http://i49.tinypic.com/vgc61.jpg
Printable View
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)
ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி
வாழ்கவென்றே ஆடுவோம்...
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்.... (உழைக்கும்)
CONGRATULATIONS
http://i48.tinypic.com/i42re8.jpg
MR. RAMAMOORTHI
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
http://i1273.photobucket.com/albums/...ps0da47f64.jpg
வேலூர் S.S .ராஜேந்திரன் தீவிர மக்கள் திலகம் MGR ரசிகர் அனுப்பிய தகவல் .
1984 மக்கள் திலகம் வேலூர் நகருக்கு வருகை தந்த போது நான் கோயிலுக்கு சென்று பின்னர் நேராக மக்கள் திலகத்தை சந்தித்த போது அவருக்கு குங்குமம் மற்றும் பிரசாதம் தந்தேன் .
மக்கள் திலகம் மகிழ்ச்சியுடன் நான் தந்த குங்குமத்தை பெற்று தந்து நெற்றியில் இட்டு கொண்ட எனது தெய்வத்தின் மாண்பினை என்னவென்று சொல்வது ?
நான் சாதாரண ரசிகன் . எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி குங்குமத்தை நெற்றியில் இட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனித தெய்வம் மக்கள் திலகம் பற்றி புகழ வார்த்தை இல்லை .