[QUOTE=mr_karthik;1147891]
கல்யாண ஊர்வலம் (1970)
super karthik sir
இந்த பாட்டின் இடையில்
மணிமால குரலில் சித்தப்பா என்று வருவது நல்ல நினவு
http://www.padangal.com/uploads/movi...983a8a7f0a.jpg
Printable View
[QUOTE=mr_karthik;1147891]
கல்யாண ஊர்வலம் (1970)
super karthik sir
இந்த பாட்டின் இடையில்
மணிமால குரலில் சித்தப்பா என்று வருவது நல்ல நினவு
http://www.padangal.com/uploads/movi...983a8a7f0a.jpg
http://i1.ytimg.com/vi/tdOJ7w0gVk8/m...jpg?v=5350f483
டியர் கார்த்திக் சார்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி!
'கல்யாண ஊர்வம்' படத்தின் 'கூந்தலிலே நெய் தடவி' பாடலை எளிமையாக, அழகாக ஆய்வு செய்து வழங்கியதற்கு நன்றி! சித்தப்பா, அண்ணன் மகள் டூயட் விளக்கம் ரசனைக்குரிய தங்களின் புதிய கண்டுபிடிப்பு.
திருமாங்கல்யம் அருமை
நெல்லை பூர்ணகல ரிலீஸ்
பாலாஜியின் அல்லக்கை ஆக ஸ்ரீகாந்த் வருவார் . அவர் அம்மா இறந்தது தெரியாமல் போலீசில் இருந்து தப்பிபதற்காக அவர் அம்மாவின் பிரேத உடலை (சினிமாவில் தான் ) சுமப்பது நல்ல நினைவு சார்
பயங்கர ரிச் movie ஆனால் ரீச் ஆகவில்லை மக்களிடம்
கலைச்செல்வி அம்மா அவர்களுக்கு விழா ஒன்று நடைபெற்றதாக நினவு உண்டு
பொம்மை மாத இதழில் நிறைய போட்டோ பார்த்த நினைவு
கிருஷ்ணா சார்,
வணக்கம்.
நேற்று
கண் காட்டும் ஜாடையிலே 'கன் பைட்' கண்டேன்:)
அந்த காவியத்தில் விஜி, விஜயஸ்ரீ, ஜோதியைக் கண்டேன்.:)
ரிச் ரீச். சாமியோவ். என்னா விளையாட்டு! மூச்!
1970-இல் வெளிவந்த 'ஏன்'? படத்தில் எனக்கு பிடித்த மிக அபூர்வமான பாடல்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இளைய குரல், தங்கக் குரல், குழைந்து குழைந்து குதூகலமூட்டும் இனிய குரலில் ஒலிக்கும் 'இறைவன் என்றொரு கவிஞன்' என்ற அருமையான பாடல். டி.ஆர். பாப்பாவின் இசை அமைப்பில் காலமெல்லாம் நம் நெஞ்சை வருடும் பாடல். ரவிச்சந்திரன், லஷ்மி ஆகியோர் நடித்த இப்படம் பெரிய ஹிட்டடிக்காமல் போனாலும் அற்புதமான பாடல்களால் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறது. பல பேர் இப்பாடலை கேட்டு மறந்திருக்கலாம். அல்லது பாடலை நினைவில் நிறுத்தி படம் என்னவென்று தெரியாமல் குழம்பலாம். இப்போது குழப்பம் நீங்கி விடும். பாடலைக் கேட்டவுடன். மனதில் உள்ள குழப்பமும் நீங்கி விடும். அவ்வளவு அருமையான வரிகள். கவிஞன் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்ததை கற்பிக்கும் பாடல். இறைவன் முதல் மனிதன் வரை அற்புதமாக எடுத்துக் காட்டுகளுடன் அருமையான தத்துவங்களை அழகுற சொல்லியிருக்கிறார் இப்பாடலில் கவிஞர். வரிகளை கவனியுங்கள். அதற்கு மேல் நம் செல்ல டி.ஆர்.பாப்பாவின் இசையமைப்பை கவனியுங்கள்.
'இறைவன் என்றொரு கவிஞன்'
அவன் படைத்த கவிதை மனிதன்'
கண்களில் தொடங்கி
கண்களில் முடித்தான்
பெண்ணிடம் பிறந்ததை
பெண்ணிடம் கொடுத்தான்
மண்ணிலே நடந்ததை
மண்ணுக்கே அளித்தான்
வானத்தில் இருந்தே
கவிதையை முடித்தான்
அடடா! வார்த்தை விளையாட்டுகள் விளையாடும் காலத்தை வென்ற கவிஞனே! என்னே உன் சிறப்பு.
பாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.
புரியும். மனம் தெளியும்.
http://www.youtube.com/watch?v=R5hj0...yer_detailpage
நேற்று இரவு சத்யா movies கன்னிப்பெண் 1969 பார்த்தேன் சார்
சன் லைப் தொல்லைகாட்சியில்
ஜெய்,வாணிஸ்ரீ,லக்ஷ்மி,நிர்மலா,சிவகுமார்,மனோகர்,செந ்தாமரை,சோ,தேங்காய்,சுருளி,சகுந்தலா ஜி,ராமசாமி VKR நடித்து இருந்தார்கள்
ஜெய் உதவி ஆய்வாளர். லக்ஷ்மி மாமா மகள் ஆனால் அவரை திருமணம் செய்யாமல் வாணிஸ்ரீயை மணந்து கொள்கிறார். லக்ஷ்மி கன்னி பெண் ஆகவே இருக்கிறார் . மனோகர் VKR ஐ ஏமாற்றி அவருடைய வைரத்தை அபகரித்து கொள்கிறார். ஜெய் எல்லோருயம்
பிடித்து ஜெயிலில் போட்டு இறுதியில் தங்க மடல் வாங்குகிறார்
சிவா நடுவில் ஜெயில்க்கு போகிறார் கொஞ்சம் கோர்வை இல்லாமல் இருந்தது ஒருவேளை dvd problem இருக்கலாம்
ஆனால் மெல்லிசை மன்னரின் இசை கலக்கல்
1.'ஒளி பிறந்த போது இங்கே உயிர்கள் பிறந்ததம்ம' tms ஈஸ்வரி குரலில்
2.'அடி ஏண்டி அசட்டு பெண்ணே உன் உள்ளத்தில் யாரடி கண்ணே '
சுசீலா ஈஸ்வரி குரல்களில் (சூப்பர் சாங் )
3.பௌர்னமி இரவில் பனி விழும் நிலவில்
கடற்கரை மணலில் '
பாலா ஜானகி குரல்களில்
பாலா குரல் அருமைQuote:
பாடலை ஒவ்வொரு வரியாக அனுபவித்து பாருங்கள்.
புரியும். மனம் தெளியும்.
வருவாயா வேல்முருகா என் மாளிகை வாசலிலே
சரளா பாடல் ஏன் படத்தில் தானே சார்