உலகம் மாறிவிட்டதா
ஆமாம் ரொம்ப
உலகம் மாறவில்லையா
இல்லை கொஞ்சம் கூட
தேர்ந்த வக்கீலிடம்
என் மனக் குரங்கிடம்
ஒரு கேள்வியை கேட்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
Printable View
உலகம் மாறிவிட்டதா
ஆமாம் ரொம்ப
உலகம் மாறவில்லையா
இல்லை கொஞ்சம் கூட
தேர்ந்த வக்கீலிடம்
என் மனக் குரங்கிடம்
ஒரு கேள்வியை கேட்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
என யோசித்து
விவாதத்தில் கலந்துகொள்ளாமல்
இருப்பதை விட
கலந்து தீர்வு காண்பதே மேல்
பேசிக்கொண்டிருந்த தலைவரின்
செல்பேசி மெள்னமாயொலி எழுப்ப
பார்த்தால் மனைவியின் எண்..
பிற்கென்ன பேருரை சுருங்கியது..
சுருங்கியது தேகம் சூடான வார்த்தைகளால்
அமைதியான அரங்கத்தில் அழைக்கும் தூரத்தில்
அமர்ந்திருந்த நெருங்கியத் தோழன் தோழியை
சத்தம் போட்டழைக்க சங்கோஜப்பட்டு
செல்பேசி மூலம் திடுக்கிடச் செய்தேன்
அழைத்த ஓசையை அணைத்துவிட்டு
ஆருயிர்த் தோழன் உதிர்த்தான் தோழியிடம்
எழவெடுத்தவன் இவனுக்கு நேரங்காலமே தெரியாது
தெரியாது
நேரம் போவது
எவ்வெப்போது
கையில் ஒரு புத்தகம்
அருகில் காதல் துணை
திரையில் நல்ல படம்
கடற்கரைப் பொழுது
இணையத்தின் இணைப்பு
இனிப்பான தருணங்கள்
இதுபோல் எத்தனையோ
எத்தனையோ இடப்பாடுகள் தடுத்தாலும்
என் ஏற்றத்தின் படிக்கட்டு நீயே
எத்தனையோ இருப்பிடங்கள் தெரிந்தாலும்
என் அன்பின் அடைக்கலம் நீயே
எத்தனையோ பாதைகள் கடந்தாலும்
என் தேடலின் தடம் நீயே
எத்தனையோ கானங்கள் கரைந்தாலும்
என் ஆடலின் பாடல் நீயே
எத்தனையோ வெளிச்சங்கள் விழுந்தாலும்
என் கண்ணின் நிறப்பிரிகை நீயே
எத்தனையோ பருவங்கள் தொடர்ந்தாலும்
என் மண்ணின் மழை நீயே
எத்தனையோ வார்த்தைகள் உதிர்த்தாலும்
என் உயிரின் உள்ளர்த்தம் நீயே
எத்தனையோ தத்துவங்கள் உணர்ந்தாலும்
என் வாழ்நாளின் படிப்பினை நீயே
நீயே எந்தன் உயிர் என்கிறாய்
நூதனமாய் என்னை கொல்கிறாய்
அன்புச் சிறையில் மூச்சு முட்டுதே
காற்று புகா இடைவெளி காதலா
அது என் சுதந்திரத்தின் சாதலா
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறாய்
என்னிடம் உனக்கு மோகமா சந்தேகமா
எனக்கே எனக்கு கொஞ்சம் இடம் கொடு
இடம் கொடு என
எப்போது கேட்டாலும்
அழிச்சாட்டியம் ப்ண்ணுவான் கதிரேசன்..
அவனுக்கு கணேஷீடன் தான் இருக்கவேண்டும்..
மனமில்லாமல்
முன் பெஞ்ச்சில் அமர்ந்து கொள்வேன் பள்ளிக்காலங்களில்..
வருஷங்கள் பல செல்ல
ஒரு நன்னாளில்
பள்ளி சென்ற போது
நாங்க்ள் இருந்த வகுப்பு
பெஞ்சுகள் மாறாமல்..
என் முடியில் நரை, உடலில் மாற்றங்கள்..
