த தலைமுறை மட்டுமல்ல, அதற்கு அடுத்த பல தலைமுறைகள் சிலாகித்து மகிழ ஏராளமான விஷயங்களை நடிகர் திலகம் அளித்துள்ளதும், அதற்கு இன்னும் பல தலைமுறைகளில் அதைப் பற்றிப் பலர் எழுதுவர் என்பதை உணர்த்தும் விதமாக உங்கள் பதிவுகள் விளங்குவதும் நெஞ்சுக்கு நிம்மதி அளிக்கும் நிறைவான விஷயங்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.