Padmanapan A
நடிகர் திலகத்தின்
அன்பு இதயங்களுக்கும்
நட்பு உள்ளங்களுக்கும்
இனிய காலை வணக்கம்.
என்றும்...
உன்
நினைவுகளோடு
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ec&oe=59EF1C5D
Printable View
Padmanapan A
நடிகர் திலகத்தின்
அன்பு இதயங்களுக்கும்
நட்பு உள்ளங்களுக்கும்
இனிய காலை வணக்கம்.
என்றும்...
உன்
நினைவுகளோடு
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ec&oe=59EF1C5D
சீமான்
21-07-2017 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் - புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
-------------------------------------------------------------
தன்னிகரற்ற தன் கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர் தன் சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்.
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!
... தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!
நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாள் இன்று (21-07-2017)
பெருமையோடு அந்த மகத்தான மேதைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்
நாம் தமிழர்!
https://youtu.be/o4Xta3t6O8U
---
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
See more
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0c&oe=5A067846
Trichy Srinivasan
திருச்சி மாநகரில் நமது அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பாக நமது உலக மகா நாயகன் சிவாஜியின் 16 நினைவு தினமான 21 ஜீலை 2017 க்கு Double sheet போஸ்டர் அடிக்கப்பட்டு நேற்று இரவு திருச்சி முழுவதுமாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி..................
--அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் --
How is it friends ?
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9c&oe=59F90390
http://i1087.photobucket.com/albums/...atharaaman.jpg
உலகத்திலே ஒருவனென உயர்ந்து நின்ற, நிற்கும் திலகமே!
உயர்ந்த மனிதனே!
தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான தெய்வ மகனே!
இன்று உன் நினைவு நாள்.
உன் பிள்ளைகளின் கண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆறாகப் பெருகி புனித கங்கையில் கலக்கும்.
நீ இல்லாத உலகில் நாங்கள் எதற்கு என்று இன்றும் மனம் ஓடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உதாரண புருஷன் நீ
ஒவ்வொரு நடிகனுக்கும் பேராசிரியன் நீ
ஒவ்வொரு ரசிகனுக்கும் கடவுள் நீ
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாச மலர் நீ
உனக்கும் எங்களுக்கும் ஏற்பட்டது ரத்த பந்தமல்ல
அது சுத்த பந்தம். பித்த பந்தம்.
கோவில்களுக்கு நாங்கள் சென்றது இல்லை
உன் இல்லம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு கோவில்?
உன் உள்ளம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு தெய்வம்?
எண்ணிலடங்கா அன்பு உறவுகளை அளித்துச் சென்றாய்
எவரும் எட்டாத பெருமையை எங்களுக்கு கொடுத்துச் சென்றாய்
முக்காலமும் எக்காலமும் உனை நினைக்கும் அருள் தந்தாய்
உடன் முடிவில்லா துயரத்தையும் தந்து விட்டுச் சென்றாயே!
தினம் தினம் நெஞ்சு துடித்தாலும் நேற்றிலிருந்து நெஞ்சு அடைக்கிறதே!
திரண்டு வரும் கண்ணீர்த் திவலைகளை திருப்பி அனுப்ப முடியலையே!
திரும்பிய பக்கமெல்லாம் காட்சியளிக்கும் எங்கள் திருவரங்கனே!
திக்கற்ற பிள்ளைகளாய் திகைக்க வைத்து சென்ற நாளலல்லவோ இன்று!
ஒவ்வொரு இதயமும் தெய்வமே தெய்வமே என்று கதறுகிறதே!
உன் காதில் விழவில்லையா?
தெய்வத்திற்குத்தான் கல்மனது என்றால் உனக்குமா?
ஒரே ஒரு முறை எழுந்து வந்து உன் 'ஓங்கார'மிட்டு சென்றுவிடு
'காரணமின்றி என் கண்களில் கண்ணீர் வந்தால்
நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்'
என நண்பர் திருப்பதிசாமி நேற்று பதித்திருந்தாரே
அது எவ்வளவு நிஜம்! அது அவருக்கு மட்டுமா?
உன் பிள்ளைகள் அனைவருக்கும்தானே!
மனிதப் புனிதர்கள் பலருண்டு.. சொல்லக் கேட்டிருக்கிறோம்
ஆனால் உன்னை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறோம்
பாசச் சோற்றை நடிப்புப் பாலுடன் எங்களுக்கு ஊட்டிய
எங்கள் தாயே! தந்தையே! அண்ணனே! குருவே! இறைவனே!
எமனுடன் சில நாட்கள் போராடி நீ சென்றுவிட்டாய்
நாங்கள் உன் நினைவால் தினம் தினம் அவனுடன் போராடுகிறோமே!
அது புரியாமல் நீ ஏன் அங்கு விரைந்து சென்றாய்
'சொர்க்கம்' என்றால் என்ன என்று படத்திலும், நிஜத்திலும் காட்டியவன் நீ அன்றோ!
நிஜ சொர்க்கமே நீ அங்கு போன பின்புதானே உண்மையான சொர்க்கமாயிற்று!
நாங்கள் இன்று வரை உயிரோடிருக்க காரணம் உன் காவியங்கள்தானே!
உன் நினைவுகள்தானே!
தந்தை இல்லாமல் பிரிந்த குடும்பங்கள் பல உண்டு
நீ இல்லாமல் சேர்ந்த ஒற்றுமை குடும்பங்கள் நாங்கள்
திருக்குறளுக்குப் பிறகு நீ ஒருவன்தான்
அத்தனை பேருக்கும் பொது.
நீ வராவிட்டால் போ. எங்களுக்கு ஒன்றும் இல்லை
வெறும் உன் உடலை மட்டும்தானே இழந்தோம்
அதனால் கர்வம் கொள்ளாதே
எங்களுள் புதைந்து கிடைக்கும் உன் நினைவை எவ்வாறு அழிப்பாய்?
நீ என்ன செய்திருக்க வேண்டும்?
ஒன்று எங்களுடன் இருந்திருக்க வேண்டும்...இல்லை எங்களை உன்னுடன்
கூட்டிச் சென்றிருக்க வேண்டும். செய்தாயா?
நிர்க்கதியாய் நிற்க வைத்து நிர்மூலமாக்கி நீ சென்ற நாள் இன்று
காட்டுவாசிகள் மத்தியில் கனிவான மனிதன் நீ
மதங்களைத் தாண்டிய கடவுள் நீ
மனங்களை வென்ற மகா புருஷன் நீ
மனிதரில் நீ மாணிக்கமல்ல. நீ ஒருவன்தான் மனிதனே!
உடல் குலுங்க, மனம் வெம்பி தாங்கவொண்ணாமல் அழுகிறேன்
இல்லை அழுகிறோம்... துவள்கிறோம் இன்று
கட்டுப்படுத்த முடியாமல் கதறுகிறோம் இன்று
எங்களின் கண்ணீர்க் கடலில் உன் கப்பலை விடவாவது
வந்து விடேன்.
மண்ணில் பிறந்த யாரும் நீயாக முடியாது
மனதிலிருந்து நீக்க உன்னாலும் முடியாது
முடியாமல் முடிக்கிறேன். உன் நினைவுகளோடு முடிவேன். உன் நினைவுகளோடேயே மடிவேன்.
எங்கள் ஒரே இதய தெய்வமே,
ஜூலை 21 வெட்கி தலைகுனிய வேண்டும். இந்த நாள் உலக கலை
ரசிகரெல்லாம் தூற்றும் நாள். ,சரஸ்வதியை பூமியிலிருந்து தேவர்கள் கவர்ந்த நாள்.எங்களை அனாதரவாக்கிய நாள்.தமிழக பூமியிலிருந்து எங்கள் தொப்புள் கோடியை அறுத்து விட்டு அந்நியமாக்கிய நாள். தமிழன்னை விதவை கோலம் பூண்ட நாள்.
பசும்பொன்னுக்கும் படிக்காத மேதைக்கும் இணைப்பு பாலம்.சாதியை புறம் தள்ளி கர்ம வீரருடன் கள்ளத்தனம் இன்றி கலந்ததால் சாதி கள்ளர்களுக்கு ஆகாது போனாலும் ,அனைத்து நல்லோர்க்கும் இதய நாயகன் ஆனாய் .
நீ என்றுமே என் விருப்ப பாடம். பள்ளி கல்லூரியுடன் முடிந்திருக்க வேண்டிய விருப்ப பாடங்கள் என் விருப்ப படங்களாய் கணினியில்,தொலைக்காட்சியில், திரைகளில்.
அசோக மன்னனாய் நீ நடித்தது ஒரு படம் என்பார் அறியாதோர். நீயோ அத்தனை மன்னர்களையும் அசோகனாக்கியவன்.முடிவு தெரிந்த பொய் கத்தி சண்டைகளை நாடாமல் ,உணர்ச்சியாய் கக்கி கத்தி சண்டை போட்டே ஆயிரம் போர்க்களத்தை விழியிலே ஓட
விட்டாய்.ரத்த ஆற்றில் வீரம் காணாது நடிப்பில் ஆண்மை காட்டியவன்.
காதலோ வீரமோ காமமோ வன்மமோ விவேகமோ சோகமோ சுகமோ வரமோ சாபமோ நீ ஏற்ற பாத்திரங்களை ஒட்டியே நிகழ்ந்தன நீ மதுவில் குளித்தாலும், விலை மகளிரோடு களித்தாலும் ,புகையில் சுளித்தாலும் ,அக்கால இக்கால மது கடைகளில் விபசார சந்தையில் தட்டுப்பட்ட ஒருவன் கூட உன் ரசிகனில்லை.
உண்மை என்றுமே விலை போனதில்லை.உண்மைக்கு விலை வைக்க இயலாதே.உன் ரசிகர்கள் நீயே சொன்னது போல விலையில்லா உண்மையின் "பிள்ளைகள்".உனக்காக எழும் குரல்கள் பிள்ளையில்லா சொத்தை கவர்ந்தோரின் பொய் குரல் இல்லை.உன் கலை சொத்தை கவர்ந்தோரின் காணிக்கை குரல்
அத்தனை நடிகரும் உன் ரசிகரே நீ நடிகனின் நடிகன்.தமிழ் நாடு உண்மையாய் அழுத நாள் இந்நாளே உண்மையாய் சிரிக்கும் நாள் அக்டோபர் ஒன்று பொன்னாளே .
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .
அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்
போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது
ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்
தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே
தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே
காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்
கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது
தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை
வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே
அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்
காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.
நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்
நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை
எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை
நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை
வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது
உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு
ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக
தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை
ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே
தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்
வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
From Vikatan,
http://img.vikatan.com/news/2017/07/...fsaf_16356.jpg
இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.
அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.
http://img.vikatan.com/news/2017/07/...atue_16581.jpg
நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.
கே. சந்திரசேகரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.
http://img.vikatan.com/news/2017/07/...rlon_16141.jpg
“கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.
இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.
“தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.
கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.
http://img.vikatan.com/news/2017/07/...ajar_16572.jpg
மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.
முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.
http://img.vikatan.com/news/2017/07/...poor_16316.jpg
ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.
ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.
உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.
இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.
தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.
காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'
இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
இது உன் நினைவு நாளாம் .
என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
உலகில் உன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஒற்றை வரியில் முடித்து நெஞ்சு நிமிர்த்தாமல்,
எத்தனை வரிகளை எழுதி எழுதி இந்த திரியில் சுமை ஏற்றுகிறோம்.
நீ உன் நடிப்பால் என்னை அழ வைத்த நாட்களை எண்ணி முடிக்கும் வலு என் மூளைக்கில்லை
ஆனால் நீ உறங்கி கண் மூடி என்னை கதற வைத்த ஒரே நாள்
உன்னால் எனக்கு கெடுதல் விளைந்து ஊண் உறக்கத்தை தொலைய வைத்த நாள்
ஆனாலும் இதை நான் நினைவு நாளாக எண்ண வேண்டுமாம்.
நான் சொல்வேன் இந்த நாளொன்றை தவிர அனைத்துமே எனக்கு உந்தன் நினைவுநாளே...
Sundar Rajan shared his post.
· 2 hrs
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...25&oe=5A06B0F0
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
நாளை 22.07.2017,
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, நமது
... மக்கள்தலைவரின் நினைவுதின சிறப்பு நிகழ்ச்சியாக
தந்தி தொலைக்காட்சியில் இயல், இசை, சிவாஜி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் நமது மக்கள்தலைவரின் புகழ் காப்பதையே தனது கடமையென நினைத்து, அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அன்பு சகோதரி கிரிஜா அவர்கள் பங்கு பெறுகிறார்.
தனது உண்மையான உழைப்பிற்கு என்றாவது ஒருநாள் அங்கீகாரமும், புகழும் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
யாருடைய பரிந்துரையும் இல்லாமல் சகோதரி கிரிஜா அவர்கள் தனது உண்மையான உழைப்பினால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது முக்கியமான விசயம்.
இது நமது மக்கள்தலைவரின் ஆசியால் நமது சகோதரி கிரிஜா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் சகோதரி கிரிஜா அவர்களை வாழ்த்துவோம்......
அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்...
Jahir Hussain
இன்றைய சினிமா,, அன்றைய சினிமா ,,, அடடா எவ்வளவு வேறுபாடுகள்,,, மாறுபாடுகள்,,, நான் அன்றைய சினிமா என்று குறிப்பிட விரும்புவது சிவாஜி சினிமாக்களை,,, மற்றவர்கள் சினிமாவும் அதில் கலந்து இருந்தாலும் சிவாஜி சினிமாக்களே தலைவாழை இலைபோட்டு 16 வகை காய்கறிகளோடு அறுசுவை விருந்தளித்தது.,,, அன்றைய சினிமாவில் கூட்டு பொரியல் அவியல் துவையல் வேண்டுமானால் மற்ற நடிகர்களாக இருக்கலாம், மெய்ன் மீல்ஸ் அதற்குரிய சாம்பார், ரசம, புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, வடை பாயாசம் அப்பளம், ஊறுகாய், தயிர், மண்ணச்ச நல்லூர் பொன்னி ரைஸ் என்று வெரைட்டியாக இருக்கும் மீல்ஸ் சிவாஜி டிஷ்,,, அதாவது சிவாஜி சினிமாக்கள்,,, ஸோ அற்றை நாளில் இந்த ஒற்றை மனிதன் சினிமாக்களை அன்றைய சினிமா என்ற கணக்கீட்டில் கொண்டு வருகிறேன்,,, இன்றைய சினிமாவில் என்ன என்ன இருக்கிறது? சொல்வதற்கு நிறைய இருக்கிறது,,, காட்சிக்கு காட்சி வன்முறை,,, யதார்த்தம் என்ற பெயரில் வாயோடு வாய் வைத்து அழுத்தும் முத்தக் காட்சிகள், யதார்த்தம் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக காட்டுதல், நகைச்சுவை என்ற பெயரில் நேரடி ஆபாச வசனங்கள்,,, டூயட் என்ற பெயரில் கதாநாயகியை வன்புணர்வு செய்வது போல பாடல்கள், ரத்தம் ஒழுக ஒழுக வன்முறை காட்சிகள்,,, பிஞ்சுகள் வெம்பிப் பழுப்பது போன்ற பதின்பருவத்து காதல் காட்சிகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,,, சமுதாயத்தில் இவையெல்லாம் இல்லையா என்று கேட்டால் இருக்கிறதுதான் அற்காக அதை அப்படியே காட்சிப்படுத்த வேண்டுமா? யதார்த்தம் என்ற பெயரில அதை அப்படியே காட்ட வேண்டுமா? சினிமா என்பது கொஞ்சம் ரியலிசத்தை கடந்து வந்திருக்க வேண்டும்,,, அது நடைமுறை வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் மறைபொருளாக இருக்க வேண்டும் என்பது சிவாஜி பட கணக்குகள்,,, இன்றைய கால சினிமாவில் இத்தனை அலங்கோலங்களையும் 95% படங்களில் நிரப்பி விட்டு மீதமுள்ள 5% "மெஸேஜ்" என்ற பெயரில் கருத்து கூறிவிட்டு செல்வது நகைப்புக்குரியதாக எனக்கு தென்படுகிறது,,, ஜனங்களை கவர்ந்திழுக்க மெனக்கெட்டு பாடல்காட்சிகளுக்கு கூட வெளிநாடுகளில் படம் பிடிப்பது இன்னொறு கேலிக் கூத்து,,, கதைக்கு பொருத்தமில்லாத வெளிநாட்டு லொகேஷன்களை காண்பிப்பது யதார்த்த சினிமாவை மீறிய செயலாக தெரியவில்லையா? நல்ல நல்ல விஷயங்களை சொல்வதற்காக கொஞ்சம் யாதார்த்தங்களை மீறுகிற சிவாஜி சினிமாக்களை குறைசொல்ல இன்றைய சினிமா ரசனையாளர்கள் விமர்சன வியாதிகயஸ்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது,, தேவையற்ற பிரமாண்டம் பொருத்தமற்ற வெளிநாட்டு படப்பிடிப்புகள் சினிமா தயாரிப்பு பட்ஜெட்டை கடுமையாக உயர்த்தவில்லையா அதையெல்லாம் பார்வையாளர்கள தலையில் கட்டி மும்மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வில்லையா? பார்வையாளர்கள் கைவிட்ட படங்கள் வசூலில் மரண அடி வாங்குவதில்லையா? இதில் மீள இயலாத தயாரிப்பாளர்கள் வநியோகஸ்தர்கள் மீளாத உலகத்திற்கு செல்லவில்லையா? இதுதான் இன்றைய சினிமாக்களில் லட்சணம்,, அதாவது அவலட்சணம்,,, அனறைய கால சினிமாவில் நஷ்டத்தின் காரணம் கொண்டு எந்த பட முதலாளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்? ஸ்பெஷலாக சிவாஜி சினிமாக்களை உருவாக்கிய பட முதலாளிகள் யார் தற்கொலை செய்து இருக்கிறார்கள்,,,அப்படியே நஷ்டக் கணக்கு சொன்னாலும் அதை அடுத்த படங்களில் சரி செய்த பெருந்தன்மை சிவாஜிக்கு இருந்தது,,, அதை தொடர்ந்து ஜெய்சங்கர் போன்ற சில சில நடிகர்கள் சிவாஜியை பின்பற்றி நடந்தார்களே,
அன்றைய சிவாஜி சினிமாக்களில் கதைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே பிரமாண்டம் இருந்தது,,, மஹா பாரதத்தில் கர்ணனை ஹீரோவாக பரிநாமம் செய்யப்பட்டது, அதற்கு காட்சி அமைப்புகள் யானை,குதிரை, காலாட்படை போன்ற திரைக்கதைக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது, சோழர் வரலாறு கூறும் ராஜ ராஜ சோழனுக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது,, சிவபுராணம் கூறிய திருவிளையாடலுக்கு,, சரித்திரம் பேசிய கட்ட பொம்மனுக்கு திரைக்கதையில் பிரமாண்டம் தேவைப்பட்டது,, புதிய பறவை திரைக்கதைக்கு, சிவந்தமண் திரைக்கதைக்கு திரிசூலம் திரைக்கதைக்கு ,,, இப்படி தேவையான படங்களுக்கு மட்டுமே பிரமாண்டம் தேவையாக இருந்தது,,, ஒரு பாசமலருக்கோ, பாவ மன்னிப்புக்கோ, பாலும் பழமும் படத்திறகோ பிரமாண்டம் தேவைப்படவில்லை,,, மாறாக சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடிகக நட்சத்திரப் பட்டாளமதான் தேவைப்பட்டது,,, தில்லானா மோனாம்பாள், தங்கப் பதக்கம், வசந்த மாளிகை போன்ற படங்களுக்கு தேவையான பிரம்மாண்டமும் நல்ல துணை நடிகர்களும்தான் தேவைப் பட்டது,, மொத்தத்தில் சிவாஜி நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல கதை தேவைப்பட்டது,, கூர்மையான வசனங்கள், இனிமையான பாடல்கள், கருப்பு வெள்ளையோ கலரிலோ நேர்த்தியான ஒளிப்பதிவு தேவைப்பட்டது,,, தேவையற்ற பிரமாண்டம் அருவருப்பான காட்சி அமைப்புகள்,,, கொடூரமான கற்ப்பழிப்பு காட்சிகள் தேவைப் படவில்லை,,, யதார்த்தம் சிறிதளவு மீறப்பட்டு இருந்தால்த்தான் அது சினிமா,,, யதார்த்தத்தை மீறி நடிப்பதுதான் சினிமா நடிப்பு,,,
