குண்டு அடிக்கு முன் இருக்கும் அழகான தலைவர்
Printable View
லண்டனில் இருந்து திரும்பும் மகனை வரவேற்கும் காட்சியை மேனோ ஆக்டிங் செய்து காட்டுவது, உன் கையிலிருக்கும் மாலையை வாங்கி உன் கழுத்தில போட்டு இவர் தான் என் அப்பா நான் இந்த நிலைமைக்கு வர இவர் தான் காரணம் என்று அறிவிப்பேன் என்றும் சொல்லும் மகனை உச்சி முகர்ந்து கண்கலங்கும் அந்தக் காட்சி அத்தனை பேரையும் கலங்கடிக்கும்.
போலீஸ் வந்து குழந்தையை மீட்டுச் செல்லும் போது பணத்தால என் பாசத்தை விலைக்கு வாங்க முடியாது எனக்கு நீதி வேணும் எனக்குமுறும் காட்சி அடுத்த பிரேமிலேயே எனக்கு நீதி வேணும்னு கேட்டு தான் நான் இங்க வந்திருக்கேன் என்று நீதிமன்றத்தில் இருப்பதாக அமைந்திருப்பது அருமையான எடிட்டிங் நேர்த்தி.
அய்யா, எம்புள்ளைய பவள பஷ்பம் கொடுத்து வளர்க்கல பழைய சோற ஊட்டித்தான் வளர்த்தேன், போட்டுத்தான், தங்கத்தால செஞ்ச தொட்டில்ல அவனை நான் வளர்க்கவில்லை, இந்த பழைய மரத் தொட்டில்ல தான் போட்டு தூங்க வச்சேன், எம்பிள்ளை அனுபவிச்ச சுகம் எல்லாம் இவ்வளவு தான்யா, இதுக்கா பத்தாயிரம். பத்தாயிரம் என்ன பத்து லட்சம் கொடுத்தாலும் எம் பாசத்தை விலைபேச முடியாது, போங்க வெளியே எனக் குமுறும் காட்சி அதனைத் தொடர்ந்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துக் கொண்டு (இந்தப் புகைப்படத்தின் பிரதியைப் பெற நீண்ட நாள்களாக முயற்சிக்கிறேன். இது வரை கிடைக்க வில்லை. அவ்வளவு அழகாக இருக்கும் அந்தப் புகைப்படம்) புலம்பும் காட்சி அதன் பின் சரோஜாதேவியிடம் குமுறும் காட்சி என நடிப்புப் போட்டியே நடைபெற்றிருக்கும். சரோஜாதேவி, பேபி ஷகிலா, ஈடுகொடுத்திருப்பார்கள். நீதிமன்றத் தீர்ப்பால் தொடர்ச்சியாக பிள்ளை பாசத்தால் பித்து பிடித்த நிலையில் வீதியில் திரியும் குழந்தைகளை எல்லாம் கண்ணனாகக் கண்டு கல்லடிபட்டுக் கலங்கும் காட்சியில் நம் உள்ளங்களை எல்லாம் உருக்கி சோக நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தையே படைத்துவிடுகிறார் மக்கள் திலகம்.
ஜெய் சங்கர் சார்
இதை இப்பொழுது நான் படிக்கும் பொழுது கூட என் கண்ணில் தானாக கண்ணீர் வந்து விட்டது ஜெய் சங்கர் சார் உங்கள் விமர்சனம் சூப்பர் சார்
பி.வாசுவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் அமைந்தது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"வேலை கிடைச்சிடுச்சு", "நடிகன்" என 2 படங்களில் என்னை இரண்டு வித கேரக்டர்களில் வெளிப்படுத்திய டைரக்டர் பி.வாசு, குழந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் "ரிக்ஷா மாமா" என்ற படத்திலும் என்னை இயக்கினார்.
படத்தில் நான் ரிக்ஷா ஓட்டும் இளைஞனாக வருவேன், ஒரு பாடல் காட்சியில் "இது யாரு தந்த வண்டி... எம்.ஜி.ஆரு தந்த வண்டி" என்ற வரிகள் வரும்போது, 'எம்.ஜி.ஆர்.' என்ற இடத்தில் என் கண்கள் கலங்குகிற மாதிரி இருக்க வேண்டும் என்றார், டைரக்டர். அதனால் அந்த வரிகளுக்கு நான் நடிக்கும்போது கண்களில் 'கிளிசரின்' போட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.
"எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை நன்றியுடன் நினைக்கும்போதே யாருக்கும் கண் கலங்கி விடும். நானும் அவரது அன்புக்குரியவர்களில் ஒருவன்தானே" என்று சொல்லி விட்டேன்.
அந்தக் காட்சி படமாகும்போது நிஜமாகவே என் கண்கள் கலங்கி விட்டன. டைரக்டர் உள்பட யூனிட்டில் உள்ளவர்கள் என்னை இதற்காக பாராட்டியபோது, 'இது நடிப்பல்ல. நிஜமான உணர்வு' என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருந்தார்கள்.
