டியர் வாசுதேவன் சார்,
பதிவே சற்று நாளைக்கு இட வேண்டாம் என எண்ணியிருந்தேன். தங்களுடைய பங்களிப்பு - அரிதான ஆவணங்களடங்கிய பதிவுகளுக்கு நன்றி கூறாதிருந்தால், பாராட்டாதிருந்தால் என் கடமையிலிருந்தும் நன்றியுணர்வுகளிலிருந்தும் தவறியவனாவேன் -
இரு மலர்கள் விளம்பர ஆவணமாகட்டும் இதயக்கனி சினிமா ஸ்பெஷல் பக்கமாகட்டும் - அனைத்துமே தங்களையும் பம்மலாரையும் இத்திரியின் இரு தூண்களாக மேலும் வலுவாக நிலை நிறுத்துகின்றன. தம்பி படத்தின் வெறும் பாடல் பதிவு மட்டுமே நடைபெற்றதாக அறிந்திருக்கிறேன். படப்பிடிப்பு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அதே போல் நடிகர் திலகம் தோன்றும் இக்காட்சி ஞாயிறும் திங்களும் படத்திற்காக எடுக்கப் பட்டதும் அல்ல. அப்துல்லா படத்திற்காக எடுக்கப் பட்டது என ஞாபகம்.

