http://a8.sphotos.ak.fbcdn.net/hphot..._6099489_n.jpg
Printable View
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களது பதில் பதிவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
http://www.nadigarthilagam.com/image...%20Ganesan.jpg
உள்ளன்போடும் உள்ளுணர்வோடும் நடிகர் திலகத்திற்கு மரியாதை செய்தவர்கள் என்றைக்கும் மேன்மை அடைவார்கள் என்ற கூற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள அன்புச் சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும், புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி அவர்களுக்கும் நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
http://www.nadigarthilagam.com/image...yalalithaa.jpg
நடிகர் திலகத்தின் மறைவின் போது அரசு மரியாதை செலுத்தியது், அவர் நினைவாக சிவாஜி கணேசன் விருது நிறுவியது, மற்றும் மணிமண்டபத்திற்கு அரசு நிலம் வழங்கியது - இவற்றையெல்லாம் எந்த வித பிரதி பலனும் எதிர்பார்க்காமல் செய்தது இவற்றால் உயர்ந்து நிற்கும் சகோதரி ஜெயலலிதா அவர்கள்
http://www.nadigarthilagam.com/images12/NRPondy.jpeg
பெருந்தலைவர் காமராஜரையும் நடிகர் திலகத்தையும் தன் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட தோடு மட்டுமன்றி, நாட்டிலேயே முதன் முதலாக நடிகர் திலகத்திற்கு சிலை வைத்து மேன்மை பெற்ற அன்பு சகோதரர் ரங்கசாமி அவர்கள்
http://www.youtube.com/watch?v=3Fu0546rs1g
"பாத்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா ஞானத் தங்கமே,
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா...
சரணம்...
பொன்னும் பொருளும் மூட்டை கட்டி
போட்டு வெச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி
வெத வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி
எழுதி வெச்சாரு - ஈசன்
போட்ட கணக்கை மாத்தவில்லே
போய் விழுந்தாரு..."
- திருவிளையாடல் படத்தில் கவியரசர் கண்ணதாசன்
காதல் திலகத்தின் ரொமான்டிக் சூப்பர்ஹிட்ஸ் : 13
"நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்தேன்"
http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
நடிப்பு : நடிகர் திலகம், கலைச்செல்வி
பின்னணிக் குரல்கள் : பாடகியர் திலகம் பி.சுசீலா, பாடகர் திலகம் டி.எம்.எஸ்.
இசை : மெல்லிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.வி.
படைப்பு : கவியரசர் கண்ணதாசன்
திரைக்காவியம் : ராஜா(1972)
அன்புடன்,
பம்மலார்.
நிறம் மாறும் பூக்கள்
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் புதுவையில் சிலை அமைக்க காரணமாக இருந்த ரங்கசாமி புதுவை முதல்வராகப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல மற்றொரு அபிமானியான இசக்கி சுப்பையா , அம்பை தொகுதியில் சபாநாயகர் ஆவுடையப்பனை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரம் நிச்சயம் வெல்வார்கள் என்று கருதப்பட்ட சிவாஜி மன்ற முன்னாள் பொதுச் செயலாளரும், சென்ற தேர்தலில் சுயேச்சையாகவே நின்று 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற சிவகங்கை ராஜசேகரனின் தோல்வியும் , வசந்த் & கோ வசந்த குமார் அவர்களின் தோல்வியும் கொஞ்சம் ஏமாற்றம் தான்.
Message deleted as per fellow Hubbers' Requests.
அன்பு கார்த்திக,
காலையில் தங்களுடைய பதிவினைப் படித்து விட்டு சென்று, பின் தற்போது பார்த்தால் தங்கள் பதிவினைக் காணவில்லை. கருத்து வேறுபாடுகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. தங்களுடைய பதிவில் ஆட்சேபிக்கத் தக்கவை ஏதும் இல்லையே. கலைஞருக்கு நன்றி கூறுவதில் யாரும் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே தங்களுடைய கருத்தினை இங்கே மீண்டும் பதியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ராகவேந்திரன்