கதிரேசனும் நினைவில் வந்தான்..
எங்கு இருக்கிறானோ..
போன வருடம் விபத்தில் மரித்த கணேஷும் நினைவில்..
நினைவு மயக்கத்தில்
பள்ளியின்வாசலுக்கு வந்தால்
ஒரு பெரியவர்..
இவர்..இல்லை இவன்..
கதிரேசன் வழுக்கை விழுந்து
முகச் சுருக்கம்..
அறிமுகப் படுத்திக் கொண்டு
மகிழ்ச்சி எண்ணங்க்ளில் நீந்தினால்..
கணேஷைப் பற்றிக் கேள்விப்பட்டதும்..
அவன் முகத்தில் வருத்தம்..
உனக்கு இடம் கொடுத்திருக்கலாம்டா..
அன்னிக்கு..ஏதோ..
வேறேன்ன சொல்ல முடியும்
சோகப் புன்முறவல் பரிமாறுவதைத் தவிர..
பரிமாறுவதைத் தவிர வேறு வேலைகளை
வேற்று ஆட்களிடம் கொடுக்கலாம் ஏனெனில்
சாப்பிடுபவன் பரிமாறும் கரங்களிடம் மட்டும்
சொக்கித்தான் போகிறான் பார்த்துப் பார்த்து
ருசியறிந்து பசியறிந்து பாவை பரிமாறினால்
பாங்காய் சமைத்திறக்கக் கற்காதவளும்
வயிற்று வழி சுருக்கப் பாதையில் சென்று
கொண்டவன் மனதிலே இடம் பிடிக்கலாம்
இடம் பிடிக்கலாம் முன்னாலேயே
என
சீக்கிரமாகவே
மீனாட்சி கோவிலுக்கு
கூட்டிச் சென்று விடுவாள் அம்மா..
உள்ளே சென்று
வேகமாய் தரிசித்துவிட்டு
ஆடிவீதி வந்தால்
கூட்டம் சேர ஆரம்பித்திருக்கும்..
அதிலும்
கொஞ்சம்முன்சென்று
அரைடிராய்ர் அணிந்த என்னுடன்
அமர்ந்து கொள்வாள்..
காலட்சேபம்
ராஜம் சீனிவாசனோ, வாரியாரோ..
யாராயிருந்தாலும்..
அவ்வ்ப்போது
காற்று சுகம் விசாரிக்கும்...
ஒருமணி நேரத்தில்
லேசாகப் பசியெடுக்குதோ என நினைத்தால்
குட்டிப் பையிலிருந்து
வேகவைத்த கடலை,
அல்லது வேறு ஏதாவது எட்டிப் பார்க்கும்..
சுவாரஸ்யமாயிருக்கும்
காலட்சேபமும் கடலையும்..
வீடு திரும்பினால்
லேட்டாய் வந்ததற்காக
அம்மாவிடம்
அப்பா நடத்தும் காலட்சேபம்
இன்னும் சுவாரஸ்யம்..
இந்தக் கால
காலட்சேப டிவிடிக்களில்
இல்லை அந்தச் சுவை..
சுவை அதிகம் கூட்டாஞ்சோற்றிலே
பாட்டி வீட்டு மொட்டை மாடியிலே
கட்டுச்சோற்றின் சுவை அலாதி இடம்
அழகர் மலை தேக்கடி வைகையணையெனின்
குழம்பு கூட்டு துவையல் சுவையோ சுவை
அம்மா தன் கையால் செய்து தரும் போது
தன்கையால் செய்து தரும்போது
தான்
உணவு ஒட்டும்
என
எவ்வளவு வேலை பார்த்தபோதிலும்
அம்மா
அவனுக்காகக் காத்திருப்பாள் சாப்பிடாமல்..
அவன் வந்தபிறகுதான்
அவனுக்குப் போட்டு பின் உண்ணுவாள்..
காலங்கள் மாற
அவனுக்கென்று ஒரு அவள் வர..
அம்மாவுக்குக் கட்டாய ஓய்வு..
என்ன புதுசாவா நடக்குது
திண்ணையில் படுத்தபடி
கொசுக்களிடம் பேசிக் கொண்டிருப்பாள்..