உதாரணமாக பல சினிமாக்ளை குறிப்பிடலாம்,,, ராமன் எத்தனை ராமனடி படத்தில் வீர சிவாஜியை கண்முன் கொண்டு வந்த நடிப்பு,,, அதிக பட்ச நடிப்புதான்,,, யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்றால் வசனங்கள் மராத்தி மொழியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்,,, வீர சிவாஜி தமிழில்தானே முழங்கினார்? வீரபாண்டிய கட்ட பொம்மன் தெலுக்கில் வீர வசனம பேசவில்லை,, யதார்த்தத்தை தாண்டி தமிழ் வசனம் பேசினார்,,, சிவன் பிரம்மா விஷ்ணு நாரதர் முதற் கொண்டு தமிழில்தானே பேசினார்,,, பாவை விளக்கு படத்தில் ஷாஜஹான் தமிழில்தானே பாட்டு பாடினார்,,, அவர் ஏசுவாக நடித்திருப்பாரே ஆனால் அவரும் தமிழில்தான் பேசி நடித்து இருப்பார்,,, சாணக்ய சந்திர குப்தாவில் அலெக்ஸாண்டர் தெலுங்கில்தானே பேசினார்,, யதார்த்த சினிமாவை தாண்டியதால் தான் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்தது,,, இந்த விஷயங்களில் யதார்த்த சினிமாவாக எடுத்தால் அது மண்ணாங்கட்டி சினிமாவாகத்தான் போயிருக்கும,,,,, சிவாஜிக்கு யதார்த்த நடிப்பு வராது போலிருக்கு,,, என்று கூவார்கள் சில குக்கர்கள்,,, முதல் மரியாதையையும் தேவர் மகனையும் சொன்னால் அது தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி என்று கூவுவார்கள்,,, ஏன் கப்பலோட்டிய தமிழன் இல்லையா? இனறைக்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த சிவாஜி சினிமா? சிவாஜி முதற்கொண்டு எல்லோருமே யாதார்த்த நடிப்பில் நடித்தார்களே? எஸ் வி சுப்பைய்யா கொஞ்சம் ஓவர் ஆக்ட்டுங்க என்றது ஒரு குக்கர்,,, கோபக்கார கவிஞன் பாரதி என்ன லேசுப்பட்டவனா? கொந்தளிக்கும் கடலானவன்,, குமுறும் எரிமயைானவன்,, அவன் வேஷத்தை போட்டுக்கொண்டு நந்தனார் போல நடிக்கச் சொல்கிறார்களா? யாதார்த்த சினிமாவை அப்போதே பரிஷித்து பார்த்தவர்தான் எங்கள் சிவாஜி,,, உயிரைக் கொடுத்து நடித்தார்,,, என்ன குறை கண்டார்கள் அந்த படத்தில்? போங்கைய்யா நீங்களும் உங்கள் யதார்த்த சினிமாவும்,,, வ வு சி யாக அவர் தன் பாணியில் நடித்திருப்பாரே ஆனால் அந்தப் பட முதலாளி இன்னும் பல அந்தக்கால லட்சங்களை சம்பாதித்து இருப்பார்,,, இன்றைய சினிமா அறிவாளிகள் கேள்வி ஒன்று என்னை தைத்தது,, சிவாஜி சிவாஜி என்று ஓவர் பில்ட்அப் கொடுக்கறீங்களே என்ன மெஸேஜ் சொல்லிட்டார் உங்கள் சிவாஜி என்றார்,,, திருக்குறள் 133 அதிகாரத்தில் 1330 குறள்களை சொன்ன உலகப் பொதுமறை,,, அந்த 1330 குறள்களுமே மனித வாழ்க்கைக்கு தேவையான "மெஸேஜ் ஐ கொடுப்பன,,, எந்தக்குறளை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டுங்கள் அந்தக் குறளை ஒத்த வடிவத்தில் அவர் படத்தில் கருத்து இருக்கும்,,, அல்லது காட்சி அமைப்பு இருக்கும்,,, அல்லது வசனம் இருக்கும் அல்லது பாடல் இருக்கும் ,, இப்படி வள்ளுவரையே தனதாக்கி தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டவர்,,, குறளை மட்டுமா அவர் பயன்படுத்தினார் முக்கிய இதிகாசஙகளான இராமாயணம், மஹா பாரதம், பகவத் கீதை, குர் ஆன், பைபிள் என்று அத்தனை புத்தகங்களில் இருந்தும் நன்நெறிகளை தன் படத்தில் ஏதோ ஒரு வகையில் "டை அப்" செய்திருப்பார்,, அதுமட்டுமா, ஒளவையார் முதற்கொண்டு வள்ளலார் வரை,,, விவேகானந்தர் முதற்கொண்டு கனியன் பூங்குன்றனார் வரை அத்தனை பேர்களின் நன்னெறி கருத்துகள் மட்டுமின்றி சமணம் பௌத்தம் போன்றவற்றிலிருந்தும் தேவையான மெஸேஜ் சொல்லி இருப்பார்,, ஸோ சிவாஜி சினிமாக்கள் ஆராய்ச்சி மாணவர்களின் சரணாலயம்,,, அவர் ஏற்று வாழ்ந்த கதாபாத்திரங்ள் ஒவ்வொன்றும் அந்த மாணவர்களின் அறிவுப் பசிக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரங்கள்,,, சிவாஜி சினிமாக்களில் இருந்ததெல்லாம் நாட்டுக்கும் மனித இனத்திற்கும் சொல்லப்பட்ட கருத்துகள்,,, அந்தக்கால பட முதலாளிகள் பணமூட்டைகளை மட்டுமே நம்பி சிவாஜி சினிமா களத்துக்குள் வரவில்லை,, அவரது நல்ல கருத்துகளை உள்வாங்கி சினிமா மூலம் மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தான்,,, இன்றைய தயாரிப்பாளர்கள் பணம் மூட்டைகளை சுமக்க விரும்புபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் அதற்காக எந்த ஹீரோ முதுகுக்கும் சோப்பு போட சொறிந்துவிட தயாராக இருப்பவர்கள்,,, அதனால்தான் அவர்களை "பட முதலாளிகள்" என்றும் இவர்களை "தயாரிப்பாளர்கள்" என்றும் குறிப்பிட்டு வருகிறேன்,, சினிமா பொழுது போக்கு சாதனம்தான்,,, மாற்றுக் கருத்து இல்லை,,, பொழுதை எப்படி போக்க வேண்டும் என்பதிலேயே நிறைய மாற்றுக் கருத்துகள் உண்டு,, இன்று சிவாஜி என்ற டிக்ஷ்னரியை புரட்டிப் பார்த்தேன்,,, அருஞ்சொற்பொருள் பொதிந்த அந்த கலைமகனை அவரது நினைவுநாளில் நானும் என் பங்கிற்கு பதிவிட்டேன்,,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e3&oe=5A0BD31A
Baskar Seshadri
விடிவெள்ளி ( நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று )
--------------------
சைக்கிள் ஓட்டுவதில் நண்பர் சிதம்பரம் கெட்டிக்காரன் . பெரும் பொறுமை . எந்த இடர்பாடும் இல்லாமல் ஓட்டும் அந்த லாவகம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது . எங்கள் இணைப்பு பாலம் இரவு காட்சி . அது வெலிங்டனா சித்ராவா என்று நினவு இல்லை . கணேசனை பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய உடைத்து எரியும் சந்தோஷம்.இதில் மணியும் எங்கள் கட்சி .அவனுடன் நான் செல்வது தனி பந்தி . விடிவெள்ளியில் தோரணம் கட்டும் காட்சியில் அவர் காட்டும் அதிர...்ச்சியோ , அல்லது பச்சை விளக்கில் அவர் திருக்குறள் சொல்லும் அழகோ , உயர்ந்த மனிதனில் அசோகனிடம் கைகளை மடக்கி அவன் நல்லா பைட் பண்றாண்டா என சிவகுமாரை பார்த்து சொல்லும் பாங்கோ .. தெய்வ மகனில் தம்பியிடம் பணம் கொடு என கண்களால் பேசும் என கணேசனை சுமந்து கொண்டே போகலாம் . எந்த பெரிய பின் புலம் இல்லாமல் நாடக திறமையை கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊறி அதை செம்மையாக கொண்டு வருவதில் அவருக்கு நிகர் இல்லை.ஒரு படத்தில் அவர் பாட அமரும் முன் அந்த பெரிய சபையை பார்த்து பிரமித்து பயப்படும் நிலையை முகத்தில் காட்ட வியர்வையை சிரித்தவாறு துடைத்து கொள்ளும் ஒரு ப்ரில்லியன்ட் பெர்போர்மேர் அவர். . பாசமலரில் அவர் ஜெமினியோடு பேசும்போது பென்சிலை சீவிக்கொண்டே முறைக்கும் முறைப்பு நினைவு உண்டா ?எனக்கு விஸ்வநாதன் இடது என்றால் நடிகர் திலகம் வலது கண் .
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...51&oe=5A0960EE
Vignesh Ramkumar
·
அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.
கர்ணன் சிவாஜி
* மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.
... * 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.
* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.
* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.
*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.
நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...88&oe=5A108F82
Edwin Prabhakaran Eddle
நடிகர் திலகத்தின் கடைசி மேடை பேச்சு............................................ .....இறுதி உரை அதுதான் என்று தெரியாமலேயே....."எனது ஆயுளையும் சேர்த்து நீங்கள் எடுத்துக்கொண்டு பல்லாண்டு காலம் வாழுங்கள்" என்று கலைஞர் அவர்களை பார்த்து சொன்னதை யாரால் மறக்க முடியும்....................அப்படியே ஆகிவிட்டது இறுதியில் ......உயிரையே தியாகம் செய்தது போலாகிவிட்டது ...............சிவாஜி என்னும் மாமேதை மீண்டும் இவ்வுலகில் பிறப்பாரோ மாட்டாரோ....நாம் காத்திருப்போம்.....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5a&oe=5A0C6DA0
Sekar K
தாரமங்கலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்ட போது எடுத்த படம்.
· Provide translation into English
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9d&oe=59FCBF41
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...92&oe=5A025B11
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b2&oe=59F0B65F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...38&oe=5A10687C
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...70&oe=5A0F0774
Vetri Vel Murugan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...09&oe=59FE3E09
Kumaresan Singa Kutti G
சிவாஜிகணேசன் நினைவு தினம்
கீழப்பாவூர் நகர சிவாஜி நற்பனி மன்றத்தின் சார்பில் நினைவு தினம் அனுசரிக்க பட்டது.
தலைமை A.G.M.சிங்ககுட்டி(எ)குமரேசன்.நகர காங்கிரஸ் தலைவ...ர்
மாவட்ட இலக்கியஅணி தலைவர்
M.பொன்கணேசன்.மற்றும்
சிவசுப்பிரமணிய முதலியார் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
நகரசிவாஜி மன்ற தலைவர்.M.சுப்பிரமணியபிரபு அனைவரையும் வரவேற்றார்.
வட்டார இலக்கிய செயலாளர் ராமகிருஷ்ணன் சிவாஜி பற்றி பேசினார்.
வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர்.மகாராஜா.தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கார்த்திக்செல்வன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர கலைபிரிவு தலைவர்
S.வெற்றிவேல்முருகன் நன்றி கூறினார்.
From Vikatan,
நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்.
http://img.vikatan.com/news/2017/07/...re_1_18557.jpg
தமிழத்திரையுலகின் நடிப்புக்கு இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவுநாள் இன்று!
1928 ம் ஆண்டு அக்டோபர் 1 ந்தேதி தஞ்சை சூரக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட வீரர் சின்னய்யா - ராஜாமணி தம்பதிக்குப் பிறந்தவர் வி.சி. கணேசன் என்கிற விழுப்புரம் சின்னய்யா கணேசன். இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால் படிப்பைத் துறந்து அரிதாரம் பூசிக்கொண்டார். சக்தி நாடக சபா, கே.ஆர் ராமசாமியின் நாடகக்குழு, அவ்வை தி.க ஷண்முகத்தின் நாடகக்குழு எனப் பல நாடகக் குழுக்களைக் கடந்து 40 களின் இறுதியில் அறிஞர் அண்ணாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். திமுகவில் எம்.ஜி.ஆருக்கு முன்னதாக முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன்.
