கருவின் கரு - 192
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரிசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் ----------
https://www.youtube.com/watch?v=7qqKkfyhvAw
Printable View
கருவின் கரு - 192
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை - ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் , இளவரிசிகளாகவுமே வளர்க்கப்படுகிறார்கள் ----------
https://www.youtube.com/watch?v=7qqKkfyhvAw
கருவின் கரு - 193
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
எங்கிருந்தோ அந்த பெண் மானின் துணையான ஒரு ஆண் மான் ஓடி வந்தது - குறிவைத்த வேடனனின் அம்புக்குத்தன்னை பலியாக்கிகொண்டது - பார்த்துக்கொண்டிருந்த புலி அங்கிருந்து ஓடிவிட்டது .. வேடனையும் மின்ன தாக்கியது - அவனால் அந்த இறந்து கிடந்த மானை எடுத்துச்செல்ல முடியாமல் அங்கிருந்து அகன்று விட்டான் .
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. தந்தை செய்த ஒரு மாபெரும் தியாகம் அந்த பிறந்த மானுக்குத் தெரிய வாயிப்பில்லை . தன் குட்டி ஒரு புறம் , தன்னை காப்பாற்றிய கணவன் ஒரு புறம் --- பெண் மான் வாடியது .
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
இம்மானிடம் இருந்து இந்த மானிடம் கற்றுக்கொள்வதென்ன ?
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். தந்தை மான் தியாகம் செய்யாவிடில் எல்லாமே அங்கு அழிந்திருக்கும்
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி , மற்றதை தந்தைப்போல் இருக்கும் இறைவனிடம் விட்டு விடுங்கள்.. - நம் தந்தையைப்போல தியாக சிந்தனை நமக்கும் இருந்தால் நம்மால் பலருக்கு வாழ்வு கொடுக்க முடியும் .
https://youtu.be/UQVM44VTL9g
https://youtu.be/mV9faql_I6Y
கருவின் கரு - 194
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
தந்தையை தெய்வமாக மகன் கருதும் பருவம்
https://youtu.be/gjlCDqHd4FU
https://youtu.be/ScnsHvkTfIY
பெருந்தலைவரின் 113 ஆவது பிறந்த நாள்.
http://i.ytimg.com/vi/xU2iN2oMF0g/maxresdefault.jpg
https://youtu.be/psNH1lcohvk
திரு காமராஜரை நினைவில் கொண்டு வரும் நடிகர் திலகத்தின் என்றும் அழியாத பாடல்கள்
https://www.youtube.com/watch?v=_TQqVSwWd1A
https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU
வாசு சார்,
மோகம் அது முப்பதுநாள் பதிவை இன்றுதான் சார் பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும். பணி நெருக்கடிகளோடு, மெல்லிசை மன்னர் மறைவால் நேற்றிலிருந்து மனசே சரியில்லை. நம்மால் நேசிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வரமுடியாத இடத்துக்கு விடைபெற்றுச் செல்லும்போது இதுதான் இயற்கை நியதி என்று என்னதான் அறிவு விளக்கினாலும், உணர்வு அதை ஏற்க மறுக்கிறது. இதயம் கனக்கிறது.
மேலும், கல்தூண் பதிவை அன்றே பார்த்தாலும் பெரிதாக இருக்கிறதே பின்னர் படிப்போம் என்று தள்ளிப்போட்டேன். இன்றுதான் அதையும் படித்தேன். வெளுத்து வாங்கி விட்டீர்கள். (இன்னும் ராகவேந்திரா சாரின் அற்புதராஜ் படிக்கவில்லை. மன்னிக்கவும். விரைவில் படித்துவிடுவேன்) இனிமேல் அந்தப் பாடலையும் அதில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பையும் இதற்கு மேலும் யாரும் விவரிக்க முடியாது. உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன்.
கலைஞர் திரு.கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியாக நான் ஏற்கமாட்டேன். என்றாலும், நீங்கள் குறிப்பிட்டது போல அவர் மீது தனிப்பட்ட மரியாதை மற்றும் கலைத் திறமை மீது மதிப்பு எனக்கு உண்டு. உங்களுக்கும் உண்டு என்று கூறியதற்கு நன்றி. அதுதான் திறமை எங்கிருந்தாலும் மதிக்கும் தமிழனின் பண்பாடு.