அவனுக்கும் அவனுடைய அவளிடம்
குறையொன்றுமில்லை..
அம்மா இருக்கும்போது எப்படியோ
அப்படியே நடக்கிறது என..
ஒரு நாள்
அம்மா கண்விழிக்கவேயில்லை..
அழுகையில்
“அம்மா யார்மா அன்பு கலந்து
தருவா எனக்கு” என
அவன் வெடித்துக் கதற..
அவளுக்கோ வியப்பு, அதிர்ச்சி..
அதிர்ச்சி அடைந்தது ஆழ்கடல்
நகர்ந்து கொடுத்தததன் அடி மடி
அம்மாடி குலுங்கியது பூலோகம்
பொங்கியெழுந்தது மலையாய் அலை
கொன்று குவித்தது கடற்கரையை
சுத்தம் செய்ய தேவையா சுனாமி
சுனாமி போலத் தான்
இருந்ததடா உன் வருகை..
விமான நிலையத்தில்
ஓ..ரொம்ப வெயில்லில்லை
எனச் சொல்லி
குளிர்கண்ணாடியைக் கழட்டி
என்னைப் பார்த்த உன் கண்கள்..
பின் கேட்ட கேள்வி..
ஏன் இளைச்சுப் போய்ட்ட..
உன் டாட் வந்திருக்காரா..
பின் காரில்
உடமைகளை ஏற்றி
வீடு செல்லும் வரை
உன் வேலை முதல்
உன் குடியிருப்பில் இருக்கும்
ஓமானியக் கன்னிகை வரை
வாய் வலிக்க வலிக்கச் சொன்னது...
அப்பாவிடம்
ஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி
அம்மாவிடமும் கை குவித்து
பாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..
எனச் சொல்லிக் கால் தொட
அம்மா கூச்சப் பட்டது..
மாடியில் உன்னறை எனக் காட்டிய போது
ஷ் என்னடா இது கழுத்தில..
என்னவெனத் தெரியாமல் நான் திகைக்க
பட்டென அணைத்துக் கொண்டது..
நான் திமிறி
ப்ளீஸ் விடுப்பா..
எனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல
ஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..
பொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து
நான் இறங்கி என்னறைக்குச் சென்றது..
பின் கழிந்த இரு நாட்கள்..
பேல் பூரின்னா மும்பை தான் டாட்
ஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..
சென்னை வாங்க
கச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்
கூட்டிப் போறேன்..
அப்புறம் நீங்க பாடுவீங்களாமே
எனக்கு மலய மாருதம் பிடிக்கும்
கண்ணனே நீவர்க்காத்திருந்தேன்..
டாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க
கண்டிப்பா கூடும்..
என
திறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச
அம்மா என்னிடம்
என்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்
உங்கப்பாவை டாட்ங்கறான்
எனத் திகைத்தது..
பின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை
என்னுடன் தனிமையைத் தவிர்த்தது..
நான் தான் உன்னை வம்படியாகத்
தனிமையில் இழுத்தேன்..
ஏய்..என்னது இது..
போடா..சும்மா சொன்னேன்..
சும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே
.
பின் வலித்த கன்னம்..
சென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை
முடிச்சுட்டு ஸ்டெரெயிட் மஸ்கட்..
எனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல
கல்யாணத்துக்கு..
இருக்கவே இருக்குவெப்காமரா..
காண்டாக்ட் பண்றேன்..
ச்சீ சீ..என்னது இது..
பச்சப் புள்ளயாட்டமா..
டாட் ஆண்ட்டி சொல்லப்படாதா
எனச் சொல்லிக் காட்டிய டாட்டா..
சுனாமி தாண்டா நீ..
போய்விட்டாய்..
என் நினைவுகளில் தடங்களைப்
பதித்து விட்டு
பதித்து விட்டுப் பார்
பொன்னிலே வைரத்தை
பொருத்தமான சேர்க்கை
பொறுமையோடு நம்பிக்கை
நம்பிக்கை விதைகளை ஊன்று
உரிமை மறுக்கப் பட்டாலும்
உழைப்பு சுரண்டப் பட்டாலும்
உதிரம் உறிஞ்சப் பட்டாலும்
உணர்வு நசுக்கப் பட்டாலும்
நம்பிக்கை விதைகளை ஊன்று
பட்ட மரம் பாலூறும்
பட்ட துன்பம் விட்டகலும்
துன்பம் விட்டகலும்
என மொழிந்தார் ஜோசியர்..
