-
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் அன்பான கருணை நெஞ்சத்திற்கு கடலளவு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'தானே' புயல் சீற்ற பாதிப்பிலிருந்து தங்களைப் போன்ற அன்புள்ளம் கொண்ட தூயவர்களின் அன்பினாலும், பிரார்த்தனையாலும் மீண்டு வந்து விட்டோம்.
தங்களின் மோகனப் புன்னகை மற்றும் அவன் ஒரு சரித்திரப் பதிவுகள் நிஜமாகவே சரித்திரப் பதிவுகள் தான். படிக்க படிக்க தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லால் துப்பறியும் நாவல் படிப்பது போன்ற விறுவிறுப்பு.
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் என்ற முறையில் அவரின் பட வெளியீடுகளின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவுகளாக நீங்கள் தரும் போது அது ஒவ்வொரு ரசிகருடைய மனநிலையை அப்படியே பிரதிபலித்து விடுவதனால் உங்கள் பதிவுகளை உலகப் பொதுமறையாம் திருக்குறள் போல பொதுப் பதிவாகவே தாராளமாய் எடுத்துக் கொள்ளலாம். அதை எழுத்து வடிவில் பதிப்பிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல. ரீலீஸ் தினத்தன்று தங்களுக்கு எப்படிப்பபட்ட மனநிலையோ அதுவேதான் எங்கள் எல்லோருக்கும்.
அதனால் தங்கள் ரீலீஸ் தினப்பதிவுகள் காந்தம் போல் எங்களைக் கவருகின்றன. ஒட்டுமொத்த திரியின் சார்பாக தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
அன்புள்ள பார்த்தசாரதி சார்,
'தூக்குத்தூக்கி' மற்றும் 'இரத்தத்திலகம்' பாடல் ஆய்வுக்கட்டுரைகள் மிக நன்றாக இருந்தன. அதில் 'பனிபடர்ந்த மலையின் மேலே' பாடல் ஆய்வு சற்று தூக்கலாக இருந்தது. வித்தியாசமாக அமைந்த மிகச்சிறந்த பாடல். எப்போதுமே இவர் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடுவார் எனினும், தேசியம் என்று வரும்போது தன்னையே மறந்துவிடுவார் என்பதற்கு இப்பாடலும் ஒரு சாட்சி.
படமாக்கத்தில் நெருடிய ஒரு விஷயம். இப்பாடலை நிஜமான ஒரு மலைப்பகுதியிலேயே படமாக்கியிருந்தால் (இமயமலைக்குத்தான் செல்ல வேண்டுமென்றில்லை, தமிழ்நாட்டிலேயே ஒரு மலைக்காட்டுப்பகுதியில் படமாக்கியிருந்தால்) இன்னும் கூடுதல் எஃபெக்ட் கிடைத்திருக்கும். திரையில் வரையப்பட்டிருக்கும் மலைகள் 'இது செட், இதுசெட்' என்று நமக்கு நினைவூட்டி கவனத்தை சிதறடிக்கும். அந்தக்காலத்தில் சாலை, தெரு, கடைகள், காடு, கடற்கரை என்று எல்லாவற்றுக்கும் செட் போட்டு செயற்கைத்தனத்தை அள்ளித்தெளித்திருந்தனர்.
தாங்கள் ஒவ்வொரு வரிக்கும் நடிகர்திலகத்தின் முகபாவத்தை ஆய்வு செய்திருந்த விதம் ரொம்பவே பிரமாதம். நீங்கள் சொன்னதுபோல பாடல் முழுவதிலும் ஒரு அமைதி அவர் முகத்தில் குடிகொண்டிருக்கும். மிக நல்ல ஆய்வு, பாராட்டுக்கள்.