பிள்ளையோ பிள்ளை படம் பார்த்து விட்டு, தனது ரிஸ்ட் வாட்சை முத்துவுக்கு பரிசளித்து, ‘‘தனக்கென்று தனி பாணியை முத்து உருவாக்கிக் கொள்ள வேண்டும்’’ என்று மக்கள் திலகம் சொன்னார். அதை திரு.முத்து அவர்கள் கேட்டிருந்தால் மேலும் சில ஆண்டுகள் தாக்குப்பிடித்திருப்பார். நல்ல குரல் வளம் கொண்டவர்.
மோகம் அது முப்பது நாள்... பாடலில் மக்கள் திலகத்தின் காப்பி சற்று தூக்கலாகவே இருக்கும். மிகவும் இனிமையான பாடலை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார். இசையரசியுடன் மேட்ச் ஆகி பாடுவது அருமை. நம்மை மட்டுமல்ல, எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்தான் இது.
//எது எப்படியோ எல்லாவற்றையும் மீறி இப்பாடல் என் மனதை எப்போதோ கொள்ளையடித்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் பாணியில் நடித்திருந்தாலும் மு.கமுத்துவும் இப்பாடலில் கவரவே செய்கிறார். அது ஏன் என்றும் புரியவில்லை. //
மக்கள் திலகம் பாணியில் நடித்ததுதான் கவர்வதற்கு காரணம். திரு.சத்யராஜ், திரு.ராமராஜன் ஆகியோருக்கெல்லாம் முன்பாகவே முதன் முதலில் மக்கள் திலகம் பாணியில் நடித்தவர் என்ற பெருமை பெற்றவர். ஓரிரண்டு படத்தோடு அதை விட்டிருந்தால் நிலைத்திருப்பார்.
நீங்கள் மேலே பதிவிட்டிருக்கும் திரு.முத்துவின் படம் சமையல்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நான் பாடிடும் கவிதையின் சந்தம்’ பாடலும் பாடகர் திலகத்தின் குரலில் அருமையான பாடல்தான். திரு.ராமராஜன் படங்கள் மாதிரி திரு.முத்து படங்களில் பாடல்கள் அமைந்துவிடும். அருமையான பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி சார்.
மங்கையரில் மகராணி, வெஜ்-நான் வெஜ் ஆகியவையும் சூப்பர். எல்லாருக்கும் வேலை இருக்கத்தான் செய்யும். அதையும் மீறி நேரம் ஒதுக்கி எல்லாரும் ரசிக்க அர்ப்பணிப்புடன் பதிவிடும் உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது.
வேலை அதிகம் இருந்தாலும் இழுத்து வந்து விட்டீர்கள். அதுதான் உங்கள் திறமை. மீண்டும் நன்றி சார்.
ரவி சார்,
உங்கள் பாடல்களும் பொருத்தமான புராணக் கதைகளும் என்ன சொல்லி பாராட்டுவது? (மன்னிக்கவும். இன்னும் படிக்க வேண்டியது இருக்கிறது. அப்படி அள்ளி வழங்கியிருக்கிறீர்கள்) ஒன்று நிச்சயம் சார் . எல்லா பதிவுகளிலும் உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது. ‘குட் மார்னிங்’ படங்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்? அட்டகாசம்.
திரு.ராஜேஷ், திரு.சிவாஜி செந்தில், திரு.குமார் சாரின் ஆவணப் பதிவுகள், திரு.யுகேஷ் பாபுவின் இணையத்திலிருந்து தேடி எடுத்த முத்தான பதிவுகள், திரு.ஆதிராமின் ஊக்கமூட்டும் பதிவுகள், திரு.ராஜ்ராஜ் சாரின் ஜூகல் பந்தி எல்லாமே அருமை.
முக்கியமாக, திரு.குமார் சாருக்கு திரு.ஆதிராமின் வாழ்த்தும் அதற்கு குமார் சாரின் நன்றியும் நான் ரசித்த பதிவுகள்.
கல்நாயக் எங்கே? கிருஷ்ணா சாரையும் ரொம்ப நாளா காணோமே?
