ஹ்ம்ம்ம்
Printable View
//கலப்பு பிடிக்காது// கோ, விளக்கத்திற்கு நன்றி.. கலப்பு பிடிக்காது என்பது தெரிகிறது..இருப்பினும் எல்லாவற்றையும் மீறிய தான் என்ற தொனி - எவ்வளவு ஆழமாக எவ்வளவு அள்ளக் குறையாத தமிழ் வீச்சு இருந்தாலும் கூட - அது தான் என் மனதில் பச்சக் எனப் படிகிறது.. மற்றவர்க்ளுக்கும் அப்படித் தான் இருக்கும் என நினைக்கிறேன்..
எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆழமாக எழுத வரும் தான் என நினைக்கிறேன்.
அசோக மித்திரன் கரிச்சான் குஞ்சு எல்லாம் அவர்கள்து பாணி..சுஜாதா வெகுஜனம் கமர்ஷியல் என்று எழுதுகிறார் என்று சொல்லப் பட்டாலும் அவர் சப்போர்ட் பண்ணியதென்னவோ
அ.மி. க. கு தான்.. ஏன் நா.பாவின் எழுத்துக்கள் அழகில்லையா..வெகுஜன பத்திரிகையில் வந்ததாலேயே அவை அழகற்றதா..அவரது சரித்திர நாவல்கள் எல்லாமே சீரியஸ் டைப் தான்..மணிபல்லவம் பாண்டிமா தேவி, கபாட புரம்.. சமூக நாவல்கள் குறிஞ்சி மலர் பொன்விலங்கு.. பட் அதில் தொனி எல்லாம் மென்மை தானே.. அதே சமயத்தில் சீரியஸான விஷயமும் பேசத் தவறியதில்லை அவர்..
நான் சொல்ல வந்தது நீங்கள் நகையாய் எழுதுங்கள் என்பதல்ல.. எளிமைப் படுத்தலாம் என்பதே..
சமுதாய வீதி நான் படித்ததில்லை ஆதிராம்..
Dear Gopal sir,
Wish you Happy (30th) Wedding Anniversary.
I pray for permenant happiness for long more years for you and your family.
ungalai ninaikkumpothellaam ninaivukku varum thalaivarin paadal vari...
"uLLaththil iruppadhai vaarththaiyil maraikkum kabadam theriyaadhu".
vaazhga vaLaththudan. (vaLamudan enbadhu ilakkana pizhai).
Dear Ravi sir,
Your 'Karuvin Karu' series is a wonderful one.
After reading your's, Gopal's and others posts about 'thaai' (sorry 'amma' endra vaarththai ippOdhu thamizhnaattil kochchaip paduththap pattu vittadhu), I want to throw my job in Saudi Arabia and want to go Tamilnadu to be with my mother. That much powerpul word "thaai". Thanks for all your writings.
I hope the next post in KK will be Rajini's "Amma nee sumandha pillai siragodindha kiLLai" from Annai ore aalayam (pOttach illaiye..??)
One among the rare songs of TMS & Ilaiyaraja combo.
சின்ன கண்ணன்,
எல்லாவற்றையும் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.
மலின ரசனை கொண்டவர்களே நா.பா,ஜெகசிற்பியன்,மு.வ,அகிலன்,கோ.வி.மணிசேகரன ் போன்றவற்றை அணுக முடியும்.
இவற்றை தாண்டுவதில்தான் உயர் ரசனை அடங்கியுள்ளது.இவையெல்லாம் எழுத்துக்களே அல்ல. ஓரறிவு கொண்டவைகளுக்கான ஒற்றை பரிமாண மொக்கை எழுத்து.
தமிழில் ரசனை வளர்க்க கீழ்கண்டவற்றை படியுங்கள்.
அசோக மித்திரன், கு.ப.ரா, கரிச்சான் குஞ்சு,தி.ஜா, இந்திரா பார்த்தசாரதி,கு.அழகிரிசாமி,ஆதவன்,பா.சிங்காரம்,மௌனி ,புதுமை பித்தன்,நீல.பத்மநாபன், இமயம்,பெருமாள் முருகன், ரா.கி.ரங்கராஜன் என்கிற கிருஷ்ணகுமார் என்கிற டி.துரைசாமி என்கிற மோகினி என்கிற....,,சுந்தர ராமசாமி, வண்ண நிலவன்,வண்ண தாசன்,நாஞ்சில் நாடன்,தோப்பில்.முகம்மது மீரான்,தேவன், பாக்கியம் ராமசாமி, ஜெயகாந்தன்,சாண்டில்யன் ,சுஜாதாவின் கணையாழி ஆரம்ப சிறு-குறுங்கதைகள், சாரு .நிவேதிதா,ஜெயமோகன்,
ஏதாவது விட்டிருக்கலாம். இவர்களை படியுங்கள். ரசனை அனுபவமே தனி.