மங்கள கான சபா குழு சென்னையில் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகங்கள் நடத்திவந்தபோது அந்த நாடகத்திற்கு அன்றைக்கு சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்துவந்த ஒரு நடிகர் தினமும் நாடகம் பார்க்க வருவார். ஒருமுறை கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து அந்த நடிகர், நேரில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். பொன்னிற மேனி, கருகுரு முடி, கருணை குணம் இவற்றால் கவரப்பட்ட கணேசன், அவருடன் நட்பானார். அந்த பழக்கம் நாளடைவில் அவர்களை அண்ணன் தம்பிகளாக்கியது. உணவு வேளைகளில் கணேசன் வராமல் தன் சொந்த மகனுக்கு ஒருநாளும் உணவு பரிமாறியதில்லை சத்தியபாமா என்ற அந்த தாய். ஒரே இலையில் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட அவர்கள்தான் பின்னாளில் திரையுலகைக் கட்டி ஆண்டார்கள். அந்த அண்ணன் எம்.ஜி.ஆர்.
காஞ்சியில் அண்ணாவின் வீட்டில் தங்கி திராவிட நாடு இதழ்ப் பணியில் உதவியாக இருந்தபடியே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் கணேசன். அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். சிவாஜியாக நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசி நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்க கணேசனுக்கு உள்ளுர ஆசையிருந்தாலும் வசனத்தைத் தவிர அண்ணா எதிர்பார்த்த விஷயங்கள் அவரிடம் இல்லை. அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தார்.
http://img.vikatan.com/news/2017/07/..._400_18237.jpg
ஒரு மதிய வேளையில் எம்.ஜி.ஆரை கையோடு காஞ்சிக்கு அழைத்துவந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திரையுலகில் புதிய வீச்சுக்கு அந்த நாள் அடித்தளம் இட்டது. சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். நாடகத்தில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் சில காரணங்களால் நாடகத்தில் நடிக்க மறுத்து ஒதுங்கிக்கொண்டார். அதேசமயம் நாடக ஆசிரியர் அண்ணாத்துரையின் எழுத்து மீது பெரும் காதல் புத்தது அவருக்கு. வாய்ப்பு இப்போது கணேசனுக்கு வந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம் நாடகத்திற்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்தார் பெரியார். கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனை காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சிமுகர்ந்தார். கணேசன் , 'சிவாஜி' கணேசன் ஆனார்.
நேஷனல் பிக்சர்ஸ் நடத்திவந்த பெருமாள் முதலியார் ஒருமுறை சிவாஜியின் நாடகத்தைப் பார்க்கநேர்ந்தது. கணேசனின் நடிப்பு பிடித்துப்போய்விட்டது அவருக்கு. சில நாள்களில் தான்எடுக்கவிருந்த படத்திற்கு கதாநாயகனாக கணேசனை ஒப்பந்தம் செய்தார். பராசக்தி என்ற அந்தப்படம் வளர்ந்துவந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.
படத்திற்கு பைனான்ஸ் செய்துவந்த ஏ.வி.எம் செட்டியார் ஒருநாள் படப்பிடிப்பை காணவந்தார். சிறிதுநேரத்திற்கு பின் ஏ.வி.எம், பெருமாள் முதலியாரிடம் அதிருப்தியான குரலில் சொன்னார். பையன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் குதிரைமூஞ்சியா இருக்கே. உடம்பும் ஒல்லியா இருக்கு... இத்தனை ஆயிரம் பணம் போட்டு எடுக்கிறோம். எதுக்கு விஷப்பரீட்ஷை. கே.ஆர்.ராமசாமி இல்லேன்னா டி.ஆர் மகாலிங்கத்தை வெச்சி எடுத்துக்கலாம். பையனை செட்டில் பண்ணி அனுப்பிடு”- இடிவிழுந்ததுபோலானது சிவாஜிக்கு. சினிமாக்கனவு கண்ணெதிரில் கலைந்துகொண்டிருந்தது. ஆனால் பெருமாள் முதவியார், எதுக்கும் அண்ணாகிட்ட ஒருவார்த்தை கேட்டிடலாம் என அப்போதைககு முடிவை தள்ளிப்போட்டார். தகவல் அண்ணாவுக்கு சென்றபோது, ராமசாமி நிறைய படங்கள்ல நடிச்சிட்டு வர்றார். புதுப்பையனைப் போட்டே முடிங்க... நல்லா நடிப்பான்... என சிவாஜிக்கு வாழ்வு கொடுத்தார். சில மாதங்களுக்கு சிவாஜிக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும் தந்து அவரை குண்டாக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.
படத்தில் குணசேகரன் வேடத்தில் சிவாஜி அறிமுகமானார். தமிழ்சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. எஸ்.எஸ் ராஜேந்திரனுக்கும் இதுவே முதல்படம். பராசக்தி படம் முழுக்க முழுக்க சமூக சீர்திருத்தக்கருத்துகளைப் பொட்டில் அடித்தாற்போல் பேசியது. அன்றைய சமூகத்தில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நாத்திகக் கருத்துக்களை பேசிய பராசக்தியை ஆஸ்திகர்கள் வசைபாடித்தீர்த்தனர். நாத்திகர்கள் கொண்டாடினர். திராவிட இயக்க வரலாற்றில் பராசக்திக்குத் தனியிடம் உண்டு.
பராசக்தி படம் அன்றைக்கு சமுதாயத்தில் ஏற்படுத்திய எதிர்வினைக்கு உதாரணமாக அன்றைக்கு பிரபல சினிமா இதழான குண்டூசி அதற்கு எழுதிய விமர்சனத்தை இங்கு தருகிறோம். விமர்சனத்தை படியுங்கள்...
ஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தெய்வ நிந்தனைத் திருப்பணி நிறைந்த ''பராசக்தி"
ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பிரசாரம் செய்ய விரும்பி செய்யப்படும் ஒரு காரியமானது, அதற்கு நேர்மாறான பலனை அளிக்குமானால், அந்த முயற்சியில் முனைந்தவர்களைக் குறித்து நாம் அனுதாபப்படத்தான் வேண்டும்! அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நேஷனல் பிக்சர்ஸின் ''பராசக்தி". ஆஸ்திகத்தை அழித்து, நாஸ்திகத்தை வளர்த்துவிடநினைத்து செய்யப்பட்ட முயற்சியான "பராசக்தி", நாஸ்திகம் நசித்து, ஆஸ்திகம் பலப்படவேதான் வழி செய்திருக்கிறது. ஆகவேதான், 'ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்' என்று குறிப்பிட்டேன்.
http://img.vikatan.com/news/2017/07/...asak_18013.jpg
ஏதோஒரு பராசக்தி கோயில் பூசாரி. கோயிலின் உள்ளேயே ஓர் அபலையைக் பலாத்காரம் முயற்சிக்கிறான் என்று கதை ஒன்றைக் கையாண்டு, அதை மனதில் கொண்டு வசனங்களை எதுகை மோனை பிராஸங்களுடன் 'தீட்டி', கடவுளை மனம் கொண்ட மட்டும் தூஷணை செய்யப்படுகிறது இப்படத்தில். இதைப் பார்த்து, வெறுப்புற்று ஆஸ்திகர்கள் நாஸ்திகர்களாக மாறி விடுவார்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களின் எண்ணமாயிருக்கலாம். ஆனால், அது வீண் கனவாக முடிந்ததோடு மட்டுமின்றி ஆஸ்திகத்தை பலப்படுத்தி விட்டது. 'எத்தகைய பதிதனாயினும், இவ்வளவு அக்கிரமமான காரியத்தை தெய்வ சன்னிதியில் செய்யத் துணிவு கொள்ள மாட்டான்' என்பது அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல; ''அடடா, நாம் இனி பிரதி தினமும் கோவிலுக்குப் போயாக வேண்டும். அப்படிப் போனால் தான் எங்காவது பதினாயிரம் இடத்தில் ஓரிடத்திலாவது இப்படி நடப்பதாயிருந்தாலும் அதைத் தடுக்க முடியும்" என்ற எண்ணம் தான் நிலைத்து அவர்களது ஆஸ்திகமனப்பான்மை ஸ்திரப்படுகிறது. இந்த ஒரு ''பராசக்தி"யில்லை; இதை விட விஷமப் பிரசாரம் நிறைந்த படங்கள் அநேகம் வந்தாலும் நம் மக்களின் ஆஸ்திக மனத்தைக் கலைத்துவிட முடியாது!
'பராசக்தி வெறுங் கற்சிலை' என்று அழுத்தம் திருத்தமாக' பிரசாரம் செய்கிறார் கதாசிரியர். ஆனால், படக் கதையிலேயே பல இடங்களில் பல்டி அடித்திருக்கிறார். பராசக்தியின் சன்னிதியிலே கல்யாணியைக் கற்பழிக்க முயன்றானே பூசாரி, அவனால் அது முடிந்ததா? பூசாரியின் தயவிலே ஜீவனம் நடத்தும் அவன் கையாள், சரியான தருணத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து, அலட்சிய மணியை அடிக்க - அதனால் பூசாரியின் காரியம் கைகூடாமல் போக வழி செய்தது பராசக்தியின் அருள்தானே. அது மட்டுமா? பூசாரி உடலெல்லாம் ரண காயம் ஏற்பட்டு ஊர் சிரிக்க உயிர் தப்பினான். 'தெய்வம் நின்றுதான் கொல்லும்' என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?
கல்யாணி ஆற்றுப் பாலத்திலிருந்து குழந்தையைக் கீழே வீசுகிறாள். அதே தினம், அதே நேரம் விமலா உல்லாசப் படகில் வருகிறாள்; வீசி எறியப்பட்ட குழந்தை தவறாமல் அந்தப் படகில் வந்து விழுகிறது; அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததும், ஒரு சிறு காயம் கூடப் படாமல் குழந்தை உயிர் பிழைக்கிறது. - இதெல்லாம் பராசக்தியின் அருளில்லாமல் சாதாரணமாக முடியக்கூடிய காரியங்களா?
