-
வாசு சார்,
இன்று நீங்கள் இடுகை செய்துள்ள பதிவுகள் அனைவர் மனங்களையும் சற்று நேரமேனும் கலங்க செய்யும். புயலின் கோர தாண்டவம் பற்றிய படங்களும் வீடியோ பதிவுகளும் புயல் உண்மையில் எப்படி மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது என்பதை நிதர்சனமாக காட்டுகிறது. விரைவில் அங்கே இயல்பு நிலை திரும்ப வேண்டுகிறேன்.
அன்புடன்
அதே போல் அன்னையை போல் ஒரு தெய்வமில்லை பாடலை வீடியோ வடிவில் வெளியிட்டு சுவாமியின் மனதிற்குள் ஒரு உணர்ச்சி பிரவாகத்தையே உருவாக்கி விட்டீர்கள்.
-
சாரதி,
உங்கள் பாடல் ஆய்வு கட்டுரைகளைப் பற்றி அனைவரும் பாராட்டி விட்டனர் என்று சொல்லும் போதே அதன் சிறப்பு என்னவென்று புரியும். ஆனால் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் சில பல மாதங்களுக்கு முன் இந்த திரியில் எழுத ஆரம்பித்த நேரத்தில் இருந்ததை விட உங்கள் எழுத்தில் நடையில் மெருகேறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த இரண்டு பாடல் ஆய்வுகளிலும் அது சிறப்பாக வெளிப்படுவதை காண முடிகிறது. பனி படர்ந்த மலையின் மேலே பாடலைப் பற்றிய உங்கள் விவரிப்பு அழகாய் அமைந்திருக்கிறது. நான் பல முறை இங்கே குறிப்பிட்டதுள்ளது போல தேசியத்தை தேசிய தலைவர்களை தமிழின் கடைகோடி மனிதனுக்கும் கொண்டு சேர்த்தவர் நடிகர் திலகம் என்ற கருத்துக்கு உரம் சேர்க்கும் வலு இந்த பாடலுக்கு உண்டு.
அடுத்த பாடலின் விவரிப்பை [அது என்ன பாடல் என்பதை நீங்கள் எனக்கு சொல்லி விட்டீர்கள் என்ற போதினும்] ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்/பார்க்கிறோம்.
அன்புடன்
-
டியர் ராதாகிருஷ்ணன் சார்,
தங்கள் அன்பிற்கும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உங்கள் உயரிய பிரார்த்தனைக்கும் என்னுடைய ஆழ்ந்த நன்றிகள். தங்களும்,தங்கள் குடும்பமும் நீடூழி வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
வாசுதேவன்
-
அன்பு முரளி சார்,
உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளங்களின் ஆசிகளினால் பெரும்பாலும் இயல்புநிலை திரும்பி விட்டது. தங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் என் சார்பாகவும், நெய்வேலி மக்கள் சார்பாகவும் நன்றி கூறக் கடமைப்பட்டவனாகிறேன். நன்றிகள் சார்.
அன்புடன்
வாசுதேவன்
-
தானே சுழன்றடித்து, தானே மக்களைத் துயரில் ஆழ்த்தி, தானே கழன்று கொண்ட தானே புயலின் பாதிப்பில் இருந்து மற்றவர்களை எதிர்பார்க்காமல், தானே மீள முயன்று கொண்டிருக்கும் மக்களுக்கு, குறிப்பாக, கடலூர் புதுவை மக்களுக்கு நமது அனைத்து நண்பர்கள் சார்பிலும் நமது ஆறுதலையும் அன்பையும் அவர்கள் எல்லா வளமும் மீண்டும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்தனையையும் தெரிவித்துக் கொள்வோம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் நம் அனைவரது சார்பிலும் உளமார்ந்த பிரார்த்தனைகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
http://www.nadigarthilagamsivaji.com...eaders/002.jpg
இன்று மறைந்த பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மறைந்த நாள். மறைமுக சதியால் இன்னுயிர் ஈந்த நாள். ஒழுக்க சீலராக நேர்மையின் திருவுருவாக வாழ்ந்த உத்தமரின் நினைவு நாள். அவருக்கு நமது நினைவாஞ்சலி
-
-
-
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
"தானே" புயல் ஏற்படுத்திய பாதிப்புகளைப் புகைப்படங்களாகவும் மேலும், அந்த அசுர கணங்களை வீடியோ வடிவிலும் தந்து, இயற்கையின் சீற்றம் என்ன என்பதையும், அது ஏற்படுத்திய விளைவுகளையும் புரிய வைத்துள்ளீர்கள். கடந்த வாரம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் சார்பாக புதுவை மற்றும் கடலூர் சென்று புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நிவாரணங்களை வழங்கும் பேறினை எங்கள் நிறுவனம் மூலம் பெற்றேன். புகைப்படம் மூலம் தாங்கள் அனுப்பிய கோரத் தாண்டவத்தை நேரிலும் பார்த்து சொல்லொணா துயரடைந்தோம்.
குறிப்பாக, மாலை ஆறு மணிக்கு மேல், பல இடங்கள் இருளில் மூழ்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க மனது பிசைந்து கொண்டே இருந்தது.
மக்களும் அத்தனை இடங்களும் மீண்டும் சகஜ நிலைக்கு விரைவில் திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். பெரும்பாலான இடங்கள் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தியைத் தாங்கள் தந்தது மகிழ்ச்சி தருகிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-