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்கள் இதயத்திலிருந்து வெளிவந்த நிறைவான பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள். முந்தைய படங்களைவிட 'அவன் ஒரு சரித்திரம்' படவெளியீடு பற்றி சற்று விவரமாகவே எழுத வேண்டுமென்று ஆவலாக இருந்ததால், எல்லா சம்பவங்களையும் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதினேன். அதனால்தான் அபிராமியிலிருந்து அசோக்குக்கு மாற்றப்பட்டது, கிரிக்கெட்டைப் புறக்கணித்தது என்று எல்லாவற்றையும் சேர்த்தேன். பதிவு நண்பர்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
தங்கள் புத்தாண்டின் முதல் பதிவே, நடிகர்திலகத்தின் பொலிவான தோற்றத்துடன் பொம்மை இதழ் அட்டைப்படத்துடன் அமைந்து சிறப்பு சேர்க்கிறது. இளையதிலகம் பிரபுக்கு வாழ்த்துச்சொல்லும் முகமாக அவரது பல்வேறு சிறப்பு நிழற்படங்களையும், 'ஜெமினி சினிமா' வில் வந்த பேட்டிக்கட்டுரையையும் தந்து அசத்தி விட்டீர்கள். சந்தோஷமான பாராட்டுக்கள்.
அன்புள்ள சந்திரசேகர் சார் மற்றும் ராமஜெயம் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்களுக்கு என் நன்றி.
-
புயல் பாதிப்பிலிருந்து மீண்டு, புயலென பதிவுகளை அள்ளி வழங்கத் தொடங்கியிருக்கும் வாசுதேவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
-
டியர் பார்த்தசாரதி சார்,
'தூக்குத்தூக்கி' மற்றும் 'இரத்தத்திலகம்' பாடல் ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் அருமையாவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. நன்றி.
-
டியர் சந்திரசேகரன் சார்,
புயலினால் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த போது சிவாஜி சமூக நலப் பேரவை என்ற அமைப்பின் பெயருக்கேற்ப எங்கள் நலத்தில் அக்கறை கொண்டு, கைபேசியின் வழியே என்னை தொடர்பு கொண்டு, நிலைமைகளை தாங்கள் விசாரித்துத் தெரிந்து கொண்டு ஆறுதல் கூறியது தங்களின் அன்பின் அடையாளத்தையும், எங்கள் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையையும் காண்பிக்கிறது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களுக்கு. தங்கள் தலைமையில் பேரவை அமைப்பு பல சாதனைகளை நிகழ்த்தப் போவது திண்ணம். தங்கள் பரந்த உள்ளத்திற்கு என்னுடய மனப்பூர்வமான நன்றிகள்.
பதிவுகளுக்கான பாராட்டிற்கும் நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
Back with a Bang என்ற சொற்றொடருக்கேற்ப அட்டகாசமான புத்தாண்டு வாழ்த்துக்களோடு இங்கே பதிவிட்டிருக்கும் அன்பு வாசுதேவன் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்து தங்கள் அசத்தல்களுக்கென காத்திருக்கிறோம்.
நேற்று 06.01.2012 முதல் சென்னை மண்ணடி பிராட்வே திரையரங்கில் பிரஸ்டீஸ் ப்ரொடக்ஷன்ஸ் கௌரவம் தினசரி 3 காட்சிகளாக நடைபெறுகிறது.
அன்புடன்
-
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
நம் அன்பு பம்மலார் அவர்கள் புயல் பாதிப்புகளைப் பற்றி நமது திரியில் பதிவிட்டதும் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு கைபேசியின் வழியே நலம் விசாரித்ததற்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் கருணையினால் எந்தப் புயலும் தென்றலாய் மாறிவிடும். தங்கள் அன்பிற்கு என் மனமுவந்த நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் பாலா சார்,
தங்களின் அன்பும், எங்கள் மீது கொண்ட தங்கள் கொண்டிருக்கும் அக்கறையும் எங்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டன. எங்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்த தங்களின் அன்பிற்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறோம். நம் அன்புக்கடவுளின் அருளாசியும் தங்களைப் போன்றோரின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் எங்களுக்குத் துணை நிற்கையில் எங்களுக்கு மலை போல வந்த துன்பங்கள் யாவும் பனி போல விலகி விடுமே! உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் நன்றிகளைத் தங்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் சமர்ப்பிக்கிறேன்.
மிக மிக அரிய நிழற்படங்களைத் தந்து குதூகலிக்கச் செய்து விட்டீர்கள். அதுவும் கண்டசாலாவுடன் தலைவர் இருக்கும் ஸ்டில் அதியற்புதம். நன்றி.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் பாசப் பாராட்டிற்கு என் தலையாய நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.