எப்போங்க..கேட்டான் அவன்..
எல்லாம் இந்த மாசம் முப்பத்தொன்றாம் தேதி..
மாசக்கடைசியில் சென்றால்
அவரில்லை..
போய்விட்டாராம் வானுலகு..
பலன் சொன்னது அவனுக்கா
அல்லது அவருக்கேவா..
தெரிய்வில்லை..
தெரியவில்லை பாம்பா கயிறா என்று
பாலா கள்ளா வெள்ளை திரவமிது
வலமா இடமா திசைகாட்டியில்லை
இது போல் குழப்பங்கள் ஏராளம்
எப்படித் தீர்மானிப்பதோ முடிவாக
ஏழாம் அறிவொன்று இருக்கிறதே
இருக்கிறதே ஏற்கெனவே
என்றெல்லாம்
யோசிக்கவே மாட்டாள்
கீழ் ஃப்ளாட் சிந்திப் பெண் சிந்துஜா..
பாத்திரம், நகை இன்ன பிற
எதுவானாலும்
இரண்டு தான் வாங்குவாள்..
அவள் கணவனும்
பெரிய உத்யோகம்
எனில் கவலை இல்லை..
நல்லதொரு நன்னாளில்
அவளுக்கு
தன்கணவனுக்கும் தன்
வழக்கம் வேறு வித்மாய்
இருப்பது தெரிய வந்தது..
இப்போது
ஒரு வக்கீல் தேடுவதகவும்
மேட்ரிமோனியலில்
இளம் விவாகரத்தான பெண்ணிற்குக்
கணவன் தேவை என்றும்
விளம்பரம் போட்டிருப்பதாகக்
கேள்வி!!
கேள்வி இருந்தால்
இருக்கும் பதில்
பூட்டுக்கு சாவி
ஆணுக்குப் பெண்
உடலுக்கு உயிர்
இயற்கை நியதி
இயற்கை நியதி இது
எனச் சொல்ல முடியும்..
அதில்
சீற்றங்களும் அடங்கும்..
காரணமும் சொல்லலாம்..
ஆனால் புரிவதில்லை
எப்போது ஏற்படுமென்று..
ஒருவேளை அது
காலத்தின் கணக்கோ..
கணக்கோ பௌதிகமோ
தமிழோ ஆங்கிலமோ
வேப்பங்காயாய் கசக்கும்
பரிட்சைக்காக படிக்கையிலே
பின்னாளில் கைகொடுக்கும்
பிள்ளைகள் படிக்கும் போது
சமைக்கப் பழக பிடிக்கவில்லை
அம்மா விடாது நச்சரித்த போது
பிடித்தது பதி பாராட்டுகையில்
பழம் பழுக்க நாளாகும் காத்திரு
காத்திரு என்று
சொல்லித் தான் செல்கின்றன
மேகங்கள்..
வருமோ வராதோ
என்ற தவிப்பில்
முழித்துக் கொண்டிருக்கிறது
நிலா
நிலா ஒரு நிகரில்லா பின்னணி
மொட்டை மாடியில் சோறுண்ண
கடற்கரையில் கூடி விளையாடிட
பஞ்சணையில் சதிபதி சரசமாடிட
பிள்ளைக்குக் கதை பல சொல்லிட
விவரிக்கவியலாத ஓர் வசியம்
வசியம் எனப்படுவது யாதெனின் தனக்கேற்ப
பிறரை ஆட்டு வைத்தல்.
வைத்தல் நல்லதென்றுஓர் நடிகர்
வாங்குங்கள் என்று ஓர் நடிகர்
வாங்காதே அக்கடையில் என்று ஓர் நடிகர்
இந்தக் கடை ராசி என ஓர் நடிகை
எல்லாரையும் புன்னகைத்தபடி
பார்த்துக்கொண்டே
ஸீ ஸா ஆடிக் கொண்டிருக்கிறது தங்கநகை..