நண்பர் திரு.சிவா அவர்கள் போட்டிருந்த பதிவு டெலிட் செய்யப்பட்டுள்ளது. மக்கள் திலகம், நடிகர் திலகம் திரிகளிலும் அப்படியே. திரு.சிவா அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கடுமையாக கருத்து கூறாதவர். என்ன பதிவு அது?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எங்க ஊர் ராஜா
இடது கையைதூக்கி அப்படியே இடது கால் தொடையில் ஒருதட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் தட்டல்
வலது கையை தூக்கி இடது கையின் மேற்புறம் ஒரு தட்டல்
அப்புறம் வலது கை இடது நெஞ்சின் மேலும் இடது கை வலது நெஞ்சின் மேலும் ஒரு தட்டல்
மறுபடி வலது கை இடது கையை தட்டல் இடது கை வலது கை மேற்புறம் தட்டல்.
ஒவ்வொரு கையும் மாறிமாறி தட்டும் போது காமிராவலது இடது என்று மாறி மாறி படம் பிடித்திருக்கும்.இது என்ன பெரிய விசயம் என்று கேட்கலாம்.(Scene continuity )காட்சியின் தொடர்ச்சி க்காக இடத்தின் கோணங்கள் மாறாமல்படம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் காட்சியின் தொடர்புகோர்வையாக இருக்கும்.கோணங்களில் மாறிமாறி படம் பிடிக்க வேண்டுமென்றால்காமிராவை வலது இடது என்று மாற்றி மாற்றி படம் பிடிக்க வேண்டும்.அப்போது நடிப்பவர் அதே இடத்தில் இருக்கும் நிலை மாறாமல்
அதற்குமுந்தைய கோணங்களில் சிறிதும் மாறாமல்நடித்தால் மட்டுமே அந்தக்காட்சி
சரியாக அமையும்.இப்போது அந்தக் காட்சியைப் பாருங்கள். அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு புரியும்.11 விநாடிகளுக்குள் இந்த அற்புதம் நடந்திருக்கும்.பின் இரு கைககளையும் சேர்த்து கை தட்டல் ஆரம்பமாகும்.அது படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடையும்.இந்தக்காட்சியே ரசித்துப்பார்ப்பவர்களின் மனம் பிரமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.கைதட்டலின் முலம் உலகில் சரித்திரம் படைத்த படம் இது ஒன்றே.
அடுத்து கை தட்டுவதை தொடர்ந்து வேகமாக தட்டி பின் சட்டென்று நிறுத்தி கண்களை விரித்து ஒரு விரலை வாயில் வைத்து உஷ்ஷ்ஷ் என்று சொல்லும்போது
பிரமை நிலை விடுபட்டு மொத்த திரையரங்கமும் நிசப்தமாயிருக்கும்.இதற்கு மேல் ஒரு நடிப்பா?இப்படி ஒரு நடிகனா?இவருடைய ரசிகனல்லவா நாம்.நம்மை கர்வம் கொள்ள வைக்கும் நடிப்பு.இந்த மாதிரி நடிப்புகளை ஒருவன் பார்த்துக் கொண்டு வரும்போது அவனுடைய ரசனையின் ஈர்ப்பு (வெறி)
அதிகமாகிக் கொண்டேதானே இருக்கும்.
யாரை நம்பி நான் பொறந்தேன்போங்கடா போங்க-என்காலம் வெல்லும்
என்று மீசையைமுறுக்கும் அந்த ஸ்டைல்
தளர்ந்து போனவர்களுக்கும் புத்துணர்ச்சி
ஊட்டும்.
வென்ற பின்னேவாங்கடா வாங்கன்னு கையை மேலும் கீழும் ஆட்டும்அந்த ஸ்டைலுக்கு அரங்கங்கள் அதிரும்.
!குளத்திலே தண்ணியில்லேகொக்குமில்லே மீனுமில்லே
இரண்டு கைககளையும் முன்னால் நீட்டி வளைத்து வளைத்து ஆட்டியபடி அவர் நடக்கும் நடை நாட்டியத்திலே தேர்ச்சி பெற்று பல வருடங்கள் அனுபவங்கள் பெற்றிருந்தாலும் நடந்து காட்ட முடியாத நடை(பத்மாசு ப்ரமணியம்போன்றோர்பல சமயங்களில் கூறிய கருத்துக்களை நினைத்துப் பார்க்கவும்)
பெட்டியிலே பணமில்லேபெத்தபுள்ளே சொந்தமில்லே!...
