http://i59.tinypic.com/2eoijcy.jpg
Printable View
இதய தெய்வம் நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 43 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 44வது ஆண்டு காணும் இந்த நாளை மறக்க முடியுமா ?
பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலுக்கு புகழாரம் சூட்டும் அவரது சிறப்புக்களை, இந்த பொன்னாளில் பதிவிடுவதில், பெருமிதம் கொள்கிறேன் :
1. மக்களின் மனதில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்
2. பொதுச்செயலாளர் பதவிக்கு மற்றவர்களை அமர வைத்து அழகு பார்த்தவர்
3. சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை மட்டுமே கண்டவர்
4. பக்தியுடன் கூடிய மரியாதை வைத்திருந்த தொண்டர்கள் கொண்டிருந்தவர்
5. தொண்டர்களை அரவணைத்தவர். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டவர்.
6. மக்களின் நலன் மட்டுமே பெரிது எனக் கருதி குளு குளு வாச ஸ்தலம் செல்லாதவர்
7. தனது காலத்தில் புதுவையில் ஆட்சி கண்ட புதுமைப்பித்தன். {அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதல் முதல்வர் என்ற பெருமையை புதுவை ராமசாமி அவர்களுக்கு வழங்கி பெருமை சேர்த்தவர். -
தான் நினைத்திருந்தால், 1974ல் கூட்டணி ஆட்சிக்கு வழி வகுத்து, அந்த கூட்டணி கட்சியின் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுக்க வைத்து அதன் மூலம்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெருமையை தான் அடைந்திருப்பார் }.
8. கட்சியின் மூத்த தலைவர்களை மதித்தவர் அமைச்சர்களை அவர்களது அலுவலக நாற்காலியில் அமரவைத்து தான் நின்று கொண்டு, அவர்களை வாழ்த்திய
பொன்மனம் கொண்டவர்.
http://i58.tinypic.com/24m9mq1.jpg
9. : பொய் என்பதையே அறியாதவர்
10. : மந்திரிசபையில் மந்திரிகளை மாற்றியது கிடையாது.
11. : இவரது ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தவர் கிரிமினல் குற்றத்துக்காக கைது செய்யப்படவில்லை.
12. : தொடர்ந்து முதல்வாராக, அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
13. : தனது பலத்தை மட்டுமே நம்பி மாபெரும் வெற்றி கண்டவர்.
14. : சட்டமன்ற தேர்தல்களில் தொகுதிக்கு செல்லாமலேயே படுத்துக்கொண்டே ஜெயித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு
15. : மக்களை எல்லா காலங்களிலும் சந்திப்பதில் பெரும் ஆர்வம் காட்டியவர்.
16. : அரசு விழாக்களில் சளைக்காது கலந்து கொண்டவர். நாட்டு மக்களுக்கு நற்பயனளிக்கும் திட்டங்களை துவக்கி வைப்பதில் பேரின்பம் கண்டவர்.
17. : ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல், நேர்மையான நெறியாளராக ஆட்சி புரிந்தவர்.