அருமைத் தங்கை கல்யாணி. அவள் கல்யாணத்திற்கு வர முடியாத அருமை அண்ணன்மார் மூவர், சிங்கப்பூரில் தவிக்கின்றனர். ஒருவன் மட்டும் பணத்துடன் கிளம்புகிறான். அதற்குள் தங்கை கல்யாணி ஒரு குழந்தைக்குத் தாயாகி, அதே தினம் கணவன், தந்தை இருவரையும் இழந்து கதியற்றவளாகி இட்லி சுட்டு விற்றுப் பிழைக்கிறாள். பணத்துடன் வந்த அண்ணன் குணசேகரன், சென்னை நகர் அடைந்து, ஒரு விலைமகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைப் பறி கொடுக்கிறான். பிறகு, காரியப் பைத்தியமாக மாறி தங்கையைத் தேடிவந்து, தான் இன்னாரென்று காட்டிக்கொள்ளாமலே அவளுக்கு உதவி வருகிறான்.
http://img.vikatan.com/news/2017/07/...kthi_18502.jpg
காமுகன் ஒருவனது செயலினால் கல்யாணி அங்கு விட்டுக் கிளம்பி, ஒரு பிளாக்மார்க்கெட் பேர்வழியிடம் சிக்கித் தப்புகிறாள். இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து நடையிலேயே கிளம்பிய சந்திர சேகரன், ஞானசேகரன் ஆகிய மற்ற இரு சகோதரர்களும் வழியில் குண்டு வீச்சு சமயம் பிரிந்து விடுகின்றனர். தமிழ்நாட்டை அடைந்த சந்திரசேகரன் நீதிபதியாகி விடுகிறான். ஞானசேகரன், மூடவனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு புரட்சிப் பண்ண ஆரம்பிக்கிறான். பூசாரியினால் கற்பழிக்கப் படவிருந்த கல்யாணி தப்பி பசியால் துடித்த குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று கைதாக்கப்படுகிறாள்.
நீதிபதி சந்திரசேகரன் முன், அந்தக் குற்றவிசாரணை ஆரம்பமாகிறது. குற்றவாளி தன் தங்கை என் அறிந்த நீதிபதி மூளைக் கலக்கம் அடைகிறார். தங்கையைத் தேடிவந்த குணசேகரன் பூசாரி செய்ய நினைத்த அட்டூழியத்தை அறிந்து அவனை வாள் கொண்டு தாக்கி கைதாகிறான். வழக்கு நடைபெறுகிறது. குழந்தை உயிர் தப்பிவிடவே கல்யாணிக்கு விடுதலை கிடைக்கிறது; பூசாரியைத் தன் தற்காப்புக்காகவே தாக்கியதாக குணசேகரனுக்கு மன்னிப்புக் கிடைக்கிறது. குடும்பம் ஒன்று சேர கதை சுபமாக முடிகிறது. இதுதான் படக்கதை. கதையில் ஒரு புதுமையுமில்லை. படக் கதைக்கும் பெயருக்கும் 'குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும்' உள்ள சம்பந்தம்தான் இருக்கிறது. பராசக்தியின் மீது வசை புராணம் பாடப்படுகிறதே, அதற்காக இந்தப் பெயர் கொடுத்தார்களோ என்னவோ?
நாடகமாகப் பிரபலமானது இந்த "பராசக்தி" நாடகம் நடிக்கப்பட்ட போதே இந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டுமென கிளர்ச்சிகள் நடந்தது உண்டு. நாடகக் கதையை திரைக்கு ஏற்றபடி, முக்கியமாக கடவுளையும் சர்க்காரையும் சமூகத்தையும் தாக்கு தாக்கென்று தாக்க இடம் வைத்து - மாற்றி அமைத்திருக்கிறார் மு.கருணாநிதி. தமது உத்வேகத்தில் அதற்காக வரம்பைக் கூட கடந்து கீழ்த்தரமான அளவுக்குச் சென்றிருக்கிறார். பல நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிகொடுத்த - சூட்டும் கோட்டும் அணிந்த - படித்த நாகரிக வாலிபனுக்கு உடனே போலீஸில் புகார் செய்யத் தோன்றாதது ஆச்சர்யமே. இதற்காக அந்தப் பாத்திரம் கதையின் பின்பகுதியில் கூறும் சமாதானம் சிரிக்கத்தான் செய்கிறது. இறுதியில், நீதிமன்றக் காட்சியில் கல்யாணி மீதும், குணசேகரன் மீதும் வழக்கு நடக்கும்போது, மைனர் வேணு, பிளாக்மார்க்கெட் நாராயண பிள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்த விலைமகள் இவர்களெல்லாம் அங்கு எப்படி, ஏன் வந்தார்கள் என்பதைப் படம் பார்ப்பவர்களின் கற்பனா சக்திக்கே விட்டிருக்கிறார்கள்!
மக்கள் பக்தியுடன் காவடி எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கிண்டல் செய்யவே 'பாடைக் காவடி' எடுப்பதாக உள்ள கட்டம் புகுத்தப்பட்டிருக்கிறது. கதையின் தொடர்ச்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இது விஷமத்தனமான - விஷமான அறிவிலிகளின் செயலாகும். இதைவிட மக்களின் மனதைப் புண்படுத்தும், கீழ்த்தரமான குரூரமான கற்பனை இருக்கவே முடியாது.
இப்படத்தின் வசூல் வெற்றிக்கு ஒரு காரணம் படத்தின் வசனங்கள், உணர்ச்சி ததும்பும் நடையிலே படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் மு.கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை கடவுளை இழிவு படுத்தும் இடங்களிலும் சர்க்காரையும் சமூகத்தையும் விளாசும் கட்டங்களிலும் மட்டுமின்றி, படம் முழுவதிலுமே வசனங்கள் உள்ளத்தைத் தொடும் முறையில் இருக்கின்றன.
"இட்லி விற்றுப் பிழைப்பது தமிழ் நாட்டில் தாலி அறுத்தவர்களின் தாசில் உத்தியோகம்" என்கிறார் வசனகர்த்தா. அவருக்குப் பழக்கமான, அவருக்குத் தெரிந்த ஒரு சில விதவைகள்தான் உலகம் என்று நினைத்திருக்கும் அவரது குறுகிய நோக்கத்தையே இது காட்டுகிறது.
'பரஸ்திரீயை நாடிப்போவேன்' என்று ஒரு கணவன் சொல்லும்போது, 'நானும் வேறு புருஷனைத் தேடிக் கொண்டு போகிறேன்' என்று ஒரு ஸ்திரீ சொல்லுவது தமிழ்நாட்டுப் பெண்மணிகளையே அவமதிப்பதாகும் என்பதை தமது ஆவேசத்தில் வசன கர்த்தா மறந்து விட்டார் போலும்!
பைத்தியத்தின் வாயிலாக பஜனைகள் வருண ஜபம், காவடி எடுத்தல் இவற்றைப்பற்றியெல்லாம் பிதற்றவைத்திருக்கிறார். ஆம்; எல்லாம் ஒரே பிதற்றல்தான், அர்த்தமற்ற முறையிலே காந்திஜி செய்த காரியம் ஒன்றும் இழுக்கப்படுகிறது. “பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டர், ஏழு குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள், இந்தக் கதைகளைத் தடை செய்யாத அரசாங்கம் குழந்தையைக் கொல்ல முயன்ற கல்யாணியைக் குற்றம் கூறுவது தவறு” என்று வசனகர்த்தா கூறுவது அர்த்தமற்ற வாதம். அக்கதைகள், நடந்த காலத்தையும் அப்போதய சூழ்நிலையையும் பற்றி நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் அவருக்கே அது தெரியவரும்.
புதிய முகம் கணேசனைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ப்பட ரசிகர்களின் பாராட்டுதலுக்கு உரியவர்கள் நேஷனல் பிக்சர்ஸார். இப்படத்தில் நடிப்பில் முதல் ஸ்தானத்தை குணசேகரனாக வரும் கணேசனுக்குத்தான் அளிக்க வேண்டும். நல்லதொரு கதாபாத்திரத்தில் தோன்றி பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுவிட்டார் அவர். காரியப் பைத்தியமாக மாறும் கட்டத்திலிருந்து இவரது நடிப்பில் காணப்படும் விறுவிறுப்பு படிப்படியாக முன்னேறி, படத்தின் இறுதிக் கட்டத்தில் உச்சநிலையை அடைகிறது. வசனங்களை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சியுடன் பேசுகிறார். இவரது எதிர்கால வெற்றிக்கு இப்படம் நல்ல சூசனையாகும். சிற்சில இடங்களில் மட்டும் நாடக மேடை வாசனை வீசுகிறது.
நீதிபதியாக வரும் சஹஸ்ரநாமத்திற்கு படத்தில் அதிக சந்தர்ப்பங்கள் இல்லை யெனினும், உள்ளவரை வெகு நன்றாக நடித்துள்ளார். நீதிமன்றத்திலே, குற்றவாளி தன் தங்கை என அறிந்ததும் அவரது நடிப்புப் பிரமாதம். பிச்சைக்காரர்களை மகாநாடு கூட்ட அழைக்கும் சகோதரன் ஞானசேகரனாக வரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனது நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. தன் தங்கையைப் பற்றி அறிந்து துடிக்கும்போதும், இறுதியில் தன் குடும்பத்தினரைக் காணும் கட்டத்திலும் அவரது நடிப்பு மயிர்க்கூச்செறியச் செய்கிறது. நடிகர்களில் இம்மூவரைத் தவிர, மற்றவர்களுக்கு அதிகமாக வேலையில்லை. பிளாக் மார்க்கெட் நாராயண பிள்ளையாக வரும் வி.கே.ராமசாமி இப்படத்தில் தம் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். புஸ்தகங்களின் பெயரைக் கொண்டே இவர் கல்யாணியிடம் பேசுவதாக உள்ள இடம் தமாஷாக இருக்கிறது. ஆனால் அது உபயோகிக்கப்படும் கட்டம், புத்தக ஆசிரியர்களை இழிவு படுத்துவதாகவே படுகிறது.
நடிகைகளில் கல்யாணியாக வரும் ஶ்ரீரஞ்சனி நன்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன் தமையன்மார் கல்யாணத்துக்கு வராமை குறித்து வருந்தும் போதும், நீதிமன்றக் காட்சியில் வாதாடும் கட்டத்திலும் இவரது நடிப்பு நன்கு சோபித்துள்ளது . விதவையாக சித்தரிக்கப்பட்டுள்ள இவர் பாடாமலிருந்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது மேலும் இரக்கம் ஏற்பட்டிருக்க இடமுண்டு. தவிர படத்தின் விறுவிறுப்பும் பாதிக்கப்பட்டிருக்காது. குணசேகரனைக் காதலிக்கும் விமலாவாக பண்டரி பாய் கச்சிதமாய் நடித்திருக்கிறார். குணசேகரனுடன் வாதாடும் கட்டங்களில் உணர்ச்சியுடன் பேசி, நடித்திருக்கிறார், மற்ற பெண் கதா பாத்திரங்களுக்கு படத்தில் அதிகமாக வேலை இல்லை.
பாட்டுகள் அனைத்துமே கருத்து நிறைந்தவையா யிருக்கின்றன. முக்கியமாக "கா...கா...கா...", "தேசம் ஞானம்" ஆகிய இரு பாராட்டுகளையும் குறிப்பிட வேண்டும். பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாட்டையும் சரியான கட்டதில் பாட வைத்திருக்கிறார்கல். பாட்டுகள் யாவும் இனிமையாகப் பாடப்பட்டுள்ளன.
ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்திகரமாக உள்ளன. ஒலி - ஒளிப் பதிவுகள் தரமாயிருக்கின்றன. முக்கியமாக ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய முறையில் இருக்கிறது. ஆடம்பரமான ஸெட்டுகள் எதுவுமில்லை.
உறுதி ஏற்கிறோம் !
----------------------------------
இசைக் கச்சேரி
நடந்து கொண்டிருக்கும்.
ஒரு பாடல் முடிந்து
அடுத்த பாடல் வருவதற்கான
சில நிமிஷ இடைவெளியில்
தாள வாத்தியங்கள் அதிரும்...
தந்தி வாத்தியங்கள்
அதீதமாய் சுண்டப்படும்.
ஊதல் வாத்தியமொன்று
யானைக் குரலில் பிளிறும்.
ஏதோ ஒன்றில்
எதையோ வைத்து அடித்து
உடுக்கையொலி போன்றதொரு ஒலி
எழுப்பப்படும்.
காதில் வந்து மோதும்
எந்தச் சத்தமும்
ஒரு முழுமையோடு வாராது
நாராச இரைச்சலாய்ப் பாயும்.
அடுத்த பாடலுக்கான
ஒரு சுருக்க ஒத்திகைதான் அது
என்பது புரிந்தாலும்
அது என்ன பாடலென்று
சத்தியமாய்ப் புரியாது.
திடீரென்று மேடையும், சபையும்
மொத்தமாய் அமைதியாகும்.
ஒரு மேடைக் குரல்
" ஒன்.. ட்டூ ..த்ரீ " சொல்ல..
ஒரு ஊதல் வாத்தியத்திலிருந்து
" உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலின்
துவக்க இசை இனிமையாகப் புறப்பட...
மனதின் ஆழத்திலிருந்து
ஒரு கனத்த சோகம்
பந்தாய் மேலெழும்பி
கண்ணீர்த் தொட்டி உடைத்து
மேலெங்கும் ஈரப்படுத்த...
பதினாறு ஆண்டுகளாய் நடக்கிறது
இந்தப் பரிதாபக் கதை.
*****
அய்யா... நடிகர் திலகமே!
உங்களுக்கான
எங்கள் பரிதவிப்பும், சோகமும்
சட்டென்று வெளிப்பட்டு
தீர்ந்து போகிற உணர்வுகளல்ல.
அவைகள்..
ஜென்மங்களுக்கு இடையே நீளும்
நமது அன்புப் பாலம்.
இதோ...
எங்களூர்ச் சுவர்கள்
உங்கள் திருவுருவம் தாங்கிய
சுவரொட்டிகளைப்
போர்த்திக் கொள்ளத் துவங்கி விட்டன.
பசை வாளிகளோடு
பின்னிரவில் துவங்கிய
எங்கள் சிங்கங்களின் பயணங்கள்
வெயிலடிக்கும் காலையிலும்
முடிந்தபாடில்லை.
அவனது சுவரொட்டிகளில்
அய்யனே...
உங்களைப் போற்றும்
வாசகங்கள்.
ஆண்டவனே...
என் தலைவனைத் திருப்பித் தா என
உங்களுக்கான யாசகங்கள்.
கொடுமையாய்க் கடந்து போன
இந்தப் பதினாறு வருடங்களில்
அவன் உங்களைக்
கொஞ்சமும் மறக்கவில்லை.
மறக்க மாட்டான்.
சிவாஜி ரசிகன்
சாமர்த்தியசாலி.
காலம் குணசேகரனைச் சாகடித்தால்
அவன் ராஜசேகரனை உயிர்ப்பிக்கிறான்.
கட்டபொம்மனைக் கொன்றால்
ராஜராஜ சோழனைக்
கொண்டு வருகிறான்.
வியட்நாம் வீடு பத்மநாபனை
வீழ்த்தினால்
ஆனந்த பவனம் ரவிக்குமாரை
எழுப்புகிறான்.
ரகுராமனை ஒளித்து வைத்தால்
ராஜனை வைத்துக்
கண்டுபிடிக்கிறான்.
சிவாஜி ரசிகன்
சாமர்த்தியசாலி.
*****
அய்யா...
உங்களை இழந்த
உங்கள் ரசிகர்கள்...
உங்கள் தொண்டர்கள்...
சோர்ந்திருக்கலாம்.
சோகித்திருக்கலாம்.
செயலற்றுப் போய்விடவில்லை.
நீங்கள்
எங்களுக்கு
நீங்கள் தோன்றும்
காட்சிகளை மட்டும் காட்டவில்லை.
வாழ்க்கையைக்
காட்டியிருக்கிறீர்கள்.
காசோ.. வார்த்தையோ..
அள்ளி விடுவதல்ல அழகு..
அவசியத்துக்கு உபயோகிப்பதே
அழகென்று காட்டியிருக்கிறீர்கள்.
என்னத்தையாவது பேசி
அரசியலில் ஜெயிக்கக் கூடாது..
எண்ணத்தின் தூய்மையே
அரசியலென்று காட்டியிருக்கிறீர்கள்.
"முன்னே போகிறேன்.. பின்னே வா.."
என்று கடந்து போகாமல்
எங்கள் முன்னோடியாய்
நடந்து காட்டியிருக்கிறீர்கள்.
பலத்த காற்றுக்கு விரிகிற
புத்தகப் பக்கம் போல
எளிமையாய்.. யதார்த்தமாய்
நல்ல மனசு காட்டியிருக்கிறீர்கள்.
உங்கள் ரசிகர்கள் அனைவருமே
நடிப்புத் தொழில் செய்கிறவர்கள் அல்ல..
ஆனால்...
அவரவர் தொழிலில்
உங்களைப் போலவே
உண்மையான ஈடுபாட்டுடனிருக்க
வழி காட்டியிருக்கிறீர்கள்.
இதோ...
நீர் தளும்பும்
எங்கள் விழிகளுக்கு நேரே
உங்கள் திருவுருவப் படம் இருக்கிறது.
உண்மையை மட்டுமே
பேசத் தெரிந்த
உங்கள் உதடுகளிரண்டும்
சிரிக்கிறது.
விழி மூடிக் கரம் குவிக்கிறோம்.
உளமார உறுதி ஏற்கிறோம்.
உங்கள் வழியில் செல்வோமென்றும்,
உங்களைப் போலவே வெல்வோமென்றும்
உறுதி ஏற்கிறோம்!
அடிதடி, வன்முறை
மறுப்போமென்றும்,
அறவழி வெல்லும் வரை
பொறுப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!
எங்கள் கண்களுக்கெட்டிய
தலைமுறை வரைக்கும்
உங்களைக் கொண்டு சேர்க்கப்
பாடுபடுவோம் என்று
உறுதி ஏற்கிறோம்!
நீங்கள் காட்டிய நல்வழியில்
நடப்போருக்கு
செருப்பாயிருப்போமென்றும்,
உங்களைத் தவிர்ப்போருக்கும்,
பழிப்போருக்கும்
நெருப்பாயிருப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!
தேசத்தின் பசியமர்த்தும்
சத்திய உணவுகள்
சமைப்போமென்றும்,
சீரும், சிறப்புமாய்
இங்கே
சிவாஜி தேசம்
அமைப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!
Nagarajan Velliangiri
நடிகர் திலகத்துக்கு அஞ்சலி. சென்னை வானொலியில்,நடிகர் திலகத்தின் கலந்துரையாடல்.
https://external.fybz1-1.fna.fbcdn.n...AIGguvx2k0PsqJ
Sivaji Ganesan - Rainbow FM 15-08-14
Nadigar Thilagam's interview in radio and television (audio track seperated) compiled
youtube.com
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...66&oe=5A0063B6
Loganadan Ps
உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, நம் காலத்தில், நம்மோடு வாழ்ந்த, ஒப்பற்ற கலைஞன் அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தின...ம் இன்று.
உலகறிந்த அவரின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் சொல்ல முனைவது முழுநிலவை வர்ணிக்க முனைவதற்கு ஒப்பானது. அவர் குடத்திலிட்ட விளக்காக அல்ல, குன்றிலிட்ட தீபமாகத் திகழ்ந்தார் என்றால், அது அவரின் ஒப்புவமையற்ற நடிப்புத் திறமையால் மட்டுமே.
ஆரம்ப காலத்தில் அவருடைய நடிப்பு ஓரளவு மிகையாக இருந்ததை, 'மேடை நாடக அடிப்படையின் விளைவு' என அவரே சொல்லியிருக்கின்றார். ஆனால் காலத்துக்கு ஏற்றவாறு தனது நடிப்பை மிக,மிக இயற்கையாக மாற்றி, அனைவரையும் தனது நடிப்பால் அடிமைப்படுத்திய அவரது மாபெரும் திறமை விண்ணுயர்ந்தது.
அவர் தோன்றாத பாத்திரப் படைப்புக்கள் இல்லை, அவரின் நடிப்பால் அந்தப் பாத்திரங்கள் மெருகு பெறாமல் போனதுமில்லை. மிகச் சிறப்பாக, நாம் படித்து மட்டுமே அறிந்த, பார்த்திராத பல வரலாற்று, இதிகாச, புராண நாயகர்கள் அவர் உருவத்திலே நம் மனதிலே வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.
அப்பாவாக, அண்ணனாக, நண்பனாக, அதிகாரியாக, சேவகனாக - இப்படி அவர் தோன்றி அந்தந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டிய போதெல்லாம்..........,
சிரிக்கவும், சிந்திக்கவும், அறியவும், ரசிக்கவும், ஏன் பல நேரங்களில் தேம்பித் தேம்பி அழவும் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அவருக்குப் பெருமை.
(2000ம் ஆண்டு என நினைவு) சென்னை விமான நிலையத்தில், கொழும்பு வருவதற்காகக் காத்திருக்கிறேன். சற்று சமீபமாக சிறிய சலசலப்பு. திரும்பிப் பார்த்தால்...,
'கதர் சட்டை, கதர் வேட்டி, தோளில் கதர் துண்டு சகிதம், ஒரு காவல் அதிகாரியோடு வந்து கொண்டிருக்கிறார். 72 வயதின் முதிர்ச்சி தெரிந்தாலும், என்னை மாற்றிய அதே சிம்ம நடை. மிக அருகாமையில் வந்துவிட்ட அவரைப் பார்த்ததும், சடாரென்று எழுந்து வணக்கம் செலுத்துகிறேன். என்னைப் பார்த்து, தலை சாய்த்து, புன்முறுவலோடு கைகுவித்து வணக்கம் செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். போய் மறையும் வரை அவரைப் பார்த்துக் கொண்டே அசந்து போய் நின்றதை என்றும் மறக்கவே முடியாது.
தனிப்பட்ட முறையில், எனது பதினாறுகளிலேயே எனக்கு அவர் கற்றுத் தந்தது கம்பீரம் மிக்க நடை. அதில் நான் வெற்றி பெற்றி்ருக்கிறேன் என்பது அவருக்கு நான் தரும் ஆத்மார்த்தமான காணிக்கை.