பீரோவின் அருகில் வந்து பணத்தைக் குறிக்கும் அந்தக் விரல்களின் சைகை அபாரமாயிருக்கும்.அந்த விரல் வித்தை சாகசம் பாடல் வரிகள் இல்லாவிட்டாலும் அர்த்தத்தை விளங்க வைக்கும்.
தென்னையைப் பெத்தா இளநீருபிள்ளையைப் பெத்தா கண்ணீரு
அதுவரைஎவ்வளவு தன்னம்பிக்கை தைரியத்துடன் காட்டிக்கொண்டிருக்கும் அவரது முக பாவனைகள் சட்டென்று
சோக த்தையும் கலந்து காட்டும். வாழ்க்கையின் இழப்புகளை அந்த சோகத்தில் பிரதிபலித்திருப்பார்.
பெத்தவவன் மனமே பித்தம்மாபிள்ளை மனமே கல்லம்மா
இந்த வரிகளின் முடிவில் சுயமரியாதை தலைதூக்கும்படியும் சோகத்தை அலட்சியப்படுத்தும்படியும் படியான உடல் மொழிகளையும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தியிருப்பார்.
!பானையிலே சோறிருந்தாபூனைகளும் சொந்தமடாசோதனையை பங்கு வெச்சாசொந்தமில்லே பந்தமில்லே!...
இப்பொழுது தன்னம்பிக்கை சோகத்துடன் சிறிது வெறுப்பையும் கலந்து கதம்ப மாலையாகஉணர்ச்சிகளை
காட்டியிருயிருப்பார்.
நெஞ்சமிருக்கு துணிவாகநேரமிருக்கு தெளிவாக
இப்பொழுது வயதானால் ஏற்படும் தடுமாற்றத்தை மறைக்க முயற்சிப்பதையும்
தைரியத்தை இழக்கவில்லை என்பதையும்
கலந்து உணர்ச்சிகளைவெளிப்படுத்துவார்.
நினைத்தால் முடிப்பேன் சரியாகநீ யார் நான் யார் போடா போ
இயலாமையும் தள்ளாமையும் சேர்ந்து கொண்ட நிலைமையில் கொஞ்சம் விரக்தியும் அடைந்த நிலை.எங்கிருந்து அந்த வேகம் வந்தது ?உட்கார்ந்து கொண்டிருப்பவர் திடீரென்று எழுந்து நடந்து வருவது வெறி பிடித்த வேங்கை போல் இருக்கும்.
ஆடியிலே காத்தடிச்சாஐப்பசியில் மழைவரும்தேடிவரும் காலம் வந்தாசெல்வமெல்லாம் ஓடிவரும்!...
முடிவில்
வேட்டியை தூக்கிக் கட்டுவதும்
சென்று சென்று திரும்பி வருவதும்
என்று நடிப்பு ராஜாங்கம் செய்திருப்பார்.
வருக வருக அரிமா செந்தில் அவர்களே - இது உங்கள் முதல் பதிவு இங்கு என்று நினைக்கிறேன் - வாசு அவர்களின் பதிவுகள் அனைவரையும் இங்கு வரவழைக்கும் சக்தி வாய்ந்தது . உங்கள் கடினமான உழைப்பை இந்த மதுரகானத்திலும் பார்க்க எங்களுக்கு ஒரு வாயிப்பு கிடைப்பதற்கு மிகவும் பெருமை படுகிறோம் .
From Thulabharam (Tamil) (1969)
poonchittu kannangaL.....
http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw
From the Malayalam original Thulabharam(1968)
omanathinkalin onam........
http://www.youtube.com/watch?v=2rC0tU_R8pg
From the Telugu version Manushulu marali (1970)
paappayi...
http://www.youtube.com/watch?v=jBWEL20NPbo
From the Hindi version Samaj ko badal dalo(1970)
Taaron ki charon....
http://www.youtube.com/watch?v=OVzxbRuJUEM
taaron .... Duet
http://www.youtube.com/watch?v=qVPvAOsckXg
Thanks RD for the link to the Hindu article on Thulabharam. I have posted the video clips I found. I am sure there are other Malayalam movies remade in other languages. Time for you to enlighten us ! :)
Ankil ragam was remade in tamil & telugu
i guess the hindi version was the original not sure(nutan kishore kumar)
https://www.youtube.com/watch?v=P2F9GJzNm2g
tamil- madham oru poo malarum from neelamalargal
telugu - anuragaalu - jaabili velige