தங்கநகை ஏதுக்கடி என் ஆசை தங்கமே
கையாலாகா ஆம்பளையா நீ மச்சானே
திருட்டுப்பய தீங்கு செய்வான் கண்ணே
உனக்கு இந்த மீசையெதுக்கு கன்ணாளா
பெட்டிக்குள்ள பூட்டிவைக்க நகையெதுக்கு
ரசிக்கத் தெரியாதவனுக்கு இது ஒரு சாக்கு
சேதாரம் செய்கூலி ஏமாத்து வேலையிருக்கு
உருக்கி ஊதி செஞ்சி தர முடியுமா உனக்கு
உன்னோட பேசி வெல்ல முடியுமா எனக்கு
அப்போ சட்டைய மாட்டு கடைக்குக் கிளம்பு
கிளம்பு என்றால் ஒரே அடம்..
அன்னிக்கே ஏன் வாங்கித் தல்லை..
வர மாத்தேன் போ..
வாடி செல்லம் எனக் கொஞ்சி கெஞ்சி..
அதே கடை..அதே கார்..காட்டினால்
ம்ஹீம் வேண்டாம்..
வேற இத்து..
வேணாம்டா நல்லா இல்லை..
ம்ஹீம்..இதான்..
சரி என வாங்கிக் கொடுத்து
திரும்பும் போது
பேசாமல் நான் வர
அப்பா..
ம்ம்
ஏன் பேசமாட்டேங்கற..
நீ பேட் கேர்ள்..
ஓகே இனிமே குட் கேர்ள்
வேணும்ன கடைல கொடுத்துடலாமா..
புத்திசாலி..மறுபடியும் பத்து நிமிஷம் திரும்பணுமா..வேண்டாம்..
ச்ரி தூக்கிக்கோ
பேட் கேர்ளத் தூக்க மாட்டேன்
ப்பா ப்ளீஸ்பா..
க்ண்சுருக்கிய அழகுக் கெஞ்சலில்
பாதி மயங்கி
தூக்கினால்..
பச்சக்.. ஓகேயா.. இப்ப சொல்லு..
நான் யார்..
குட் கேர்ள்..
சொன்னேன் முழு மயக்கத்தில்..
மயக்கத்தில் மூழ்கிவிடும் எனது மூளை
உள்ளும் புறமும் மறந்த ஆனந்த வேளை
பிடித்த காதாசிரியரின் புத்தகம் கையில்
பள்ளி நாட்களில் வேர் விட்ட என் பழக்கம்
யானை தும்பிக்கையில் சங்கிலியென்றதை
அம்மா செல்லமாய் திட்டியது மறக்குமா
திட்டியது மறக்குமா..
பல வருடங்களாயிற்று
நண்பன் தான் எனினும்..
அறிவே இல்லைடா
உனக்கு
என்னகாதல் வேண்டியிருக்கிறது..
முதல்ல படி..
பின் நல்ல வேலை..
அப்புறம் அவ இருந்தா பார்க்கலாம்..
படித்து முடிப்பதற்கு முன்பே
அவள் டாடா பைபை சொல்ல..
நான் முடித்து
இதோ கடல்கடந்து வந்து
நல்ல வேலையில்
இருபது வருடத்தையும் கடந்தாயிற்று..
அவனிடமும் இருந்து
மெல்ல விலகியாயிற்று..
ரொம்ப நாள் கழித்து
லீவில் சொந்த ஊர் போனதில்
அவனைப் பார்த்தேன்..
நரையைத்தவிர
அப்படியே இருந்தான்..
சிரித்தான்..
போடா பாவி..
ரொம்ப நாள் தாபத்தைக்
கக்கினேன்..
உன்னால் தான் நான்
என் காதலை மிஸ் ப்ண்ணினேன்..
நிறைய நாள் உன்னை
மனதில் திட்டியிருக்கிறேன் தெரியுமா..
எதுவும் பேசாமல்
என்னை மேலிருந்து கீழாகப் பார்த்தான்..