டைரக்டர் பி.வாசு "சின்னத்தம்பி" படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததால் எனக்கும் உள்ளூர ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது. சின்னத்தம்பி படத்தின் வெற்றி விழாவுக்காக 50 ஊர்களில் விழா எடுத்தார்கள், டைரக்டர் பி.வாசு, பிரபு-குஷ்பு, டெக்னீஷியன்கள் என ஒரு பெரிய குழுவே இதற்காக ஊர் ஊராக பயணப்பட்டது.
பாண்டிச்சேரியில் நடந்த நூறாவது நாள் விழாவுக்கு நான்தான் தலைமை தாங்கினேன். தியேட்டர்களில் இடம் போதாது என்பதால் அரசியல் கூட்டங்கள் நடக்கிற கிரவுண்டில் விழா நடத்தினார்கள். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அப்போதே என் மனதிலும் நம்ம படத்துக்கும் இப்படி ஊர் ஊராக விழா, திருவிழாக்கூட்டம் என்று சென்று வர வேண்டும் என்றொரு ஆசை துளிர்விட்டது. மனதின் ஆசைகளுக்குத்தான் எல்லையே இல்லையே!
"ரிக்ஷா மாமா" படம் முடிந்து ரிலீசான அதே நாளில்தான் ரஜினி நடித்த "மன்னன்" படமும் ரிலீசானது. இரண்டுமே பி.வாசுவின் டைரக்ஷனில் உருவான படங்கள். இரண்டுமே வெற்றிப் படங்கள்.
பி.வாசு தனது "என் தங்கச்சி படிச்சவ" படத்தின் வெற்றி விழாவுக்கு என்னையும் விஜயகாந்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார். "வேலை கிடைச்சிடுச்சு" படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார். "நடிகன்" வெற்றி விழாவுக்கு கமல் வந்திருந்தார்.
"ரிக்ஷா மாமா" வெற்றி விழாவின்போது பல ஜாம்பவான்களை அழைக்க இயக்குனர் விரும்பினார், டைரக்டர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா மூவரையும் அழைத்து 'விழா'வுக்கு தனி சிறப்பு சேர்த்தார்.
"ரிக்ஷா மாமா" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தாயார் பெயரில் 'கமலம் மூவிஸ்'என்ற பட நிறுவனத்தை பி.வாசு தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களிடம் அவர் மாதிரியே தாய்ப்பாசமும் அதிகமாக இருக்கும். வாசுவின் அப்பா எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக இருந்தவர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு அவர்களுக்கு நல்ல ஐக்கியம் இருந்தது. எம்.ஜி.ஆர். தனது தாயாரை எந்த அளவுக்கு போற்றி மகிழ்ந்தார் என்பது தெரிந்ததால், வாசு தனது பட நிறுவனத்துக்கு தாயார் பெயரை வைத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.
பி.வாசு இப்படி சொந்த கம்பெனி தொடங்கி தயாரிக்கும் முதல் படத்திலேயே என்னை ஹீரோவாக போட விரும்பியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என்னிடம் 3 கதைகளின் 'அவுட்லைன்' சொன்னார். "இதில் எந்தக் கதை பிடிக்கிறதோ அதை பண்ணுவோம்" என்றார். மூன்றுமே பிடித்திருந்தாலும், போலீஸ் அதிகாரி பின்னணியில் அமைந்த கதை அதிகம் ஈர்க்க, அதை என் விருப்பமாக சொன்னேன். அதுதான் "வால்டர் வெற்றிவேல்".
படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார் வாசு. ரஜினி கிளாப் அடிக்க, விஜயகாந்த் முதல் காட்சியை இயக்கினார், பிரபு கேமராவை 'ஆன்' பண்ணினார்.
முதல் நாள் படப்பிடிப்பில் பி.வாசுவின் அப்பாவும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான மேக்கப்மேனாக இருந்தவருமான பீதாம்பரம் தான் எனக்கு 'பொட்டு' வைத்தார். மேக்கப் போடும் முன்னாக இப்படி பொட்டு வைப்பது வழக்கம். பொட்டு வைக்க அவர் விரல் என் நெற்றியைத் தொட்டபோது எனக்குள் ஒரு சிலிர்ப்பு. எத்தனை தடவை மேக்கப் போடுவதற்காக எம்.ஜி.ஆரை தொட்ட கை!
திரு.ஜெய்சங்கர் சார், உங்கள் விமர்சனம் மிகவும் அற்புதம். லண்டனில் இருந்து குழந்தை திரும்புவதை வரவேற்பது போன்ற காட்சியை விவரிக்கும் தலைவரின் நடிப்பை நேற்று நானும் குறிப்பிட்டு கண்கள் அருவியாகும் என்று கூறியிருந்தேன். அந்தக் காட்சியை நீங்களும் சகோதரர் யுகேஷ் பாபுவும் குறிப்பிட்டிருப்பது நம் அனைவரின் எண்ண ஓட்டமும் ஒன்றுதான் என்பதை காட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகளை படிக்கும்போது நானும் கண் கலங்கினேன். மறுபடியும் என் கருத்துக்களை பதிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்