அதைவிடவும் அவரின் பலவிதமான (ஸ்டைல்) முத்திரைகள் என்னைப் பாதித்தும், என்னோடு ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன. இவை அவரின் நடிப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியான பாதிப்புக்கள்.
இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை, நடிப்புக் கலை என்றால் அவரது பெயரே முதலில் நினைவுக்கு வரும் என்பதில் எள்ளளவேனும் ஐயமுமில்லை.
நடிகர் திலகமெனும் வரலாற்று நாயகனுக்கு ஆத்மார்த்த அஞ்சலியும், கோடி வணக்கமும்.
Ramiah Narayanan
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுதினம் !
அவர் ஏற்காத பாத்திரம் எது. அத்தனை கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டினார். சாதாரண கூலி தொழிலாளி முதல் நீதிபதிகள் வரை அவர் நடிப்பை வியந்து பாராட்டத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் பரம விரோதியாக இருப்பவர் கூட ஏதாவது ஒரு படம் தங்களை பாதித்ததையும், உண்மையில் சிறந்த நடிகர் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். வெள்ளாந்தி மனிதர், அவர் ரசிகர்கள் நடிப்பை ரசித்தாலும் புகழ்ந்தாலும், அரசியலில் வேறு பக்கம் நின்றனர். கண்மூடித்தனமான ரசிகர்கள் இவருக்கு கிடையாது.
விழி நடிக்கும், புருவம் நடிக்கும், கன்னம் துடிப்போடு நடிக்கும், அவர் முதுகுகூட நடிக்கும் என்பார்கள். வித விதமான நடைகளை காட்டியவர் உலகில் இவர் ஒருவர் தான் இருக்க முடியும். நல்லதொரு குடும்பம், நல் நண்பர்கள், உயிரைக்கொடுக்கும் ரசிகர்கள் என எல்லா செல்வங்களும் பெற்றவர் இந்த நடிப்புலக சக்ரவர்த்தி.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...27&oe=59FC9B19
Vijaya Srinivasan
· Calcutta
படித்ததில் பிடித்தது.. நடிகர்திலகம் அவர்களை பற்றி ..
சிவாஜி!!!
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும்.
ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
From Vikatan,
செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!
ஒரு பேட்டியில் சிவாஜியின் இறப்பைப் பற்றி கமல்ஹாசன் நினைவு கூறுகையில் அவரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை என்கிற ஆதங்கத்தை `சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுத்தே கொன்னுட்டாங்க' என்று மேற்கோள் காண்பித்து வருந்தியிருப்பார் .
சிவாஜியின் நினைவுநாளான இன்று, தமிழ் சினிமா அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா எனச் சிந்தித்துப் பார்க்கிறபோது கமலின் கூற்று, சற்று மிகையாகவேத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் சிவாஜி முதன்மையானவர். வித்தியாசம் என்பதையும் தாண்டி அவர் நடிப்புக்கான தீனியை அன்றைய இயக்குநர்கள் சமைத்துக் கொடுக்கவே செய்தார்கள். எழுதி வைக்கப்பட்ட கதைகளில் அவர் நடித்தார் என்பதிலிருந்து அவருக்காகக் கதைகள் எழுதப்பட்டன. சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் சிவாஜியின் பங்கும் இருந்தது என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும்.
தவிர, சிவாஜி இந்த மதிப்பீடுகளைத் தாண்டியவர். பாடல்கள் மட்டுமே முழு நீள சினிமாவாக வெளிவந்த காலத்திலிருந்து அதில் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று நவீன சினிமாவாகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது தன் ஆட்டத்தை தொடங்கியவர் சிவாஜி. வசனம் பேசி நடிப்பதே புதுமையாக இருந்த சமயத்தில் அவருடைய வசன உச்சரிப்புகளில் தமிழ் சினிமா அவரை உச்சி முகர்ந்தது. வாய்மொழியாகவும் ஏடுகளிலும் அறிந்துவந்த சரித்திர நாயகர்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் சிவாஜிக்கு முக்கியப் பங்குண்டு.
http://img.vikatan.com/cinema/2017/0...kthi_11559.jpg
அண்ணா, கலைஞர் போன்றோரின் அனல்பறக்கும் வசனங்கள்கொண்ட பகுத்தறிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதே சமயம் புராணங்களும் இதிகாசங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, படைப்பாளிகளின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகவே இருந்தார். அவரின் நடிப்புத்தன்மை தண்ணீரைப் போன்றது. எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவாகவே மாறக்கூடியவராக இருந்தார்.
மக்களின் துன்பங்களைப் போக்குபவராக, ஏழைப் பங்காளனாக, வெகுஜனங்களின் அபிப்பிராயத்தை வெல்வது மாதிரியான வசனங்களும், பாடல்களும், காட்சிகளும் அமைக்கப்பெற்று எம்.ஜி.ஆர் கோலோச்சிக்கொண்டிருந்தார். எம் .ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே இந்த மாதிரியான அதீத உணர்ச்சிக்கு இடம் வகுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தன. ஆனால், சிவாஜி முழுக்கவும் தன் நடிப்பாற்றலாலும் விதவிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் மக்கள் மனதை வென்றவர். தன் திரைப்படங்களில் கதாநாயகப் பிம்ப வழிபாடுகளை முன்னிறுத்தாமல் அவர் நடித்துவந்தது அவருக்குப் பிறகு வந்த நடிகர்களுக்கு ஒரு செயலூக்கத்தை அது அளித்தது.
பேசி நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்கு உதட்டை அசைப்பதிலும் இருக்க வேண்டும் என்பதில் தன்னை அறியாமலேயே ஒரு பாடமாக அவர் விளங்கினார். அவருக்கு முந்தைய காலத்தில் பாடலை சொந்த குரலில் பாடியவர்களே திரையிலும் பாடியதால் வரிகளுக்கு ஏற்றாற்போல் உதட்டை அசைப்பது சவாலானதாக இல்லை. அந்தச் சவாலில் முதல் தலைமுறையாக இருந்த அவர் சிறப்புற எதிர்கொண்டார். சொற்களின் அர்த்தத்தை முழுவதும் உள்வாங்கி வெறும் வாயை மட்டுமின்றி கண்களிலும் பாடல்களின் பொருளை வெளிப்படுத்தினார். சிவாஜியின் எந்தப் பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் இதை உணர முடியும். உதாரணத்துக்கு, சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அதைக் கேட்ட பிறகு மேற்கூறியதை இன்னொரு முறை வாசித்துப்பாருங்கள். ஓர் ஒற்றுமையை உணர முடியும்.
1) என்னை யாரென்று எண்ணி எண்ணி... (பாலும் பழமும்)
2) பொன்னொன்று கண்டேன்.. (படித்தால் மட்டும் போதுமா)
3) எங்கே நிம்மதி (புதிய பறவை)
4) தெய்வமே தெய்வமே (தெய்வ மகன் )
5) நீயும் நானுமா (கெளரவம்)
‘அவரின் நடிப்பு, யதார்த்தத்தைக் காட்டிலும் மிகையானது' என்றொரு கருத்து புழங்கி வருகிறது. சரியாக அணுகிப்பார்த்தால் மிகையான நடிப்பு என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், அவருக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் வைத்ததாகவே இருக்கும். காலத்துக்கேற்றாற்போல் ரசனைகள் மாறுவது தவிர்க்க இயலாதது. அந்த வகையில் முந்தைய தலைமுறை படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி செவ்வியல்தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படுவர் சிவாஜி என்பதில் ஐயமில்லை.
இந்த மிகை நடிப்பை இன்னொரு விதத்தில் ஆராய்கிறபோது அவர் திரை நடிப்புக்கு வந்த பின்புலத்தையும் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. படிப்பைவிட நடிப்பில் தன்னால் சிறந்து விளங்க முடியுமென்று நினைத்தவர் மிகச்சிறிய வயதிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு நாடக கம்பெனியை வந்தடைந்தார். “அப்பா அம்மா இல்லாத அநாதை" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாய்ஸ் கம்பெனியில் நாடங்களில் நடித்தார். பல ஆண்டுகால நாடக அனுபவத்துக்குப் பிறகே அவர் சினிமாவுக்கு வந்தார். கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கடையிருக்கைப் பார்வையாளனுக்கும் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதில் குரலை உயர்த்திப் பேசுவதும் மிகையான உடல்மொழியை வெளிப்படுத்துவதும் இயல்பானதே. அந்த மரபில் ஊறிப்போய் சினிமாவுக்கு வந்த சிவாஜி. அதையொற்றி இருப்பது ஆச்சர்யமில்லை. அதே சமயம் `சிவாஜியைப்போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களிடமும் இதே மிகை உணர்ச்சி நடிப்பு வெளிப்பட்டதா?' எனக் கேட்டால், இல்லைதான். ஆனால், அவர்களெல்லாம் சிவாஜி அளவுக்கு இன்றளவும் பேசப்படுகிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு மேலோங்கி இருந்தவரின் சமகாலத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் சிவாஜி. கட்சி அரசியலில் சேர்ந்து தன்னால் சோபிக்க முடியாவிட்டாலும், அரசியலில் இறங்குவதற்கு முன்பும் பின்பும் மக்கள் நலனில் அவர் அக்கறைகொண்டிருந்தார் என்பது அவர் பற்றிய செய்திகளை அறிய வருகிறபோது மறுப்பதற்கில்லை.
அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.
http://img.vikatan.com/cinema/2017/0...anan_11313.jpg
மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.
* 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.
* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.
* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.
*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.
நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.
