Originally Posted by
sivaa
70 வதுகளில் எனக்கு தழிழ்நாட்டை சேர்ந்த
இல .நல்லதம்பி (திண்டுகல்)
எஸ் .செல்வராஜ் (நாகர்கோவில்)
டீ .எத்திராஜூலு (சென்னை)
ஆர் .ராஜ்குமார் (போவி தெரு; பெங்கழூர்)
அனந்தராஜ் (அருப்புகோட்டை)
ஆகிய நண்பர்களுடன் கடிதத்தொடர்பாடல் மூலம் நடிகர்கள்கள்திலகத்தின் பட விபரங்கள் பத்திரிகைகள்
நோட்டீஸ் மலர்கள் முதலியனவற்றை பரிமாறிக்கொண்டேன்.காலப் போக்கில் பல நண்பர்களுடன் தொடர்பு அற்றுப்போய் கடைசியாக
அருப்புக் கோட்டை நண்பர் ஆனந்தராஜ் அவர்களுடன் தொடர்பு இருந்ததுநாட்டப்பிரச்சினையில் அதுவும் அற்றுப்போய்விட்டது.
(மேலே குறிப்பிட்டுள்ள நண்பர்கள் எவரையேனும் திரு செல்வராஜ் தவிர hub நண்பர்களுக்கு தெரியுமாயின் அறியத்தாருங்கள்)
அண்மையில் இந்தியா வந்திருந்த பொழுது திரு செல்வராஜ் அவர்களை கன்னியாகுமரியில் சந்தித்தேன் .
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவெனில்தொலைபேசி தொடர்பில் இருந்த hub நண்பர்களான திரு ராகவேந்திரா சார் திரு முரளி சார் ஆகியோரை சந்திக்க முடியாமல் போனதுதான்.அதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன்.இதுவிடயமாக திரு ராகவேச்திரா சாருடன் தொடர்பு கொண்டு விபரம் கூறியிருந்தேன். திரு முரளி அவர்களுக்குகோல் எடுத்திருந்தேன் ஆனால் தொடர்புகொள்ளமுடியவில்லை