*
கோ..
இமயம்,பெருமாள் முருகன் படித்ததில்லை.. மற்ற அனைவரது எழுத்துக்களையும் படித்திருக்கிறேன்.. சுந்தர ராமசாமி தனி (புளீய மரத்தின் கதை.. புதுக்கவிதைகள்) . ராகிரங்கராஜன் வேறு - மோகினி டிதுரைசாமி கிருஷ்ணகுமார் லலித் என்கிற பெயர்களில் எழுதியிருக்கிறார். ஜெயமோகனின் சில நாவல்கள்,, சாரு நிவேதிதாவின் சில எழுத்துக்கள் படித்திருக்கிறேன்..(எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை..ஆனால் ஜெயமோகனின் தமிழில் மதிப்பு உண்டு.. வெண்முரசு தொடர்ந்து படித்தேன்..இப்போது இல்லை.)
வண்ண நிலவனின் கடல் புரத்தில் வண்ண தாசன் என்கிற கல்யாண்ஜியின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.. ஆதவன் காகித மலர்கள் இரவுக்குப் பின் வருவது மாலை என்பெயர் ராமசேஷன் , அவரது சிறுகதைகள் பிடிக்கும் சாண்டில்யன் எல்லா நாவல்கள் தோப்பில் முகம்மது மீரானின் சில நாவல்கள் ( கடலும் கிழவனும்), அநுத்தமா, ஜெயகாந்தனின் அனைத்து நாவல்கள் சிறுகதைகள், தி.ஜானகிராமன் அனைத்து நாவல்கள் சிறுகதைகள் ( தி.ஜா. சிட்டி நடந்தாய் வாழி காவேரி படித்திருக்கிறீர்களா) இந்திரா பார்த்த சாரதி தரையில் இறங்கும் விமானங்கள், குருதிப் புனல், வி.ஸ காண்டேகரின் யயாதி (மொழிபெயர்ப்பு) நாஞ்சில் நாடன் ( புத்தகம் பதிப்பதைப் பற்றிய இவரது சிறுகதை மறக்க இயலாது) தி.ஜ.ர. தேவனின் எல்லா நாவல்கள் + சிறுகதைகள், பாசிங்காரம்- புயலில் ஒரு தோணி, பி.ஏ.கிருஷ்ணனின் புலி நகக் கொன்றை, இரா.முருகனின் சிறுகதைகள் நாவல்கள் (மூன்று விரல் அரசூர் வம்சம்) பாக்கியம் ராமசாமியின் சீரியஸ் நாவல் ஜா.ரா சுந்தரேசன் என்ற பெயரி ல் எழுதினார்..அவைகள் பூங்காற்று, மூச்சுத் திணறுகிறது.... சுஜாதாவின் எப்போதும் பெண், வைரங்கள்.. கவிஞர் கண்ணதாசன் சேரமான் காதலி (ஸோ ஸோ தான்) கவிஞர் வைரமுத்து வில்லோடு வா நிலவே ( இதுவும் ஸோஸோ) ஆனால் இப்போது குமுதத்தில்வரும் சிறுகதைகள் எனக்கு மிகப் பிடித்திருக்கின்றன. மு.மேத்தா- சோழ் நிலா, கிருஷ்ணமணி - வேர்கள்
ஓரளவு படித்திருக்கிறேன் கோ..உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும்
ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்..மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன், பூமணி பிடிக்குமா.. பிரபஞ்சன் சில நாவல்கள் பிடிக்கும்
ஜெகச்சிற்பியன், நா.பா - உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை..
இந்தக்கால எழுத்தாளர்களில்
ராஜகேசரி பைசாசம், மதுர கவி(சிறுகதைகள்) கோகுல் சேஷாத்ரி, திருமலை திருடன்,விசித்திர சித்தன்ம் எம்டன் 1914 - திவாகர் , கடாரம் மாயா..அப்புறம் இப்போது படித்துக் கொண்டிருப்பது சோழ கங்கம். சக்திஸ்ரீ என்பவர் ..