நிஜவள்ளல் நடிகர் திலகத்தின் 151 வது
திரைக்காவியம்தேனும் பாலும்
வெளிவந்த நாள் இன்றுதேனும் பாலும் 22 யூலை 1971
https://i.ytimg.com/vi/g_qvF7-ys6w/maxresdefault.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...cLL4pVwrA1_tTw
Thambirajah Pavanandarajah
இன்று நடிகர் திலகம் அவர்களின் நினைவுநாளையொட்டி........ அவர் ஒருமுறை இலங்கை வந்தபோது பத்திரிகையாளர்கள் கேட்டபல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார் .அதிலிருந்து ஒரு கேள்வியும் .நடிகர் திலகம் அவர்களின் பதிலும் கேள்வி உங்களிடம் எல்லாத் திறமைகள் இருந்தும் உரிய விருதுகள் ஏன் உரிய நேரத்தில் அளிக்கப்படவில்லை ?அது இப்படிக்கேட்டா எப்படிப்பதில் சொல்வது அத வாங்கிற அளவுக்கு எனக்கு திறமையில்லேன்னு நினைக்கிறேன் .இப்பதான் திறமை வந்திருக்கலாம்.நான் நல்ல சரக்கா இருந்தா உள்ளுர்ல விலைபோகும் ...நம்ம சரக்கு எங்கையும் விலை போகல்ல இப்பதான் நமக்கு பக்குவம் வந்திருக்குன்னு நெனைச் சிருப்பாங்க போலிருக்கு அதான் கொடுத்திருப் காங்க .ஆஹா...கிடைத்துவிட்டதல்லவா?கிடைக்காம இருந்திருந்தால் சொல்லலாம் சேச்சே இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லலாம். என்னவோ நான் அதப் பற்றி நினைக்கவே இல்ல.. ஏன்னா நான் சின்ன வயசுல கொஞ்சம் சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ் உள்ளவன் .நான் பயப்படவே மாட்டேன்.எதுக்குமே ..என்னோட பிறப்பு ,வளர்ப்பு எல்லாமே சேர்ந்தது .அதேமாதிரி அவார்டு கிடைக்கலேன்னு நான் கவலைப் படறதேயில்லை சின்னப்புள்ளையில வெளியூர்ல போயி பெரிய அவார்டை யெல்லாம் வாங்கிக் கிட்டு வந்தவன் நான்.இந்தியாவிலே ஒரு ஓரத்திலே தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நடிகன் உலகத்திலே மிகச் சிறந்த விருதை எல்லாம் பெற்றுக் கொண்டு வந்திருக் கிறேன் .ஆகையால் உள்ளுர்ல விருது கிடைக்கவில்லையென்று நான் கவலைப்பட்டது இல்லை ஆனால் நான் நெனைக்காதபோதுதான் எல்லாம் நடக்கும் .அதுபோல இந்த அவார்டு வந்தது .அதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்? சின்ன வயசுல நான் மேயர் இன் அமெரிக்கா உங்களுக்குத் தெரியுமா?அமெரிக்காவில இரண்டே பேர்தான் மேயரா இருந்திருக்கிறாங்க ஒண்ணு இந்தியப் பிரதமர் நேருஜி .அடுத்தது உலகமே தெரியாத நான் ....ஒருகோல்டன் கீ கொடுப்பாங்க அந்த ஊரோடகேட் கீ .அதுபோல சின்ன வயசுல கெய்ரோவில இருந்து நாசர் அவார்டு கொண்டுவந்திருக்கேன் வேர்ல்ட் பெஸ்ட் அவார்டு அது .அதைக்கொண்டு வந்திருக்கேன்.பிரான்ஸ்லேருந்து ஒன்பது ஜட்ஜைப் போட்டு எனக்கு இந்த செவாலியே அவார்டைக் கொடுத்திருக்காங்க .இந்திய துணைக் கண்டத்தில இல்லாத அவார்டை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கிற ஒரு சாதாரண ஆளு.எங்க ஊர்ல எனக்கு புளிக்குழம்பு கிடைக்கலேன்னா கவலைப்பட்டுக்கிட்டு இருப்போம் ?சாம்பார் தின்னுகிட்டு இருப்போம் .குருமாவா தின்னுக்கிட்டு இருக்கோம் வருத்தமெல்லாம் எனக்கு இல்லீங்க தயவு செய்து தப்பா எடுத்துக் காதீங்க .(இந்தப் பேட்டி இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில். முன்னர்கடமையாற்றிய iதிரு இளையதம்பி தயானந்தா அவர்கள் எழுதிய! வானலையின் வரிகள் !என்ற நூலிலிருந்து பெறப் பட்டது அவருக்கு எனது நன்றிகள் )
Sivaji Rajesh SivajiRajesh
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களின் நினைவு நாள் முதியோர் இல்லத்திற்கு அண்னதானம் வழங்கப்பட்டது பவிழம் நகைக்கடை உரிமையாளர்,தலைமை சிவாஜி சக்திவேல்,விக்ரம்பிரபு மாவட்டத்தலைவர் ,சிவாஜி லோகநாதன்23-வது வார்டு தலைவர், வெள்ளிங்கிரி (Ex) Mc பறக்கும்படை ராஜ்குமார்,சிவாஜி திவாகர்,சிவாஜி சிவா,சிவாஜி கோப்பால்,அட்டோ குமார் வடகோவை,கோவை துல்லா,மாஸ்டர் நித்தின்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...46&oe=5A0DC27A
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...53&oe=5A119BD5
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...48&oe=59F97F35
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...23&oe=5A06CA59
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் நடிகர் சங்கமாக ஆகவேண்டும்!” கொந்தளிப்பில் சிவாஜி ரசிகர்கள்
எஸ்.கிருபாகரன்
‘இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.
அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.
நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.
http://img.vikatan.com/news/2017/07/...vaji_16030.jpgஇதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.
“கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.
இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.
“தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.
கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.
மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.
முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.
ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.
ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.
உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.
இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.
தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.
காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'
cinemavikatan
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் –
By Cinema Pokkisham -
July 21, 2017
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை.:—.. http://cinemapokkisham.com/wp-conten...inaiunal-1.jpg
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள்
21-7-2017 அன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், செயலாளர் விஷால், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் நடிகர் சங்க அலுவலகத்திலும்.,மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் திலகத்தின் சிலைக்கும் பிறகு
நடிகர் திலகத்தின் இல்லத்திற்க்குச் சென்றும் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். http://cinemapokkisham.com/wp-conten...naivunal-1.jpghttp://cinemapokkisham.com/wp-conten...RTUQAAAbhE.jpghttp://cinemapokkisham.com/wp-conten...-21-7-2017.jpg
சிவாஜி பேரவை சார்பில் அதன் தலைவர்
K . சந்திரசேகரன் தலைமையில் காலை 8 மணிக்கு
– சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாடவீதியிலுள்ள முதியோர் இல்லத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானமும்
காலை 9 .30 மணி க்கு.- சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர்திலகம் சிலைக்கு மாலை அணிவித்தும்
மரியாதை செலுத்தினர்கள்.
காலை 11 .00 மணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடிகர்திலகம் சிவாஜி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்கள்.
Shankar Muthuswamy
சிவாஜியின் பன்முகங்கள்:
அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு பாசமலர்.......
சகோதர பாசத்திற்கு ஒரு பழனி...........
நேசத்திற்கு ஒரு பார்த்தால் பசி தீரும்.........
மாறுபட்ட நடிப்பிற்கு ஒரு நவராத்திரி......
வீரத்திற்கு ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்........
பண்புக்கு ஒரு பாபு..............
நகைச்சுவைக்கு ஒரு சபாஷ் மீனா...........
வில்லன் நடிப்பிற்கு ஒரு திரும்பிப்பார்.......
தேச துரோகத்திற்கு ஒரு அந்தநாள்...........
தேசபக்திக்கு ஒரு ரத்த திலகம்.............
நேச ஒருமைப்பாட்டுக்கு ஒரு பாரதவிலாஸ்..........
மர்மத்திற்கு ஒரு புதிய பறவை...........
சந்தேக கணவனுக்கு ஒரு தெய்வ பிறவி.......
மித்ர துரோகத்திற்கு ஒரு ஆலயமணி.......
வெறுக்கவைக்கும் நடிப்புக்கு ஒரு கூண்டுக்கிளி......
ஆன்மீகத்திற்கு ஒரு ஆண்டவன் கட்டளை..........
நாதீகதிர்க்கு ஒரு மனிதனும் தெய்வமாகலாம்.........
கருணைக்கு ஒரு ஞானஒளி...........
தியாகத்திற்கு ஒரு அவன்தான் மனிதன்............
ஏழ்மைக்கு ஒரு நான் பெற்ற செல்வம்..........
செல்வசெழுமைக்கு ஒரு மோட்டார் சுந்தரம்பிள்ளை.............
கம்பீரத்திற்கு ஒரு கெளரவம்...........
குதூகல கொண்டாட்டத்திற்கு ஒரு கலாட்டா கல்யாணம்.......
பொறுப்புள்ள தந்தைக்கு ஒரு வியட்நாம்வீடு..........
கடமைக்கு ஒரு தங்கபதக்கம்........
நேர்மைக்கு ஒரு உயர்ந்த மனிதன்............
உழைபிற்கு ஒரு எங்க ஊர் ராஜா........
நட்புக்கு ஒரு கர்ணன்.............
இளமை காதலுக்கு ஒரு வசந்த மாளிகை...........
முதுமை காதலுக்கு ஒரு முதல் மரியாதை.......
வெகுளிதனதிர்க்கு ஒரு படிக்காத மேதை..........
அப்பாவிதனதிற்கு ஒரு ராமன் எத்தனை ராமனடி............
நடனத்திற்கு ஒரு பாட்டும் பரதமும்..............
நளினதிர்க்கு ஒரு உத்தம புத்திரன்..........
குடும்ப நல்லினதிர்க்கு ஒரு பாகபிரிவினை..............
மத நல்லினதிர்க்கு ஒரு பாவமன்னிப்பு.............
ராஜநடைக்கு ஒரு ராஜராஜ சோழன்............
சிங்க நடைக்கு ஒரு திருவருட்செல்வர்..............
ஜூலிஅஸ் சீசருக்கு ஒரு சொர்க்கம்............
ஒதல்லோவிர்க்கு ஒரு ரத்தத்திலகம்..............
சாம்ராட் அசோகனுக்கு ஒரு அன்னையின் ஆணை...........
பாரதியாருக்கு ஒரு கைகொடுத்த தெய்வம்..............
சிதம்பரனாருக்கு ஒரு கப்பலோட்டிய தமிழன்............
விகடதிற்கு ஒரு தெனாலிராமன்............
வாஞ்சிநாதனுக்கு ஒரு சினிமாபைத்தியம்................
பாதிரியாருக்கு ஒரு வெள்ளை ரோஜா...........
சமுதாய கொடுமைகளை சாடும் இளைகனாக ஒரு பராசக்தி..........
மாவட்ட ஆட்சியாராக ஒரு அவன் ஒரு சரித்திரம்.............
இன்னும்பல.................
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...86&oe=5A009606
Sekar Parasuram
நடிகர் திலகத்தின் தித்திக்கும் பாடல்கள்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ad&oe=59F5E187
தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு
நடிகர்திலகம் சிவாஜி 16 ஆம் ஆண்டு நினைவு நாள், தமிழகம் முழுவதும், 21 -07 -2017 அன்று,
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அனுசரிக்கப்பட்டது
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...da&oe=59F808F9https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0a&oe=5A0B9A3Ehttps://scontent.fybz1-1.fna.fbcdn.n...b5&oe=59F5B720https://scontent.fybz1-1.fna.fbcdn.n...32&oe=5A009A53https://scontent.fybz1-1.fna.fbcdn.n...33&oe=59FDC902https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8a&oe=59EF0EF7https://scontent.fybz1-1.fna.fbcdn.n...99&oe=5A037481https://scontent.fybz1-1.fna.fbcdn.n...18&oe=5A0F2C4Chttps://scontent.fybz1-1.fna.fbcdn.n...96&oe=59FB4F86https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ea&oe=59F9263A