லாஞ்சைன்ஸ் கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி
பார்ஷே வாட்ச்..
விரலில் ஒன்றரைக் கேரட்
ஒற்றை வைர மோதிரம்..
வாசலில் நின்றிருந்த இன்னோவா..
கொழுக் மொழுக்கென
இருந்த, அவனது சோனி மகளுடன்
விளையாடிக் கொண்டிருந்த என் மகன்..
மனைவியின் டமாஸ் வளையல்கள்..
பின் என்னை
மறுபடியும் பார்க்க
அதில் பொதிந்திருந்தது பொருள்..
பொருள் விளங்காத விரல் சைகை
திரு திருவென விழிக்கும் கோமாளி
பழுத்த பண்டிதன் அவன் எதிராளி
பொருள் இதுவென நம்பிய ஏமாளி
பழைய திரைப்படச் சிரிப்புக் காட்சி
ரசிக்கத்தக்க நகைச்சுவைக்கு சாட்சி
சாட்சி தானே..
மேல இருக்கு பாரு..
வாசலுக்குத் தூக்கிக் கொண்டு போய்
காட்டுவாள் பாட்டி..
நிலா சிரிக்கும்..
பாரு.. என் தோசையை
அது மாதிரி இல்லை..
பிய்த்து மிளகாய்ப்பொடியில்
தொட்டு ஊட்டி விடுவாள்..
அரை டஜன்
வாய் பேசாமல் உள் செல்லும்..
ம்ம்
பாட்டி நினைவு நாளான இன்று
அவள் நினைவலைகளில்
மூழ்கியபடி தோசை வார்த்து
சற்றே மறந்து விட்டேன்
தீய்ந்த வாசனை வர
சற்றே பதறி
சமையலறையில் பார்த்ததில்
நல்லவேளை
முக்கால் வாசி சிவந்தே இருக்க
கீழ்வட்டப் பகுதி மட்டும்
பாட்டியின் தாடை மச்சம் போல
இருந்தது
சற்றே கறுத்து..
கறுத்துப் போன உதடுகள் சொன்னது
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதென்று
கன்னக்கதுப்பும் தொந்தியும் காட்டியது
குடிப்பழக்கம் உறுதியாய் இருக்கிறதென்று
கண்களின் விகார கீழ் பார்வைகள் கூறியது
கண்டிப்பாய் இவன் ஒரு காமுகனென்று
பெண் பார்க்கும் படலம் ஒன்று முடிந்தது
கன்னி நிராகரித்தாள் மாப்பிள்ளையை
மாப்பிள்ளையைப் பார்த்துக்கடி
மைனாக்குட்டி..
அப்போது பிரபலமான்பாடலை
அடிக்கடி பாடுவான் அவன்.. ரங்கன்
ஒவ்வொரு முறையும்
பள்ளிக்கு பச்சை மஞ்சள் சீருடையில்
செல்லும் போது..
கோபம் வரும்
கடங்காரா
என பலவிதமாய்
கொடுப்பேன் சாபம்..
பள்ளி முடிந்து
கல்லுரி சென்ற போது
என் வீடும் மாறியதால்
அவனைப் பார்க்கவில்லை..
ஒரு நாள்
கோவிலில் பார்த்த போது
அவனுடன் ஒருத்தி
கட்டை குட்டையாய்
கொஞ்சம் கிளிமூக்காய்
ஏகப் பட்ட நகைகளுடன்
அவன் பணிவாய்..
என்னை ஒரு கணம் பார்த்துவிட்டு
பார்க்காதது போல் இருக்க..
எனக்கு
வந்தது சிரிப்பு பீறிட்டு..
பீறிட்டு வருவது அழுகையா சிரிப்பா
எதுவானால் என்ன மறைக்க வேண்டாமா
கைக்குக் கிடைத்தது உன் முந்தானையா
கழுத்தை சுற்றிக் கிடக்கும் துப்பட்டாவா
எதுவானால் என்ன எடுத்து வாயை மூடு
அந்தரங்கம் பிறர் அறியாமல் திரை போடு
திரை போடு
பெரிய குருக்கள் சொல்ல
சின்னவர் திரையை மூட..