நிறைய வர்ஜ்யா வர்ஜ்யம் இல்லாமல் படிப்பவன் தான் நானும் கோ.. உச்ச ரசனை சின்ன ரசனை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது..பிடித்திருந்தால் படித்து முடித்துவிடுவேன்.. என் புக் கலெக்ஷன்ஸ் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
கோவி.மணி சேகரன் உங்களுடன் நானும் உடன்படுகிறேன்..ஆனால் உழைத்து எழுதுபவர் தான் அவரும்.. ஸ்ரீ வேணுகோபாலன் பிடிக்காது தானே..
மோஹினி படங்கள் தகவல்கள் வாரி வழங்கிய கிருஷ்ணா, வாசு, ராஜேஷிற்க்காக ஒரு பாடல்…
மேலாடை காற்றாட மின்னலிடை கூத்தாட
பாவை நான் பந்தாட தேவை ஒரு பூமேடை
https://youtu.be/YEvB6DQ1Ipo
வாசு, நினைவிருக்கிறதா.. முதன் முதலில் நீங்களும் கோபாலும் பாட்டுக்குப் பாட்டை முற்றுகையிட்ட போது இந்தப் பாட் வீடியோ போட்டிருந்தீர்கள்.. என் கமெண்ட் – ஏன் ஜெயந்தி அடிக்கடி பட்டம் விடுவதுபோல் கைகள் ஆட்டுகிறார்..
தமிழில் படித்தே ஆக வேண்டிய சில.(தமிழ் மட்டுமே)
1)அசோக மித்திரன்- கரைந்த நிழல்கள்,தண்ணீர்,பதினெட்டாம் அட்ஷ கொடு மற்றும் பல சிறுகதைகள்.
2)மௌனி- சிறுகதை தொகுப்பு.
3)ஆதவன்- காகித மலர்கள்,என் பெயர் ராமசேஷன்.
4)தி.ஜானகி ராமன்-மோகமுள்,அம்மா வந்தாள் ,மர பசு.
5)சுந்தரராமசாமி- ஜே .ஜே .சில குறிப்புக்கள்.
6)நகுலன்- சிறுகதைகள்.
7)ஆ.மாதவன்- கிருஷ்ண பருந்து.
8)இந்திரா பார்த்தசாரதி- திரைகளுக்கு அப்பால்,தந்திர பூமி,குருதி புனல்.
9)ஜெயகாந்தன்- ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,ரிஷி மூலம்.
10)நீல பத்மநாபன்- தலை முறைகள்,பள்ளி கொண்டபுரம்,உறவுகள்.
11)இமயம்- கோவேறு கழுதைகள்.
12)ஜெயமோகன்- ஏழாம் உலகம்,அறம் சிறுகதை தொகுப்பு.
13)சாரு நிவேதிதா- எக்ஸ்சைல் .
14)சா.கந்தசாமி- தொலைந்து போனவர்கள்,அவன் ஆனது.
15)நாஞ்சில் நாடன்- மிதவை,தலை கீழ் விகிதங்கள்.
16)புதுமை பித்தன்- சிறுகதைகள்.,குறுங்கதைகள்.
17)கு.ப.ரா- சிறுகதைகள்.
18)கரிச்சான் குஞ்சு- பசித்த மானிடம்.
19)தோப்பில்.முகம்மது மீரான்-கடலோர கிராமத்தின் கதை,சாய்வு நாற்காலி.
20)பிரபஞ்சன்- சிறுகதைகள்.
21)கு.அழகிரிசாமி- சிறுகதைகள்.
22)ஹெப்சிபா ஜேசுதாசன்- புத்தம் வீடு.
23)ரா.கி.ரங்கா ராஜன்- மறுபடியும் தேவகி,புரபசர் மித்ரா,படகு வீடு,ஒளிவதற்கு இடமில்லை,பட்டாம் பூச்சி,நான் கிருஷ்ண தேவராயன்.
24)சாண்டில்யன்- யவன ராணி,கடல் புறா,ராஜ முத்திரை.
25)பாக்கியம் ராமசாமி- மாணவர்தலைவர் அப்புசாமி,அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்,காதல் காவலர் அப்புசாமி.
26)வண்ண நிலவன்- கடல் புறத்தில்,ரைநீஸ் ஐயர் தெரு.
27)வண்ணதாசன்- சிறுகதைகள்.
28)சுஜாதா- ஆரம்ப சிறுகதைகள்,இருபத்து நாலு ரூபாய் தீவு,நில்லுங்க ராசாவே
29)தேவன்- துப்பறியும் சாம்பு.
30)ர.சு.நல்ல பெருமாள்- கல்லுக்குள் ஈரம்.
31)வாண்டு மாமா- சிலையை தேடி,மற்றும் பல.
மேற்கண்டவை பலதர பட்ட எழுத்துக்களை அணைத்தவை.