ஓடி வந்த அவன் நின்றான்..
அச்சச்சோ மூடிடுத்தா..
கண்ணை மூடி கொஞ்சம் தியானித்து
பெருமாளே காப்பாத்து..சொல்லி
பின் விரைய
சென்றவனின் பின்னால்
தொடர்ந்தார் பெருமாள்..
பெருமாள் பிச்சை எடுப்பாராம்
பிடுங்கித் தின்பாராம் அனுமார்
பெரியோர் கட்டிக் காப்பார் தர்மத்தை
பலனை அனுபவிப்பர் பின் சந்ததிகள்
சந்ததிக்ளின் நன்மைக்காகத்
தான்
இந்த தான தர்மங்களெல்லாம்..
புன்சிரிப்புடன் சொன்னார் வள்ளல்..
அப்போது
நீங்கள் செய்த பாவங்களெல்லாம்..
பதில் சொன்னார் வள்ளல்..
என் சொத்துக்களான புண்ணியம்
அவர்களை போய்ச்சேரும் நேரிடையாக..
பாவங்கள் எனது கடன் போல..
என்போன்ற மானிடரால் பிரிக்க இயலாது..
அவற்றைப் பிரித்து வழங்குவான்
மேலே உள்ளவன்..
மேலே உள்ளவனை என்ன செய்யலாம்
அவனுக்கு திமிர் அலட்சியம் அதிகம்
கொட்டுகிறான் குப்பையை ஜன்னல் வழியே
வருந்துது என் தோட்டத்து கண்மணிகள்
கண்மணிகளுடன் இமை
ஒட்டிக் கொண்டாற்போல் பிரமை..
மருந்து விட்டுச் சென்று
அரை மணி இருக்குமா
என்னவெல்லாம் குரல்கள் வெளியே..
எனக்குப் பதினொரு மணி அப்பாய்ண்ட்மெண்ட்
உறுதியாவா.
கொஞசம் இருங்கள்
கம்ப்யூட்டரில் செக் பண்ணுகிறேன்
ரிசப்ஷனிஸ்டின் குரல்..
அந்த ஆர்தோபீடிஸ்ட் எந்த அறை..
நீங்கள் முதல் மாடி செல்லவேண்டும்
மீண்டும் அவள் குரலே..
நான் கண்ணைத் திறக்கலாமா நர்ஸ்
பக்கத்தில் எனக்கு முன்னமேயே
கண்ணை மூடியிருந்தவரின் குரல்...
கொஞசம் இன்னும் ஐந்து நிமிடம்..
மெல்லிய பதில்..
வெளியில்
ர்ரென்று சப்தம்
ஆட்டோவா பைக்கா..
செல்வேறு சத்தம் போடுகிறது
என்னால் எடுக்க இயலாது
யாராய் இருக்கும்
அவள் தான்
இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்
எனக் கேட்பாள்..
என்னால் எடுக்கமுடியும்
பார்க்க முடியாதே..
அப்பாடி நின்று விட்டது..
மறுபடியும் கொய்ங்க்
இதுஎஸ் எம் எஸ்
அவளாகத் தான் இருக்கும்..
காத்திருக்கட்டும்..
ஒருவழியாய்
கண்ணைத் திறங்க சார்..
குரல் வர
பிசுபிசுத்த கண்களை
சற்றே சிரமப்பட்டுத் திறந்தால்
முதலில் மசமசப்பாக
பின் தெளிவாக..
ஆஹா உலகம் எவ்வளவு
பிரகாசமாய்..
ம்ம்
இருட்டில் தான் தெரிகிறது
வெளிச்சத்தின் அருமை..
அருமையாய் போற்றி
வளர்த்தார் அப்பா
அதை இவரிடம் நான்
எதிர்பார்த்தால் தப்பா
அவர் மகளை பொத்தி
வளர்க்கிறார் அருமையாய்
அவள் அதையே நினைப்பாள்
பின்னாளில் ஒரு தாரமாய்
என் தாய் இன்றும் ஓயாமல்
போற்றுகிறார் தந்தையை
பேத்தியும் செய்வாள் இதை
என்னென்பது இவ்விந்தையை